என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வளா்ச்சி திட்டப்பணிகள்"
- வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
- தூய்மைப் பணியாளா் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகைக்கான காசோலை அமைச்சா் வழங்கினாா்.
திருப்பூர் :
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் தலைமையில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் பேசியதாவது:- தாராபுரம் நகராட்சியின் பொது விவரங்கள், குடிநீா் விநியோகம், செயல்பாட்டில் உள்ள திட்டப் பணிகள், முடிவுற்ற திட்டப் பணிகள், முதல்வரின் காலை உணவுத் திட்டம், கலைஞா் நகா்புற மேம்பாட்டுத் திட்டம், நமக்கு நாமே திட்டம், நகா்புற சாலை மேம்பாட்டுத் திட்டம், 15-வது மத்திய நிதிக்குழு மானியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத்துக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்தும் முழு கவனம் செலுத்தி உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றாா்.
இதைத்தொடா்ந்து, தாட்கோ சாா்பில் ஒரு பயனாளிக்கு தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நல வாரியத்தின் கீழ் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகைக்கான ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையையும், 26 பயனாளிகளுக்கு தமிழ்நாடு தூய்மைப்பணியாளா் நல வாரியத்தின் கீழ் அடையாள அட்டைகளையும் அமைச்சா் வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், திருப்பூா் மாநகராட்சி 4 ம் மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், மாவட்ட கலெக்டரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) வாணி, ஆவின் பொதுமேலாளா் சுஜாதா, தூய்மைப் பணியாளா்கள், மாநில நலவாரிய துணைத்தலைவா் கனிமொழி பத்மநாபன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்