என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடுவத்தினர்"

    • சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட போது பல்வேறு பழமையான சிற்பங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
    • கோவிலின் வலதுபுறத்தில் இல்லற வாழ்வியலை காட்சிப்படுத்தும் புடைப்பு சிற்பங்கள் உள்ளது.

    உடுமலை:

    உடுமலை, மடத்துக்குளம் தாலுகா பகுதிகளில் பழங்கால வரலாற்று சின்னங்கள் அமைந்துள்ளன. இவற்றை கண்டறியும் பணியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் உடுமலை அருகே சங்கமநாயக்கன்பாளையம் கிராமத்தில் பழமை வாய்ந்த ரங்கப்பன் உடனமர் ரங்கம்மாள் கோவில் உள்ளது. இக்கோவில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட போது பல்வேறு பழமையான சிற்பங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

    இது குறித்து தகவல் கிடைத்த உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கோவிலில் ஆய்வு செய்தனர்.

    அவர்கள் கூறியதாவது:-

    சங்கமநாயக்கன்பாளையம் கிராமத்திலுள்ள, ரங்கப்பன் உடனமர் ரங்கம்மாள் கோவிலில் புடைப்பு சிற்பங்களும், கல்வெட்டும் காணப்பட்டது. கற்கோவிலின் முன் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் கோவில் கட்டியவர்கள் பெயரும், அதில் பணியாற்றியவர்கள் பெயரும் இடம் பெற்றுள்ளது.

    கோவிலின் வலதுபுறத்தில் இல்லற வாழ்வியலை காட்சிப்படுத்தும் புடைப்பு சிற்பங்கள் உள்ளது. கடந்த 350 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோவில் வரலாற்று சின்னமாக உள்ளது. புதுப்பிக்கும் போது கல்வெட்டு மற்றும் புடைப்பு சிற்பங்களை சேதப்படுத்தாமல் புதுப்பித்துள்ளது சிறப்புக்குரியதாகும்.

    மேலும் கால்நடைகளின் தேவைக்காக கல்தொட்டி அமைத்து தண்ணீர் நிரப்பி சேவை செய்துள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

    ×