என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடம் கில்கிறிஸ்ட்"

    • இங்கிலாந்து வீரர்கள் அதிகம் உள்ளதால் கடைசி இடத்தை பிடிக்கும்.
    • என்னுடைய கணிப்பு விராட் கோலிக்கு எதிரானது அல்ல. ஆர்சிபி ரசிகர்களுக்கு எதிரானது அல்ல.

    ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் திருவிழா நாளை தொடங்குகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆன கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி எதிர்கொள்கிறது.

    இந்த நிலையில் ஆர்.சி.பி. இந்த வருடம் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை பிடிக்கும் என ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஆடம் கில்கிறிஸ்ட் கணித்துள்ளார்

    இது தொடர்பாக ஆடம் கில்கிறிஸ்ட் கூறியதாவது:-

    ஆர்சிபி அணி இந்த முறை கடைசி இடத்தை பிடிக்க வாய்புள்ளதாக நினைக்கிறேன். இதை உண்மை அடிப்படையில் கூறுகிறேன். ஏனென்றால் ஆர்சிபி அணியில் அதிக அளவிலான இங்கிலாந்து வீரர்கள் உள்ளனர்.

    என்னுடைய கணிப்பு விராட் கோலிக்கு எதிரானது அல்ல. ஆர்சிபி ரசிகர்களுக்கு எதிரானது அல்ல. ஆர்சிபி ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். இது நீங்கள் இதுகுறித்து ஏலம் எடுத்தவர்களின் கேட்கவேண்டும்.

    இவ்வாறு கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.

    ஆர்.சி.பி. அணியின் கேப்டனாக ரஜத் படிதார் உள்ளார். விராட் கோலி நட்சத்திர வீரராக உள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தேல், பில் சால்ட் ஆகியோர் அணியில் உள்ளனர்.

    ஆர்சிபி அணி விவரம்:-

    பேட்ஸ்மேன்கள்

    ரஜத் படிதார், விராட் கோலி, பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, தேவ்தத் படிக்கல், ஸ்வாஸ்திக் சிகாரா.

    ஆல்-ரவுண்டர்கள்

    லிவிங்ஸ்டன், குருணால் பாண்ட்யா, ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்டு, மனோஜ் பாண்டேஜ், ஜேக்கப் பெத்தேல்.

    பந்து வீச்சாளர்கள்

    ஜோஷ் ஹேசில்வுட், ரஷிக் தார், சுயாஷ் சர்மா, புவனேஸ்வர் குமார், நுவன் துசாரா, லுங்கி நிகிடி, அபிநந்தன் சிங், மோகித் ரதீ, யாஷ் தயால்.

    கடந்த சீசனில் ஆர்சிபி 4-வது இடத்தை பிடித்தது, பிளேஆஃப் சுற்று எலிமினேட்டரில் ராஜஸ்தானிடம் தோல்வியடைந்தது.

    • இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியிருந்தாலும் அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் 3 உலக சாதனைகளை படைத்துள்ளார்.
    • 9 சிக்சர்களை விளாசிய அவர் ஆசஸ் தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற கெவின் பீட்டர்சன் சாதனையை தகர்த்து புதிய வரலாறு படைத்துள்ளார்.

    ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. வெற்றிக்காக போராடிய பென் ஸ்டோக்ஸ் 155 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியிருந்தாலும் அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் 3 உலக சாதனைகளை படைத்துள்ளார்.


    இப்போட்டியில் 6-வது இடத்தில் களமிறங்கி 155 ரன்கள் குவித்த பென் ஸ்டோக்ஸ் 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 அல்லது அதற்கு கீழ் வரிசையில் களமிறங்கி அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட்டின் 24 வருட சாதனையைத் தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

    அந்த பட்டியல்:

    பென் ஸ்டோக்ஸ் : 155, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2023*

    ஆடம் கில்கிறிஸ்ட் : 149*, பாகிஸ்தானுக்கு எதிராக, 1999

    டேனியல் வெட்டோரி : 140, இலங்கைக்கு எதிராக, 2009

    அதைவிட இந்த போட்டியில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்த அவர் ஏற்கனவே 2017-ல் தென்னாப்பிரிக்காவின் கேசவ் மகாராஜுக்கு எதிராக இதே போல் ஹாட்ரிக் சிக்சர்களை அடித்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 முறை ஹாட்ரிக் சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையும் அவர் படைத்துள்ளார்.

