என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரபல வில்லன் நடிகர்"

    • பாலிவுட் தவிர, தெலுங்கு, தமிழ் மொழிகளிலும் நடித்துள்ளார்.
    • 'சூரரைப் போற்று' படத்தின் வில்லனாக நடித்தவர்.

    பாலிவுட் திரையுலகத்தில் காமெடி, குணச்சித்திரம், வில்லன் என பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் பரேஷ் ராவல்.

    பாலிவுட் தவிர, தெலுங்கு, தமிழ் மொழிகளிலும் நடித்துள்ளார்.

    'சூரரைப் போற்று' படத்தின் வில்லனாக நடித்தவர்.

    இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்," தனக்கு ஏற்பட்ட முட்டி காயம் சீக்கிரம் குணமடைவதற்காக தனது சிறுநீரை 15 நாட்களுக்குக் குடித்ததாகக் கூறியுள்ளார்.

    இந்தி படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தபோது தனக்கு காலில் காயம் ஏற்பட்டதாகவும், தொடர்ந்து சிகிச்சைக்காக மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறினார்.

    சிகிச்சையின்போது அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக கூறிய மருத்துவர்கள் அது குணமடைய மூன்று மாதங்கள் ஆகும் எனவும் கூறியுள்ளனர்.

    மேலும், தன்னை பார்க்க வந்த நடிகர் அஜய் தேவகனின் தந்தை தினமும் காலையில் கழிக்கும் தனது சிறுநீரை 15 நாட்களுக்கு குடித்து வர கூறினார். அந்த 15 நாட்களுக்கு இறைச்சி, மது, சிகரெட் போன்ற பழக்கங்களும் இருக்கக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியதாக கூறினார்.

    அவர் கூறியதுபோல் தானும் அதை பின்பற்றினேன். மேலும், 15 நாட்களுக்கு பிறகு எக்ஸ் ரே எடுத்து பார்த்தபோது எனது காயம் சரியானது. மூன்று மாதங்கள் ஆகும் என கூறிய நிலையில், ஒன்றரை மாதங்களிலேயே தான் முழுவதுமாக குணமடைந்துவிட்டேன். அதற்கு தான் குடித்த என்னுடைய சிறுநீரகம் தான் காரணம்" என கூறினார்.

    • கேரளாவை பூர்வீகமாக கொண்ட கசான் கான், தமிழ் சினிமாவில் செந்தமிழ்பாட்டு என்ற படத்தின்மூலம் நடிகராக அறிமுகமானார்.
    • கசான் கான் மறைவுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    தமிழ், மலையாளம், கன்னடா உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த மூத்த மலையாள நடிகர் கசான் கான் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

    இவரது மரணத்தை மலையான திரைத்துறையின் தயாரிப்பாளர் என்.எம்.பாதுஷா உறுதிப்படுத்தி உள்ளார்.

    கேரளாவை பூர்வீகமாக கொண்ட கசான் கான், தமிழ் சினிமாவில் செந்தமிழ்பாட்டு என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

    இவர் தமிழில் செந்தமிழ்பாட்டு, கலைஞர், சேதுபதி ஐ.பி.எஸ், பிரியமானவளே உள்ளிட்ட சுமார் 50 படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் வில்லன் வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்தவர்.

    இதேபோல், கன்னடம், மலையாள மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

    இவரது மறைவுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    ×