search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லூனா 25"

    • லூனா-25 விண்கலம் விழுந்த இடத்தை நிலவை கண்காணித்து வரும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் ஆர்பிட்டர் படம் பிடித்துள்ளது.
    • நிலவின் குறிப்பிட்ட பகுதியை 2020 ஆம் ஆண்டு எடுத்த புகைப்படத்தோடு, தற்போது லூனா 25 விழுந்த பிறகு எடுத்த புகைப்படத்தையும் ஒப்பிட்டு நாசா வெளியிட்டுள்ளது.

    நிலவின் தென் துருவ பகுதியை ஆராய சந்திரயான்-3 விண்கலத்தை இந்தியா அனுப்பியதற்கு போட்டியாக ரஷியா லூனா-25 விண்கலத்தை அனுப்பியது. சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்குவதற்கு முன்பாக லூனா-25 விண்கலத்தை தரையிறக்க ரஷிய விண்வெளி நிறுவனம் தீவிரமாக செயல்பட்டது.

    புவி மற்றும் நிலவின் சுற்றுவட்ட பாதைகளை அதிவேகமாக கடந்து சென்ற லூனா-25 விண்கலத்தை தரையிறக்குவதற்கு முந்தைய சுற்றுவட்டபாதைக்குள் கடந்த மாதம் 19-ம் தேதி நுழைக்கும் போது கட்டுப்பாட்டை இழந்து, கீழே விழுந்து நொறுங்கியது.

    இந்த லூனா-25 விண்கலம் விழுந்த இடத்தை நிலவை கண்காணித்து வரும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் ஆர்பிட்டர் படம் பிடித்துள்ளது. லூனா -25 விண்கலம் தரையிறங்க வேண்டிய இடத்துக்கு அருகில் புதிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால், இது லூனா-25 விண்கலம் விழுந்த இடமாக இருக்க வாய்ப்புள்ளது என எல்ஆர்ஓ குழு முடிவு செய்துள்ளது. இந்த புதிய பள்ளம், 10 மீட்டர் அகலத்தில் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

    மேலும், நிலவின் குறிப்பிட்ட பகுதியை 2020 ஆம் ஆண்டு எடுத்த புகைப்படத்தோடு, தற்போது லூனா 25 விழுந்த பிறகு எடுத்த புகைப்படத்தையும் ஒப்பிட்டு நாசா வெளியிட்டுள்ளது.

    • 50 ஆண்டு காலமாக லூனா முயற்சிகளை நிறுத்தி வைத்தது தவறு
    • தோல்வியால் என் உடல்நலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது

    1959-ல் தொடங்கி 1976 வரை தொடர்ச்சியாக பல விண்கலன்களை ரஷியா நிலவிற்கு அனுப்பியது. அதில் 15 விண்கல பயணம் வெற்றிகரமாக அமைந்ததால் உலகைமே ரஷியாவை வியந்து பார்த்தது.

    ரஷியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ராஸ்காஸ்மாஸ் (Roscosmos), நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி அங்குள்ள கனிம வளங்கள் உட்பட பல்வேறு விவரங்களை குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக லூனா-25 எனும் விண்கலத்தை இம்மாதம் வாஸ்டோச்னி காஸ்மோடிரோமிலிருந்து (Vostochny Cosmodrome) நிலவிற்கு அனுப்பியது.

    ஆனால், ஆகஸ்ட் 19 அன்று அந்த விண்கலம் நிலவின் மேற்பரப்பில் மோதி விழுந்து நொறுங்கியதால், இந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

    இதுகுறித்து ராஸ்காஸ்மாஸ் நிலைய அமைப்பின் தலைவர் கூறியிருப்பதாவது:-

    நிலவிற்கு தொடர்ந்து விண்கலன்களை அனுப்பும் முயற்சிக்கு தடை போட கூடாது. அது ஒரு மோசமான முடிவாகி விடலாம். சுமார் 50 ஆண்டு காலம் இந்த முயற்சிகளை நிறுத்தி வைத்ததன் மோசமான பின்விளைவைத்தான் நாம் இப்போது அனுபவித்து வருகிறோம். அரசாங்கங்கள் இந்த திட்டத்தை இடைநிறுத்தம் செய்ததன் காரணமாக ஈடில்லாத நமது முந்தைய தலைமுறையினரின் தொழில்நுட்ப அறிவை நாம் கிட்டத்தட்ட இழந்து விட்டோம்.

