என் மலர்
நீங்கள் தேடியது "திருஉத்திரகோசமங்கை கோவில்"
- வருகிற 4-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
- 1-ந்தேதி முதல் 4 நாட்கள் மரகத நடராஜர் சன்னதி திறந்திருக்கும்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை என்ற ஸ்தலத்தில் மங்கள நாதர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 4-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானம், தமிழக அரசு மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் வழங்கப்பட்ட பல கோடி ரூபாய் நிதி மூலம் திருப்பணிகள் முடி வடைந்துள்ளன. 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியில் இருந்து 11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு கோவிலில் அமைந்துள்ள அபூர்வ மரகத நடராஜர் சன்னதியானது நேற்று நள்ளிரவு திறக்கப்பட்டு மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்ட சந்தனம் களையப்பட்டது. அப்போது திரளான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்தனர்.
ஆருத்ரா தரிசன விழாவின் போது ஆண்டுக்கு ஒரு நாள் மட்டுமே மரகத நடராஜர் சன்னதி திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஜனவரி 12-ந் தேதி அன்று திருஉத்திரகோச மங்கை கோவிலில் மரகத நடராஜர் சன்னதி திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தற்போது கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு 1-ந்தேதி முதல் 4 நாட்கள் மரகத நடராஜர் சன்னதி திறந்திருக்கும் என்பதால் தமிழ கத்தின் பல ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கும்பாபிஷேக விழா விற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் உத்தரவின் பேரில் கீழக்கரை உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையிலான போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து திவான் பழனிவேல் பாண்டியன் "மாலைமலர்" நிருபரிடம் கூறியதாவது:-
கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு நேற்று நள்ளிரவு மரகத நடராஜர் சன்னதி திறக்கப் பட்டு சந்தன காப்பு களை யப்பட்டது. 4-ந்தேதி வரை 3 நாட்கள் மரகத நடராஜர் சன்னதி பக்தர்கள் தரிசனம் செய்ய திறந்திருக்கும்.
4-ந் தேதி கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் மாலையில் சந்தனம் சாத்தப்பட்டு மீண்டும் நடராஜர் சன்னதி சாத்தப்படுகிறது. கும்பாபி ஷேகம் நடைபெறும் நாளன்று மேல்பகுதி தளத் தில் மட்டும் சுமார் 1500 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கும்பாபிஷேகத் திற்கு தேவையான அனைத்து விதமான முன்னேற்பாடு பணிகளும் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் நடை பெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- செங்கல் கட்டமைப்புடன் கூடிய இதில் கலசங்கள் இல்லை.
- ஆதிசிதம்பரம் எனப்படும் தனி கோவிலாக நடராஜ பெருமான் எழுந்தருளியுள்ளார்.
ராமேசுவரம், உத்திரகோசமங்கை ஆகிய இருகோவில்களும் முதலில் இலங்கையில் இருந்த கண்டி மகாராஜாவால் கட்டப்பட்டு, பின்பு பலராலும் திருப்பணிகள் செய்யப்பட்டு ஆதிசைவர்கள் வசமிருந்து பின்னரே ராமநாதபுரம் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதுமுதல் இன்றுவரை ராமநாதபுரம் சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டதாகவே இருந்து வருகிறது.

பழமையான திருக்கோவிலின் முகப்பில் இரு கோபுரங்கள் உள்ளன. வலதுபுறம் கோபுரம் உரிய அமைப்பில் உள்ளது. இடதுபுறம் உள்ளது மொட்டையாகக் காட்சி தருகின்றது. வலப்புரம் கோபுரமும் மிகப்பழமையானதாகும்.
செங்கல் கட்டமைப்புடன் கூடிய இதில் கலசங்கள் இல்லை. ஏழு நிலைகளை கொண்டுள்ளது. இரு வெளிக் கோபுரங்களுக்கும் உள்கோபுரங்கள் உள்ளன. வலப்புற உள்கோபுரம் ஐந்து நிலைகளை கொண்டது. இடப்புற உள்கோபுரம் மூன்று நிலைகளுடன் காணப்படுகிறது.
