search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கச்சா எண்ணெய் விலை"

    • கச்சா எண்ணெய் விலை 32.5% குறைந்துள்ளது.
    • எரிபொருளுக்கு விதிக்கப்படும் வரியின் மூலம் மோடி அரசு ரூ.35 லட்சம் கோடியை கொள்ளையடித்துள்ளது.

    காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் பாஜகவின் கொள்ளை தொடர்கிறது என தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து மல்லிகார்ஜூனா கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கச்சா எண்ணெய் விலை 32.5% குறைந்துள்ளது. இருந்தபோதும் பாஜகவின் கொள்ளை தொடர்கிறது. கடந்த 10 ஆண்டுகள், 100 நாட்களில் எரிபொருளுக்கு விதிக்கப்படும் வரியின் மூலம் மக்களிடம் இருந்து மோடி அரசு ரூ.35 லட்சம் கோடியை கொள்ளையடித்துள்ளது.

    தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் பாஜகவை வீழ்த்தி, மோடியால் தூண்டப்பட்ட இந்த விலை உயர்வை நிராகரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


    • கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
    • இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்பட வில்லை.

    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

    கச்சா எண்ணெய்க்காக ரஷ்யா, ஈராக், அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் ஆகியவற்றை இந்தியா நம்பி உள்ளது. 40 சதவீதம் அளவுக்கு ரஷ்யாவில் இருந்துதான் கச்சா எண்ணெய் வாங்கப்படுகிறது.

    கடந்த ஜூலை மாதம் மட்டும் 46 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் வாங்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் விலை மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விலையைவிட மிக குறைவு.

    ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை தற்காலிகமாக நிறுத்திவைத்து இருக்கின்றன.

    இப்போது கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும், இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்பட வில்லை.

    ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை அதிகபட்சமாக 2008-ம் ஆண்டு 147 அமெரிக்க டாலராக இருந்த நேரத்தில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.55 ஆக இருந்தது. டீசல் விலை ரூ.35 ஆக இருந்தது.

    இப்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 68.56 டாலர் என்ற அளவில்தான் இருக்கிறது. ஆனால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.34 ஆகவும் உள்ளது.


    கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி முதல் பெட்ரோல்-டீசல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்பட வில்லை. மார்ச் 28-ந்தேதி கச்சா எண்ணெய் விலை 83.69 டாலராக இருந்தது.

    இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சக செயலாளர் பங்கஜ் ஜெயின் தெரிவித்து உள்ளார்.

    இதுகுறித்து பங்கஜ் ஜெயின் கூறியதாவது:-

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்திருப்பதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    கச்சா எண்ணெய் விலை சரிவு நீடித்தால் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.
    • விரைவில் பெட்ரோல்-டீசல் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வந்தன.

    இந்நிலையில் ரஷ்யா-உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த ஆண்டு பாதிவரை பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்தது.

    சில மாநிலங்களில் பெட்ரோல்-டீசல் விலை உச்சம் தொட்டதால் பொது மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதைத் தொடர்ந்து பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்து அறிவிப்பு வெளியிட்டது.

    அதன்பிறகு கடந்த ஓராண்டுக்கு மேலாக பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

    இதற்கிடையே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. ஆனாலும் இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையில் இதுவரை மாற்றம் செய்யப்படவில்லை.

    இதன் காரணமாக இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பி.பி.சி.பி. கள் போன்ற நிறுவனங்கள் 20 ஆயிரம் கோடி வரை லாபம் பார்த்து உள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் 140 டாலருக்கு விற்கப்பட்ட ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை கடந்த சில மாதங்களாக 75 டாலராக குறைந்துள்ளது. ஆனாலும் எண்ணெய் நிறுவனங்கள் இதுவரை விலையை குறைக்கவில்லை.

    எனவே இந்தியாவிலும் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது.

    இது தொடர்பாக மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு கோரிக்கை வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரம் கொரோனா தொற்று நோய் காலகட்டத்தில் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக ஏற்பட்ட இழப்புகளை தங்கள் நிறுவனம் இதுவரை ஈடுசெய்யவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் மத்திய அரசிடம் கூறப்பட்டுள்ளது.

    எண்ணெய் நிறுவனங்கள் 2022-2023-ம் நிதியாண்டில் 4-வது காலாண்டில் நல்ல லாபம் பார்த்துள்ளன. மேலும் 2023-2024-ம் நிதியாண்டிலும் முதல் காலாண்டில் நன்றாக இருந்தால் விலையை குறைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    விரைவில் இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்களில் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்கும்படி மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    எனவே விரைவில் பெட்ரோல்-டீசல் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×