என் மலர்
நீங்கள் தேடியது "கொசுப்புழு ஒழிப்பு"
- கொசுப்புழு ஒழிப்பு முகாம் மற்றும் டயர்கள் அப்புறப்படுத்தும் முகாம் நடைபெற்றது.
- டெங்கு கொசுப்புழு உருவாகும் இடம், வீட்டை சுற்றி தூய்மை யாக வைத்து கொள்ளவேண்டும் .
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் பொது சுகாதார துறையின் துணை இயக்குநர் ராஜா உத்தரவின் பேரில் ரிஷிவந்தியம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரிஷிவந்தியம் மற்றும் பழைய சிறுவங்கூர் கிராமத்தில் கொசுப்புழு ஒழிப்பு முகாம் மற்றும் டயர்கள் அப்புறப்படுத்தும் முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் தீபிகா தலைமையில் நடைபெற்ற முகாமிற்கு சுகாதார ஆய்வாளர் தெய்வீகன், குமாரசாமி, பிரசாந்த், ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதில் டயர்கள் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், ஊராட்சி துப்பரவு பணியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர் கலந்து கொண்டு டெங்கு கொசுப்புழு உருவாகும் இடம், வீட்டை சுற்றி தூய்மை யாக வைத்து கொள்ளவேண்டும், காய்ச்சல் வந்தால் சுயமாக மருந்து வாங்கி சாப்பிட கூடாது என அறிவுறுத்தி நோட்டீஸ் வழங்கினார்கள்.