என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்"
- இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்,
- காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கி னார். மாவட்டத் தலைவர் ஆனந்த கிருஷ்ணன், மாவ ட்ட பொருளாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராம்ஜி வரவேற்றார். வட்ட பொருளாளர் முத்துசாமி நிதிநிலை அறிக்கை வாசி த்தார். தொடர்ந்து மாவட்ட செயலாளர் மகாலி ங்கம், மாவட்டத் துணைத் தலைவர் கொளஞ்சிவேலு ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய பணிகளை தோற்றுவித்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், தமிழக அரசு துறையில் பணிபுரியும் வெளி ஒப்பந்ததாரர்களை நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், தமிழக அரசின் சமூக நல துறையின் காலை சிற்றுண்டி திட்டத்தினை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும், மத்திய அரசால் வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வை நிலுவையுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் வட்ட துணை த்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வட்ட இணை செயலாளர் மஞ்சுளா, மாவட்டத் துணைத் தலைவர்கள் வீரபுத்திரன், செந்தில்முருகன், மாவட்ட இணை செயலாளர்கள் சாமிதுரை, விஜயராணி, சாலை பணியாளர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் முத்து உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்