search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாராஜா"

    • விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான மகாராஜா திரைப்படம் 100 கோடி வசூலை கடந்து வெற்றியை பெற்றது.
    • இந்தாண்டு நெட்பிளிக்ஸ்சில் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய படம் என்ற பெருமையையும் மகாராஜா பெற்றுள்ளது.

    தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகராக விஜய் சேதுபதி உள்ளார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் 100 கோடி வசூலை கடந்து மாபெரும் வெற்றியை பெற்றது.

    மேலும் இந்தாண்டு நெட்பிளிக்ஸ்சில் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய படம் என்ற பெருமையையும் மகாராஜா பெற்றுள்ளது.

    இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற அகில இந்திய செயலாளர் குமரன் என்பவரின் குழந்தைக்கு கணியன் என விஜய் சேதுபதி பெயர் சூட்டினார்.

    விஜய் சேதுபதி குழந்தையைக் கொஞ்சி முத்தமிட்டு வாழ்த்து தெரிவிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகிறது.

    • மகாராஜா திரைப்படம் 100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்தது.
    • 2024 இல் நெட்பிளிக்ஸ்சில் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய படம் என்ற பெருமையை மகாராஜா பெற்றுள்ளது.

    குரங்கு பொம்மை இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியை நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    விஜய் சேதுபதியின் 50- வது திரைப்படமான மகாராஜா கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியாகி 100 கோடி வசூலைத் தாண்டியது.

    படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த ஜூலை 12 ஆம் தேதி ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ்சில் மகாராஜா வெளியிடப்பட்டது. இதன்மூலம் இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் மகாராஜா கவனம் ஈர்த்தது.

    நெட்பிளிக்ஸ் கமன்ட் செக்ஷனில் வெளிநாட்டவர்கள் மகாராஜாவை புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் 2024 இல் நெட்பிளிக்ஸ்சில் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய படம் என்ற பெருமையை மகாராஜா பெற்றுள்ளது. உலகம் முழுவதிலும் நெட்பிளிக்ஸ்சில் சுமார் 18.6 மில்லியன் பேர் மகாராஜா படத்தைப் பார்த்துள்ளனர்.

    மேலும் ரிலீசாகி 6 வாரங்கள் ஆகியும் உலகம் முழுவதிலும் சுமார் 8 நாடுகளில் டாப் 10 வரிசையில் மகாராஜா டிரெண்டிங்கில் உள்ளது.

    இந்நிலையில், மகாராஜா படத்தில் நடிக்க முதலில் சாந்தனுவை அணுகியதாக அப்பட இயக்குநர் நித்திலன் தெரிவித்திருந்தது பரபரப்பாக பேசப்பட்டது.

    இதனையடுத்து, மகாராஜா படத்தை சாந்தனு தவறவிட பாக்யராஜ் தான் காரணம் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது.

    இந்நிலையில் இது குறித்து நடிகர் சாந்தனு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "மகாராஜா போல் ஒரு சிறந்த படத்தை கொடுத்ததிற்கு இயக்குநர் நித்திலன் சாமிநாதனுக்கு நன்றி. என்னை முதலில் இந்த கதைக்கு தேர்வு செய்ததில் மிகவும் மகிழ்ச்சி. மேலும், இந்த படத்தை நான் மிஸ் செய்ததிற்கு என் அப்பாவோ இல்லை நானோ காரணம் இல்லை. அப்பாவிற்கு இயக்குநர் என்னிடம் வந்து கதை சொன்னது தெரியாது. அந்த சமயத்தில் தயாரிப்பு நிறுவனம் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை அதனால் தான் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனது" என்று தெரிவித்துள்ளார். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நெட்பிளிக்ஸ் கமன்ட் செக்ஷனில் வெளிநாட்டவர்கள் மகாராஜாவை புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர்
    • ரிலீசாகி 6 வாரங்கள் ஆகியும் உலகம் முழுவதிலும் சுமார் 8 நாடுகளில் டாப் 10 வரிசையில் மகாராஜா டிரெண்டிங்கில் உள்ளது.

