என் மலர்
நீங்கள் தேடியது "அரபு நாடுகள்"
- கை நிறைய சம்பளம், தங்குவதற்கு இடம், சாப்பாடு கிடைக்கும் என போலி ஏஜெண்டுகள் அப்பாவி இளம்பெண்களை ஏமாற்றி, இங்கு அனுப்பி விடுகிறார்கள்.
- தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவில் கணவனால் கைவிடப்பட்ட இளம்பெண்கள், வறுமையில் வாடும் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் ஆகியோரை புரோக்கர்கள் குறி வைக்கிறார்கள்.
திருச்சி:
அரபு நாடுகளில் வீட்டு வேலை, சமையல் வேலை, குழந்தைகளை பராமரிக்கும் வேலைகளுக்கு செல்லும் தமிழகப் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சி துவாக்குடி பகுதியைச் சேர்ந்த மீனா (வயது 35) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஏஜெண்ட் மூலமாக துபாய் அனுப்பி வைக்கப்பட்டார்.
இரண்டு ஆண்டுகள் பல்வேறு இன்னல்களுக்கு இடையே வீட்டு வேலை செய்து வந்த அவரின் விசா காலம் முடிந்து விட்டது. இதையடுத்து அந்த வீட்டு உரிமையாளர் அவரை வேலையில் இருந்து நிறுத்தி விட்டார். பின்னர் அவரது பாஸ்போர்ட்டை பறித்து விட்டு அங்குள்ள ஒரு அறையில் அடைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த அங்குள்ள சிலர் முயற்சித்தனர். அதிர்ச்சியடைந்த அவர், தமிழகத்தைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் மூலமாக, துபாயில் தங்கி தொழில் செய்து அறக்கட்டளை நடத்தி வரும் அன்வர் அலி என்பவர் உதவியை நாடினார். பின்னர் அவர் அந்த இளம்பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்து காப்பாற்றி விமான டிக்கெட் எடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்தார்.
சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்த பாதிக்கப்பட்ட அந்தப் பெண்மணி கூறும்போது,
அரபு நாடுகளில் வீட்டு வேலைக்கு செல்லும் தமிழகத்தைச் சேர்ந்த பல பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள். எனக்கும் அவர்கள் குறி வைத்தார்கள். நான் ஒரு வழியாக அவர்களின் பிடியிலிருந்து தப்பித்து வந்து விட்டேன். ஆகவே பாதிக்கப்பட்ட பெண்களை காப்பாற்ற தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என்றார்.
இதுபற்றி அன்வர் அலி கூறும்போது, அரபு நாடுகளில் உள்ள வீடுகளில் சமையல் வேலை, குழந்தைகளை பராமரிக்கும் வேலை, வீட்டு வேலைகள் காலியாக உள்ளன. இதற்கு கை நிறைய சம்பளம், தங்குவதற்கு இடம், சாப்பாடு கிடைக்கும் என போலி ஏஜெண்டுகள் அப்பாவி இளம்பெண்களை ஏமாற்றி, இங்கு அனுப்பி விடுகிறார்கள்.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவில் உள்ள நர்சுகள், கணவனால் கைவிடப்பட்ட இளம்பெண்கள், வறுமையில் வாடும் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் ஆகியோரை இந்த புரோக்கர்கள் குறி வைக்கிறார்கள். இவ்வாறு வேலை தேடி வரும் பெண்களின் குடும்ப பொருளாதார சூழ்நிலையை தெரிந்துகொண்டு பாஸ்போர்ட், விசா, போக்குவரத்து செலவுக்கான செலவுகளையும் அவர்களே ஏற்றுக்கொள்கிறார்கள்.
அதன் பின்னர் சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களுக்கு அவர்களை அழைத்து வந்து தங்களது பாலியல் தேவைக்கு பயன்படுத்துகிறார்கள். பின்னர் அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி அடிமைகளாக விற்பனை செய்கிறார்கள். திருச்சி பெண் மீனா எனது உதவியை நாடியதால் தப்பித்துக் கொண்டார். இல்லையென்றால் அவரையும் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தி இருப்பார்கள்.
எனவே வீட்டு வேலைகளுக்கு வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்கள் வேலையை ஆராய்ந்து வர வேண்டும். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பல பெண்கள் இங்கு இன்னல்களை அனுபவித்து வருவதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது.