வலப்பால் உள்ள கோபுரத்தின் முன்னால் நர்த்தன விநாயகர், சுப்பிரமணியர் தரிசனம், உட்புறம் வலதுபக்கம் குளத்தை கடந்து, உள்கோபுரம் பார்த்து வணங்கிவிட்டு உள்ளே சென்றால், இடதுபுற பிராகாரத்தில் வாகனங்கள், வாயிலைத்தாண்டி இடதுபக்கம் திரும்பினால் யோக தட்சிணாமூர்த்தி தனியே கால் மேல் கால் மடித்துப்போட்டு, அபயவரத முத்திரைகளுடன் ஒரு கையை உயர்த்தி ஒரு கையைத் தாழ்த்தி அமர்ந்து காட்சி தருகின்றார். சிவலிங்க பாணமும், நாகப் பிரதிஷ்டையும் அருகில் உள்ளன.
விநாயகரைத் தொழுது பலிபீடம், கொடிமரம், நந்தி இவற்றை வணங்கியவாறே உள்வாயிலைத் தாண்டி பெரிய மண்டபத்தை அடையலாம். முதல் தூணில் குவித்த கைகளுடன் சேதுபதி காட்சி தருகிறார்.

மற்ற தூண்களில் பாஸ்கர சேதுபதி, சண்முக ராஜேஸ்வர சேதுபதி, ராஜேஸ்வர முத்துராமலிங்க சேதுபதி முதலியோர் கற்சிலைகளாகக் காட்சியளிக்கின்றனர். இங்கிருந்து பார்த்தால் நேரே மூலவர் தரிசனம்.
பிரகாரச் சுவரில் திருவாசகப் பகுதிகளான பொன்னூசல், நீத்தல் விண்ணப்பம் முதலியவை கல்லில் பொறிக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து அறுபத்து மூவர் மூலத்திருமேனிகளின் தரிசனம், சப்த மாதாக்கள், முடிவில் விநாயகரும் ரிஷபாரூடரும் காட்சி தருகின்றனர்.

வலம் முடித்து துவார பாலகர்களை வணங்கிய பின்னர் உள்ளே சென்றால் மூலவரின் திவ்யமான தரிசனம் கிடைக்கும். எதிரில் நந்திதேவர் நீர் கட்டும் அமைப்பில், அனுக்ஞை விநாயகரைக் கும்பிட்டு உட்புறமாகப் பார்த்தால் மங்களேசுவரர் மங்களகரமாக காட்சியளிக்கிறார்.
அடுத்த தரிசனம் மங்களாம்பிகை. நான்கு கரங்களுடன் அபயம் செய்கிறார். ஒருகரம் தொடையில் நிறுத்தி, இருகரங்களில் தாமரையும், ருத்ராட்சமும் ஏந்தித் தரிசனம் தருகிறாள். இந்த கோவிலில் சுவாமியை அம்பாள் பூஜிப்பதாக ஐதீகம்.
நடராஜாவுக்குரிய ஆறு அபிஷேகக் காலங்களிலும் இச்சந்நிதியில் இறைவன் தாண்டவ மாடிக் காட்சி தரும் ஐதீகம் நடைபெறுகிறது. பிரகார அழகு ராமேசுவரத்தை நினைவூட்டுகிறது. தூண்களில் பிட்சாடனர், ஊர்த்துவர் சிற்பங்கள் உள்ளன.

உலா வருவதற்குரிய நடராஜத் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. வெளிச்சுற்றில் வல்லபை விநாயகரைத் தரிசிக்கலாம்.
ஆதிசிதம்பரம் எனப்படும் அற்புதத் தனிக்கோவிலாக நடராஜப் பெருமான் எழுந்தருளியுள்ளார். இது கோவிலுக்கு உள்ளேயே குளத்தின் எதிரில் உள்ளது. பலிபீடம், கொடி மரம், நந்தி தொழுது முன்மண்டபம் சென்றால், சேதுபதிகள் வண்ணங்களில் சுதையில் தூண்களில் காட்சியளிக்கின்றனர். சுற்றிலும் அகழி அமைப்பு. எனவே சந்நிதிக்கு உட்செல்ல மரப்படிகள் அமைக்கப்பட்டுள்ளன. தெற்கு நோக்கிய சன்னிதியாக காட்சி அளிக்கிறது.
இதையடுத்து முன்மண்டபத்தின் சிறிய மேடையில்தான் உச்சிக்காலத்தில் ஸ்படிக, மரகதலிங்கங்களை வைத்து அபிஷேகம் செய்கின்றனர். அதைத் தரிசிக்கும் போதே வலதுபக்க சாளரத்தின் வழியே கைகூப்பிய நிலையில் உள்ள மாணிக்கவாசகரையும், இடதுபக்கம் திரும்பி உமா மகேசுவரரையும் ஒரு சேரத் தரிசிக்கலாம்.
