search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹாக்கி இந்தியா"

    • லீக் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
    • அரையிறுதி 16-ம் தேதியும், இறுதிப்போட்டி 17-ம் தேதியும் நடக்கிறது.

    ஹுலுன்புயர்:

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 நாடுகளும் ரவுண்டு ராபின் முறையில் தலா ஒரு முறை மோதவேண்டும்.

    லீக் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அரையிறுதி 16-ம் தேதியும், இறுதிப்போட்டி 17-ம் தேதியும் நடக்கிறது.

    இந்திய அணி முதல் ஆட்டத்தில் சீனாவை 3-0 என்ற கோல் கணக்கிலும், 2-வது ஆட்டத்தில் ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியது.

    இந்நிலையில், இந்திய அணி 3-வது ஆட்டத்தில் இன்று மலேசியாவுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் இந்தியா 8-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக ஆடி ஹாட்ரிக் வெற்றி பெற்று அசத்தியது.

    • ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சீனாவில் இன்று தொடங்கியது.
    • முதல் போட்டியில் சீனாவை இந்தியா வீழ்த்தியது.

    பீஜிங்:

    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் இன்று தொடங்கியது.

    இத்தொடரில் இந்தியா, மலேசியா, ஜப்பான், தென்கொரியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    இந்நிலையில், இந்தத் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, சீனாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. சுக்ஜித் சிங், உத்தம் சிங், அபிஷேக் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

    நாளை இந்திய அணி ஜப்பானை எதிர்கொள்கிறது.

    • காலிறுதியில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் கிரேட் பிரிட்டனை எதிர்கொண்டது.
    • இந்தப் போட்டியில் இரு அணிகளும் 1-1 என கோல் அடித்து சமனில் முடிந்தது.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி அணியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன.

    காலிறுதியில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் கிரேட் பிரிட்டன் அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என சமனிலை பெற்றது. ஹர்மன்பிரித் ஒரு கோல் அடித்தார்.

    இரண்டாவது பாதியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் இந்திய அணி 4-2 என்ற கணக்கில் வென்றுஅரையிறுதிக்கு முன்னேறியது.

    அமித் ரோஹிதாசுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதால், இந்திய அணி மொத்தம் 10 வீரர்களைக் கொண்டு விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பி பிரிவில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.
    • இந்தப் போட்டியில் இந்தியா 3 கோல்கள் அடித்தது.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி அணியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன.

    இதில் பி பிரிவில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது. அபிஷேக் மற்றும் ஹர்மன்பிரித் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

    இரண்டாவது பாதியில் ஹர்மன்பிரித் மேலும் ஒரு கோல் அடித்தார். இறுதியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

    இதன்மூலம் 5 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 10 புள்ளிகள் பெற்று 2வது இடம்பிடித்தது.

    ஏற்கனவே இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பி பிரிவில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் பெல்ஜியத்தை எதிர்கொண்டது.
    • இந்தப் போட்டியில் இந்தியா ஒரு கோல் மட்டுமே அடித்தது.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி அணியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன.

    இதில் பி பிரிவில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான பெல்ஜியத்தை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் இந்தியா ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. இந்த கோலை அபிஷேக் அடித்தார்.

    இரண்டாவது பாதியில் பெல்ஜியம் வீரர்கள் சிறப்பாக விளையாடி 2 கோல்கள் அடித்தனர். இதனால் பெல்ஜியம் அணி இந்தியாவை 2-1 என வீழ்த்தியது.

    இதன்மூலம் 4 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 7 புள்ளிகள் பெற்றுள்ளது. ஏற்கனவே இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பி பிரிவில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொண்டது.
    • இந்தப் போட்டியின் 2 கோல்களையும் ஹர்மன்பிரித் சிங் அடித்து அசத்தினார்.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி அணியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன.

    இதில் பி பிரிவில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் இந்தியா 2 கோல் அடித்து முன்னிலை பெற்றது.

    இந்த இரண்டு கோல்களையும் கேப்டன் ஹர்மன்பிரித் சிங் அடித்தார்.

    இதன்மூலம் 3 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 7 புள்ளிகள் பெற்றுள்ளது. இதன்மூலம் காலிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

    • டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
    • அப்போது ஹாக்கி இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் மன்பிரித் சிங் ஆவார்.

    புதுடெல்லி:

    ஹாக்கி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மன்பிரித் சிங். இவரது தலைமையின் கீழ் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பதக்கம் வென்றது நினைவு கூரத்தக்கது.

