என் மலர்
நீங்கள் தேடியது "லுலு மார்க்கெட்"
- வணிகர்களை போலீசார் கைது செய்து சிந்தாதிரிப்பேட்டை சமுதாய கூடத்திற்கு கொண்டு சென்று அடைத்து வைத்தனர்.
- வணிகர்களின் போராட்டத்தையொட்டி தலைமை செயலகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
சென்னை:
தமிழக அரசு அன்னிய முதலீட்டை ஈர்க்கும் வகையில் லுலு வணிக குழுமத்தை தமிழகத்தில் மார்க்கெட் அமைக்க அனுமதித்துள்ளது.
இதன்படி கோவையில் லுலு மார்க்கெட் கடந்த மாதம் திறக்கப்பட்டது. சென்னையில் 100 ஏக்கர் பரப்பளவில் லுலு மார்க்கெட் விரைவில் திறக்கப்பட உள்ளது.
சிறு வணிகர்களுக்கு சவாலாக உருவாகி உள்ள லுலு மார்க்கெட்டை விரட்டியடிப்போம் என்று தமிழகத்தில் உள்ள வணிகர் சங்கங்கள் கூறி வருகின்றன.
இந்நிலையில் லுலு மார்க்கெட்டை தமிழ்நாட்டை விட்டு விரட்டும் வகையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் தலைமையில் தலைமைச் செயலகத்தை இன்று முற்றுகையிட போவதாக போராட்ட கள அமைப்பாளர் ஆர்.சந்திரன் ஜெயபால் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இந்த போராட்டத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை, தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் ஆகியவற்றின் தலைவர்கள், நிர்வாகிகள் முன்னின்று நடத்துவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று காலையில் தலைமைச் செயலகம் நோக்கி முற்றுகையிட வணிகர்கள் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே திரண்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மறியலும் நடந்தது.
இதில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன், பொதுச் செயலாளர் பெருங்குடி சவுந்தரராஜன், போராட்ட கள அமைப்பாளர் ஆர்.சந்திரன் ஜெயபால், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் கொளத்தூர் ரவி, தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க மாநில தலைவர் மயிலை எம்.மாரித்தங்கம், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் முத்துக்குமார், பொதுச் செயலாளர் கே.சி.ராஜா மற்றும் மின்னல் எச்.ஸ்டீபன், முத்து ரமேஷ், ஆலந்தூர் பி.கணேசன், சங்கரலிங்கநாதன், செல்வகுமார், எஸ்.ஆர்.பி.ராஜா, மாரீஸ்வரன், சைதை ஜெயராஜ், வேளச்சேரி செல்வராஜ், மகாராஜா உள்பட 1000-க்கும் மேற்பட்ட வணிகர்களை போலீசார் கைது செய்து சிந்தாதிரிப்பேட்டை சமுதாய கூடத்திற்கு கொண்டு சென்று அடைத்து வைத்தனர்.
வணிகர்களின் போராட்டத்தையொட்டி தலைமை செயலகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- பண்டிகைக் காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் இத்திருவிழா உற்சாகமாக நடைபெற உள்ளது.
- லுலு ஹைப்பர் மார்க்கெட், பிரத்யேக சலுகைகள் மற்றும் தயாரிப்புகளுக்கு அற்புதமான தள்ளுபடிகளுடன் தயாராகி வருகிறது.
கோயம்புத்தூர் லுலு ஹைப்பர் மார்க்கெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேக் மிக்சிங் திருவிழா வரும் செப்டம்பர் 28ம் தேதி நடைபெறுகிறது.
பண்டிகைக் காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் இத்திருவிழா உற்சாகமாக நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில், புகழ்பெற்ற Cookd TVன் சிஇஓ அதித்தியன் கலந்து கொண்ட சிறப்பிக்க உள்ளார்.
கொண்டாட்டம் மற்றும் ஒற்றுமையின் அடையாளமான பாரம்பரிய கேக் மிக்சிங் விழா, வரவிருக்கும் விடுமுறை காலத்தினை சிறப்பிக்கும் வகையில் அமைய இருக்கிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில், லூலு ஹைப்பர்மார்க்கெட் அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பண்டிகைக்கால அனுபவத்தை வழங்குவதற்கான அர்ப்பணிப்பை இந்த விழா சிறப்பித்துக் காட்டுகிறது.
