search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரம்மன்"

    • செவ்வாய்க்கிழமை நித்திய கல்யாண முருகருக்கு இரண்டு மாலைகள் சாற்றி வழிபடலாம்.
    • குழந்தை பாக்கியம் வேண்டுவோர் அம்மன் பாதத்தில் வெண்ணெய் வைத்து வழிபடலாம்.

    * குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள், பவுர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு அர்ச்சனை செய்து, அம்மன் பாதத்தில் வெண்ணெய் வைத்து வழிபட்டு, ஆலயத்தை மூன்று முறை வலம் வந்து வணங்கினால், குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும்.

    * கிருத்திகை, சஷ்டி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நித்திய கல்யாண முருகருக்கு இரண்டு மாலைகள் சாற்றி வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும்.

    * ஒரு சில பெண்கள் ருதுவாவது தள்ளிப்போகும். அந்த குறைபாடு உள்ளவர்கள், ஸ்ரீநிதீஸ்வரர் ஆலயத்தில் தொடர்ச்சியாக 5 வியாழக்கிழமைகளில், சுவாமிக்கு சொர்ண புஷ்ப அர்ச்சனை செய்து, வெள்ளி நாணயத்தை பிரசாதமமாகப் பெற்றுச் செல்கின்றனர். இந்த பரிகாரத்தால் நிலம் மற்றும் சொத்து சம்பந்தமான பிரச்சினைகளும் நீங்குகிறதாம்.

    * வெள்ளிக்கிழமை, பவுர்ணமி, பூச நட்சத்திரம், அட்சய திருதியை, தீபாவளி ஆகிய நாட்களில் சுவாமிக்கு சொர்ண புஷ்ப அர்ச்சனை செய்து வழிபட்டால், கடன் தொல்லைகளில் இருந்து விடுபடலாம். அதோடு மன அமைதி, வீடு, வாகன யோகம், திருமண வரம், குழந்தை வரம், தொழில் அபிவிருத்தி, உத்தியோகம் ஆகியவற்றையும் பெற்றிடலாம்.

    * மேற்குமுகமாக வீற்றருளும் கால பைரவரை, தொடர்ச்சியாக 6 தேய்பிறை அஷ்டமி அல்லது ராகு காலங்கள், அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் 8 நெய் தீபம் ஏற்றி, செவ்வரளியால் அர்ச்சனை செய்து வணங்கினால், பிரிந்த குடும்பம் ஒன்றுசேரும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் இனிதாக நடந்தேறும். பில்லி, சூனியம், ஏவல் போன்ற செய்வினைகள் அகலும்.

    * பிரம்மஹத்தி தோஷம் மற்றும் குரு சாபத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஸ்ரீநிதீஸ்வரருக்கு வியாழக்கிழமையில் மஞ்சள் வஸ்திரம் சாற்றி, மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை, ஐந்து நெய் தீபமேற்றி, ஐந்து முறை ஆலய வலம் வந்து வழிபட்டால், அந்த பாதிப்புகள் நீங்குவதுடன், பூர்வ ஜென்ம பாவங்களும் விலகும். மேலும் அவர்களின் இல்லத்தில் நிலவும் வறுமை நீங்கி, செல்வம் பெருகும்.

    • ஆலயத்தின் பின்புறம் பிரம்மதேவன் உண்டாக்கிய பிரம்ம தீர்த்தம் உள்ளது.
    • கணபதி, தன் கையில் பாடலிக் கொடியுடன் காட்சியளிக்கிறார்.

    இன்றைய உலகில் பலருக்கும் பிரச்சனையாக இருப்பது, நிதிதான். பணத்தேவை இருப்பவர்களே இன்று அதிகம். சிலருக்கோ நிதியை சேகரிப்பதில் சிக்கல். பலருக்கு நிதியை பாதுகாப்பதில் சிக்கல். இதற்கெல்லாம் விடை தருபவராக இருக்கிறார், விழுப்புரம் மாவட்டம் அன்னம்புத்தூரில் உள்ள ஸ்ரீநிதீஸ்வரர். இத்தல இறைவனை பிரம்மதேவரும், நிதிகளுக்கு அதிபதியான குபேரனும் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். அந்த ஆலயத்தைப் பற்றி இங்கே பார்ப்போம்.

     தல வரலாறு

    அன்ன வாகனன் என்றழைக்கப்படும் படைப்பு கடவுளான பிரம்மதேவரும், காக்கும் கடவுளான திருமாலும் தங்களில் யார் பெரியவர் என்று போட்டியிட்டனர். ஈசனின் அடியையும், முடியையும் காண்பர்களே வெற்றி பெறுவர் என்று கூறபட்பட்டதும், பிரம்மன் அன்னமாக மாறி, சிவபெருமானின் முடியைத் தேடியும், திருமால் வராக உருவெடுத்து ஈசனின் திருவடியைத் தேடியும் பயணித்தனர். ஒரு கட்டத்தில் ஈசனின் திருவடியை காண முடியாமல், தன் தோல்வியை ஒப்புக் கொண்டார், திருமால்.

