search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரிமினல் வழக்கு"

    • இது தவுறுத்தலாக நடந்துவிட்டது என்று மக்களவையில் அமித் ஷா கூறியிருந்தார்
    • 30 ராணுவ வீரர்கள் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வந்தது

    டிசம்பர் 4, 2021 - நாஜிலாந்தில் மோன் [mon] மாவட்டத்தில் உள்ள ஓடிங் [Oting] கிராமத்தில் சுரங்க பணியாளர்களை ஏற்றிச் சேர டிரக் வாகனத்தின் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். ஊடுருவல்காரர்கள் என நினைத்துத் தவறுதலாகத் தாக்கியதாக ராணுவ வீரர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில் ராணுவ வீரர்களின் முகாம்கள் முன்னர் திரண்டு 250 க்கும் மேற்பட்ட உள்ளூர் வாசிகள் போராட்டம் நடத்தினர்.

    இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தது. இது தவுறுத்தலாக நடந்துவிட்டது என்று மக்களவையில் அமித் ஷா கூறியிருந்தார். மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்துத் தாக்குதலில் தொடர்புடைய 30 ராணுவ வீரர்கள் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் 30 ராணுவ வீரர்கள் மீதான கிரிமினல் வழக்கையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.

    மேலும் அவர்கள் மீது ராணுவத்தில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறு செய்த ராணுவ வீரர்கள் மீதான கிரிமினல் வழக்கு நீக்கம் நாட்டில் பொதுமக்களின் உயிர்கள் மீதான மதிப்பு இவ்வளவுதானா என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

    • கிரிமினல் வழக்கை எதிர்கொள்ளும் வேட்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்வாகி உள்ளனர்.
    • புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களில் 27 பேர் கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றுள்ளனர்

    புதுடெல்லி:

    சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் இருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 543 மக்களவை உறுப்பினர்களில் 251 (46%) பேர் மீது கிரிமினல் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் 27 பேர் தண்டனை பெற்றுள்ளனர் என தேர்தல் உரிமைகள் அமைப்பான ஜனநாயக சீர்திருத்த சங்கம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    கடந்த 2009-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது கிரிமினல் வழக்குகளை கொண்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 55 சதவீதம் அதிகரித்துள்ளது என அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

    இந்த 251 எம்.பி.க்களில் 170 பேர் மீது பாலியல் வன்கொடுமை, கொலை, கொலை முயற்சி, கடத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

    வெற்றி பெற்றுள்ள புதிய எம்.பி.க்களில் 27 பேர் கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளனர். இதில் கொலை, கடத்தல், கொலை முயற்சி, பாலியல் வன்கொடுமை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் வெறுப்பு பேச்சு உள்ளிட்ட வழக்குகளில் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

    வெற்றி பெற்ற பா.ஜ.க. வேட்பாளர்களில் 94 பேர் மீதும், காங்கிரஸ் வேட்பாளர்களில் 49 பேர் மீதும், சமாஜ்வாதி வேட்பாளர்களில் 21 பேர் மீதும், திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களில் 13 பேர் மீதும், தி.மு.க. வேட்பாளர்களில் 13 பேர் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

    கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்ளும் வேட்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    • கேரளாவில் மொத்தம் உள்ள 135 எம்.எல்.ஏ.க்களில் 95 பேர் (70 சதவீதம்) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
    • குற்றப் பதிவுகள் மட்டுமின்றி எம்.எல்.ஏ.க்களின் சொத்துகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

    புதுடெல்லி :

    இந்தியாவின் ஜனநாயக சீர்திருத்த சங்கம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு மையம் ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து, நாடு முழுவதும் உள்ள மாநில சட்டமன்றங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தற்போது பதவியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் இந்தியா முழுவதும் 44 சதவீத எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன என்கிற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

    28 மாநில சட்டசபைகள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் பணியாற்றும் 4,033 எம்.எல்.ஏ.க்களில் 4,001 பேரை இந்த ஆய்வு உள்ளடக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 1,136 எம்.எல்.ஏ.க்கள் (28 சதவீதம்) மீது கொலை, கொலை முயற்சி, கடத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகள் இருப்பதாக ஆய்வு கூறுகிறது.

    அதிகபட்சமாக கேரளாவில் மொத்தம் உள்ள 135 எம்.எல்.ஏ.க்களில் 95 பேர் (70 சதவீதம்) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதேபோல், பீகாரில் 242 எம்.எல்.ஏ.க்களில் 161 பேர் (67 சதவீதம்), டெல்லியில் 70 எம்.எல்.ஏ.க்களில் 44 பேர் (63 சதவீதம்), மராட்டியத்தில் 284 எம்.எல்.ஏ.க்களில் 175 பேர் (62 சதவீதம்), தெலுங்கானாவில் 118 எம்.எல்.ஏ.க்களில் 72 பேர் (61 சதவீதம்), தமிழகத்தில் 224 எம்.எல்.ஏ.க்களில் 134 பேர் (60 சதவீதம்) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

    மொத்தம் 114 எம்.எல்.ஏ.க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் இருப்பதாகவும், அவர்களில் 14 பேர் மீது கற்பழிப்பு வழக்கு உள்ளதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. குற்றப் பதிவுகள் மட்டுமின்றி எம்.எல்.ஏ.க்களின் சொத்துகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதன்படி மாநில சட்டசபைகளில் ஒரு எம்.எல்.ஏ.வின் சராசரி சொத்து மதிப்பு ரூ.13.63 கோடி என கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், கிரிமினல் வழக்குகள் உள்ள எம்.எல்.ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.16.36 கோடியாகவும், குற்ற வழக்குகள் இல்லாதவர்களின் சொத்து மதிப்பு ரூ.11.45 கோடியாகவும் உள்ளதாக ஆய்வு கூறுகிறது.

    ×