    குரங்கு பொம்மை இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய மகாராஜா திரைப்படம் அனைத்து தரப்பில் இருந்தும் வரவேற்பைப் பெற்று வருகிறது. விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமான இந்த படத்தில், கதாநாயகனாக நடித்து ஒரு கம்பேக் திரைப்படமாக விஜய் சேதுபதிக்கு அமைந்துள்ளது. கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியான மகாராஜா 100 கோடி வசூலைத் தாண்டியது.

    படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த ஜூலை 12 ஆம் தேதி ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ்சில் மகாராஜா வெளியிடப்பட்டது. இதன்மூலம் இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் மகாராஜா கவனம் ஈர்த்தது. நெட்பிளிக்ஸ் கமன்ட் செக்ஷனில் வெளிநாட்டவர்கள் மகாராஜாவை புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் 2024 இல் நெட்பிளிக்ஸ்சில் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய படம் என்ற பெருமையை மகாராஜா பெற்றுள்ளது. உலகம் முழுவதிலும் நெட்பிளிக்ஸ்சில் சுமார் 18.6 மில்லியன் பேர் மகாராஜா படத்தைப் பார்த்துள்ளனர்.

    முன்னதாக கரீனா கபூர், கீர்த்தி சானோன்,தபு ஆகியோர் நடித்த Crew திரைப்படம் 17.9 மில்லியன் பார்வைகளுடனும், லாப்பாட்டா லேடீஸ் படம் 17.1 மில்லியன் பார்வைகளுடனும் முன்னிலையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ரிலீசாகி 6 வாரங்கள் ஆகியும் உலகம் முழுவதிலும் சுமார் 8 நாடுகளில் டாப் 10 வரிசையில் மகாராஜா டிரெண்டிங்கில் உள்ளது.

    • கவுரவ விருதுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தேர்வாகியுள்ளார்
    • இந்திய கலை மற்றும் கலாச்சாரத்துக்கான தூதுவராக தெலுங்கு நடிகர் ராம் சரண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

    70 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் 2022 ஆம் ஆண்டு திரைப்படங்களுக்கு நேற்று டெல்லியில் வைத்து அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் மலையாளம், கண்டனம் உள்ளிட்ட தென் இந்திய படங்கள் அதிக விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது. இதற்கிடையில் மறுபுறம் ஆஸ்திரேலிய நாட்டின் மெல்போர்ன் நகரில் வைத்து இந்திய திரைப்பட விருது விழா நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 15 தொடங்கிய இந்த விழா ஆகஸ்ட் 25 வரை நடைபெறும். இந்நிலையில் நேற்று சிறந்த படங்கள் மற்றும் கலைஞர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    அந்த வகையில்,

    சிறந்த திரைப்படத்திற்கான விருதுக்கு '12-த் ஃபெயில்' படம் தேர்வாகியுள்ளது . ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் குமார் சர்மாவின் வாழ்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

     

    ◆சிறந்த இயக்குனருக்கான விருது விஜய் சேதுபதியின் 'மகாராஜா' படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாத மற்றும் கார்த்திக் ஆர்யன் நடித்த சந்து சாம்பியன் படத்தின் இயக்குனர் கபீர் கான் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

    ◆எக்ஸலென்ஸ் இன் சினிமா [Excellence in Cinema] கவுரவ விருதுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தேர்வாகியுள்ளார்

    ◆சிறந்த சீரிஸ் நடிகையாக 'போச்சர்' சீரிசில் நடித்த கேரள நடிகை நிமிஷா சஜயன் தேர்வாகியுள்ளார்

    ◆இந்திய கலை மற்றும் கலாச்சாரத்துக்கான தூதுவராக தெலுங்கு நடிகர் ராம் சரண்  தேர்வு செய்யப்பட்டுள்ளார்

     

     

    ◆சிறந்த நடிகருக்கான விருது 'சந்து சாம்பியன்' படத்தில் ஹீரோ கார்த்திக் ஆரியனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

    ◆சிறந்த நடிகைக்கான விருது 'உள்ளொளுக்கு' [ Ullozhukku ] படத்தில் நடித்த மலையாள நடிகை பார்வதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

    ◆சிறந்த சீரிஸ் ஆக ' கோஹ்ரா' Kohrra [இந்தி] தேர்வு செய்யப்பட்டுள்ளது

    ◆விமர்சகர்கள் தேர்வில்[ Critics Choice] சிறந்த நடிகராக '12த் ஃபெயில்' நடிகர் விக்ராந்த் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்