    அத்துடன் இப்போட்டியில் 9 சிக்சர்களை விளாசிய அவர் ஆசஸ் தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற கெவின் பீட்டர்சன் சாதனையை தகர்த்து புதிய வரலாறு படைத்தார்.

    அந்த பட்டியல்:

    1. பென் ஸ்டோக்ஸ் : 33*

    2. கெவின் பீட்டர்சன் : 24

    3. இயன் போத்தம் : 20

    4. ஸ்டீவ் ஸ்மித் : 19

    • ரிஷப் பண்ட் வலது புறத்தில் இருந்து இடது புறத்திற்கு திரும்பி மிகவும் அற்புதமான ஒரு கேட்ச் எடுத்தார்.
    • இது நம்ப முடியாத ஒன்று. அவர் மிக வேகமாக இருந்தார்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிக் செய்த குஜராத் அணி 89 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இதைத்தொடர்ந்து களம் இறங்கிய டெல்லி அணி 8.4 ஓவர்களில் 90 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் ஆட்டநாயகனாக ரிஷப் பண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார். சாலை விபத்தில் சிக்கி குணமடைந்து திரும்ப ஐபிஎல் தொடருக்கு வந்திருக்கும் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் செயல்பாடு மிகவும் திருப்தி அளிக்க கூடியதாக இருக்கிறது. இதன் காரணமாக அவர் வருகின்ற டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் தேர்வாகவும் வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கின்றது.

    இந்த நிலையில் நேற்று ரிஷப் பண்ட் தொட்டதெல்லாம் தங்கமாக மாறியது என ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பந்து வீச்சாளர் ரவுண்ட் த ஸ்டெம்பில் இருந்து வந்து பேட்ஸ்மேனுக்கு பந்தை வீசுகிறார். இந்த கோணத்திலிருந்து பந்து ரிஷப் பண்ட்டுக்கு வெளியே செல்லும். ஆனால் பந்து மில்லருக்கு எட்ஜ் ஆகி திரும்பி உள்ளே செல்கிறது. இந்த நிலையில் ரிஷப் பண்ட் வலது புறத்தில் இருந்து இடது புறத்திற்கு திரும்பி மிகவும் அற்புதமான ஒரு கேட்ச் எடுத்தார். இது நம்ப முடியாத ஒன்று. அவர் மிக வேகமாக இருந்தார்.

    இந்த இடத்தில் உங்களுடைய டெக்னிக் மிக சரியாக இருக்க வேண்டும். அந்தப் பந்துக்கு உண்மையில் நீங்கள் திரும்பி வந்து பிடிப்பது மிகவும் கடினமான ஒன்று. அதற்குப் பெரிய அளவில் சக்தி வேண்டும். நேற்று டாஸ் முதல் ரிஷப் பண்ட்டுக்கு எல்லாம் நல்லதாக சென்றது. அவர் பந்துவீச்சு மாற்றங்களை சரியாக செய்தார். மேலும் பேட்டிங்கிலும் சில ஷாட் சிறப்பாக விளையாடினார். நேற்று அவர் தொட்டதெல்லாம் தங்கமாக மாறியது.

    என்று ஆடம் கில்கிறிஸ்ட் கூறியிருக்கிறார்.

    • ஜோ ரூட் நீண்ட காலமாக இங்கிலாந்தின் சிறந்த வீரராக செயல்பட்டு வருகிறார்.
    • விராட் கோலியை விட ரூட் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்று மைக்கேல் வாகன் கூறினார்.

    இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் 12000 ரன்களை கடந்த அவர் 34 சதங்கள் அடித்துள்ளார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்த அவர் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் ஆகிய 4 வீரர்களையும் மிஞ்சியுள்ளார்.

    அதனால் விரைவில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் உடைப்பார் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன. அத்துடன் விராட் கோலியை விட ரூட் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்று மைக்கேல் வாகன் போன்ற அந்நாட்டின் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் ஜோ ரூட்டை விட விராட் கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஜோ ரூட்டின் புள்ளிவிவரங்கள் சிறப்பாக இருக்கிறது. அதே போல் விராட் கோலியின் புள்ளிவிவரங்களையும் நான் பார்க்கிறேன். இதை நான் இயன் சேப்பல், ரிக்கி பாண்டிங் போன்ற ஆஸ்திரேலியர்கள் பார்வையில் பார்க்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 பேட்டிங் சராசரி மகத்துவத்திற்கான பெஞ்ச மார்க் அல்லவா?

