என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரான் தூதரகம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திறப்பு விழாவில் இருநாட்டு வெளியுறவுத் துறை அதிகாரிகள், தூதர்கள் கலந்து கொள்கிறார்கள்.
    • மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தூதரகங்களை திறக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

    ரியாத்:

    வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா-ஈரான் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.

    கடந்த 2016-ம் ஆண்டு ஷினயட் மதகுரு நிம்ர்-அல் நிம்ரை, சவுதி அரேபியா தூக்கிலிட்டதற்கு எதிராக ஈரானில் போராட்டங்கள் நடந்தது.

    தலைநகர் தெக்ரான் மற்றும் வடமேற்கு நகரமான மஷாத்தில் உள்ள தூதரகங்கள் தாக்கப்பட்டன. இதையடுத்து ஈரானுடனான உறவை சவுதி அரேபியா துண்டித்தது. இதனால் சவுதி அரேபியாவில் செயல்பட்டு வந்த தங்கள் நாட்டு தூதரகத்தை ஈரான் மூடியது. மேலும் ஏமன் உள்நாட்டு போரில் இரு நாடுகள் இடையே மோதல் அதிகரித்தது.

    இதற்கிடையே சவுதி அரேபியா-ஈரான் இடையேயான உறவை மேம்படுத்த சீனா முயற்சி செய்தது. இதன் பயனாக கடந்த மார்ச் 10-ந்தேதி சவுதி அரேபியா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு நாடுகளும் தங்கள் தூதரகங்களை திறக்க 2 மாதம் அவகாசம் வழங்கப்பட்டது.

    இந்நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு சவுதி அரேபியாவில் ஈரான் தனது தூதரகத்தை இன்று திறக்கிறது. திறப்பு விழாவில் இருநாட்டு வெளியுறவுத் துறை அதிகாரிகள், தூதர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    ஈரானில், சவுதி அரேபியா தனது தூதரகத்தை மீண்டும் திறப்பது அல்லது தூதரை தேர்ந்தெடுப்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

    சவுதி அரேபியா, ஈரான் நாடுகள் தங்களது மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உறவை வலுப்படுத்த தூதரகங்களை திறக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் தணியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஹமாஸ் அமைப்புக்கு லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கம் ஆதரவாக உள்ளது.
    • இதனால் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மற்றும் ஈரான் நிலைகள் மீது இஸ்ரேல் அடிக்கடி தாக்குதல் நடத்துகிறது.

    டமாஸ்கஸ்:

    இஸ்ரேல்-காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போரில் ஹமாசுக்கு லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கம் ஆதரவாக உள்ளது. இந்த இயக்கத்துக்கு ஈரான் தனது ஆதரவை அளித்து வருகிறது.

    இதையடுத்து, சிரியாவில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மற்றும் ஈரான் நிலைகள் மீது இஸ்ரேல் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரக கட்டிடம் மீது குண்டு வீசப்பட்டது.இதில் அக்கடடிடம் பலத்த சேதம் அடைந்தது. இந்த தாக்குதலில் ஈரான் புரட்சிகர படையின் 2 ராணுவ தளபதிகள், வீரர்கள், பொதுமக்கள் உள்பட 13 பேர் பலியானார்கள். இதில் ஈரான் ராணுவ வீரர்களும் அடங்குவர். இந்தத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியது.

    இதுகுறித்து ஈரான் தூதர் ஹொசைன் அக்பரி கூறுகையில், இஸ்ரேலின் எப்-35 போர் விமானங்கள் மூலம் ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் ஈரான் தூதரக ஊழியர்கள், ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என தெரிவித்தார்.

    ஈரான் வெளியுறவுத் துறை மந்திரி ஹொசைன் அமீர் அப்துல்லா ஹியன் கூறும்போது, சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேலை ஆதரிப்பதால் அமெரிக்காதான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

    ×