    இந்நிலையில், இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் மன்பிரித் சிங் கூறியதாவது:

    நான்கு ஒலிம்பிக்கில் விளையாட முடியும் என நான் நினைக்கவே இல்லை. ஒலிம்பிக்கில் விளையாடி பதக்கம் வெல்லவேண்டும் என்பது ஒவ்வொரு வீரரின் கனவாகும். இது எனது நான்காவது ஒலிம்பிக் என்பதால் மிகவும் அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன்.

    இது எனது கடைசி ஒலிம்பிக் என நினைத்து பாரிஸ் செல்கிறேன். என்னால் முடிந்ததை கொடுக்கவேண்டும். நான் இன்னும் விளையாட்டை விட்டு வெளியேறுவது பற்றி யோசிக்கவில்லை. எனது முழு கவனமும் பாரிஸ் ஒலிம்பிக்சில் உள்ளது.

    மோசமான காலங்களில் குடும்பம் மற்றும் குழுவின் ஆதரவு மிகவும் முக்கியமானது. ஏனெனில் அந்த நேரத்தில் வீரர் தன்னை மிகவும் தனிமையாக உணர்கிறார். அணி ஒன்றாக நிற்கும்போது அது மிகுந்த ஊக்கத்தை அளிப்பதோடு, மீண்டு வருவதற்கு உதவுகிறது. சமீபத்தில் ஹர்திக் பாண்டியாவின் ஒரு சிறந்த மறுபிரவேசத்தைப் பார்த்தோம்.

    இப்போது நான் கேப்டனாக இல்லாவிட்டாலும் அதில் எந்த மாற்றமும் இல்லை. ஹாக்கியில் ஒவ்வொரு வீரருக்கும் அவரவர் பங்கு உண்டு. அனைவரையும் அழைத்துச் செல்வதே முயற்சி. மூத்தவராக இருப்பதால் இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும்.

    டோக்கியோவில் இருந்த 11 வீரர்கள் ஒரே மாதிரியாக இருப்பதால் நாங்கள் அதையே தொடர்வோம். 5 அறிமுக வீரர்களுடன் எங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறோம். எங்கள் குழு கடினமானது. எந்த அணியையும் எங்களால் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.

    நல்ல அணிகளுக்கு எதிராக எங்களுக்கு குறைவான வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் 50-50 வாய்ப்புகளை மாற்றுவது ஒரு சாம்பியனின் அடையாளமாகும். பாரிசில் இதைச் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார்.

    • பாரிசில் அடுத்த மாதம் ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது.
    • இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஜூலை 27-ம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

    புதுடெல்லி:

    பிரான்ஸ் தலைநகரான பாரிசில் ஜூலை 26 -ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது.

    இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய ஆண்கள் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்பிரீத் சிங் கேப்டனாகவும், ஹர்திக் சிங் துணை கேப்டனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 5 வீரர்கள் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    இந்திய அணி ஜூலை 27-ம் தேதி தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

    ஜப்பானின் டோக்கியோவில் கடந்த முறை நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள் அணி வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    • ஒடிசா ஹாக்கி விளையாட்டின் மையமாக திகழ்கிறது.
    • தங்களது ஸ்பான்சர்ஷிப்பை ஒடிசா மேலும் 3 ஆண்டுக்கு நீட்டித்தது.

    புவனேஸ்வர்:

    இந்திய ஹாக்கி அணிக்கு 2018-ம் ஆண்டில் இருந்து ஒடிசா மாநில அரசு ஸ்பான்சர்ஷிப் வழங்கி வருகிறது. சமீபத்தில் ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் உலகக் கோப்பை ஹாக்கி, புரோ ஹாக்கி லீக் போன்ற பெரிய போட்டிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.

    இதற்கிடையே, ஹாக்கி விளையாட்டின் மையமாக திகழும் ஒடிசா தங்களது ஸ்பான்சர்ஷிப்பை மேலும் 10 ஆண்டுக்கு நீட்டித்தது. அதாவது 2023-ல் இருந்து 2033-ம் ஆண்டு வரை இந்திய ஆண்கள்-பெண்கள் ஹாக்கி அணிகளுக்கு (சீனியர் மற்றும் ஜூனியர்) வழங்கும் ஸ்பான்சர்ஷிப்பை நீட்டிப்பது என ஒடிசாவின் அப்போதைய முதல் மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் கடந்த ஏப்ரலில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், ஒடிசா மாநில அரசு இந்திய ஹாக்கி அணியின் ஸ்பான்சர்ஷிப்பை மேலும் 3 ஆண்டுக்கு நீட்டித்துள்ளது. முதல் மந்திரி மோகன் சரண் மாஜி மற்றும் ஹாக்கி இந்தியா குழுவினர் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

    • இந்திய மகளிர் ஹாக்கி அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
    • உலகத் தரவரிசைப் பட்டியலில் இந்திய மகளிர் ஹாக்கி அணி முன்னேறியுள்ளது.

