என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உளுந்தூர்போட்டை வாரச்சந்தை"
- நாளை ஆடி 18-ந்தேதியையொட்டி ஆடிப்பெருக்கு பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
- வார சந்தைக்கு இன்று அதிகாலை முதலே சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.
உளுந்தூர்பேட்டை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமையன்று வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். வழக்கமாக இந்த சந்தையில் ரூ.25 லட்சம் முதல் ரூ.50 லட்சம் மதிப்பிலான ஆடுகள் விற்பனையாகும்.
அதன்படி, இன்று உளுந்தூர்பேட்டையில் வாரச்சந்தை நடைபெற்றது. வார சந்தைக்கு இன்று அதிகாலை முதலே காட்டுசெல்லூர், வடகுரும்பூர், கிளியூர், சேந்தநாடு, ஆசனூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் நாளை ஆடி 18-ந்தேதியையொட்டி ஆடிப்பெருக்கு பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் ஆடு சந்தையில் விற்பனை களை கட்டியது. காலை 5 மணிக்கு தொடங்கிய இந்த சந்தையில் திண்டுக்கல், மதுரை, திருச்சி, வேலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆயிரக்கணக்கான ஆடுகளை வாங்கினர்.
இது தவிர சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்களும் ஆடுகளை வாங்க குவிந்தனர். இந்த சந்தையில் ஒரு ஆடு ரூ.8 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை விற்பனையானது. காலை 10 மணி நிலவரப்படி ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. ஆடுகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் ஆடு வளர்ப்போர் மகிழ்ச்சியுடன் சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்