அதே நேரத்தில், லுலு டோனட் விழாவை நடத்துகிறது. இது அக்டோபர் 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாடிக்கையாளர்கள் கிளாசிக் சுவைகள் முதல் அற்புதமான புதிய வகைகள் வரை டோனட்களின் மகிழ்ச்சிகரமான வகைப்படுத்தலில் ஈடுபடலாம் என்றும் இது அனைத்து இனிப்பு பிரியர்களுக்கும் தவறவிடக்கூடாத நிகழ்வாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளத.
நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில், லுலு ஹைப்பர் மார்க்கெட், பிரத்யேக சலுகைகள் மற்றும் தயாரிப்புகளுக்கு அற்புதமான தள்ளுபடிகளுடன் தயாராகி வருகிறது.
பண்டிகை இனிப்புகள் முதல் வீட்டிற்குத் தேவையான பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பல வகைகளில் நம்பமுடியாத சலுகைகளை வாங்க இருக்கிறது.
லுலுவின் நவராத்திரி மற்றும் தீபாவளி ஆஃபர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக காத்திருங்கள் மற்றும் பண்டிகை காலத்தின் உற்சாகத்தில் எங்களுடன் இணைந்திருங்கள் என்று லுலு ஹைப்பர் மாக்கெட் தெரிவித்துள்ளது.
லுலு ஹைப்பர் மார்க்கெட் கோயம்புத்தூர் உங்கள் அனைத்து ஷாப்பிங் தேவைகளுக்கும், முறியடிக்க முடியாத சலுகைகள் மற்றும் மகிழ்ச்சிகரமான அனுபவங்களுடன், ஒரே இடத்தில் இருக்கும் இடமாகத் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- லுலு ஹைப்பர் மார்க்கெட் இந்த சீசனில் இரண்டு அற்புதமான நிகழ்வுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி.
- அனைவருக்கும் நம்பமுடியாத தள்ளுபடிகள் மற்றும் அற்புதமான போட்டிகளை வழங்குகிறது.
லுலு ஹைப்பர் மார்க்கெட் இந்த சீசனில் இரண்டு அற்புதமான நிகழ்வுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. அதன்படி, லுலு சூப்பர் ஃப்ரைடே மற்றும் லுலு பியூட்டி திருவிழா, அனைவருக்கும் நம்பமுடியாத தள்ளுபடிகள் மற்றும் அற்புதமான போட்டிகளை வழங்குகிறது.

லுலு சூப்பர் ஃப்ரைடே: நவம்பர் 22 முதல் டிசம்பர் 1 வரை
எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள், மளிகை சாமான்கள் மற்றும் பல பொருட்கள் உட்பட பலதரப்பட்ட தயாரிப்புகளில் ஆச்சரியமூட்டும் தள்ளுபடியுடன் உங்கள் விடுமுறை ஷாப்பிங்கைத் தொடங்குங்கள்.
அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவிப்பதற்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு சரியான பரிசுகளைக் கண்டறிவதற்கும் இது சரியான வாய்ப்பு.
தேதி: நவம்பர் 22 முதல் டிசம்பர் 1 வரை.
சலுகைகள்: பல்வேறு வகைகளில் 50% தள்ளுபடி வரை சலுகை.
லுலு பியூட்டி திருவிழா: நவம்பர் 28 முதல் டிசம்பர் 8 வரை

தோல் பராமரிப்பு, கூந்தல் பராமரிப்பு மற்றும் தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்கள் தொடர்பான பொருட்களுக்கு பிரத்யேக சலுகைகளுடன் அழகு சாதணங்களை அள்ளுங்கள்.
தேதி: நவம்பர் 28 முதல் டிசம்பர் 8 வரை
சலுகைகள்: அழகு சாதனப் பொருட்களில் 50% வரை தள்ளுபடி.
பியூட்டி திருவிழா போட்டிகள்: டிசம்பர் 7
டிசம்பர் 7ம் தேதி நடைபெறும் லுலு பியூட்டி ஃபெஸ்ட் கோ கிளாம் போட்டியில் உங்கள் திறமை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்துங்கள். உற்சாகமான சவால்களில் பங்கேற்று, அற்புதமான பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறுங்கள்.
நிகழ்வு தேதி: டிசம்பர் 7
போட்டிகள்:
* மெஹந்தி போட்டி: அற்புதமான மெஹந்தி வடிவமைப்பை உருவாக்குங்கள்.
