என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில்"

    • ஆடிப்பூர உற்சவம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
    • 20-ந்தேதி பெரியநாயகி அம்மன் தேரோட்டம் நடைபெற உள்ளது.

    பண்ருட்டி திருவதிகையில் பிரசித்தி பெற்ற வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர உற்சவம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

    அதுபோல் இந்தாண்டிற்கான உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் மூலவர் வீரட்டானேஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் உற்சவர் பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் கொடி மரம் முன்பு எழுந்தருளினார்.

    தொடர்ந்து கொடிமரத்திற்கு பல்வேறு விதமான பொருட்களால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, உற்சவ கொடியேற்றப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 20-ந்தேதி(வியாழக்கிழமை) பெரியநாயகி அம்மன் தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.

    • தினமும் வீரட்டானேஸ்வரருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது.
    • மூலவருக்கும், பெரியநாயகி அம்பாளுக்கும் விசேஷ அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது.

    பண்ருட்டி திருவதிகையில் பிரசித்திபெற்ற வீரட்டானேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர தேர்த்திருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் வீரட்டானேஸ்வரருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி மூலவருக்கும், பெரியநாயகி அம்பாளுக்கும் விசேஷ அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து காலை 8.15 மணியளவில் உற்சவர் பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். இதையடுத்து அங்கு கூடியிருந்த பெண் பக்தர்கள் மட்டும் ஓம் சக்தி ஓம் சக்தி என பக்தி கோஷம் எழுப்பியபடி வடம் பிடித்து தேரை மாட வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். தேரானது காலை 9.30 மணியளவில் நிலையை வந்தடைந்தது.

    இந்த விழாவில் பண்ருட்டி நகரமன்ற தலைவர் ராஜேந்திரன், இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர்கள் மகாதேவி, வேல்விழி, வியாபார சங்க பிரமுகர்கள் மோகன், வீரப்பன், ராஜேந்திரன், சபாபதி செட்டியார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • கோவில் வளாகம் முழுவதும் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்பட்டது.
    • கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

    பண்ருட்டி:

    முகூர்த்த நாளையொட்டி திருவதிகை வீரட்டானேஸ்வர் கோவிலில் இன்று 56-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக முகூர்த்த நாட்களில் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் கூட்டம் அதிகரித்து காணப்படுவதோடு, கோவில் வளாகத்தில் திருமண நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.

    அந்த வகையில் இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால், திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் இன்று அதிகாலை முதல் சுமார் 56-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. திருமணம் செய்து கொண்ட தம்பதிகளை வாழ்த்துவதற்கு அவர்களின் உறவினர்களும் அதிக அளவில் வருகை தந்ததால், கோவில் வளாகம் முழுவதும் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்பட்டது.

    இதனால் கோவிலில் ஆங்காங்கே நின்றவாறு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு கோவில் அருகே மணமக்கள் போட்டோஷூட்களை நடத்தினர். தற்போது கோவிலுக்குள் உணவருந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், மாட வீதியில் உள்ள தனியார் வீடுகள், மண்டபங்கள் சாலைகளில் உணவு அருந்தினர். மேலும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. 

    ×