search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கம்பராமாயணம்"

    • கம்ப ராமாயணம் சொல்வது திராவிட மாடல் ஆட்சியைத்தான் சொல்கிறது.
    • ராமன் அனைவருக்கும் பொதுவானவனாக இருந்தான்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் நடைபெற்ற கம்பன் கழகத்தின் 10-வது நாள் விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்றார். விழாவில் அவர் பேசியதாவது:-

    கம்ப ராமாயணத்தை உற்றுநோக்கி உள்நோக்கி சமுதாயக் கண்ணோட்டத்தோடு பார்த்தால், அங்கே நமக்கு தெரிவது, சமத்துவம், சமூகநீதி, எல்லோருக்கும் எல்லாம், நாம் அனைவரும் அண்ணன் தம்பிகள், நமக்குள் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது, இதுதான் கம்ப ராமாயணம்.

    இதைத்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி என்கிறார். கம்ப ராமாயணம் சொல்வது திராவிட மாடல் ஆட்சியைத்தான் சொல்கிறது என்பதால், இதை நான் சொல்கிறேன்.

    மற்றவர்கள் யாரும் தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம். ராமன் எந்த குலத்தில் பிறந்தான் என்று பார்ப்பது கிடையாது. ராமன் அனைவருக்கும் பொதுவானவனாக இருந்தான் என்றுதான் நாம் பார்க்கிறோம்.

    தசரதனுடைய மகனாகத்தான் விபீஷனனையும், குகனையும், சுக்ரீவனையும், ராமன் ஏற்றுக்கொண்டிருக்கிறான் என்று சொன்னால், அங்கே ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை எதிர்காலத்திலே உருவாக வேண்டும், இருக்க வேண்டும் என்ற உன்னத லட்சியத்தோடு உருவாக்கப்பட்ட காவியம்தான் ராம காவியம், கம்ப ராமாயணம் என்பதை நாம் இங்கே மனதிலே வைத்துக்கொண்டாக வேண்டும்.

    எனவே, பாதி பேருக்கு இது கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும். இருந்தாலும், அதில் இருக்கக்கூடிய பல நல்ல கருத்துக்களை எடுத்துக்கொள்ள வேண்டும். போற்றப்பட வேண்டும். அந்த வித்தியாசமான கண்ணோட்டத்திலே நாங்கள் பார்க்கிறபோது, இது எங்களுடைய திராவிட மாடலுக்கு பொருத்தமான ஒன்றாக இருக்கும் என்ற காரணத்தினாலேதான் ராமனை திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடியாக இருக்கும் என்று நாங்கள் சொல்லி வருகிறோம்.

    தந்தை பெரியாருக்கு முன்னால், பேரறிஞர் அண்ணாவுக்கு முன்னால், அண்ணல் அம்பேத்கருக்கு முன்னால், தலைவர் கலைஞருக்கு முன்னால், இன்று தலைவர் தளபதிக்கு (மு.க.ஸ்டாலின்) முன்னால், இந்த திராவிட மாடல் ஆட்சியை முன்னெடுத்துச் சென்றிருக்கின்ற சமூகநீதியின் காவலர், சமத்துவம் சமூகநீதி இவற்றையெல்லாம் போதித்து உலகத்திற்கு எடுத்துச் சொன்னவர், எல்லோரும் சமம் என்று சொன்ன ஒரே நாயகன் ராமன்.

    இதை யாரும் மறுக்க முடியாது. இதை மறுப்பதற்கான வாய்ப்பும் கிடையாது. ராமர் ஆட்சியின் நீட்சிதான் தமிழ்நாட்டில் நடைபெறும் தி.மு.க ஆட்சி. 2026 சட்டசபைத் தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க அறுதிப் பெரும்பான்மை பெற்று யாருடைய தயவு, இல்லாமல் மீண்டும் ஆட்சியை அமைக்கும். யாருடைய தயவையும் பெறும் சூழ்நிலை எங்களுக்கு வராது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கம்பராமாயணத்தில் ராமனை பற்றி சொல்லி இருக்கக்கூடிய கருத்துக்கள் திராவிட மாடல் ஆட்சியை ஒட்டிய கருத்துக்கள். திராவிட மாடல் கொள்கையில் கம்பன் எந்த அளவுக்கு ஈடுபட்டிருந்தார் உடன்பட்டு இருந்தார், சமரசப்பட்டு இருந்தார் என்பதைத்தான் நான் குறிப்பிட்டேன்.