    ஆனால் பிரம்மனோ, மகாதேவரின் முடியை கண்டு விட்டதாக பொய் சொன்னார். அதற்கு சாட்சியாக, ஈசனின் தலையில் இருந்து விழுந்து பூமி நோக்கி வந்து கொண்டிருந்த தாழம்பூவை கூட்டு சேர்த்துக் கொண்டார்.

    இதை அறிந்த ஈசன் கடும் கோபம் கொண்டு, பிரம்மனை அன்னப்பறவையாகவே இருக்கும்படி சாபம் கொடுத்தார். அந்த சாபத்திற்கு விமோசனம் தேடி பிரம்மன், அன்னப் பறவையின் தோற்றத்திலேயே பல உலகங்களுக்குச் சென்றார்.

    இறுதியில் பூலோகம் வந்து, ஒரு பொய்கையை உருவாக்கினார். பின்னர் ஒரு சிவலிங்கத்தைச் செய்து, அதற்கு தான் உருவாக்கிய தீர்த்தத்தில் இருந்து நீர் எடுத்து வந்து அபிஷேகித்து வழிபட்டார்.

    பல காலமாக பிரம்மன் செய்த பூஜையால் மனமுருகிய சிவபெருமான், ரிஷப வாகனத்தில் பிரம்மனுக்கு காட்சி கொடுத்து, அவரது சுய உருவை மீண்டும் கொடுத்தார். அன்னப் பறவையின் வடிவத்தில் பிரம்மன், இங்கு வழிபாடு செய்த காரணத்தால், இந்த திருத்தலத்திற்கு 'அன்னம்புத்தூர்' என்ற பெயர் வந்தது.

    ஒருமுறை இத்தலத்திற்கு வந்த குபேரன், தன்னிடம் அள்ள அள்ள குறையாத செல்வம் இருக்க வேண்டும். எக்காலத்திலும் நான் தனாதிபதியாக விளங்கிட வேண்டும் என்று கேட்டு, இத்தல இறைவனை வழிபட்டான்.

    அதன்படியே குபேரனுக்கு, அவனை விட்டு என்றும் நீங்காத நவ நிதிகளையும் இறைவன் வழங்கியதாக இத்தல மகாத்மியம் கூறுகிறது. குபேரன் வழிபட்டதால், இத்தல இறைவன் 'ஸ்ரீநிதீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

    ஆலய அமைப்பு

    ஊருக்கு மேற்கே உள்ள ஏரியின் எதிரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. ராஜகோபுரம் இல்லை. கிழக்கு நோக்கியபடி சுவாமி சன்னிதியும், தெற்கு பார்த்தவாறு அம்பாள் சன்னிதியும் உயரமான மேடை மீது அமைக்கப்பட்டுள்ளன. ஆலயம் முழுவதும் கல் கட்டிடமாக உள்ளது.

    கருவறைக்குள் கிழக்கு நோக்கியபடி ஸ்ரீநிதீஸ்வரர் அருள்பாலிக்கிறார். பிரம்மனும், குபேரனும் வணங்கிய ஈசனை நாமும் வணங்குகின்றோம் என்று நினைக்கும்போதே மெய் சிலிர்ப்பதை உணர முடியும்.

    ஆலய மகா மண்டபத்தில் வீற்றருளும் கணபதி, தன் கையில் பாடலிக் கொடியுடன் காட்சியளிக்கிறார். பாடலிபுத்திரம் என்று அழைக்கப்பட்ட பாட்னாவில் இருந்து, இந்த கணபதியின் சிலை கொண்டுவரப்பட்டு இங்கு வைக்கப்பட்டுள்ளது.

    தெற்கு நோக்கிய சன்னதியில் நின்ற கோலத்தில் கனக திரிபுரசுந்தரி அம்மன் அருள்பாலிக்கிறார். இந்த அன்னைக்கு இரண்டு கரங்கள் மட்டுமே இருக்கின்றன.

    ஆலய வளாகத்துக்குள் தென்மேற்கு மூலையில் லட்சுமி கணபதியும், வடமேற்கில் வள்ளி - தெய்வானையுடன் கல்யாண சுப்பிரமணியரும் தனித்தனியே சன்னிதி கொண்டுள்ளனர். தென்புறம் தனியாக உள்ள சன்னிதியில் மிகப் பழமை வாய்ந்த துர்க்காதேவியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக புதிய சிலையில் இருக்கிறது.

