என் மலர்
நீங்கள் தேடியது "தமிழக ஆளுநனர்"
- அனைத்துக் கட்சி கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.
- இதில் தி.மு.க. மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு பங்கேற்றார்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. மழைக்கால கூட்டத்தொடர் 20-ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக மணிப்பூர் கலவர விவகாரம் பாராளுமன்றத்தில் புயலை கிளப்பும் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில், அனைத்துக் கட்சி கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
விலைவாசி உயர்வை பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறுவது குறித்து விவாதிக்க தி.மு.க. சார்பில் நோட்டீஸ் கொடுத்துள்ளோம்.
மணிப்பூர், விவகாரம், பொது சிவில் சட்டம், ஒடிசா ரெயில் விபத்து ஆகியவை தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம் என தெரிவித்தார்.