    சமத்துவம் சமூக நீதி எல்லோருக்கும் எல்லாம். இதுதான் திராவிட மாடல் ஆட்சி. குகனோடு சேர்ந்து ஐவரானோம், சுக்கிரனோடு சேர்ந்து அறுவர் ஆனோம், விபீஷணனோடு சேர்ந்து ஏழ்வரானோம் என்று எல்லோரையும் தன்னுடன் இணைத்துக் கொள்கின்ற அந்த சகோதரபான்மையோடு ராமர் நாங்கள் எல்லாம் தசரதனின் குழந்தைகள் என்று சொல்வதோடு அனைவரையுமே தனது சகோதரர்களாக ஏற்றுக் கொண்டிருக்கின்ற அந்த பக்குவம் அதுதான் திராவிட மாடல் ஆட்சி. அதைத்தான் நாங்கள் முன்னிறுத்தி இருக்கின்றோம்

    அயோத்திக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நான் செல்வேன். நான் அனைத்து கோவிலுக்கு செல்பவன் தான். அயோத்திக்கும் சென்று பார்க்கத்தான் வேண்டும். அயோத்தியில் இருப்பது பால ராமர் தான்.

    • மனிதா்கள் கடைசி எல்லையை அடைந்துவிட்டால் தேடுவதை நிறுத்த வேண்டும்.
    • இளைஞா்கள் நாளை, நாளை என ஓடிக்கொண்டிருக்கும்போது இன்று வீணாகி கொண்டிருக்கிறது.

    திருப்பூர்:

    திருப்பூா் கம்பன் கழகம் சாா்பில் 15-ம் ஆண்டு கம்பன் விழா நடைபெற்றது. இதில் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் பங்கேற்று பேசியதாவது:-

    மனிதா்களுக்கு புலன்களை அடக்குவது சாதாரண காரியம் அல்ல. உலகத்தில் எதை வேண்டுமானாலும் அடக்கிவிடலாம். தன்னைத்தானே அடக்குவதுதான் மிகவும் சிரமமான காரியம். எனவே, மற்றவா்களை அடக்க முயற்சி செய்வதை விட்டுவிட்டு தன்னைத்தானே அடக்க முயற்சிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் உலகம் மிகவும் சரியானதாக மாறிவிடும்.

    மரபு இலக்கியங்களைப் பாடிய புலவா்கள் தமிழைத் தெய்வமாக நினைத்து பாடினாா்கள். ஒரு பொய்யான சொல்லைக்கூட சொல்லமாட்டாா்கள். அக்காலத்து புலவா்கள் சத்தியத்தை மட்டும் சொன்னதால்தான் காவியங்கள் இன்றளவும் நிற்கின்றன.

    கம்பராமாயணத்தைப் படிப்பவா்கள், கேட்பவா்கள், சொல்பவா்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறுவதுடன், ஞானமும், புகழும் உண்டாகும்.

    மனிதா்கள் கடைசி எல்லையை அடைந்துவிட்டால் தேடுவதை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் தேடுவதிலேயே வாழ்க்கையைத் தொலைத்து விடுவாா்கள். இன்றைய இளைஞா்கள் செல்வத்தை தேடும்போது போகத்தையும், புண்ணியத்தையும் இழக்கின்றாா்கள். இளைஞா்கள் நாளை, நாளை என ஓடிக்கொண்டிருக்கும்போது இன்று வீணாகி கொண்டிருக்கிறது.

    கம்பராமாயணத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சோ்ப்பது என்பது கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வதற்கு ஒப்பாகும். கம்பராமாயணத்தைப் படித்தால் முதலில் வாழ்க்கையையும், அடுத்த நிலையில் கடவுளையும் கற்றுத்தருவாா் கம்பா் என்றாா்.

    ×