    கிழக்குப்புறத்தில் பைரவருடன், தனா ஆகர்ஷண பைரவரும் காட்சி தருகிறார். ஆலயத்தின் பின்புறம் பிரம்மதேவன் உண்டாக்கிய பிரம்ம தீர்த்தம் உள்ளது. இவ்வாலயத்தின் தல விருட்சம், கொன்றை மரம் ஆகும்.

    ஆயிரம் ஆண்டு பழமையான இந்த ஆலயத்தை, ராஜராஜ சோழன் கண்டு வியந்து பல்வேறு திருப்பணிகள் செய்ததற்கான கல்வெட்டு இங்கே காணப்படுகிறது. ஒரு கட்டத்தில் சிதலமடைந்து மண்மூடிப் போன இந்த ஆலயமானது, பக்தர்களின் அர்ப்பணிப்பு காரணமாக கற்கோவிலாக எழுப்பப்பட்டு, 2014-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்த ஆலயமானது, தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கூட்டேரிப்பட்டு என்ற இடம் உள்ளது. இங்கிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, அன்னம்புத்தூர்.

    • மராட்டிய மாநிலம் புனே அருகில் போர்காவ் என்ற தலத்தில் திரிசக்தி சேத்திரம் அமைந்துள்ளது.
    • இங்குள்ள விநாயகர் கோவிலை பிரம்மன் கட்டியதாக கூறுகிறார்கள்.

    1. நின்ற கோலம்,

    2. அமர்ந்த கோலம்,

    3.நர்த்தன கோலம்,

    4.வலஞ்சுழி விநாயகர்,

    5.இடஞ்சுழி விநாயகர்.

    பிரம்மன் கட்டிய விநாயகர் கோவில்

    மராட்டிய மாநிலம் புனே அருகில் போர்காவ் என்ற தலத்தில் திரிசக்தி சேத்திரம் அமைந்துள்ளது.

    இங்குள்ள விநாயகர் கோவிலை பிரம்மன் கட்டியதாக கூறுகிறார்கள்.

    வேதங்களைத் திருடிய கமலாசுரனை மயில் வாகனத்தில் ஏறி துரத்திச்சென்று அவற்றை மீட்டு வந்தார்.

    போர் முடிந்த பிறகு கமலாசுரன் உடல் மூன்று துண்டுகளாக விழுந்த இடத்தில் பிரம்மா விநாயகருக்காக கட்டியதாக புராணத்தில் உள்ளது.

    • பிரம்மன் வழிபட்ட இடம் பிரம்மகிரி என்னும் அழகிய மலைப்பிரதேசமாகும்.
    • ஐந்தாவதாக சத்யேஜாதக மூர்த்தியாக சிந்தாமணியில் இருப்பது புராணவரலாறு.

    அருணா நதிக்கரையில் தங்களின் பஞ்சசேத்திரங்கள் அமைத்து அருள்பாலிக்குமாறு நான்முகனும் சரஸ்வதியும் வேண்டிக்கொண்டனர்.

    பிரம்மன் வழிபட்ட இடம் பிரம்மகிரி என்னும் அழகிய மலைப்பிரதேசமாகும்.

    மூலசேத்திரமாக விளங்குவது சுருட்டப்பள்ளி ஆகும். இங்கு வால்மீகிஸ்வரராக காட்சி தருகிறார்.

    சிவசயன சேத்திரத்தில் தத்புருஷமூர்த்தியாக விளங்குகிறார்.

    மேற்கில் சத கூடாத்திரி என்னும் ராமகிரி, இந்த சேத்திரத்தில் ஈஸ்வரன் ஈசான மூர்த்தியாக வாலீஸ்வரராக விளங்குகிறார்.

    கிழக்கு புறத்தில் விசங்கடம் என்னும் வடதில்லையில் அகோர மூர்த்தியாக ஸ்ரீ பாபஹரேஸ்வரேர் என்ற திருநாமத்துடன் ஈசன் வீற்றிருக்கிறார்.

    அரியதுரையில் வாமதேவ மூர்த்தியாக ஸ்ரீ வரமுக்தீஸ்வரர் அருள்பாளிக்கிறார்.

    ஐந்தாவதாக சத்யேஜாதக மூர்த்தியாக சிந்தாமணியில் இருப்பது புராணவரலாறு.

    இவ்வாறு உண்டான பன்ச சேத்திரங்களில் ரகசிய சேத்திரம் என்றும், காலகூடசேத்திரம் என்றும் அழைக்கப்படுவது தான் சுருட்டப் பள்ளியாகும்.

    • பதஞ்சலி முனிவர் `நித்திய கைங்கர்யாள்' என்று அழைக்கப்படுகிறார்.
    • கருவறையில் ஆவுடையார் இல்லாத தாராலிங்கம் உள்ளது.