    ◆விமர்சகர்கள் தேர்வில்[ Critics Choice] சிறந்த படமாக 'லாபாட்டா லேடிஸ்' படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    ◆சமத்துவ சினிமாவாக [Equality in Cinema] ஷாருக் கான் நடிப்பில் ராஜ் குமார் ஹிராணி இயக்கத்தில் வெளிவந்த 'டன்கி' [Dunki] படம் தேர்வாகியுள்ளது

    ◆துணைக்கண்டத்தின் [இந்தியா] சிறந்த படமாக [Best Film from the Subcontinent] - 'தி ரெட் சூட்கேஸ்' படம் தேர்வாகியுள்ளது

    ◆பீபுள்ஸ் சாய்ஸ் படமாக [People's Choice] ஆலியா பட், ரன்வீர் சிங் நடித்த 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படம் [Rocky Aur Rani Kii Prem Kahaani] தேர்வாகியுள்ளது 


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மகாராஜா திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியானது.
    • நித்திலன் சுவாமிநாதன் அடுத்து இயக்கப் போகும் திரைப்படத்தை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

    குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கினார்.

    இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமான இந்த படத்தில், கதாநாயகனாக நடித்து ஒரு கம்பேக் திரைப்படமாக விஜய் சேதுபதிக்கு அமைந்துள்ளது.

    இத்திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியானது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இப்படம் இதுவரை 100 கோடி ரூபாய் மேல் உலகளவில் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    சமீபத்தில் திரைப்படம் ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் - இல் வெளியாகியது. இந்தியாவில் அதிகமாக பார்த்த படங்களில் மகாராஜா இடம்பெற்றது. இந்தியாவை தவிர பிற வெளிநாட்டு மக்களும் திரைப்படத்தை பார்த்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நித்திலன் சுவாமிநாதன் அடுத்து இயக்கப் போகும் திரைப்படத்தை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நித்திலன் அடுத்ததாக நயன் தாரா நடிப்பில் படத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு மகாராணி என பெயரிடலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. இப்படத்தை மகாராஜா திரைப்படத்தை தயாரித்த பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கவுள்ளது.

    இதுகுறித்தான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் எம்மாதிரியான கதைக்களத்தில் அமையும் என பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும் .

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரஜினிகாந்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
    • நித்திலன் சுவாமிநாதன் அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கினார்.

    குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கினார்.

    இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமான இந்த படத்தில், கதாநாயகனாக நடித்து ஒரு கம்பேக் திரைப்படமாக விஜய் சேதுபதிக்கு அமைந்துள்ளது.

    இத்திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியானது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இப்படம் இதுவரை 100 கோடி ரூபாய் மேல் உலகளவில் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    திரைப்படம் சில வாரங்களுக்கு முன் ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ்சில் வெளியிடப்பட்டு இந்தியாவில் அதிகம் பார்த்த டாப் 10 திரைப்படங்களிலும் முதல் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    படத்தை திரைப்பிரபலங்கள் பார்த்து பாராட்டிய நிலையில், நடிகர் விஜய் சில வாரங்களுக்கு முன் பாராட்டினார். தற்பொழுது படத்தை பார்த்த ரஜினிகாந்த இயக்குனர் நிதிலன் சுவாமிநாதனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

    இதுக்குறித்து இயக்குனர் அவரது எக்ஸ் தளத்தில் மகிழ்ச்சியுடன் பதிவை பகிர்ந்துள்ளார் அதில்

    அன்புள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார், உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. உங்களை சந்தித்தது வாழ்க்கையின் நாவலையும், அனுபவத்தை, வாழும் வாழ்க்கை முறையை கோலிவுட்டின் மிகச்சிறந்த மனிதனிடம் இர்ந்து கேட்டு தெரிந்து கொண்டது மிகவும் ஆனந்தம்.

