search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோகிணி"

    • ஏராளமான நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அனுபவங்களை வெளிப்படுத்தினர்.
    • ஏற்கனவே 2019-ல் இது தொடர்பாக உருவாக்கப்பட்ட குழு இப்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.

    மலையாள திரை உலகில் பாலியல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நடிகைகள் பற்றிய ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி மலையாள திரை உலகம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி திரை உலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திரை உலகில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்திய பாலியல் புகாரால் மலையாள நடிகர், நடிகைகளின் அமைப்பான 'அம்மா' அமைப்பு நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

    இதைத்தொடர்ந்து ஏராளமான நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அனுபவங்களை வெளிப்படுத்தினர்.

    மலையாள திரை உலகத்தை போன்று தமிழ் திரை உலகத்திலும் பாலியல் சம்பவங்கள் நடந்ததாக நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் சில நடிகைகள் வெளிப்படுத்தி இருந்தனர்.

    இதைத்தொடர்ந்து தமிழ் திரை உலகில் நடக்கும் பாலியல் புகார்களை விசாரிப்பதற்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் ஒரு குழுவை அமைத்துள்ளது. குழுவின் தலைவராக நடிகை ரோகிணி நியமனம் செய்யப்பட்டார்.

    ஏற்கனவே 2019-ல் இது தொடர்பாக உருவாக்கப்பட்ட குழு இப்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் திரை உலகில் பாலியல் சம்பவங்களில் யாரேனும் பாதிக்கப்பட்டால் இந்த குழுவில் தாராளமாக புகார் செய்யலாம். புகார் தெரிவிப்பதற்கான தனி மின்னஞ்சல் முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது.

    புகார்கள் விசாரிக்கப் பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் 5 ஆண்டுகள் சினிமா தொழிலில் இருந்து தடை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

    மேலும் புகார் பற்றி வெளியில் பேசாமல் குழுவில் புகார் அளிக்குமாறும் தெரிவிக்கப்பட்டது.

    இதுபற்றி விசாரணை குழுவின் தலைவரான ரோகிணியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    பாலியல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பலர் குழுவில் புகார் அளித்து வருகிறார்கள். இதுபற்றி தீவிரமாக விசாரித்து வருகிறோம். விசாரணைக்கு பின்பு அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும்.

    புகார் கொடுத்தவர்களின் விவரங்களை வெளியே சொல்ல முடியாது. அது அவர்களின் தனிப்பட்ட உரிமை. பாலியலால் பாதிக்கப்பட்டோர் தாராளமாக புகார் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகை ரோகிணி புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ் நடிக்கிறார்.

    சமூகத்தில் பல வன்கொடுமைகள் நடந்து வருகிறது. இதனை உலக மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இயக்குனர்கள் பலர் இந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து பல படங்களை இயக்கி வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது 1992-ல் தமிழ் நாட்டை உலுக்கிய வாசாத்தி வன்முறை சம்பவம் திரைப்படமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.


    நடிகை ரோகிணி இயக்கும் இந்த படத்தில் 'ஜெய்பீம்' படத்தில் நடித்த லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் இப்படத்திற்கு எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா திரைக்கதை, வசனம் எழுதவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. லிஜோமோல் ஜோஸ் மீண்டும் உண்மை சம்பவத்தில் நடிக்கவுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • இந்த சம்பவத்திற்கு நாடு தழுவிய அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    மணிப்பூரில் வன்முறை நடந்து வரும் நிலையில், கடந்த புதன்கிழமை வெளியான வீடியோ அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். இதற்கு நாடு தழுவிய அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். போலீயான ஒரு வீடியோவால் பழிக்குப்பழி கதையாக இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.

    இந்நிலையில், இந்த சம்பவத்தின் மீது நடவடிக்கை எடுக்காதது வெட்கக்கேடானது என்று நடிகை ரோகிணி கூறியுள்ளார். இது குறித்து அவர், "ஒட்டு மொத்த நாடும் வெட்கப்படக் கூடிய ஒரு விஷயம் இது. ஒரு பெண்ணின் உடலை நிர்வாணமாக்கி, ஊர்வலமாக அழைத்து சென்று வன்புணர்வு செய்திருப்பது நாம் அனைவருக்கும் வெட்கக்கேடு. இதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதை விட வெட்கக்கேடு.


    77 நாட்களுக்கு பிறகு தான் பிரதமர் இதைபற்றி வாய் திறக்கிறார் என்பது எப்படிப்பட்ட செய்தியை மக்களுக்கு சொல்கிறது என்பதை யோசித்து பார்க்க வேண்டும். நம் சமூகத்தில் பெண்ணின் உடல் மீது சமூக கவுரவத்தையும் அனைவரின் மரியாதையும் புகுத்தி வைத்திருப்பதால்தான் இப்படி செய்ய தோன்றுகிறது. பெண்களை நிர்வாணப்படுத்திவிட்டால் உங்களை நாங்கள் அவமானப்படுத்தியதற்கு சமம் என்று நினைக்கிறார்கள். நம்முடைய அவமானங்களின் சின்னமாக பெண்களின் உடலை உருவாக்கியிருப்பது சமூகம் தான்.

    பெண் உடல் பற்றிய இந்த மாதிரியான பார்வையை எப்போது களைகிறோமோ அப்போதுதான் பெண்களுக்கு இதிலிருந்து விடுதலை கிடைக்கும். இப்படிப்பட்ட குற்றங்கள் நடக்கும் போது போய் உடனடியாக நிற்க வேண்டிய காவல்துறையை அதை வேடிக்கை பார்த்தார்கள் என்று அந்த பெண் சொல்லியிருக்கிறார். இது எந்த அளவிற்கு நியாயம் என்பதை பிரதமர் நரேந்திர மோடியும் மணிப்பூர் முதல்வரும் கூற வேண்டும்" என்று பேசினார்.

    ×