    பிரம்மனுக்கென்று தனி கோவில்கள் உள்ள கண்டியூர், கும்பகோணம், திருப்பாண்டிகொடுமுடி, திருக்கரம்பனூர், புஸ்கர் (ராஜஸ்தான் மாநிலம்) வரிசையில் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் முதல் பிரகாரத்தில் நாவில் சரஸ்வதி நற்றுணையாக வீற்றிருக்கும் பிரம்மாவின் பெருவடிவம் உள்ளது பெருமைக்குரியது.

    எல்லா சிவ ஆலயத்திலும் ஈசனின் இடப்புறத்தில் அபிஷேக தீர்த்தம் வரும் வழியில் கோஷ்ட மூர்த்தியாக இருந்து வருகிறார். ஆனால் இந்த கோவிலில் மட்டுமே பிரம்மா மிக பிரமாண்டமாக அதுவும் மிக சிறப்பாக தலையெழுத்தை மங்களகரமாக மாற்றும் சக்தி படைத்தவராக தனி சன்னதியில் விமானத்துடன் காட்சி அளிக்கிறார்.

    பிரம்மாவின் நான்கு முகங்கள் கிரீடம் அணிந்து நாற்புறமும் பார்த்தபடி இருக்கும். நான்கு கரங்களில் இரண்டு கரங்களை மடிமீது வைத்தும், மற்ற கரங்களில் முறையே வலக்கரத்தில் ஜெபமாலை, இடக்கரத்தில் கமண்டலமும் உள்ளவாறு தாமரை மலர் மீது தவக்கோலத்தில் அமர்ந்துள்ளார்.

    இவருக்கு சந்தனக்காப்பு அல்லது மஞ்சள் காப்பு அபிஷேகம் செய்து நல்ல பலனை பெறலாம். வியாழன், ஞாயிறு, திங்கட்கிழமைகள் வழிபாடு செய்வதற்கு உகந்த நாட்களாகும். மேலும் திருவாதிரை, புணர்பூசம், சதயம் மற்றும் அவரவர் பிறந்த நட்சத்திரத்தன்று வழிபாடு செய்தல் சிறப்பு என உணரப்படுகிறது.

    சூரிய பூஜை

    ஆண்டுதோறும் பங்குனி மாதம் 15, 16, 17 ஆகிய தினங்களில் நடைபெறும் இந்த சூரிய பூஜை நிகழ்ச்சி ஓர் அரிய நிகழ்வாகும். சூரிய பூஜை ஆண்டுதோறும் பங்குனி 15, 16, 17 காலை 6.14 மணிக்கு தொடங்கி 6.45 மணிக்கு ஈசனாகிய ஸ்ரீபிரம்மபுரீஸ்வரரை சூரிய பகவான் நேரடியாக வழிபடும் காட்சியானது கடல் நீரில் மங்களகரமான ஓர் சிவலிங்கம் தோன்றி மறைவது போன்ற அற்புத காட்சியை காண்பது மிகச்சிறப்பு.

    பதஞ்சலி முனிவர்

    இவர் நித்திய கைங்கர்யாள் என்று அழைக்கப்படுவர். இவர் இத்தலத்து ஈசனை தினந்தோறும் வணங்கி இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு யோகமாகிய ஞானத்தை வழங்கி மன நிம்மதி அளித்து அருள்புரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கைலாச நாதர்

    இக்கோவிலின் நந்தவனத்து உட்புறத்தே தனிப்பெரும் கோவிலாக கைலாச நாதர் ஆலயம் உள்ளது. இக்கோவில் முற்கால பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. அதாவது 7, 8-ம் நூற்றாண்டுகளை சேர்ந்தது.

    இத்திருக்கோவில் தேர் வடிவில் பல்லவர் கலை முறையில் அமைந்த கோவிலாகும். கருவறையில் ஆவுடையார் இல்லாத தாராலிங்கம் உள்ளது. இது 16 பட்டைகளை கொண்டது. இது சந்திரகலாலிங்கம் என்று அழைக்கப்படும். சிதம்பரம் நவலிங்கம் சன்னதியில் உள்ள லிங்கம், காஞ்சி கைலாச நாதர் ஆலயத்தில் உள்ள லிங்கம் ஆகியவை இந்த வகையானதே ஆகும்.

    மேலே விதானம் கொண்ட கங்கைகொண்ட சோழபுரம் போல உள்ளீடு இல்லாது உச்சிவரை செல்கிறது. இறைவன் தனியே ரிஷபாருடனாக இருக்கும் காட்சி முதல் திருக்கோவிலை சுற்றியுள்ள நடனத்தோற்றங்கள் வரை அனைத்து மனதை கொள்ளை கொள்கிறது. இத்திருக்கோவிலை பார்த்தே ராஜராஜசோழன் தஞ்சை பெரியகோவிலை அமைத்திருக்க வேண்டும்.

