search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படப்பிடிப்பு"

    • பிரிந்து சென்ற கணவர் மீது நயன்தாரா தனது காதலை அதில் வெளிப்படுத்தி உள்ளார்
    • நாங்கள் உங்களை மிகவும் தவறவிட்டோம். நான் உங்களை நேசிக்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

    பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் 'லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்' என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இது காதல், நகைச்சுவை திரைப்படமாகும். இப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்தை 'செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ' மற்றும் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் எஸ்.எஸ்.லலித் குமார் மற்றும் விக்னேஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில வாரங்களாக மலேசியா மற்றும் சிங்கப்பூரில் நடந்தது.இந்நிலையில்

    நயன்தாரா 2 மகன்களை கையில் வைத்திருக்கும் புகைப்படங்களையும், நயன்தாரா அவர்களுடன் விளையாடும் புகைப்படங்களையும் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பதிவில் விக்னேஷ் நேற்று பகிர்ந்தார். 

    "படப்பிடிப்பு பணிகள் காரணமாக வாரக்கணக்கில் குடும்பத்தினரிடம் இருந்து பிரிந்து இருக்கிறேன்". தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதை தவறவிட்டேன். விரைவில் தனது அன்பு குழந்தைகள், மனைவி நயன்தாராவை அரவணைக்க காத்திருக்கிறேன்" என குடும்பத்தை பிரிந்த ஏக்கத்தில் அவ்வாறு விக்னேஷ் பதிவிட்டு இருந்தார்.




    இந்நிலையில் நடிகை நயன்தாரா இன்று இணைய தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விக்னேஷ் - நயன்தாரா ஜோடியாக கட்டிப்பிடித்து அன்போடு தழுவும் படங்கள், இரட்டை குழந்தைகளை பாசத்துடன் கொஞ்சுவது போன்ற படங்களைப் பகிர்ந்துள்ளார். 

    நயன்தாரா வெளியிட்டுள்ள இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. படப்பிடிப்பிற்காக வீட்டை விட்டு பிரிந்து சென்ற கணவர் மீது நயன்தாரா தனது காதலை அதில் வெளிப்படுத்தி உள்ளார். நயன்தாரா இணையத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

    'சிங்கப்பூரில் இருந்து 20 நாடுகளுக்குப் பிறகு திரும்பிய உங்களை ( விக்னேஷ்) பார்த்தபோது நாங்கள் மூவரும் எப்படி உணர்ந்தோம் என்பதை விளக்க முடியவில்லை. நாங்கள் உங்களை மிகவும் தவறவிட்டோம். நான் உங்களை நேசிக்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • படத்தின் முக்கியமான சில காட்சிகளை மதுரையில் படமாக்க படக்குழு திட்டம்.
    • டைனோசர்ஸ் பட நாயகன் உதய் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறார்.

    யுகே கிரியேஷன்ஸ் சார்பில் கே.பாலாஜி தயாரிப்பில், இயக்குநர் செல்வா குமார் திருமாறன் இயக்கத்தில், நடிகர்கள் உதய் கார்த்திக் சுபிக்ஷா நடிக்கும், திரைப்படம் "ஃபேமிலி படம்". இந்த படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன் தொடங்கியது.

    ஒரு குடும்பத்தில் இருக்கும் மூன்று அண்ணன் தம்பிகள், வாழ்வில் ஜெயிக்க போராடுகிறார்கள். அவர்களுக்குள் நிகழும் சண்டைகள், காதல், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு அழகான குடும்பத்தின் வாழ்க்கையை எண்டர்டெயினர் படமாக அறிமுக இயக்குநர் செல்வ குமார் திருமாறன் உருவாக்குகிறார். இப்படம் குடும்பத்தோடு அனைவரும் பார்த்து ரசிக்கும் ஜனரஞ்சக படைப்பாக இருக்கும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இப்படத்தில் டைனோசர்ஸ் பட நாயகன் உதய் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறார். நாயகியாக சுபிக்ஷா நடிக்கிறார். இவர்களுடன் விவேக் பிரசன்னா, பார்த்திபன், ஶ்ரீஜா, சந்தோஷ், மோகன சுந்தரம், ஆர்.ஜே பிரியங்கா, ஜனனி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. படத்தின் முக்கியமான சில காட்சிகளை மதுரையில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

    இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிவீ இசையமைக்கிறார். கேபி நந்து கலை இயக்கம் செய்கிறார். ஆர் சுதர்ஷன் எடிட்டிங் செய்கிறார்.

    படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் எஸ்.யு. அருண்குமார் தலைமையிலான எங்கள் குழு ஏப்ரல் 2024 முதல் படப்பிடிப்பை தொடங்குகிறது.
    • இதில் சியான் விக்ரம் நடிப்பு அனைவரும் திகைக்கும் வகையில் அமைந்து இருக்கும் .


    பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரபல நடிகர் சியான் விக்ரம் 'தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார். அவரது ரசிகர்கள் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.

    இந்நிலையில், 'சித்தா' புகழ் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் ''சியான் 62' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட புது படத்தில் நடிகர் விரக்ம் நடிக்க இருக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சியான் 62' படத்தை இதற்கு முன் 'மும்பைகார்' மற்றும் 'தக்ஸ்' படங்களை தயாரித்த ரியா ஷிபுவின் எச்.ஆர் பிக்ச்சஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் ஏப்ரல் மாதம் சியான் விக்ரம் படப்பிடிப்பில் பங்கேற்று நடிக்க தொடங்குகிறார்.




     

    இதில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் விக்ரமுடன் இணைந்து நடிக்கின்றனர்.இப்படத்துக்குஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ரியா ஷிபு, தனது இன்ஸ்டாகிராம் பதிவில் 'சியான் 62' படப்பிடிப்பு குறித்த 'அப்டேட்' பகிர்ந்து உள்ளார்.

     அதில் 'சியான் 62' படப்பிடிப்பு தொடர்பாக இயக்குனர் எஸ்.யு. அருண்குமார் தலைமையிலான எங்கள் குழு ஏப்ரல் 2024 முதல் படப்பிடிப்பை தொடங்குகிறது. இதற்காக நாங்கள் முழு உழைப்பில் ஈடுபட்டு வருகிறோம். இதில் சியான் விக்ரம் நடிப்பு அனைவரும் திகைக்கும் வகையில் அமைந்து இருக்கும் 'என கூறி உள்ளார்


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • நடிகரும் இயக்குனருமான சாய் ராஜகோபால் இயக்கியுள்ளார்.
    • கோடைகால விடுமுறையின் போது படம் வெளியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நீண்ட இடைவெளிக்குப்பின் கவுண்டமணி ஹீரோவாக நடித்துள்ள 'ஒத்த ஓட்டு முத்தையா'திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நிறைவடைந்துள்ளது.

    இந்தபடம் அரசியல், நகைச்சுவை மிக்க கதை அம்சத்தில் உருவாகியுள்ளது. இதனை நடிகரும் இயக்குனருமான சாய் ராஜகோபால் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு, 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்','கிச்சா வயசு 16'படங்களை இயக்கி உள்ளார்.

    இந்நிலையில், கவுண்டமணியை ஹீரோவாக வைத்து 'ஒத்த ஓட்டு முத்தையா' திரைப்படத்தை இயக்கி வந்தார். படத்தை சசி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. யோகிபாபு, சிங்கமுத்து, சித்ரா லட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், நாகேஷின் பேரன் கஜேஷ், மயில்சாமியின் மகன் அன்பு, சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்திக் ஆகியோரரும் நடித்துள்ளனர். ஹெக்டர் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்து உள்ள இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தில் அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் நிலை மற்றும் தேர்தல், ஓட்டு தொடர்பான காமெடிகளை மையமாக வைத்து படக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், கோடைகால விடுமுறையின் போது படம் வெளியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நடிகர் தனுஷ் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரி பகுதியில் நேற்று நடந்தது. இதனால் திருப்பதி மலைக்கு சென்ற பஸ்கள், பக்தர்களின் வாகனங்களை ஹரே ராமா ஹரே கிருஷ்ணா சாலை வழியாக போலீசார் திருப்பி விட்டனர். இந்த சாலை குறுகலானதாக இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.


    அதன் பின் படக்குழுவினர் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவில் முன் படப்பிடிப்பை நடத்த முற்பட்டனர். இதனால் அங்கு தரிசனத்துக்கு வந்த பக்தர்களை படக்குழுவினருடன் வந்திருந்த பவுன்சர்கள் அவசர அவசரமாக வெளியேற்றினர். தகவலறிந்த ஆந்திர மாநில பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பானு பிரகாஷ் ரெட்டி திருப்பதி போலீசில் புகார் கொடுத்தனர்.


    இந்நிலையில் பக்தர்கள் அவதி, போக்குவரத்து இடையூறு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தனுஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்கு அளித்த அனுமதி ரத்து செய்யப்படுவதாக திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர ரெட்டி அறிவித்தார். இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி தேங்காய்திட்டு பழைய துறைமுகத்தில் படப்பிடிப்பு நடந்தது.
    • ரஜினிகாந்த் பங்கேற்ற படப்பிடிப்பு குறித்த தகவலறிந்து அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

    புதுச்சேரி:

    ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

    வேட்டையன் திரைப்படத்தில் நடிகர்கள்-அமிதாபச்சன், பகத் பாசில், ராணா, நடிகைகள் மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசைய மைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கி றது.

