search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய மகளிர் கிரிக்கெட் அணி"

    • நான் இந்தியாவுக்காக விளையாட விரும்பினேன், அது இறுதியாக தற்போது நடந்துள்ளது.
    • 33 வயதில் நான் ஒருநாள் அணிக்காக அறிமுகமாகியுள்ளேன் என்பதால் இதை அதிசயம் என்று சொல்வேன்.

    தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி ஸ்மிருதி மந்தனாவின் அபாரமான சதத்தின் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்களைச் சேர்த்தது.

    அதன்பின் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது 37.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் வெறும் 122 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அறிமுக வீராங்கனை ஆஷா சோபனா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

    33 வயதில் நான் ஒருநாள் அணிக்காக அறிமுகமாகியுள்ளேன் என்பதால் இதை அதிசயம் என்று சொல்வேன் என ஆஷா சோபனா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    என்னிடம் தற்போது பேச வார்த்தைகளே கிடையாது. ஏனேனில் நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த போது ஒருநாள் கிரிக்கெட்டை இதுநாள் வரை டிவியில் மட்டுமே பார்த்திருக்கிறேன். அப்போது நான் இந்தியாவுக்காக விளையாட விரும்பினேன், அது இறுதியாக தற்போது நடந்துள்ளது.

    இந்தியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவது எனக்கு ஒரு கனவு. அந்த கனவு தற்போது நனவாகியுள்ளது. 33 வயதில் நான் ஒருநாள் அணிக்காக அறிமுகமாகியுள்ளேன் என்பதால் இதை அதிசயம் என்று சொல்வேன். எனது முதல் சர்வதேச விக்கெட்டாக மரிஸான் கேப்பின் விக்கெட்டை வீழ்த்தியது சிறப்பு வாய்ந்த தருணம். ஏனெனில், சில நாள்களுக்கு முன் நான் என்சியாவில் இருந்த போது ஜெமிமாவிடம் உரையாடிக்கொண்டிருந்தேன்.

    அப்போது நான் அவரிடம், எனது அறிமுக விக்கெட்டாக மரிஸான் கேப்பின் விக்கெட் இருக்க வேண்டும் என்று கூறினேன். நீங்கள் எந்தப் போட்டியில் விளையாடினாலும், மரிஸான் கேப்பின் விக்கெட்டைப் பெறுவது எப்போதும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்துள்ளதுடன், தற்போது விளையாடி வரும் அனுபவ வாய்ந்த வீராங்கனைகளில் ஒருவரும் கூட. அவரைது விக்கெட்டை வீழ்த்த கடவுள் கருணை காட்டியுள்ளார்.

    இவ்வாறு ஆஷா கூறினார்.

    • ஹர்மன்ப்ரீத் கவுர் இரண்டு வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
    • ஸ்மிருதி மந்தனா இரண்டு வடிவிலான போட்டிகளுக்கும் துணைகேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வங்கதேச சுற்றுப்பயணத்திற்கான இந்திய மகளிர் ஒருநாள் மற்றும் டி20 அணியை அறிவித்துள்ளது.

    இந்திய மகளிர் அணி வங்கதேசத்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. 6 போட்டிகளும் மிர்பூரில் உள்ள ஷேர்-இ-பங்களா தேசிய கிரிக்கெட் மைதானத்தில் (எஸ்பிஎன்சிஎஸ்) நடைபெறும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    ஹர்மன்ப்ரீத் கவுர் இரண்டு வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். ஸ்மிருதி மந்தனா இரண்டு வடிவிலான போட்டிகளுக்கும் துணைகேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஷிகா பாண்டே, வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் தாக்கூர் மற்றும் பேட்டர் ரிச்சா கோஷ் ஆகியோர் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டு உள்ளனர்.இதனால் இந்திய அணி அனுபவமில்லாத பந்து வீச்சாளர்களுடன் விளையாட உள்ளது.

    இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்டு உள்ள இந்திய அணி பின்வருமாறு:-

    இந்திய டி20 அணி:-

    ஹர்மன்ப்ரீத் கவுர் (சி),ஸ்மிருதி மந்தனா (விசி), தீப்தி ஷர்மா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், யாஸ்திகா பாட்டியா , ஹர்லீன் தியோல், தேவிகா வைத்யா, உமா செத்ரி, அமன்ஜோத் கவுர், மேகனா, மேகனா பூஜா வஸ்த்ரகர், மேக்னா சிங், அஞ்சலி சர்வானி, மோனிகா பட்டேல், ராஷி கனோஜியா, அனுஷா பாரெட்டி, மின்னு மணி.

    இந்திய ஒருநாள் அணி:-

    ஹர்மன்ப்ரீத் கவுர் (சி), ஸ்மிருதி மந்தனா (விசி), தீப்தி ஷர்மா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், யாஸ்திகா பாட்டியா , ஹர்லீன் தியோல், தேவிகா வைத்யா, உமா செத்ரி ,அமன்ஜோத் கவுர், பிரியா புனியா, பூஜா வஸ்த்ரகர், மேக்னா சிங், அஞ்சலி சர்வானி, மோனிகா பட்டேல், ராஷி கனோஜியா, அனுஷா பரெட்டி, சினே ராணா. இவ்விரு அணிகளுக்கான முதலாவது டி20 போட்டி வரும் 9-தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×