    இறங்குவதற்கான சுற்றுப்பாதைக்கு முன்னதான சுற்றுப்பாதையில் விண்கலத்தை நிலைநிறுத்தம் செய்ய வேண்டிய எஞ்சின் திட்டமிட்ட 84 வினாடிகளுக்கு பதிலாக 127 வினாடிகள் தொடர்ந்து செயல்பட்டது. இதனால் லூனா விழுந்து நொறுங்கியது. ஒரு தொழில்நுட்ப வல்லுனர்களின் குழு இதற்கான துல்லிய காரணங்களை கண்டறிய நியமிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதற்கிடையே இம்முறை ரஷியா அனுப்பிய லூனா-25 ஆராய்ச்சியில் பங்கு பெற்ற அனுபவம் வாய்ந்த 90 வயதான ரஷிய விண்வெளி ஆராய்ச்சியாளர் மிக்கெய்ல் மரோவ் (Mikhail Marov) இந்த தோல்வியினால் திடீரென உடல்நலம் குறைந்து, ரஷிய தலைநகரான மாஸ்கோவில் உள்ள கிரெம்ளின் பகுதியில் அமைந்திருக்கும் மத்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இவர் ரஷியாவின் முந்தைய நிலவிற்கு விண்கலன்கள் அனுப்பும் முயற்சிகளில் பங்கேற்ற ஒரு தேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி வல்லுனராவார்.

    இது குறித்து அவர் தெரிவித்ததாவது:-

    நான் எவ்வாறு கவலைப்படாமலிருக்க முடியும்? நான் மருத்துவ கண்காணிப்பில் உள்ளேன். என்னுடைய வாழ்நாளின் ஆராய்ச்சி அனுபவம்தான் இந்த முயற்சி. இந்த தோல்வியால் என் உடல்நலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியா, கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் விண்கலத்தை தரையிறக்கும் தனது சந்திரயான் திட்டத்தின்படி, சந்திரயான் 3 எனும் விண்கலத்தை அனுப்பியுள்ளது என்பதும் தற்போது வரை திட்டமிட்டபடி தனது சுற்றுவட்டப்பாதையில் பயணிக்கும் இந்த விண்கலத்தை நாளை மாலை 06:04 மணிக்கு நிலவின் மேற்பரப்பில் தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • அடுத்தடுத்து விண்கலங்கள் வருவது நிலவின் மேற்பரப்பில் எதையும் மாற்றி அமைக்காது.
    • ஆரோக்கியமான போட்டியானது, வளர்ச்சிக்கு உந்துசக்தியாக அமையும்.

    புதுடெல்லி:

    நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள உந்துவிசை தொகுதியில் இருந்து 'லேண்டர்' நேற்று வெற்றிகரமாக பிரிந்தது.

    நிலவில் 23-ந்தேதி தரை இறங்கும் இந்த லேண்டர் சாதனத்துக்குள் உள்ள 'ரோவர்' தனது ஆய்வை தொடங்கும்.

    இதற்கிடையே, இந்தியாவுக்கு போட்டியாக ரஷியாவும் நிலவை ஆய்வு செய்ய விண்கலத்தை செலுத்தி உள்ளது. கடந்த 10-ந்தேதி, லூனா-25 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. கடந்த 1976-ம் ஆண்டு, லூனா-24 என்ற விண்கலத்தை ரஷியா செலுத்தியது. அதன்பிறகு, 47 ஆண்டுகள் கழித்து, மீண்டும் ஆய்வு செய்ய முனைந்துள்ளது.

    லூனா-25 விண்கலம், நேரடியாக நிலவை நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் எடை 1,750 கிலோ மட்டுமே. ஆனால், சந்திரயான்-3 விண்கலத்தின் எடை 3,800 கிலோ.

    எனவே, சந்திரயானை விட வேகமாக நிலவை நெருங்கி உள்ளது. அதன் எரிபொருள் சேமிப்பு திறனும் அதிகம். எனவே, சந்திரயானுக்கு முன்பாகவே, வருகிற 21-ந்தேதி நிலவின் தென்துருவத்தில் லூனாவை தரையிறக்க ரஷியா திட்டமிட்டுள்ளது. அதாவது, ஏவப்பட்ட 11 நாட்களில் தரையிறங்குகிறது.

    இந்தியா-ரஷியா இடையிலான இந்த போட்டி சூடுபிடித்துள்ளது.

    நிலவின் தென்துருவம், நீர்வளம் நிறைந்ததாக கருதப்படுகிறது. தனித்துவமான புவியியல் அம்சங்களை கொண்டுள்ளது. அறிவியல் ஆராய்ச்சிக்கான வளங்கள் அங்கு இருப்பதாக கருதப்படுகிறது.

    எனவே, நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க இந்தியாவும், ரஷியாவும் போட்டியிடுகின்றன.

    இதுதொடர்பாக 'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கே.சிவன், பெங்களூருவில் உள்ள இந்திய வான்இயற்பியல் நிலைய விஞ்ஞானி கிறிஸ்பின் கார்த்திக் ஆகியோர் கூறியதாவது:-

    அடுத்தடுத்து விண்கலங்கள் வருவது நிலவின் மேற்பரப்பில் எதையும் மாற்றி அமைக்காது. ஒவ்வொரு ஆராய்ச்சியிலும் கிடைக்கும் தகவல்கள், நிலவின் கடந்த காலத்தையும், சிறப்பம்சங்களையும் தெரிந்து கொள்ள உதவும்.

    ரஷியாவும் நிலவை ஆய்வு செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகளிடையிலான போட்டி, மக்களிடையே ஆர்வத்தை தூண்டுவதுடன், புதிய விஷயங்களை கண்டுபிடிக்க உதவும்.