    இதன் முதல்கட்ட படப்பிடிப்பு திருவனந்த புரம், திருநெல்வேலி, மும்பை ஆகிய இடங்களில் நடந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி தேங்காய்திட்டு பழைய துறைமுகத்தில் படப்பிடிப்பு நடந்தது. இதில் ரஜினி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது.

    2 நாட்கள் தொடர்ந்து அங்கேயே ரஜினி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் படப்படிப்பு நடந்தது. அப்போது கோவில் வளாகம், தெப்பக்குளம் பகுதியில் படம் பிடிக்கப்பட்டது. ஓய்வு நேரங்களில் ரஜினிகாந்த் சிறிது நேரம் புத்தகம் படித்தும் தியானமும் செய்தார்.

    படப்பிடிப்பு முடிந்ததும் அவர் காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதற்கிடையே ரஜினிகாந்த் பங்கேற்ற படப்பிடிப்பு குறித்த தகவலறிந்து அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

    படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த ரஜினிகாந்த் அவர்களை பார்த்து காரில் இருந்தபடியே கையசைத்து சென்றார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்து தலைவா தலைவா என்று கூறி ஆரவாரம் செய்தனர்.

    • முதல் ஆளாக வந்து சாப்பிடுகிறாயே என்று விஜயகாந்தை சாப்பிட விடாமல் எழுப்பிவிட்டார்.
    • விஜயகாந்துக்கு நிகர் விஜயகாந்த் தான் என்று திரையுலகமே அவரை பாராட்டி மகிழ்ந்தது.

    'இனிக்கும் இளமை' படத்தில் அறிமுகமான விஜயகாந்த், மதிய உணவு இடைவேளையில் அனைவரும் சாப்பிட உட்காரும்போது தானும் சாப்பிடுவதற்காக மேஜையில் அமர்ந்தார். அப்போது படக் குழுவை சேர்ந்த ஒருவர், படத்தின் ஹீரோவே இன்னும் சாப்பிடவில்லை. அதற்குள் முதல் ஆளாக வந்து சாப்பிடுகிறாயே என்று விஜயகாந்தை சாப்பிட விடாமல் எழுப்பிவிட்டார். அரிசி ஆலை வைத்திருந்த விஜயகாந்துக்கு அன்று உணவுக்கு ஏற்பட்ட நிலைமை அவரை மிகவும் பாதித்தது. அன்றிலிருந்து சினிமா துறையில் நாம் உயரத்தை எட்டியதும் அனைவருக்கும் விருந்தோம்பல் செய்வதை முதல் கடமையாக செய்ய வேண்டும் என்று அவருக்குள் சபதம் எடுத்துக் கொண்டார்.

    அதன்படி சினிமா துறையில் அவர் சாதித்ததும் சாப்பாடு விஷயத்தில் அனைவருக்கும் உணவு கொடுப்பதில் மிகவும் முன்னுரிமை கொடுத்து வந்தார். படப்பிடிப்பில் சினிமா தொழிலாளர்களுக்கு 3 வேளை உணவு கொடுப்பதை விஜயகாந்த் தான் முதலில் அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு தான் மற்றவர்களும் 3 வேளை உணவு கொடுக்க தொடங்கினார்கள். இந்த விஷயத்தில் விஜயகாந்துக்கு நிகர் விஜயகாந்த் தான் என்று திரையுலகமே அவரை பாராட்டி மகிழ்ந்தது.

    • ரஜினிகாந்த் நடித்த தலைவர் 170 படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் பணகுடியில் நடந்தது
    • பா.ஜ.க. நிர்வாகிகள் சிலரும் ரஜினிகாந்தை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    நாகர்கோவில் :

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தலைவர் 170 படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் பணகுடியில் நடந்தது. படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் கடந்த 3 நாட்களாக கன்னியாகுமரியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள காற்றாலை பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. இதற்காக பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு இருந்தது. படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் வருவதை அறிந்த ஏராளமான பொதுமக்கள் அந்த பகுதியில் திரண்டனர்.

