என் மலர்
நீங்கள் தேடியது "கழிப்பறைகள்"
- அறந்தாங்கி அரசு கல்லூரியில் நவீன கழிப்பறைகள் திறக்கபட்டது
- அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருநாவளூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவியர்களுக்கான புதிய நவீன கழிப்பறைகளை சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார். தமிழக அரசின் சார்பில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான பல்வேறு நலத்திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அறந்தாங்கி அருகே பெருநாவளூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கழிவறைகள் கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவுறுத்தலின்படி ஐடிசி நிறுவனம் சார்பில் 31 லட்சம் மதிப்பீட்டில் நவீன கழிப்பறைகள் கட்டப்பட்டது. இதனை அமைச்சர் மெய்யநாதன் மாணவியர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம், கல்லூரி முதல்வர் பாலமுருகன், ஐடிசி நிறுவன பொது மேலாளர் விஸ்வநாதன், ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், நகர்மன்றத் தலைவர் ஆனந்த் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.