உமாமகேசுவரர் சந்நிதிக்குப் படிகளேறிச் சென்று தரிசித்துவிட்டு மறுபுறமுள்ள படிகள் வழியே இறங்கி பிராகார வலமாக வந்தால் திருப்பதிகங்கள் எழுதப்பட்டு உள்ளதையும், குருந்தமர உபதேசக் காட்சி சந்நிதியையும் காணலாம்.
கல்லில் குருந்தமரம் செதுக்கப்பட்டு கீழே அமர்ந்து இறைவன் உபதேசிக்க எதிரில் மாணிக்கவாசகர் உபதேசம் பெறும் காட்சி அற்புதமாக உள்ளது.
நடராஜர் கோவிலுக்குப் பக்கத்தில் தனியே சஹஸ்ரலிங்க சன்னிதி உள்ளது. மூலத்திருமேனியில் நெடுக்குக்கீற்றுகள் உள்ளன. சஹஸ்ர எண்ணிக்கையில் உட்புறத்தில் தல விருட்சத்தின் வேர் உள்ளது. வியாசரும், காகபுஜண்டரும் இங்குத்தவம் செய்வதாக ஐதீகம். இதன் பக்கத்தில்தான் தல விருட்சமான இலந்தைமரம் உள்ளது.
- 15 ஆண்டுகளுக்குப் பிறகு 4-ந்தேதி கும்பாபிஷேகம்.
- இன்று மாலை மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்ட சந்தனம் களையப்படுகிறது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் பிரசித்தி பெற்ற மங்களேசு வரி உடனுறை மங்களநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற 4-ந்தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற உள்ளது.
சமஸ்தான தேவஸ்தானம், தமிழக அரசு மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் வழங்கப்பட்ட பல கோடி ரூபாய் நிதி மூலம் திருப்பணிகள் முடிவடைந்துள்ளன. 4-ந்தேதி காலை 9 மணியில் இருந்து 11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு கோவிலில் அமைந்துள்ள அபூர்வ மரகத நடராஜர் சன்னதியானது இன்று மாலை திறக்கப்பட்டு மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்ட சந்தனம் களையப்படுகிறது.
இதுகுறித்து திவான் பழனிவேல் பாண்டியன் கூறியதாவது:-
கும்பாபிஷேகம் நடை பெறுவதை முன்னிட்டு இன்று மாலை மரகத நடராஜர் சன்னதி திறக்கப்பட்டு அவருக்கு சாத்தப்பட்டுள்ள சந்தனக்காப்புகளையப்படுகிறது. 4-ந்தேதி வரை 4 நாட்கள் மரகத நடராஜர் சன்னதி பக்தர்கள் தரிசனம் செய்ய திறந்திருக்கும். தொடர்ந்து 4-ந்தேதி கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் மாலையில் சந்தனம் சாத்தப்பட்டு மீண்டும் நடராஜர் சன்னதி சாத்தப்படுகிறது.
கும்பாபிஷேகம் நடைபெறும் நாளன்று மேல்பகுதி தளத்தில் மட்டும் சுமார் 1500 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கும்பாபிஷேகத்திற்கு தேவையான அனைத்து விதமான முன்னேற்பாடு பணிகளும் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே, கோவிலில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில், 2-வது நாளாக இன்று காலை விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட யாக சாலை பூஜைகள் நடை பெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.
ஆருத்ரா தரிசன விழாவின் போது ஆண்டுக்கு ஒரு நாள் மட்டுமே மரகத நடராஜர் சன்னதி திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஜனவரி 12-ந்தேதி அன்று திரு உத்தரகோசமங்கை கோவிலில் மரகத நடராஜர் சன்னதி திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தற்போது கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு 1-ந்தேதி முதல் 4 நாட்கள் மரகத நடராஜர் சன்னதி திறந்திருக்கும் என்பதால் தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஒரு நடராஜர் சிலை செதுக்க வேண்டும் என்பது அரசரின் ஆசை.
