என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊர்வசி ரவுடேலா"

    • பிரபல கிரிக்கெட் வீரர் தன்னை சந்திக்க நீண்ட நேரம் காத்திருந்ததாக ஏற்கனவே ஊர்வசி கூறி சர்ச்சையை கிளப்பினார்.
    • பொய்யான செய்திகளை பரப்புவதை சிலர் தொழிலாக வைத்துள்ளனர் என ரிஷப் பண்ட் கூறினார்.

    ஊர்வசி ரவுடேலா (Urvashi Rautela) ஒரு பிரபல இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார். அவர் கிரிக்கெட்டுடன் தொடர்புடைய சில சுவாரஸ்யமான தருணங்களால் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளார். குறிப்பாக, இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்உடனான சர்ச்சைகள் மற்றும் வதந்திகள் அவரை கிரிக்கெட் ரசிகர்களிடையே கவனம் பெற வைத்தன.

    2022-ம் ஆண்டு, ஊர்வசி ஒரு நேர்காணலில், ஒரு பிரபல கிரிக்கெட் வீரர் தன்னை சந்திக்க ஹோட்டலில் நீண்ட நேரம் காத்திருந்ததாகவும், ஆனால் தான் அவரை சந்திக்கவில்லை என்றும் கூறினார். இதை அவர் "RP" என்று மறைமுகமாக குறிப்பிட்டதால், பலரும் அதை ரிஷப் பண்ட் உடன் தொடர்புபடுத்தினர்.

    இதற்கு பதிலடியாக, ரிஷப் பண்ட் தனது சமூக வலைதளத்தில் "பொய்யான செய்திகளை பரப்புவதை சிலர் தொழிலாக வைத்துள்ளனர்" என்று பதிவிட்டு, ஊர்வசியை மறைமுகமாக விமர்சித்தார். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்குதான் தன்னுடைய ஆதரவு என ஊர்வர்சி ரவுடேலா தெரிவித்துள்ளார். இது மீண்டும் கிரிக்கெட் ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் உள்ளார். அவரை வழபிலுக்கும் விதமாக இதை கூறியதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வருகிறது.
    • பா.ஜ.க. கூட்டணியில் ஜனசேனா கட்சித் தலைவர் நடிகர் பவன் கல்யாண் இடம் பெற்றுள்ளார்.

    நடிகர் பவன் கல்யாண் நடித்த 'ப்ரோ' சினிமா கடந்த 28-ந் தேதி வெளியிடப்பட்டது. இதில் நடிகை ஊர்வசி ரவுடேலா நடித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், உலகம் முழுவதும் வெளியாகும் எங்கள் திரைப்படத்தில் மதிப்பிற்குரிய ஆந்திர முதல்வர் பவன் கல்யாண் உடன் திரை இடத்தைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.


    மேலும் ஜெகன்மோகன் ரெட்டியை விட பவன் கல்யாண் விருப்பமான தலைவர் என ரசிகர்களின் கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார். இதற்கு பவன் கல்யாண் ரசிகர்கள் வரவேற்பு அளித்து தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆந்திர முதல்வர் பவன் கல்யாண் என பதிவிட்டு இருப்பது இன்னும் நீக்கப்படவில்லை அதனை உடனடியாக நீக்க வேண்டுமென அரசியல் கட்சி பிரமுகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வருகிறது. பா.ஜ.க. கூட்டணியில் ஜனசேனா கட்சித் தலைவர் நடிகர் பவன் கல்யாண் இடம் பெற்றுள்ளார். அந்த கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

    இந்த நிலையில் நடிகை ஆந்திர முதல்வர் பவன் கல்யாண் என பதிவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×