    16 பட்டை லிங்கத்தை சுற்றிவரும் திருச்சுற்று சாந்தாரா அமைப்பை சேர்ந்தது. இதே போலத்தான் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலின் லிங்கத்தை சுற்றி வர இடம் அமைத்து உள்ளீடற்ற கோபுரத்தையும் நிறுவி இருக்கிறார்கள்.

    இக்கோவிலே ஆதி கோவிலாக அமைந்திருக்கவேண்டும். இதன் பின்னரே 14-ம் நூற்றாண்டில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் கட்டப்பட்டிருக்க வேண்டும்.

    பிரம்ம தீர்த்த குளம்

    நான்கு புறமும் படித்துறைகளை கொண்ட அற்புத தீர்த்த குளம். இந்த தீர்த்தத்தால் பிரம்மன் 12 (துவாதச) சிவலிங்கங்களை அபிஷேகித்து வழிபாடு செய்ததால் இத்தீர்த்த குளம் பிரம்ம தீர்த்த குளம் என்று அழைக்கப்படுகிறது.

    மழை நீர் பிரகாரத்தின் மேல்தளங்களில் விழுந்து யார் காலிலும் படாமல் வழிந்து திருக்கோவில் அடித்தளத்தின் வழியே திருக்குளத்தில் விழும்படியாக தொழில்நுட்ப அறிவுடன் அமைக்கப்பட்டுள்ளது.

    முக்கிய திருவிழாக்கள்

    மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறை ஆகியவற்றில் வரும் இரண்டு பிரதோஷங்களும் சிறப்பாக நடைபெறுகிறது.

    சித்திரை மாதப்பிறப்பில் பஞ்சாங்கம் படித்தல், சிறப்பு அபிஷேகம், நீர்மோர் பாகனம் வழங்கப்படுகிறது.

    ஆடிப்பூரம் அன்று அம்பாளுக்கு தனியாக அபிஷேகம் செய்யப்பட்டு ஆண்டின் முதல் விழாவாக ஆடிப்பூர அம்மன் திருவீதி உலா வருதல் சிறப்பு. அன்று பாசிப்பயிறு முளைக்கட்டி விதைபோடுதல் என்று பக்தர்களுக்கு தருவது சிறப்பு.

    ஆவணியில் விநாயகர் அபிஷேகம், திருவீதி உலா வருதல்.

    புரட்டாசி மாதத்தில் நவராத்திரி 10 நாட்களும் அம்மன் பிரம்ம சம்பத் கவுரிக்கு அபிஷேகம், அலங்காரம், ஊஞ்சல் உற்சவம் என்று சிறப்பிக்கப்படும். இந்த விழா அம்பு போடுதல் நிகழ்வுடன் நிறைவு பெறும்.

    ஐப்பசி பவுர்ணமி அன்று ஸ்ரீபிரம்மபுரீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெறும்.

    கார்த்திகை பவுர்ணமி அன்று திருக்கார்த்திகை தீபமும், திருவீதி உலாவும் நடைபெறும்.

    மார்கழி பவுர்ணமியன்று திருவாதிரையில் ஸ்ரீநடராஜ பெருமானுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் திருவீதி உலா நடைபெறும்.

    தை மாதப்பிறப்பில் பஞ்சமூர்த்தி அபிஷேகம் நடைபெறும்.

    மாசி மாத சிவராத்திரி அன்று இரவு முழுவதும் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரருக்கு நான்கு கால அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறும்.

    பிரம்மோற்சவ பெரும் திருவிழாவில் 10 நாட்கள் உற்சவம் நடைபெறுவது தனிச்சிறப்பு. இந்த மாதத்தில் வரும் பூர நட்சத்திர நாளில் திருத்தேரோட்ட வடம் பிடித்தல் வைபவம் நடைபெறுவது தனிச்சிறப்பு. சூரிய வழிபாடு பங்குனி 15, 16, 17 ஆகிய நாட்கள்.

    பரிகார-பிரார்த்தனை தலம்

    ஜாதகத்தில் ஒருவரது ஏழாம் இடத்தைப் பொறுத்தே மனைவி, நண்பர்கள் அமை வார்கள். இது தொடர்பான தோஷ நிவர்த்திக்கு இங்கு வழிபடு கின்றனர். ஏழாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தோருக்கான பரிகார தலமாகவும் இந்த கோவில் உள்ளது.

    திருமணத்தடை, பிரிந்த தம்பதிகள் சேருதல், தொழில், வியாபார, பணி விருத்திக்காக பிரம்மனிடம் வேண்டலாம். மிக முக்கியமான பிரார்த்தனை புத்திரப்பேறு வேண்டுதல் தான். ஏனெனில், பிரம்மன் தானே புதிய திசுக்களை படைத்தாக வேண்டும். அவ்வகையில் இது மிகச்சிறந்த புத்திரப்பேறுக்கான பிரார்த்தனை தலம் ஆகும்.