    ரசிகர்களை பார்த்து அவர் கை அசைத்தார். ரஜினிகாந்துடன் சில ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். படப்பிடிப்பு முடித்த பிறகு ரஜினிகாந்த் மீண்டும் கன்னியாகுமரியில் உள்ள விடுதிக்கு சென்றார். கன்னியாகுமரியில் உள்ள விடுதியில் ரஜினிகாந்தை முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசி னார். அவருக்கு பொன்னாடை அணிவித்து பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்த பொன் ராதாகிருஷ்ணன் சில நிமிடங்கள் பேசினார். இதைத்தொடர்ந்து பா.ஜ.க. நிர்வாகிகள் சிலரும் ரஜினிகாந்தை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    • நயினார் பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் சினிமா படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • கோவில்களில் பெரும்பாலும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதிகளான குரால் வீர பயங்கரம் கூகையூர் பாக்கம் பாடி, காளசமுத்திரம், நயினார் பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் சினிமா படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ஜி3 ஆலைய மூவிஸ் தயாரிக்கிறது. படத்தின் தலைப்பு ஐயப்பன் துணை இருப்பான் என வைக்கப்பட்டுள்ளது.படத்தை தனலட்சுமி கணேசன் தயாரிக்கிறார். கதை, திரைக்கதை, பாடல், இயக்கம் மகாகணேஷ், இணை தயாரிப்பு சரஸ்வதி செல்வராஜ், அசோசியட் விஜயராஜ், உதவி இயக்குனர் திருமலை மாயக்கண்ணன், தயாரிப்பு மேற்பார்வை ராஜமுத்து, தயாரிப்பு நிர்வாகம் சந்திரசேகரன், இசை சதாசிவம் ஜெயராமன், ஒளிப்பதிவு துருகம் சதா, எடிட்டிங் ஆனந்த் செய்து வருகிறார். படப்பிடிப்பு சின்னசேலம் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கோவில்களில் பெரும்பாலும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சினிமா படபிடிப்பை அப்பகுதி கிராம மக்கள் ஏராளமானோர் ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.

    • தொடர் விடுமுறை நாட்கள் வந்ததால் நீலகிரியில் கடந்த வியாழக்கிழமை முதலே சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
    • ஒரே நாளில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு 23 ஆயிரத்து 883 பேர் வந்துள்ளனர்.

    ஊட்டி:

    மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் எப்போதுமே இதமான காலநிலை காணப்படும்.

    இந்த கால நிலையை அனுபவிக்கவும், மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்த வண்ணம் இருப்பார்கள்.

    குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள். கடந்த மே மாதம் நடந்த கோடை கண்காட்சியை காண தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் அதிகமானோர் வந்திருந்தனர். அவர்கள் கண்காட்சியை கண்டு ரசித்து சென்றனர்.

    கோடை விடுமுறை முடிந்த பின்னரும் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாகவே உள்ளது. வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டும். அப்போது சுற்றுலாபயணிகள் வருகை வெகுவாக குறைந்து இருக்கும். தற்போது பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யாததால் சுற்றுலாபயணிகள் வருகையானது தொடர்கிறது.

    தற்போது பக்ரீத் பண்டிகை விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு வார விடுமுறை என தொடர் விடுமுறை நாட்கள் வந்ததால் நீலகிரியில் கடந்த வியாழக்கிழமை முதலே சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக கேரள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது.

    ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள், ஊட்டி படகு இல்லம், பைக்கார படகு இல்லம், தொட்டபெட்டா, சூட்டிங் மட்டம், தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா, காட்டேரிப் பூங்கா, உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.

    ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அங்கு மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டு பூத்து குலுங்கிய மலர் செடிகளை கண்டு ரசித்ததுடன், அதனுடன் நின்று புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

    நேற்று ஒரே நாளில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு 23 ஆயிரத்து 883 பேர் வந்துள்ளனர்.

    சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததன் காரணமாக மாவட்டத்தின் நுழைவு வாயிலான கூடலூர், குஞ்சபனை, பர்லியார் பகுதிகளில் வாகன நெரிசல் காணப்பட்டது கூடலூர் பகுதியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்து சென்றன.

    நீலகிரியில் கோடை சீசன் காரணமாக தாவரவியல் பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான 3 மாத காலத்தில் படப்பிடிப்புகள் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

    தற்போது கோடைசீசன் முடிவடைந்தையொட்டி கடந்த 1-ந் தேதி முதல் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    சீசன் முடிந்த பின்னரும் அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அப்படி வரும் சுற்றுலா பயணிகள் மசினகுடி முதல் கல்லட்டி வரை சாலையோரங்களில் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு சாலைகளில் உலா வருகின்றனர்.

    சிலர் வனங்களுக்குள் சென்று இயற்கை உபாதைகளை கழிப்பது, சாலையோரம் மேய்ச்சலில் ஈடுபடும் மான் உள்ளிட்டவற்றை தொந்தரவு செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக தெரிகிறது. இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அத்துமீறுபவர்களை பிடித்து அபராதமும் விதித்து வருகிறார்கள்.

    ×