அவர்களை மீட்டெடுக்கும் முயற்சியில் இருக்கிறேன்.
திருச்சி மாவட்டம் நிர்வாகமும் அப்பாவி பெண்களை ஏமாற்றி அனுப்பும் போலி ஏஜெண்டுகளை இனம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- ஈரானில் உள்ள அணு சக்தி மையங்களையும், எண்ணெய் கிணறுகளையும் இஸ்ரேல் தாக்கலாம்.
- அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் கடந்த மாதம் முதல் லெபனான் மீதும் தாக்குதல் நடத்தி போரை விரிவுபடுத்தியுள்ளது. இந்த தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பாராதபோது இஸ்ரேல் மீது 180 ஏவுகணைகளை ஏவியது ஈரான்.
இதனைத்தொடர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடந்த அமெரிக்காவுடன் சேர்ந்து இஸ்ரேல் திட்டம் தீட்டி வருகிறது, ஈரானில் உள்ள அணு சக்தி மையங்களையும், எண்ணெய் கிணறுகளையும் இஸ்ரேல் தாக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில்தான், மத்திய கிழக்கில் இருக்கும் வளைகுடா அரபு நாடுகள், குறிப்பாக அமெரிக்காவுடன் நெருக்கும் காட்டும் நாடுகளுக்கு ஈரான் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில், அரபு நாடுகள் தங்களின் வான்வழி மற்றும் ராணுவத் தளங்களை இஸ்ரேலிய தாக்குதலுக்கு பயன்படுத்த அனுமதித்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்க படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், கத்தார் உள்ளிட்ட எண்ணெய் வளமிக்க நாடுகளுக்கு ஈரானின் எச்சரிக்கை ரகசிய சேனல்கள் மூலம் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.
- டிரம்ப் அறிவித்த திட்டத்திற்கு மாற்றாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- டிரம்ப் அறிவிப்புக்கு அரபு தலைவர்கள் கடும் கண்டனம்.
பாலஸ்தீன அதிகாரசபையின் எதிர்கால நிர்வாகம் காசா பகுதியை கட்டியெழுப்பும் திட்டத்தை அரபு தலைவர்கள் முன்மொழிந்துள்ளனர். காசாவை முழுமையாக கைப்பற்றி அதனை மீண்டும் கட்டியெழுப்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்த திட்டத்திற்கு மாற்றாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதியை கட்டியெழுப்பி, அங்கு நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார். இவரது இந்த அறிவிப்புக்கு அரபு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
பாலஸ்தீன அதிகாரசபை (PA) காசாவை ஆளும் வாய்ப்பு இன்னும் உறுதியாகவில்லை. எனினும், இஸ்ரேல் அந்த அமைப்பின் எதிர்காலத்தை நிராகரித்தது. மேலும் டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தின் போது வாஷிங்டனில் இருந்த பாலஸ்தீன விடுதலை அமைப்பின் அலுவலகத்தை மூடிவிட்டு இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் மீண்டும் ஆட்சிக்கு திரும்பிய டொனால்டு டிரம்ப், சிறிது நேரத்திலேயே, அமெரிக்கா காசா பகுதியை "கையகப்படுத்தி" அதை "மத்திய கிழக்கின் ரிவியரா"வாக மாற்ற வேண்டும் என்று பரிந்துரைத்தார். மேலும், பாலஸ்தீன மக்களை எகிப்து அல்லது ஜோர்டானுக்கு இடம்பெயர கட்டாயப்படுத்தினார். இவரது கருத்து உலகளவில் பெரும் எதிர்ப்பை தூண்டியது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) கெய்ரோவில் நடந்த அரபு லீக் உச்சிமாநாட்டில் அதிபர் டிரம்ப்-இன் திட்டத்திற்கு மாற்று திட்டத்தை முன்மொழிந்தது. முன்னதாக அதிபர் டிரம்ப்-இன் கருத்தை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வரவேற்பதாக தெரிவித்து இருந்தார்.
உச்சிமாநாட்டின் நிறைவில், "விரிவான அரபுத் திட்டம்" ஏற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்திற்கு சர்வதேச சமூகம் ஆதரவை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.