என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அக்னி தீர்த்தக்கடல்"
- தனுஷ்கோடி அரிச்சல் முனை, அனந்தராயர் சத்திரம் பகுதிகளில் ராட்சத அலைகள் எழும்பி வருகின்றன.
- சங்குமால் பகுதியில் கடல் உள்வாங்கியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
ராமேசுவரம்:
ராமேசுவரம் பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த காற்று வீசி வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றின் வேக மாறுபாட்டால் ராமேசுவரம் கடல் பகுதியில் கடந்த 3 நாட்களாக சூறைக்காற்று வீசி வருகிறது. மேலும் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.
தனுஷ்கோடி அரிச்சல் முனை, அனந்தராயர் சத்திரம் பகுதிகளில் ராட்சத அலைகள் எழும்பி வருகின்றன. இதனால் மீனவர்கள் 3 நாட்களாக கடலுக்கு செல்லாமல் உள்ளனர். கடந்த 3 நாட்களாக அக்னி தீர்த்த கடல் உள்ளிட்ட பகுதிகளில் பகல் வேளைகளில் கடல் உள்வாங்கி காணப்பட்டது. இரவில் மீண்டும் சகஜ நிலையை அடைந்தது.
இந்த நிலையில் இன்று காலை அக்னி தீர்த்த கடல் பகுதியில் 200 மீட்டருக்கு மேல் கடல் உள்வாங்கியது. மேலும் பாம்பன், சங்குமால் கடல் பகுதிகளிலும் கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் நாட்டுப்படகு மற்றும் பைபர் படகுகள் தரை தட்டி நின்றன.
ராமேசுவரம் கோவில் அமைந்துள்ள அக்னி தீர்த்த கடல் பகுதியில் 200 மீட்டருக்கு மேல் கடல் உள்வாங்கி காணப்பட்டதால் பக்தர்கள் நீராட அனுமதிக்கப்படவில்லை. இதனால் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் வந்த பக்தர்கள் நீராட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
அமாவாசை, பவுர்ணமியை ஒட்டிய நாட்களில் கடல் உள்வாங்குவது வழக்கமான நிகழ்வு என்றாலும் இந்த முறை 200 மீட்டருக்கும் அதிகமாக கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் புனித நீராட முடியவில்லை. இதே போல சங்குமால் பகுதியில் கடல் உள்வாங்கியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்