* நெயில் ஆர்ட்: உங்கள் நகத்தை படைப்பாற்றலுடன் பெயிண்ட் செய்யுங்கள்.
* ஐலைனர் சவால்: தலைசிறந்த ஐலைனர் வடிவமைப்புகளை உருவாக்கவும்.
நிகழ்வு தேதி: டிசம்பர் 7
தகுதி: 15 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள்
பதிவு: நவம்பர் 28 ஆம் தேதி முதல் லுலு வாடிக்கையாளர் சேவை மேசையில் தொடங்குகிறது.
இந்த விழாக்காலத்தை லுலு ஹைப்பர் மார்க்கெட்டுடன் உண்மையிலேயே சிறப்பானதாக மாற்றவும். மேலும் விவரங்களுக்கு லுலு ஹைப்பர்மார்க்கெட் கோயம்புத்தூரின் சமூக ஊடக சேனலை பின்பற்றுங்கள்.
- கோயம்புத்தூரில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இணையற்ற மதிப்பைக் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
- இது 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய விற்பனை நிகழ்வாகும்.
கோயம்புத்தூரில் உள்ள லுலு ஹைப்பர் மார்க்கெட்டில் பிளாட் 50% விற்பனையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.
இது ஜனவரி முதல் 12, 2025 வரை நடக்கிறது. புத்தாண்டை நம்பமுடியாத சேமிப்புடன் பலதரப்பட்ட தயாரிப்புகளில் நம்பமுடியாத சலுகைகளுடன் தொடங்குவதற்கான வாய்ப்பு இது.
லுலுவில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில், " லுலு பிளாட் 50% விற்பனையின் அதிகாரப்பூர்வ விளம்பர வீடியோ, பிரச்சார டி- சர்ட் மற்றும் லோகோ வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வு பங்கேற்பாளர்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியது. இது ஆண்டின் மிகப்பெரிய ஷாப்பிங் திருவிழாவாக இருக்கும்.
லுலு ஹைப்பர் மார்க்கெட்டின் பிராந்திய மேலாளர் மகேசன் கூறும்போது, முது பிளாட் 50% விற்பனை ஜனவரி 2025 பதிப்பை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய விற்பனை நிகழ்வாகும்.
மேலும் கோயம்புத்தூரில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இணையற்ற மதிப்பைக் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
இந்த நிகழ்வு ஜனவரி 9 முதல் ஜனவரி 12 வரை நடைபெறும். இது கோயம்புத்தூர் லுலு ஹைப்பர் மார்க்கெட்டில் நடத்தப்படும் லுலு பிளாட் 50%-ன் மூன்றாவது பதிப்பாகும்.

1600க்கும் மேற்பட்ட பிராண்டுகள் சலுகை விற்பனையில் பங்கேற்கின்றன. அற்புதமான சேமிப்பை அனுபவிக்கவும், மகிழ்ச்சியுடன் ஆண்டைத் தொடங்கவும் இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்.
சலுகைகள் குறித்து லுலு ஹைப்பர்மார்க்கெட்டின் பொது மேலாளர் பாலாஜியிடம் கேட்டபோது, "லுலு ஹைப்பர்மார்க்கெட் உங்களுக்கு பிடித்த பொருட்களுக்கு 50% தள்ளுபடியை வழங்குவதால், மேலும் சேமிக்கவும், அதிகமாக ஷாப்பிங் செய்யவும், மேலும் புன்னகைக்கவும் தயாராகுங்கள்.
34000 க்கும் மேற்பட்ட பொருட்களில் எங்களிடம் தோராயமாக உள்ளது 50% சதுகையுடன் 15000 பொருள்கள் விற்பனைக்கு உள்ளது. வாடிக்கையாளர் வசதிக்காக, 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நள்ளிரவு 12 மணி வரை கடை திறக்கப்படும்.
மேலும், ஜனவரி 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் நள்ளிரவு 2 மணி வரை கடை திறக்கப்படும். மளிகை சாமான்கள் முதல் கேஜெட்டுகள் வரை, பாஸ்மதி அரிசி முதல் பிரியாணி வரை, இந்த விற்பனை அனைவரின் தேவையும் பூர்த்தி செய்கிறது.
இந்நிகழ்ச்சியில் லுலு ஹைப்பர் மார்கெட்டின் கொள்முதல் மேலாளர் சுனில் மேனன், நிதி மேவாளர் கணேஷ், மற்றும் இதர லுலு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.