    நீங்கள் என்னை உபசரித்த பண்பும், பணிவும் பார்ப்பதற்கு மிகவும் பிரமிப்பாக இருந்தது. நீங்கள் மகாராஜா திரைப்படத்தை எவ்வளவு நேசித்தீர்கள் என்பதை தெரிந்தப்பின் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. மீண்டும் மிக்க நன்றி சார் , லாங் லிவ் தலைவர். என்று நெகிழ்ச்சியுடம் பதிவிட்டுள்ளார்.

    இப்பதிவு தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் மகாராஜா திரைப்படம் வெளியாகியது.
    • சிறுமியின் பாலியல் வன்கொடுமையை பற்றிப் பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.

    குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து டந்த ஜூன் 14 ஆம் தேதி வெளிவந்த மகாராஜா திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று மகுடம் சூடியுள்ளது. இப்படம் விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமாகும். வெகு நாட்களாக விஜய் சேதுபதியைக் கதாநாயகனாகத் திரையில் பார்க்காத ரசிகர்களுக்கு இப்படம் விருந்தாக அமைந்தது.

    விஜய் சேதுபதியுடன் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    ஒரு சாதாரண கதையை நிதிலன் அவரது நான் லீனியர் திரைக்கதை யுக்தியால் படத்தை மிகமிக சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கியுள்ளார். சிறுமியின் பாலியல் வன்கொடுமையை பற்றிப் பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் மக்களை ஆட்டிப்படைக்கிறது. திரையரங்குகளைத் தொடர்ந்து கடந்த ஜூலை 12 ஆம் தேதி நெட்பிலிகஸில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் மகாராஜா திரைப்படம் வெளியாகியது.

    இந்நிலையில் மகாராஜாவை இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சிகள் நடந்து வருகிறதாம் . மேலும் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமீர் கான் நடிக உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. படத்தின் இயக்குனர், மற்ற நடிகர்கள் பின்னர் முடிவு செய்யப்படலாம் என்று கூறப்படும் நிலையில் விஜய் சேதுபதியின் நடிப்பிற்கு இணையாக அமீர் கான் மட்டுமே பாலிவுட்டில் நடிக்க முடியும் என்று ரசிகர்கள் கருத்துக் கூறி வருகின்றனர். 

     

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அதைத்தொடர்ந்து சாந்தகுமார் இயக்கத்தில் மௌனகுரு திரைப்படத்தில் நடித்தார்.
    • பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

    2010 ஆம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வம்சம் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார் நடிகர் அருள்நிதி. அதைத்தொடர்ந்து சாந்தகுமார் இயக்கத்தில் மௌனகுரு திரைப்படத்தில் நடித்தார். இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தது அவருக்கு, வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார் அருள்நிதி.

    அதற்கடுத்து தகராறு,டிமான்டி காலனி, ஆறாது சினம், களத்தில் சந்திப்போம் , தேஜாவு என வித்தியாசமான கதைகளில் நடித்தார். கடைசியாக 2023 ஆம் ஆண்டு வெளியான கழுவேத்தி மூர்கன் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

    தற்பொழுது டிமாண்டி காலனி பாகம் இரண்டில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படத்திற்கான அப்டேட் கிடைத்துள்ளது. சமீபத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியை பெற்ற மகாராஜா திரைப்படத்தை தயாரித்த பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

    இன்று பிறந்தநாள் கொண்டாடும் அருள்நிதியை வாழ்த்தி பேஷன் ஸ்டூடியோஸ் சார்பில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். படத்தை பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிமான்டி காலனி படக்குழுவும் அருள்நிதியை வாழ்த்தி போஸ்டரை வெளியிட்டுள்ளனர். படத்தின் அப்டேட்டை இன்று மாலை 5.01 மணிக்கு வெளியிடப்போவதாக கூறியுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
    • மகாராஜா திரைப்படத்தின் வசூல் 100 கோடியை தாண்டியது.

    குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கினார்.

    இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமான இந்த படத்தில், கதாநாயகனாக நடித்து ஒரு கம்பேக் திரைப்படமாக விஜய் சேதுபதிக்கு அமைந்துள்ளது.

    இத்திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியானது. அன்று முதல் நாளிலிருந்தே படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

    ஒரு சாதாரண கதையை நிதிலன் அவரது நான் லீனியர் திரைக்கதை யுக்தியால் படத்தை மிகமிக சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கி மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தார்.

