என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புதிய நீதிக்கட்சி"
- 8 வாக்குச்சாவடிகளிலும் சுமார் 8 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.
- தலைமை தேர்தல் ஆணையர் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
சென்னை:
புதிய நீதிக்கட்சி செயல் தலைவர் ஏ.ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடிகளை தி.மு.க.வை சேர்ந்த சிலர் தேர்தலுக்கு முந்தைய நாளே தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து தேர்தல் நாளன்று வாக்களிக்க வந்த வாக்காளர்களை மிரட்டி ஓட்டு போடவிடாமல் செய்து விட்டனர்.
இந்த 8 வாக்குச்சாவடிகளிலும் சுமார் 8 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். அன்றைய தினம் தேசிய ஜனநாயகக் கூட்டணியை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களை கூட வாக்குச் சாவடிக்குள் செல்ல தி.மு.க.வினர் அனுமதிக்கவில்லை.
இந்த விவரங்களை சென்னையில் உள்ள தலைமை தேர்தல் ஆணையரை நேரடியாக சந்தித்து புகார் மனுவாக அளித்ததுடன் மேற்கண்ட வாக்குச் சாவடிகளிலும் உரிய பாதுகாப்புடன் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட தலைமை தேர்தல் ஆணையர் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அழைப்பு விடுத்தார்.
- தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் ஏ.சி.சண்முகம் பங்கேற்கிறார்.
சென்னை:
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வருமாறு புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அழைப்பு விடுத்தார்.
இந்த அழைப்பை ஏற்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் ஏ.சி.சண்முகம் பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்