என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழுப்புரம் ரெயில் நிலையம்"

    • சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த மேற்கூரைகள் காற்றில் பறந்தது.
    • மழை ஓய்ந்ததை தொடர்ந்து ரெயில் நிலையத்தில் மீண்டும் புதிய மேற்கூரைகள் அமைக்கும் பணி நடந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் கடந்த 2 வாரங்களாக பகலில் வெயில் சுட்டெரித்து வருகிறபோதிலும் மாலை, இரவு நேரங்களில் வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து மக்களின் மனதை குளிர்வித்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் விழுப்புரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்த சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் விழுப்புரம் ரெயில் நிலைய வளாகத்தில் இருந்த மரங்கள், நகராட்சி பூங்காவில் இருந்த மரம், கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்த மரம் என நகரின் பல்வேறு இடங்களில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. இதன் காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    மேலும் பலத்த சூறைக்காற்று வீசியதன் காரணமாக விழுப்புரம் ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டிருந்த மேற்கூரைகள் காற்றில் பறந்தன. ரெயில் நிலைய 2-வது மற்றும் 3-வது நடைமேடைகளில் தற்போது பழைய மேற்கூரைகள் அகற்றப்பட்டு புதிய மேற்கூரைகள் அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது திடீரென பலத்த சூறைக்காற்று வீசியதால் அப்பணியை ஊழியர்கள் பாதியிலேயே கைவிட்டனர்.

    இதனால் சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த மேற்கூரைகள் காற்றில் பறந்தது. இதை பார்த்ததும் நடைமேடையில் நின்றிருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் பயணிகள் காயமின்றி தப்பினர்.

    மழை ஓய்ந்ததை தொடர்ந்து நேற்று காலை, ரெயில் நிலையத்தில் மீண்டும் புதிய மேற்கூரைகள் அமைக்கும் பணி நடந்தது.

    • திருப்பதி-புதுச்சேரி மெழு எக்ஸ்பிரஸ் விக்கிரவாண்டி வரை மட்டுமே இயக்கப்படும்.
    • காக்கிநாடா, கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் 27-ந்தேதி செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும்.

    புதுச்சேரி:

    விழுப்புரம் ரெயில் நிலையத்தில் 27, 28-ந் தேதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் புதுச்சேரிக்கு இயக்கப்படும் சில ரெயில்கள் தற்காலிகமாக பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

    காக்கிநாடா எக்ஸ்பிரஸ் ரெயில் (17655), கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரெயில் (17653) ஆகிய ரெயில்கள் 27-ந்தேதி செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும்.

    திருப்பதி-புதுச்சேரி மெழு எக்ஸ்பிரஸ் ரெயில் (161II) 28-ந் தேதி அன்று திருப்பதியில் இருந்து விக்கிரவாண்டி வரை மட்டுமே இயக்கப்படும்.

    அதேபோல் அன்றைய தினம் மாலை 4 மணிக்கு புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு புறப்பட வேண்டிய மெமு ரெயில் அதற்கு பதிலாக மாலை 5.07 மணிக்கு விக்கிரவாண்டியில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.

    28-ந் தேதி மதியம் புதுச்சேரியில் இருந்து புறப்பட வேண்டிய கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரெயில் (17654) அதற்கு பதிலாக செங்கல்பட்டில் இருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டுச்செல்லும். புதுச்சேரி -காக்கிநாடா (17656) எக்ஸ்பிரஸ் ரெயிலும் அன்று மாலை 3.55 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு செல்லும்.

    மேற்கண்ட தகவலை திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

    ×