    • பங்குனி மாதம் பூரம் நட்சத்திரத்தன்று தேரோட்டம் நடைபெறுகிறது.
    • வேத மந்திரங்கள் சொல்லப்பட்டு கொடியேற்றப்படும்.

    கொடியேற்றத்துடன் தொடங்கியதுதிருப்பட்டூரில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவில் மிகவும் பழமையானது. இது இந்து அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் கீழ் செயல்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பூரம் நட்சத்திரத்தன்று தேரோட்டம் நடைபெறுகிறது.

    இதையட்டி கொடி மரத்துக்கு அபிஷேகம் நடைபெறும். அதைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் சொல்லப்பட்டு கொடியேற்றப்படும்.

    விநாயகர், முருகர், வள்ளி, தெய்வானை, சோமாஸ்கந்தர், அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளின் திருவீதி உலா நடைபெறுகிறது. திருவிழாவின் இரண்டாம் நாள் சுவாமி பல்லக்கில் புறப்பாடு நடைபெறுகிறது.

    இரவு சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் மயில் வாகனத்திலும் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறுகிறது. திருவிழாவின் அடுத்தடுத்த நாட்களில் சுவாமி கைலாச வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும், சுவாமி சேஷ வாகனத்திலும், அம்பாள் மயில் வாகனத்திலும், சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் புஷ்ப பல்லக்கிலும், சுவாமி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும், சுவாமி குதிரை வாகனத்திலும் புறப்பட்டு திருவீதி உலா நடைபெறும். ஒன்பதாம் நாள் தேரோட்டம் நடைபெறுகிறது.

    • சக்தியுடன் தனி சந்நிதியில் காட்சியளிக்கிறார்.
    • சகலவிதமான சர்வ தோஷ பரிகாரத்தலமாகும்.

    பெரும் சிறப்புடைய சோழநாட்டின் ஒரு பகுதியாய் இருந்த பொன்னி நதியும், காவிரி நதியும் பாயும் தென் தமிழ்நாட்டின் நடுநாயகமாய் வீற்றிருக்கும் திருச்சி மாவட்டத்தின் வடகரையில் சுமார் திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் 25 கி.மீ தொலைவில் சிறுகநூருக்கு மேற்கில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் திருப்பட்டூர் அமைந்துள்ளது. இவ்வூரில் பழமையும் பெருமையும் மிக்க ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது.

    ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர்- ஈசன்

    கிழக்கு நோக்கிய சன்னிதி, சுயம்பு மூர்த்தி, அழகிய தோற்றம், மேலே தாராபாதிரம், நாகாபரனத்துடன் கூடிய சதுர ஆவுடை கூடிய திருமேனி, ஸ்ரீ பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி அருள் புரிந்ததால் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயர் பெற்றார்.

    ஸ்ரீ பிரம்மன் வரலாறு

    நாத மண்டபத்தின் தென்புறம் சென்றால் மிகப்பெரிய கிழக்கு நோக்கிய ஸ்ரீ பிரம்மா சன்னிதி. பிரம்மனுக்கு கோவில்கள் இல்லை என்பது பொதுவான கருத்து. ஆனால் பிரம்மன் இல்லாத சிவ ஆலயம் இல்லை என்பது தான் உண்மை. எல்லா சிவ ஆலயத்திலும், ஈசனின் இடப்புறத்தில் அபிஷேக தீர்த்தம் வரும் வழியில் கோஷ்டமூர்த்தியாக இருந்து வருகிறார்.

    ஆனால் திருபட்டூரில்மட்டுமே மிகப்ப்ரம்மாண்டமாக அதுவும் தலையெழுத்தை மங்களகரமாக மாற்றும் சக்தியுடன் தனி சந்நிதியுடன் காட்சியளிக்கிறார். பிரம்மன் ஒருமுறை இந்த உலகத்தை படைக்கும் சக்தி தன்னிடம் உள்ளது , மேலும் ஈசனுக்கும் ஐந்து தலை, தனக்கும் ஐந்து தலை என நான் எனும் அகங்காரத்துடன் ஈசனை மதிக்காத போக்கு தென்பட்டது.

    ஈசன் பிரம்மனுடைய அகங்காரத்தை அழித்து அவரின் நிலையை உணர வைக்க எண்ணினார். ஆகவே, "பிரம்மனே ஐந்து தலை என்பதால் அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய் " என்று அவருடைய ஒரு தலையை கொய்துவிட்டு தேஜஸ் இழக்கக்கடவாய் என்று சாபம் இட்டார். பிரம்மன் தேஜஸ் இழந்ததால் படைப்பாற்றலையும் இழந்தார்.

    தன நிலையை உணர்ந்த பிரம்மன் திருபட்டூரில் துவாதச சிவலிங்கங்களை (பன்னிரண்டு) பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார். ஆகா பிரம்மனின் வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன் பிரம்மனின் படைப்பாற்றலையும் திரும்ப வழங்கி கூடுதலாக ஒரு வரம் வழங்கினார்.

