search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துணைத் தேர்வு"

    • விண்ணப்பிக்க, மே 16 முதல் ஜூன் 1 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
    • துணைத் தேர்வுகள் ஜூலை 2-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் 2023-2024-ம் ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதியும், பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 14-ந் தேதியும் வெளி யாகின. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, மே 16 முதல் ஜூன் 1 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

    தற்போது துணைத் தேர்வுக்கான கால அட்டவணையை அர சுத் தேர்வுகள் இயக்ககம் வெளி யிட்டுள்ளது. அதன்படி, பிளஸ் 2 துணைத் தேர்வுகள் ஜூன் 24-ந் தேதி தொடங்கி ஜூலை 1-ந் தேதி வரை நடைபெறுகிறது. அதே போல், பிளஸ் 2 துணைத் தேர்வுகள் ஜூலை 2-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடைபெறவுள்ளது.

    ஜூன் 24 மொழிப்பாடம், ஜூன் 25-ஆங்கிலம், ஜூன் 26-கணினி அறிவியல், அரசியல் அறிவியல், ஜூன் 27-வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல், ஜூன் 28-கணினி அறிவியல், புள்ளிவிவரங் கள், உயிர் வேதியியல், ஜூன் 28-இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம், ஜூன் 29-உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் ஜூலை-1 கணிதம், விலங் கியல், வணிகவியல் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெற உள்ளன.

    ஜூலை 2-மொழிப் பாடம், ஜூலை 3-ஆங்கிலம், ஜூலை 4-இயற்பியல், பொருளியல், ஜூலை 5-கணினி அறிவியல், தொடர்பி யல் ஆங்கிலம், உயிரி வேதியியல், அரசியல் அறிவியல் ஜூலை 6-தாவரவியல், வரலாறு, ஜூலை 8-கணிதம், வணிகவியல், நுண்ணுயிரியல், ஜூலை 9-வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் தேர்வுகள் நடைபெறவுள்ளன.

    • வினாத்தாள் கட்டுக்காப்பு அலுவலகத்திலிருந்து 3 மையங்களுக்கு வினாத் தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
    • காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு முடிகிறது.

    கள்ளக்குறிச்சி 

    கள்ளக்குறிச்சி மாவட்ட தில் பிளஸ்-2 மாண வர்களுக்கான துணைத் தேர்வு இன்று தொடங்கியது. இத்தேர்வுகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெறுகிறது. கள்ளக் குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வினாத்தாள் கட்டுக்காப்பு அலுவலகத்திலிருந்து 3 மையங்களுக்கும், திருக்கோ விலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து 2 மையங்களுக்கும், உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து 2 மையங்களுக்கும் வினாத் தாள்கள் அனுப்பி வைக்கப் பட்டன. இத்தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு முடிகிறது.

    இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பயின்று ஒரு சில பாடப்பிரிவுகளில் தோல்வியடைந்த மாண வர்கள் தேர்வெழுது கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலர் தலைமையிலான அதிகாரி கள் தேர்வு மையங்களுக்கு நேரடியா சென்று கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்ட னர். தேர்வெழுதும் மாண வர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.

    ×