search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவ படிப்புகள்"

    • நீட் தோ்வில் குறிப்பிட்ட சில மாணவா்களுக்கு மட்டும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
    • நீட் தீர்வு வெளியாவதற்கு பிறகு ராஜஸ்தான் மாநிலம் நீட் பயிற்சி மையங்கள் மொய்த்துக்கிடக்கும் கோட்டா நகரில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

    மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான இளநிலை நீட் தேர்வு கடந்த மாதம் 5 ஆம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வு மீது பல்வேறு புகாா்கள் எழுந்தன. பீகாரில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் வினாத்தாள் கசிந்ததாக புகாா் எழுந்தது. இந்த புகாா்களை அத்தோ்வை நடத்திய தேசிய தோ்வுகள் முகமை (என்.டி.ஏ.) மறுத்தது.

    இந்த நிலையில் நீட் தோ்வு முடிவுகள் பாராளுமன்றத் தோ்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4-ந் தேதி வெளியிடப்பட்டது. இதில், முன்பு எப்போதும் இல்லாத வகையில் 67 மாணவா்கள் முதலிடம் பெற்றதோடு, அரியானாவில் ஒரே தோ்வு மையத்தில் தோ்வெழுதிய 6 போ் முதலிடம் பெற்றது பெரும் சர்ச்சையானது.

    நீட் தோ்வில் குறிப்பிட்ட சில மாணவா்களுக்கு மட்டும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொடக்கம் முதல் நீட் தேர்வை தமிழகம் எதிர்த்து வந்த நிலையில் தற்போது வட மாநிலங்களிலும் நீட் தேர்வின் மீதான நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

     

    இதற்கிடையில் நீட் தீர்வு வெளியாவதற்கு பிறகு ராஜஸ்தான் மாநிலம் நீட் பயிற்சி மையங்கள் மொய்த்துக்கிடக்கும் கோட்டா நகரில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

    தற்போது வெளியாகியுள்ள நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்து மறு தேர்வு நடத்துமாறு நீட் மாணவர்களும் பொதுமக்களும் வட மாநிலங்களில் போராட்டம் நடந்தத் தொடங்கியுள்ளனர். வாரணாசியில் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின் முன் ஏராளமான மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். ராஸ்ஜ்தான் கோட்டா நகரிலும் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

    மேலும் இந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி மகாராஷ்டிராவின் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு வலியுறுத்தியுள்ளது. நீட் தேர்வு மகாராஷ்டிரா மாணவர்களுக்கு அநீதி இழைப்பதாகவும் அம்மாநில அரசு குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தேசிய தேர்வு முகமை நடத்தும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்காக நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.
    • குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வினாத்தாளில் குளறுபடி உள்ளிட்ட புகார்களும் எழுந்த வண்ணம் உள்ளன.

    தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்காக நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. வழக்கம் போல் கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த இந்த ஆண்டு தேர்வில் தேர்வில் நாடு முழுவதும் மருத்துவக் கனவுடன் உள்ள லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர்.

    குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வினாத்தாளில் குளறுபடி உள்ளிட்ட புகார்களும் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் நடந்து முடித்த தேர்வுக்கான முதற்கட்ட மாதிரி விடைக் குறிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று என்று தகவல் வெளியாகி உள்ளது. விடைக்குறிப்பு வெளியானதும் மாணவர்கள், exams.nta.ac.in/NEET என்ற இணையத்தளத்தில் அதைப் பதிவிறக்கம் செய்து அந்த விடைகளில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் முறையிடலாம்.

    அதைத்தொடர்ந்து அனைத்தையும் பரிசீலித்த பின்னர் இறுதிக்கட்ட விடைக்குறிப்பு வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே இளநிலை நீட் தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது 

    • ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அவகாசம் இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • 16-ந் தேதி காலை, எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புக்கான தகுதிப்பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்க மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டது. கடந்த மாதம் 28ந் தேதி முதல் விண்ணப்பிக்க தொடங்கினர். திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், எம்.பி.பி.எஸ்., - நர்சிங் - டி.ஜி.என்.எம்., மற்றும் டி.எம்.எல்.டி., - டி.ஆர்.டி.டி., அனஸ்டியா, தியேட்டர் டெக்னீசியன், ஆர்த்தோபெடிக் டெக்னீசியன் படிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது.

    விண்ணப்பிக்க இன்றுடன் கால அவகாசம் முடிவடைய இருந்த நிலையில் பெற்றோர், மாணவர் கோரிக்கையை ஏற்று ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அவகாசம் இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகிற 16-ந் தேதி காலை, எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புக்கான தகுதிப்பட்டியல் வெளியிடப்படும் என சுகாதாரத்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×