    பிரம்மனே உன்னுடைய வழிபாட்டில் மகிழ்ந்த யாம் எல்லோருடைய தலையெழுத்தை நிர்ணயிக்கும் உன்னுடைய தலையெழுத்தை மாற்றியது போல் இங்கு வந்து உன்னை வழிபாடு செய்பவர்களுக்கு மீண்டும் ஒருமுறை அவர்களுடைய "தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக " என்று வரமளித்தார். "விதி இருப்பின் விதி கூட்டி அருளுக " என்றும் வரம் வழங்கினார்.

    பரிகார தலம்

    நம் ஒவ்வொருவருடைய ஆசையுமே நாம் தற்பொழுது இருக்கும் நிலையை விட மிகச் சிறப்பாகவும், நல்ல ஆரோக்கியம் , செல்வா நலத்துடன் வாழ வேண்டும் என்பதே. அதற்கு இத்தலத்து ஸ்ரீ பிரம்மாவை நேராக வந்து பார்த்தாலே போதும். நலம் பல வழங்கி நல்வாழ்வு நல்குவர்.

    ஸ்ரீ பிரம்மாவை வழிபாடு செய்ய உகந்த நாட்கள்

    திங்கள், வியாழன், திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் நம்முடைய பிறந்த நட்சத்திரத்தன்று இவ்வாலயத்திற்கு வந்து வழிபாடு செய்தல் சிறப்பு. தலையெழுத்தையே மாற்றுவார் என்பதால் சகலவிதமான சர்வ தோஷ பரிகாரத்தலமாகும்.

    பரிகார முறை

    முதலில் இத்தலத்திற்கு வருகை தருதல் வேண்டும். பின்னர் ஈசன், பிரம்மன், அம்மன் ஆகியோரை தரிசித்து விட்டு, முப்பத்தி ஆறு தீபமிட்டு ஒன்பது முறை வளம் வந்து வேண்டுதல் வேண்டும். ஒவ்வருவருடைய ஜாதகத்தை பிரம்மன் பாதத்தில் வைத்து வேண்டுதல் செய்தல் அது அவ்வாறே நடக்கும் என்பது ஐதீகம். இவ்வாறு வேண்டி பலன் பெற்றோர் பல பேர் உள்ளனர்.

    பொதுவான பரிகாரம்

    கணவன் மனைவி பிரிந்தவர் கூடுதல், துர்மரணம், வியாபாரத்தில் நஷ்டம், திருமணத் தடை, பிள்ளைகள் இழப்பு, கல்வியில் பாதிப்பு, வறுமை, குழந்தைஇன்மை, மன வியாதிகள், பூரண ஆயுள், என்ற நிலையில் உள்ளவர்கள் இத்தலத்து ஸ்ரீ பிரம்மாவை நேராக நின்று தரிசிதாலே போதும் சகல தோஷங்களும் நீங்கி "திருபட்டூர் வந்தோம் திருப்பம் நிகழ்ந்தது " என்ற நல்ல மங்களகரமான நிலை அடையலாம்.

    • சக்தியுடன் தனி சந்நிதியுடன் காட்சியளிக்கிறார்.
    • சகலவிதமான சர்வ தோஷ பரிகாரத்தலமாகும்.

    பெரும் சிறப்புடைய சோழநாட்டின் ஒரு பகுதியாய் இருந்த பொன்னி நதியும், காவிரி நதியும் பாயும் தென் தமிழ்நாட்டின் நடுநாயகமாய் வீற்றிருக்கும் திருச்சி மாவட்டத்தின் வடகரையில் சுமார் திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் 25 கி.மீ தொலைவில் சிறுகநூருக்கு மேற்கில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் திருப்பட்டூர் அமைந்துள்ளது. இவ்வூரில் பழமையும் பெருமையும் மிக்க ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது.

    ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் : ஈசன்

    கிழக்கு நோக்கிய சன்னிதி, சுயம்பு மூர்த்தி, அழகிய தோற்றம், மேலே தாராபாதிரம், நாகாபரனத்துடன் கூடிய சதுர ஆவுடை கூடிய திருமேனி, ஸ்ரீ பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி அருள் புரிந்ததால் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயர் பெற்றார்.

    ஸ்ரீ பிரம்மன் வரலாறு

    நாத மண்டபத்தின் தென்புறம் சென்றால் மிகப்பெரிய கிழக்கு நோக்கிய ஸ்ரீ பிரம்மா சன்னிதி. பிரம்மனுக்கு கோவில்கள் இல்லை என்பது பொதுவான கருத்து. ஆனால் பிரம்மன் இல்லாத சிவ ஆலயம் இல்லை என்பது தான் உண்மை. எல்லா சிவ ஆலயத்திலும், ஈசனின் இடப்புறத்தில் அபிஷேக தீர்த்தம் வரும் வழியில் கோஷ்டமூர்த்தியாக இருந்து வருகிறார்.