    ஆரோக்கியமான போட்டியானது, வளர்ச்சிக்கு உந்துசக்தியாக அமையும். ஒரு நாடு, மற்ற நாட்டின் கண்டுபிடிப்புகளிலும், பின்னடைவுகளிலும் நிறைய கற்றுக்கொள்ளலாம்.

    எனவே, இந்த ஆய்வு, வருங்காலங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கு பாதை அமைக்கும். நிலவின் மர்மங்களை புரிந்துகொள்ள உதவும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • ரஷியா கடந்த 11-ந்தேதி விண்ணில் ஏவியது.
    • வருகிற 23-ந்தேதி தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக லூனா-25 என்ற விண்கலத்தை ரஷியா கடந்த 11-ந்தேதி விண்ணில் ஏவியது. இந்த நிலையில் லூனா-25 விண்கலம் நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் நுழைந்துள்ளது. அந்த விண்கலம் சுமார் 5 நாட்கள் நிலவை சுற்றி வரும்.

    வருகிற 21-ந்தேதி லூனா-25 விண்கலத்தை நிலவில் தரையிறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தியாவின் இஸ்ரோ ஏவிய சந்திரயான்-3 விண்கலம், நிலவின் தென் துருவத்தில் வருகிற 23-ந்தேதி தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐந்து நாட்களில் நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடையும்
    • சந்திரயான்-3 தரையிறங்கும் நாளில், லூனாவும் நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்ப்பு

    இந்தியா சந்திரயான்-3 விண்கலத்தை நிலவின் தென்துருவத்தை ஆராய விண்ணில் செலுத்தியுள்ளது. வருகிற 23-ந்தேதி விண்கலம் நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சந்திரயான்-3 போன்று நிலவின் தென்துருவத்தை ஆராய ரஷியா லூனா-25 என்ற விண்கலத்தை உருவாக்கியது. இந்த விண்கலம் ராக்கெட் மூலம் இன்று விண்ணில் ஏவப்பட்டது.

    இந்த விண்கலம் 5 நாட்கள் பயணம் செய்து நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடையும் என்றும், பின்னர் 5 முதல் 7 நாட்கள் சுற்றுவட்டப் பாதையில் பயணம் செய்து நிலவில் தரையிறங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் அதே நாளில் ரஷியாவின் லூனா-25 விண்கலம் தரையிறங்குகிறது. இதற்காக மூன்று இடங்களை ரஷிய விஞ்ஞானிகள் தேர்வு செய்துள்ளனர்.

    ரஷியா கடந்த 1976-ம் ஆண்டு முதல்முதலாக நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியது. அதன்பின் 47 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விண்கலத்தை அனுப்ப உள்ளது.

    நிலவில் மாதிரிகளை சேகரித்து நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? என்று லூனா-25 ஆய்வு செய்யும் என்றும் 2021-ம் ஆண்டே விண்கலத்தை ஏவ திட்டமிட்டு, பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    சந்திரயான்-3 விண்கலத்துக்கு முன்பாக லூனா-25 விண்கலத்தை நிலவில் தரையிறக்க திட்டமிட்டுள்ளனர்.

    • இந்தியாவின் சந்திராயன்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் அதே நாளில் ரஷியாவின் லூனா-25 விண்கலம் தரையிறங்குகிறது.
    • ரஷியா கடந்த 1976-ம் ஆண்டு முதல்முதலாக நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை ஏவியுள்ளது.

    அந்த விண்கலம் வருகிற 23-ந்தேதி நிலவில் தரை இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ரஷியாவும் லூனா-25 என்ற விண்கலத்தை நாளை விண்ணில் ஏவ உள்ளது. 5 நாட்கள் பயணம் செய்து நிலவின் சுற்றுவட்டப் பாதையை லூனா-25 விண்கலம் அடையும் என்றும் பின்னர் 5 முதல் 7 நாட்கள் சுற்றுவட்டப் பாதையில் பயணம் செய்து நிலவில் தரையிறங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் சந்திராயன்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் அதே நாளில் ரஷியாவின் லூனா-25 விண்கலம் தரையிறங்குகிறது. இதற்காக மூன்று இடங்களை ரஷிய விஞ்ஞானிகள் தேர்வு செய்துள்ளனர். ரஷியா கடந்த 1976-ம் ஆண்டு முதல்முதலாக நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியது. அதன்பின் 47 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விண்கலத்தை அனுப்ப உள்ளது. நிலவின் பாதைகளில் மாதிரிகளை சேகரித்து நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்று லூனா-25 ஆய்வு செய்யும் என்றும் 2021-ம் ஆண்டே விண்கலத்தை ஏவ திட்டமிட்டு, பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். சந்திரயான்-3 விண்கலத்துக்கு முன்பாக லூனா-25 விண்கலத்தை நிலவில் தரையிறக்க திட்டமிட்டுள்ளனர்.

    ×