- நரம்பு தெரியும் அளவிற்கு சிலையாக வடிவமைத்தார் சித்தர் சண்முக வடிவேலர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் செல்லும் வழியில் மண்டபம் என்ற பகுதியில், மரைக்காயர் என்ற மீனவர் தனது வறுமை நீங்க மங்களநாதரை தினமும் வழிபட்டு வந்தார். ஒரு நாள் அவர் கடலில் மீன் பிடிக்கும்போது சூறாவளி காற்று அடித்து அவருடைய படகு திசை மாறிப்போனது.
அப்படியே வெகு தூரம் சென்ற பிறகு ஒரு பாசி படர்ந்த பாறையின் மீது மோதி நின்றுவிட்டது. அந்த பாறை அப்படியே சரிந்து படகின் உள்ளே விழுந்துவிட்டது.
அதே வேளையில் கடலில் சுழன்று வீசிய சூறாவளி காற்றும் நின்றுவிட்டது. அதிர்ச்சியில் இருந்து மீண்ட மரைக்காயர் கரைக்கு திரும்பி வர பார்த்தால், அந்த இடத்தில் இருந்து திக்கும் திசையும் தெரியவில்லை.

மங்களநாதரை நினைத்து படகை செலுத்தி மிகவும் சிரமப்பட்டு பலநாள் கடலில் திரிந்து அலைந்து ஒரு வழியாக தனது ஊரான மண்டபத்திற்கு வந்தடைந்தார்.
கடலுக்குப் போன இவர் திரும்பிவர வில்லை என்று பலநாட்கள் கவலையோடு காத்திருந்த குடும்பத்தினருக்கு அவரை பார்த்ததும் தான் நிம்மதி கிடைத்தது. படகில் கொண்டுவந்த பாசி படர்ந்த கற்களை என்னவென்று தெரியாமல் தனது வீட்டு படிக்கல்லாக போட்டு வைத்தார் மரைக்காயர்.
அந்த கல்லின் மேல் நடந்து நடந்து நாளைடைவில் அந்த கல்லின் மேல் ஒட்டி இருந்த பாசி கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி சூரிய வெளிச்சத்தில் பார்ப்பதற்கு பளபளவென்று மின்னியது.
இது வறுமையில் வாடிய தனக்கு ஈசன் மங்களநாதர் கொடுத்த பரிசு என்று நினைத்த மரைக்காயர், அந்த மின்னும் பச்சை பாறையை அரசருக்கு அன்பளிப்பாக தந்தால் தனது வறுமை நீங்கும் என்ற எண்ணத்தில் பாண்டிய மன்னரின் அரண்மனைக்கு சென்றார். நடந்த அனைத்தையும் கூறி தன் வீட்டில் ஒரு பெரிய பச்சை கல் உள்ளது என்று அரசரிடம் சொன்னார்.
அரண்மனை பணி ஆட்கள் பச்சை பாறையை வீட்டில் இருந்து எடுத்து வந்து அரசரிடம் காண்பித்தனர். கற்களைப் பற்றிய விவரம் உள்ள ஒருவர் பச்சைப் பாறையை சோதித்து பார்த்தார்.
சோதித்தவர் ஆச்சரியத்துடன் "இது விலைமதிக்கமுடியாத அபூர்வ மரகதக்கல், உலகில் எங்கு தேடினாலும் கிடைக்காது" என்று கூறினார். உடனே மன்னரும், மரைக்காயருக்கு பச்சைப் பாறைக்கு உரிய பொற்காசுகளை அளித்து வழி அனுப்பினார்.

இவ்வளவு அருமையான கல்லிலிருந்து ஒரு நடராஜர் சிலை செதுக்க வேண்டும் என்பது அரசரின் ஆசை. இந்த வேலைக்கு உகந்த சிற்பியைப் பல இடங்களில் தேடி கடைசியில் இலங்கை அரசன் முதலாம் கயவாகுவின் அரண்மனையில் சிற்பியாக இருக்கும் சிவபக்தர் ரத்தின சபாபதியைப் பற்றிய விவரம் கிடைத்தது. அவரை அனுப்பி வைக்கும்படி அரசர் ஓலை அனுப்பினார். அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு சிற்பியும் வந்து சேர்ந்தார்.
அவ்வளவு பெரிய மரகத கல்லை பார்த்த உடன் ஆச்சரியத்தில் மயங்கியே விழுந்துவிட்டார், "என்னால் மரகத நடராஜர் வடிக்க இயலாது மன்னா" என்று கூறிவிட்டு இலங்கைக்கே திரும்பி சென்றார்.