    ஆனால் திருபட்டூரில்மட்டுமே மிகப்ப்ரம்மாண்டமாக அதுவும் தலையெழுத்தை மங்களகரமாக மாற்றும் சக்தியுடன் தனி சந்நிதியுடன் காட்சியளிக்கிறார். பிரம்மன் ஒருமுறை இந்த உலகத்தை படைக்கும் சக்தி தன்னிடம் உள்ளது , மேலும் ஈசனுக்கும் ஐந்து தலை, தனக்கும் ஐந்து தலை என நான் எனும் அகங்காரத்துடன் ஈசனை மதிக்காத போக்கு தென்பட்டது.

    ஈசன் பிரம்மனுடைய அகங்காரத்தை அழித்து அவரின் நிலையை உணர வைக்க எண்ணினார். ஆகவே, "பிரம்மனே ஐந்து தலை என்பதால் அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய் " என்று அவருடைய ஒரு தலையை கொய்துவிட்டு தேஜஸ் இழக்கக்கடவாய் என்று சாபம் இட்டார். பிரம்மன் தேஜஸ் இழந்ததால் படைப்பாற்றலையும் இழந்தார்.

    தன நிலையை உணர்ந்த பிரம்மன் திருபட்டூரில் துவாதச சிவலிங்கங்களை (பன்னிரண்டு) பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார். ஆகா பிரம்மனின் வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன் பிரம்மனின் படைப்பாற்றலையும் திரும்ப வழங்கி கூடுதலாக ஒரு வரம் வழங்கினார்.

    பிரம்மனே உன்னுடைய வழிபாட்டில் மகிழ்ந்த யாம் எல்லோருடைய தலையெழுத்தை நிர்ணயிக்கும் உன்னுடைய தலையெழுத்தை மாற்றியது போல் இங்கு வந்து உன்னை வழிபாடு செய்பவர்களுக்கு மீண்டும் ஒருமுறை அவர்களுடைய "தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக " என்று வரமளித்தார். "விதி இருப்பின் விதி கூட்டி அருளுக " என்றும் வரம் வழங்கினார்.

    பரிகாரத்தலம்

    நம் ஒவ்வொருவருடைய ஆசையுமே நாம் தற்பொழுது இருக்கும் நிலையை விட மிகச் சிறப்பாகவும், நல்ல ஆரோக்கியம் , செல்வா நலத்துடன் வாழ வேண்டும் என்பதே. அதற்கு இத்தலத்து ஸ்ரீ பிரம்மாவை நேராக வந்து பார்த்தாலே போதும். நலம் பல வழங்கி நல்வாழ்வு நல்குவர்.

    ஸ்ரீ பிரம்மாவை வழிபாடு செய்ய உகந்த நாட்கள்

    திங்கள், வியாழன், திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் நம்முடைய பிறந்த நட்சத்திரத்தன்று இவ்வாலயத்திற்கு வந்து வழிபாடு செய்தல் சிறப்பு. தலையெழுத்தையே மாற்றுவார் என்பதால் சகலவிதமான சர்வ தோஷ பரிகாரத்தலமாகும்.

    பரிகார முறை

    முதலில் இத்தலத்திற்கு வருகை தருதல் வேண்டும். பின்னர் ஈசன், பிரம்மன், அம்மன் ஆகியோரை தரிசித்து விட்டு, முப்பத்தி ஆறு தீபமிட்டு ஒன்பது முறை வளம் வந்து வேண்டுதல் வேண்டும். ஒவ்வருவருடைய ஜாதகத்தை பிரம்மன் பாதத்தில் வைத்து வேண்டுதல் செய்தல் அது அவ்வாறே நடக்கும் என்பது ஐதீகம். இவ்வாறு வேண்டி பலன் பெற்றோர் பல பேர் உள்ளனர்.

    பொதுவான பரிகாரம்

    கணவன் மனைவி பிரிந்தவர் கூடுதல், துர்மரணம், வியாபாரத்தில் நஷ்டம், திருமணத் தடை, பிள்ளைகள் இழப்பு, கல்வியில் பாதிப்பு, வறுமை, குழந்தைஇன்மை, மன வியாதிகள், பூரண ஆயுள், என்ற நிலையில் உள்ளவர்கள் இத்தலத்து ஸ்ரீ பிரம்மாவை நேராக நின்று தரிசிதாலே போதும் சகல தோஷங்களும் நீங்கி "திருபட்டூர் வந்தோம் திருப்பம் நிகழ்ந்தது " என்ற நல்ல மங்களகரமான நிலை அடையலாம்.

    ×