என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிசய குழந்தை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குழந்தையை பார்த்ததும், அவருக்கு பிரசவம் பார்த்த டாக்டர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
    • டாக்டர்கள் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

    பாட்னா:

    பீகார் மாநிலம், சாப்ராவை அடுத்த ஷியாம்சாக் பகுதியை சேர்ந்தவர் பிரசுதா பிரியா தேவி.

    நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பிரசுதா பிரியா தேவியை உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் நர்சிங் ஹோமில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் பிரசவம் பார்த்தனர்.

    இதில் அந்த பெண், அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். குழந்தையை பார்த்ததும், அவருக்கு பிரசவம் பார்த்த டாக்டர்கள் ஆச்சரியம் அடைந்தனர். காரணம் அந்த குழந்தைக்கு 4 கால்கள், 4 கைகள், 4 காதுகள் மற்றும் 2 முதுகுகள் இருந்தன. இதுபோல குழந்தையின் உடலை பரிசோதித்தபோது, குழந்தைக்கு 2 இதயங்களும் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த குழந்தையை டாக்டர்கள் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். என்றாலும் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பிறந்த 20 நிமிடங்களிலேயே பரிதாபமாக இறந்தது.

    இதற்கிடையே இரண்டு இதயம் மற்றும் 4 கால், கைகளுடன் பிறந்த குழந்தை பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதனை பார்த்த மக்கள், அந்த குழந்தை கடவுளின் குழந்தை என்றும், அதனை பார்க்க வேண்டும் என்றும் கருத்து பதிவிட்டனர். இந்த தகவல் வைரலானதை தொடர்ந்து அந்த குழந்தை பிறந்த ஆஸ்பத்திரி முன்பு ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் குழந்தை இறந்த தகவலை டாக்டர்கள் தெரிவித்த பின்னர், அங்கு திரண்டிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.

    • அதிசய குழந்தையைக் கண்ட அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.
    • 5 முதுகெலும்புடன் இணைக்கப்பட்ட வால் வெளியே வந்தது கண்டறியப்பட்டது.

    திருப்பதி:

    ஐதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு பின் பகுதியில் வால் இருந்தது. அதிசய குழந்தையைக் கண்ட அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

    குழந்தை பிறந்த 3 மாதங்களில் 15 சென்டி மீட்டர் அளவுக்கு வால் வளர்ந்தது.

    இதனால் குழந்தையின் பெற்றோர் கவலை அடைந்தனர். இதையடுத்து ஐதராபாத் எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஷஷாங் பாண்டா குழந்தையை பரிசோதித்தார்.

    அப்போது முதுகுத்தண்டில் உள்ள 5 முதுகெலும்புடன் இணைக்கப்பட்ட வால் வெளியே வந்தது கண்டறியப்பட்டது.

    மருத்துவ அறுவை சிகிச்சை குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் வாலை வெட்டி எடுத்தனர்.

    வால், நரம்பு மண்ட லத்துடன் இணைக்கப்பட்டு இருந்ததால் அறுவை சிகிச்சை செய்வது சிக்கலாக இருந்ததாக கூறினர்.

    இதுபோன்ற அறுவை சிகிச்சைக்கு பிறகு நரம்பியல் பிரச்சினைகள் ஏற்படுவது வழக்கம். ஆனால் இந்த குழந்தை எந்தவித பிரச்சினையும் இன்றி ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    ×