    இதன் எதிரொலியால், படத்தின் வசூல் 100 கோடியை தாண்டியது. திரை வெற்றியைத் தொடர்ந்து ஓடிடியிலும் மக்களின் வரவேற்பு அமோகமாகவுள்ளது. 

    இந்நிலையில், மகாராஜா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மகாராஜா படக்குழு இன்று நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    மேலும், விஜய்யுடன் இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • . கதாநாயகனாக நடித்து ஒரு கம்பேக் திரைப்படமாக விஜய் சேதுபதிக்கு அமைந்துள்ளது.
    • படத்தின் வசூல் 100 கோடியை தாண்டியுள்ளது.

    குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமாகும். கதாநாயகனாக நடித்து ஒரு கம்பேக் திரைப்படமாக விஜய் சேதுபதிக்கு அமைந்துள்ளது.

    இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.

    இத்திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியாகியது. வெளியான முதல் நாளிலிருந்தே படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது

    ஒரு சாதாரண கதையை நிதிலன் அவரது நான் லீனியர் திரைக்கதை யுக்தியால் படத்தை மிகமிக சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கியுள்ளார். சிறுமியின் பாலியல் வன்கொடுமையை மையமாக பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் மக்களை ஆட்டிப்படைக்கிறது.

    படத்தின் வசூல் 100 கோடியை தாண்டியுள்ளது. அந்த வெற்றியைத் தொடர்ந்து ஓடிடியிலும் மக்களின் வரவேற்பு அமோகமாகவுள்ளது.

    மகாராஜா திரைப்படம் கடந்த ஜூலை 12 ஆம் தேதி நெட்பிலிகஸில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்த வார அதிகமாக பார்க்கப்பட்ட இந்திய திரைப்படங்களின் வார பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது மகாராஜா திரைப்படம்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • . இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர்.
    • இப்படம் விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமாகும்.

    குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமாகும். கதாநாயகனாக நடித்து ஒரு கம்பேக் திரைப்படமாக விஜய் சேதுபதிக்கு அமைந்துள்ளது.

    இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.

    இத்திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியாகியது. வெளியான முதல் நாளிலிருந்தே படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது

    ஒரு சாதாரண கதையை நிதிலன் அவரது நான் லீனியர் திரைக்கதை யுக்தியால் படத்தை மிகமிக சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கியுள்ளார். சிறுமியின் பாலியல் வன்கொடுமையை மையமாக பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் மக்களை ஆட்டிப்படைக்கிறது.

    படத்தின் வசூல் 100 கோடியை தாண்டியுள்ளது. 2024 ஆம் ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அரண்மனை திரைப்படத்திற்கு பிறகு 100 கோடி வசூலித்த திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. படம் வெற்றிகரமாக 25 நாட்கள் முடிவடைந்த நிலையில் தற்பொழுது ஓடிடி-யில் வெளியாகவுள்ளது. படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

    மகாராஜா திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி நெட்பிலிகஸில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

    திரையரங்கில் பார்க்க தவரவிட்ட மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி படத்தை பார்க்குமாரு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • திரைப்படம் தற்பொழுது 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    • மகாராஜா திரைப்பட குழுவினரை இயக்குனர் வெங்கட் பிரபு சந்தித்தார்.

    குரங்கு பொம்மை திரைப்படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கினார். இப்படம் வெளியாகி மக்கள் இடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

    திரைப்படம் தற்பொழுது 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படம் தற்பொழுது உலகமெங்கும் உள்ள பார்வையாளர்களிடம் பாராட்டை பெற்று வருகிறது. திரைப்படம் அமெரிக்காவில் திரையிடப்பட்டது. அந்த திரையிடலுக்கு படக்குழிவினர் கலந்துக் கொண்டனர்.

    இயக்குனர் வெங்கட் பிரபு கோட் திரைப்படத்தின் VFX பணிகளுக்காக அவரும் அமெரிக்காவில்தான் தற்பொழுது உள்ளார். இதனால் நேற்று மகாராஜா திரைப்பட குழுவினரை இயக்குனர் வெங்கட் பிரபு சந்தித்தார். அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்பொழுது இணையத்தில் பரவி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×