    அதே சமயம் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் நான் விராட் கோலியை தேர்ந்தெடுப்பேன். ஜோ ரூட் நீண்ட காலமாக இங்கிலாந்தின் சிறந்த வீரராக செயல்பட்டு வருகிறார். இருப்பினும் ஆஸ்திரேலியாவில் அவர் சதமடித்துள்ளதாக எனக்குத் தெரியவில்லை.

    ஆனால் விராட் கோலி ஆஸ்திரேலியாவில் விளையாடிய முதல் போட்டியிலேயே பெர்த் மைதானத்தில் நான் பார்த்த சிறந்த சதத்தை அடித்தார். அந்த வித்தியாசமான சதத்தை அடித்த விராட் கோலியை ஆஸ்திரேலிய மண்ணில் நான் தேர்ந்தெடுப்பேன்.

    என்று கூறினார்.

    ஆஸ்திரேலிய மண்ணில் ரூட் 1 டெஸ்ட் சதம் கூட அடித்ததில்லை. ஆனால் விராட் கோலி ஆஸ்திரேலியாவில் 6 டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார். 

    • களத்தில் நீண்ட நேரம் இருக்க பொறுமை மிக அவசியம்.
    • நாம் நமது கட்டுப்பாட்டில் பேட்டிங்கை வெளிப்படுத்தினால் கிடைப்பதுதான் மிகப்பெரிய ஸ்கோர்.

    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையே 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்துள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி வரும் 14-ம் தேதி தொடங்க உள்ளது.

    முன்னதாக இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி முதல் போட்டியில் சதம் அடித்து அசத்தியதால் மீண்டும் பார்முக்கு திரும்பியதாக ரசிகர்கள் கருதினர். ஆனால் 2-வது போட்டியில் 7, 11 ரன்கள் அடித்து மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். அதனால் மீண்டும் அவர் மீது விமர்சனங்கள் விழுந்துள்ளன.

    இந்நிலையில் கடந்த 2004-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சச்சின் எவ்வாறு விளையாடினாரோ அதைப் போன்று விராட் கோலி செய்தால் நிச்சயம் அவரால் மீண்டும் ரன் குவிக்க முடியும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அதிரடி வீரர் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஒரு பேட்ஸ்மேனுக்கு மிகப்பெரிய ஸ்கோர் என்பது உங்களை நோக்கி வீசும் பந்துவீச்சாளர்களிடம் இருந்து வருவதோ, எதிரணியின் திறமையிடமிருந்து வருவதோ கிடையாது. நாம் நமது கட்டுப்பாட்டில் பேட்டிங்கை வெளிப்படுத்தினால் கிடைப்பதுதான் மிகப்பெரிய ஸ்கோர்.

    2004-ம் ஆண்டு சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சச்சின் எவ்வாறு வெளியே சென்ற பந்துகளை துரத்தி விளையாடாமல் 241 ரன்கள் குவித்தாரோ அதேபோன்று விராட் கோலியும் சூழலுக்கு ஏற்றவாறு பந்தை துரத்தாமல் தனக்கு நேராக வரும் பந்துகளை அடித்து விளையாடினால் மிகப்பெரிய ஸ்கோரை எடுக்க முடியும். களத்தில் நீண்ட நேரம் இருக்க பொறுமை மிக அவசியம்.

    என்று கில்கிறிஸ்ட் கூறினார்.

    கில்கிறிஸ்ட் சொல்வது போல 2004-ம் ஆண்டு நடந்த போட்டியில் சச்சின் கவர் டிரைவ் ஷாட்டுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணி செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
    • ஓய்வு பெற்று விடுவார் என்று தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.

    இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும், இந்திய அணி டெஸ்ட் தொடரையும் இழந்தது. இதையடுத்து, ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணி செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    பலரும், இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற்று விடுவார் என்று தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெறுகிறார் என்று அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், ரோகித் சர்மா ஓய்வு குறித்து ஐ.பி.எல். தொடரில் டெக்கன் சார்ஜர்ஸ் அணியில் ரோகித் சர்மாவுக்கு கேப்டனாக இருந்த ஆடம் கில்கிறிஸ்ட் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி பேசிய அவர், "ரோகித் இங்கிலாந்து செல்வார் என்று நான் நினைக்கவில்லை. வீடு திரும்பியதும் அதுபற்றி முடிவு செய்வேன் என்று அவர் சொல்வதாக எனக்கு தோன்றியது. அவர் வீடு திரும்பியதும் இரண்டு மாத குழந்தையை தான் அவர் எதிர்கொள்வார். குழந்தைக்கு அவர் டயப்பர்களை மாற்ற வேண்டும். அது அவரை இங்கிலாந்து செல்ல ஊக்குவிக்கலாம். ஆனால் அவர் தொடர்ந்து விளையாடுவார் என்று நான் நினைக்கவில்லை. சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அவருக்கு ஒரு பெரிய பின்னடைவு ஏற்படும் என்று நான் நினைக்கிறேன், அதுவே அவரை வெளியேற்றக்கூடும்."

    "ஜஸ்பிரித் பும்ரா முழுநேர கேப்டனாக இருக்க வேண்டுமா என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. அது அவருக்கு கொஞ்சம் சவாலாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். எனவே, அடுத்த கேப்டன் யாராக இருக்கும் என்பதே பலரின் யூகமாக இருக்கும். உண்மையில் அவர்கள் விராட் கோலியிடம் திரும்பி செல்வார்களா? அவர்கள் அதை செய்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்," என்று கூறினார்.

    • ரோகித் சர்மா ஜூன் மாதம் நடக்கும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு செல்லமாட்டார்.
    • இந்திய அணியின் முழு நேர கேப்டனாக பும்ரா இருக்க முடியுமா என்பது தெரியவில்லை.

    சிட்னி:

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மோசமான பார்ம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த கடைசி டெஸ்டில் தானாக முன்வந்து விலகினார். இதனால் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கேப்டன் பொறுப்பை கவனித்தார். சிட்னி டெஸ்டில் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயத்தால் பாதியில் வெளியேறிய போது, விராட் கோலி பொறுப்பு கேப்டனாக செயல்பட்டார். ரோகித் சர்மா இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவது சந்தேகம் தான். அதனால் புதிய டெஸ்ட கேப்டனை நியமிக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.

    இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்ஷிப் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியதாவது:-

    ரோகித் சர்மா ஜூன் மாதம் நடக்கும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு செல்லமாட்டார். அவரது இலக்கு அனேகமாக சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியாக இருக்கும். அது முடிந்ததும் ஓய்வு பெற்று விடுவார் என்று நினைக்கிறேன்.

    இந்திய அணியின் முழு நேர கேப்டனாக பும்ரா இருக்க முடியுமா என்பது தெரியவில்லை. அது அவருக்கு சவாலானதாக இருக்கும். அதனால் அடுத்த கேப்டனாக யார் வருவார்? கோலியை மறுபடியும் கேப்டன்ஷிப்புக்கு கொண்டு வர முயற்சிப்பார்களா? என்னை கேட்டால் கோலி மீண்டும் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    இந்தியாவுக்கு இது சவாலான கால கட்டமாகும். மூத்த வீரர்கள் வெளியேறினால் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் இந்திய அணியில் இருக்கிறார்கள். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பல திறமையான வீரர்களை உருவாக்கியுள்ளது. அதனால் 1 முதல் 11-வது வரை இந்த வரிசைக்கும் புதிய வீரர்களை கொண்டு வர முடியும். அதற்காக சர்வதேச போட்டியில் அது உடனடியாக வெற்றியை தேடி தரும் என்று அர்த்தம் கிடையாது. இந்திய அணிக்கு இது சற்று சவாலான நேரமாக இருக்கப்போகிறது. ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் அந்த நாட்டு பவுலர்கள் முழு உடல்தகுதியுடன் இருந்தால், நிச்சயம் ஆதிக்கம் செலுத்துவார்கள்.

    இவ்வாறு கில்கிறிஸ்ட் கூறினார்.

    ×