மன்னன் மன வருத்தத்துடன் திருஉத்திரகோசமங்கை மங்களநாதர் சன்னதி முன்பாக நின்று மனமுருகி பிரார்த்தனை செய்துக் கொண்டிருந்தார். அப்போது நான் மரகத நடராஜரை வடித்து தருகிறேன் என்று சித்தர் சண்முக வடிவேலர் கூறினார்.
அதனை காதில் கேட்ட மன்னனின் கவலையும் நீங்கியது. மரகத நடராஜரை வடிக்கும் முழு பொறுப்பையும் சித்தர் சண்முக வடிவேலரிடம் ஒப்படைத்தார். அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார்.
அந்த பெரிய மரகத பாறையில் அஞ்சரை அடி உயர நடராஜரை ஒன்றரை அடி உயர பீடத்துடன் "ராஜ கோலத்தில்" மிகவும் நுணுக்கமாக மரகத நடராஜர் திருக்கரங்களில் உள்ள நரம்பு தெரியும் அளவிற்கு சிலையாக வடிவமைத்தார் சித்தர் சண்முக வடிவேலர். இவ்வாறுதான் மரகத நடராஜர் சிலை உருவானது என சொல்லப்படுகிறது.
- ராமாயண காலத்திற்கும் முந்தையது’ என்றும் சொல்லப்படுகிறது.
- ராவணனுக்கும் மண்டோதரிக்கும் திருமணம் இங்கு தான் நடந்துள்ளது.
உலகில் முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் உத்திரகோசமங்கை கோவில்தான். இதுவே சிவபெருமானின் சொந்த ஊர் என்றும் சொல்லப்படுகிறது.
உத்திரம் என்றால் உபதேசம், கோசம் என்றால் ரகசியம், மங்கை என்றால் பார்வதி தேவியை குறிக்கும். சிவன் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் ரகசியத்தையும், அதன் பொருளையும் பார்வதி தேவியிடம் கூறியது இந்த இடத்தில்தான் என்பதால் இந்த இடத்திற்கு உத்திரகோசமங்கை என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

இந்த கோவிலில் ஒரு இலந்தை மரம் உள்ளது. இந்த மரம் 3000 ஆண்டு பழமையானது என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இந்த மரத்தடியிலேதான் சிவன் சுயம்பு லிங்கமாக தோன்றினார்.
இந்த கோயிலில் சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய 3 கிரகங்கள் மட்டும்தான் உள்ளன. எனவே நவக்கிரக வழிபாடு அறியப்படாத காலத்திற்கு முன்பே தோன்றிய கோவில் இது என்று அறியப்படுகிறது.

இந்த கோவிலின் பழமையை குறிக்கும் விதமாக "மண் தோன்றியதற்கு முன்பே மங்கை தோன்றியது" என்ற பழமொழி இப்பகுதியில் வழக்கில் இருந்து வருகிறது. மேலும் இந்த கோவில் 'ராமாயண காலத்திற்கும் முந்தையது' என்றும் சொல்லப்படுகிறது.
இந்த கோவிலில்தான் ராவணனுக்கும் மண்டோதரிக்கும் திருமணம் நடந்துள்ளது. அதற்கு சான்றாக கோவில் கல்வெட்டுகளில் மண்டோதரியின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
- கோவில் மைய பிரகாரத்தில் பிரம்ம தீர்த்தகுளம் உள்ளது. கடும் வறட்சியிலும் இந்த குளத்தில் நீர் வற்றாது.
- பிரம்ம தீர்த்த குளத்தில் இன்று காலை நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கையில் பிரசித்தி பெற்ற மங்களநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு பச்சை நிறத்திலான ஆடல் வடிவ நடராஜர் சிலை அமைந்துள்ளது. இங்கு வருடந்தோறும் ஆருத்ரா தரிசனம் விமரிசையாக நடைபெறும். அப்போது நடராஜருக்கு சந்தனம் களையப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த கோவில் மைய பிரகாரத்தில் பிரம்ம தீர்த்தகுளம் உள்ளது. கடும் வறட்சியிலும் இந்த குளத்தில் நீர் வற்றாது. இதன் காரணமாக குளத்தில் மீன்கள் அதிகளவில் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரம்ம தீர்த்த குளத்தில் இன்று காலை நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. கோவிலுக்கு வந்த பக்தர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோவில் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தினர். மீன்கள் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.