    புதுடெல்லி:

    ஜார்க்கண்ட் மாநிலம் ஜெய்ப்பூரில் சமீபத்தில் நடந்து முடிந்த 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் தொடர்ந்து 6 போட்டிகளில் வென்று தோல்வி பக்கமே செல்லாமல் வீறுநடை போட்ட இந்திய அணி கோப்பையை 2-வது முறையாக வென்று அசத்தியது. ஏற்கனவே 2016-ம் ஆண்டில் வென்றிருந்தது.

    சாதனை படைத்த இந்திய வீராங்கனைகளைப் பாராட்டிய ஹாக்கி இந்தியா அமைப்பு, அவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

    இதற்கிடையே, ஹாக்கி தரவரிசைப் பட்டியலில் நெதர்லாந்து அணி உலகின் சிறந்த மகளிர் ஹாக்கி அணியாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், அர்ஜெண்டினா அணி 3-வது இடத்திலும், பெல்ஜியம் அணி 4-ம் இடத்திலும், ஜெர்மனி மகளிர் ஹாக்கி அணி 5-ம் இடத்திலும் உள்ளன.

    இந்நிலையில், உலகத் தரவரிசைப் பட்டியலில் இந்திய மகளிர் ஹாக்கி அணி முன்னேறியுள்ளது. இதில் உலகத் தரவரிசையில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 6-ம் இடம் பிடித்துள்ளது.

    இந்திய அணி இப்போது 83 தரவரிசைப் புள்ளிகளுடன், இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி ஆறாவது இடத்தில் உள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்பு இந்திய மகளிர் அணி 8-வது இடத்தில் இருந்தது.

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் பட்டம் வென்றது மட்டுமின்றி இறுதிவரை எந்த ஆட்டத்திலும் தோற்காமல் இருந்தது ஆகியவற்றின் மூலம் தரவரிசைப் பட்டியலில் முன்னேறியுள்ளது.

    • இந்த பட்டியலில் 3095.90 புள்ளிகளுடன் நெதர்லாந்து முதலிடத்தில் உள்ளது.
    • இந்திய அணி 2771.35 தரநிலைப் புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.

    சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கத்தில் 7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன் கோப்பை தொடர் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில், இந்திய அணி, மலேசியாவுடன் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன்மூலம் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டி தொடரில் இந்திய அணி 4-வது முறையாக பட்டம் வென்றுள்ளது.

    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம், உலக ஹாக்கி தரவரிசை பட்டியலில் இந்திய அணி 4வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு முன்னேறியது. இந்திய அணி 2771.35 தரநிலைப் புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.

    இந்த பட்டியலில் 3095.90 புள்ளிகளுடன் நெதர்லாந்து முதலிடத்தில் உள்ளது. பெல்ஜியம் (2917.87) இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து, இங்கிலாந்து நான்காவது இடத்திலும், ஜெர்மனி ஐந்தாவது இடத்திலும் உள்ளன. ஆஸ்திரேலியா ஆறாவது இடத்தில் உள்ளது. 7 முதல் 10வது இடங்களை ஸ்பெயின், அர்ஜென்டினா, மலேசியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பிடித்துள்ளன.

    • இந்திய அணி 4-வது முறையாக ஆசிய சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
    • சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் வாழ்த்து தெரிவித்தார்.

    சென்னை:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, மலேசியா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி 4-வது முறையாக ஆசிய சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

    இந்நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் திரில்லிங்கான ஆட்டத்தைப் பார்த்தேன்! இடைவேளை நேரத்தில் 1-3 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த மென் இன் ப்ளூ, 4-வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை 4-3 என்ற கணக்கில் வென்றது உண்மையிலேயே வியப்பாக இருந்தது. அது போட்டியின் கடைசி நேரம் வரை எங்களை இருக்கைகளின் நுனியில் வைத்திருந்தது. இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் வெற்றியில் மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    ×