search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புற்று நோய்"

    • புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அனுஷ்மான் கெய்க்வாட் சிகிச்சை பெற்று வந்தார்.
    • கபில் தேவ் தன்னுடைய பென்சன் தொகையை அனுஷ்மான் சிகிச்சைக்கு கொடுத்தார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அனுஷ்மான் கெய்க்வாட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

    அவருடைய இழப்பிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், "அனுஷ்மான் கெய்க்வாட் கிரிக்கெட்டுக்கான அவரது பங்களிப்பிற்காக நினைவுகூரப்படுவார். அவர் ஒரு திறமையான வீரர் மற்றும் ஒரு சிறந்த பயிற்சியாளர். அவரது மறைவு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள்" என்று பதிவிட்டுள்ளார் .

    அனுஷ்மான் உயிரிழந்ததற்கு பிசிசிஐ செயலாளர் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், "அனுஷ்மான் கெய்க்வாட்டின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்" ஏன்னு பதிவிட்டுள்ளார்.

    பிசிசிஐ முன்னாள் செயலாளரான சவுரங் கங்குலியும் அனுஷ்மான் கெய்க்வாட்டுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவுக்காக 12 வருடங்களில் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுஷ்மான், 1990-களின் இறுதியில் இந்திய அணியின் பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார்..

    அவருடைய வழி காட்டுதலில் சார்ஜாவில் நடைபெற்ற கோகோ-கோலா கோப்பையை இந்தியா வென்றதை மறக்க முடியாது. அத்துடன் ஓய்வுக்கு பின் பிசிசிஐ நிர்வாகத்தில் அவர் முக்கிய பொறுப்பிலும் இருந்தார்.

    71 வயதாகும் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி வந்தார். எனவே தமக்கு பொருளாதார ரீதியில் உதவி செய்யுமாறு அவருடைய சார்பில் பிசிசிஐ-க்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதற்கு பிசிசிஐ எந்த பதிலும் அளிக்கவில்லை.

    இதனையடுத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தம்முடைய பென்சன் தொகையை தனது நண்பன் மற்றும் சக வீரரான அனுஷ்மானுக்கு கொடுப்பதாக அறிவித்தார். அத்துடன் மற்ற வீரர்களும் அவர்களுடைய குடும்பம் சம்மதித்தால் தங்களது பென்சன் தொகையை அவருடைய மருத்துவ உதவிக்கு கொடுக்கலாம் என கபில் தேவ் கேட்டுக் கொண்டார்.

    இதனையடுத்து, அனுஷ்மான் கெய்க்வாட்டுக்கு பிசிசிஐ 1 கோடி நிதியுதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அனுஷ்மான் கெய்க்வாட் தற்சமயத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.
    • கபில் தேவ் தம்முடைய பென்சன் தொகையை அனுஸ்மானுக்கு கொடுப்பதாக அறிவித்தார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அனுஷ்மான் கெய்க்வாட் தற்சமயத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்காக அவர் 12 வருடங்களில் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பெருமையை கொண்டவர். மேலும் 1990-களின் இறுதியில் இந்திய அணியின் பயிற்சியாளராகவும் அவர் செயல்பட்டார்.

    அவருடைய வழி காட்டுதலில் சார்ஜாவில் நடைபெற்ற கோகோ-கோலா கோப்பையை இந்தியா வென்றதை மறக்க முடியாது. அத்துடன் ஓய்வுக்கு பின் பிசிசிஐ நிர்வாகத்தில் அவர் முக்கிய பொறுப்பிலும் இருந்தார். தற்போது 71 வயதாகும் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி வருகிறார். எனவே தமக்கு பொருளாதார ரீதியில் உதவி செய்யுமாறு அவருடைய சார்பில் பிசிசி-ஐக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதற்கு பிசிசிஐ-யிடம் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

    இதனையடுத்து முன்னாள் ஜாம்பவான் கேப்டன் கபில் தேவ் தம்முடைய பென்சன் தொகையை தனது நண்பன் மற்றும் சக வீரரான அனுஸ்மானுக்கு கொடுப்பதாக அறிவித்தார். அத்துடன் மற்ற வீரர்களும் அவர்களுடைய குடும்பம் சம்மதித்தால் தங்களது பென்சன் தொகையை மருத்துவ உதவிக்கு கொடுக்கலாம் என கபில் தேவ் கேட்டுக் கொண்டார்.

    இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் அன்ஷுமான் கெய்க்வாடுக்கு நிதியுதவி வழங்க உடனடியாக ரூ.1 கோடியை வழங்க பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உத்தரவிட்டுள்ளார். மேலும் அவருடைய குடும்பத்தாரிடம் பேசி நிலைமையை விசாரித்து உதவிகளை வழங்கினார்.

    • இந்தி சின்னத்திரை துறையில் மிகவும் பிரபலமானவர் ஹினா கான்,
    • அதன் பின் கில்லாடி சீசன் 8 மற்றும் பிக் பாஸ் 11 ஆகிய ரியாலிட்டி ஷோக்களில் கலந்துக் கொண்டார்.

    இந்தி சின்னத்திரை துறையில் மிகவும் பிரபலமானவர் ஹினா கான், அவர் `யே ரிஷ்டா கியா கேலடா ஹை' சீரியலில் அக்ஷரா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வீட்டில் ஒரு பெண்ணாக மக்கள் மனதில் பதிந்தார். அதைத் தொடர்ந்து கசௌட்டி சிந்தகி கே 2 என்ற சீரியலில் கோமோலிகா என்ற வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்தார். அதன் பின் சில மாதத்தில் அந்த கதாப்பாத்திரத்தில் இருந்து விலகினார்.

    அதன் பின் கில்லாடி சீசன் 8 மற்றும் பிக் பாஸ் 11 ஆகிய ரியாலிட்டி ஷோக்களில் கலந்துக் கொண்டு அவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். சின்னத்திரை மட்டுமல்லாமல் ஹேக்கட், ஸ்மார்ட்ஃபோன், லைன்ஸ், விஷ்லிஸ்ட் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

    இந்நிலையில் ஹினா கான் அவருக்கு மார்பக புற்று நோய் கண்டறியப்பட்டுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 36 வயது ஆகும் ஹினா கானுக்கு மார்பக புற்று நோய் மூன்றாம் நிலையை எட்டியுள்ளது என்பது கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார்.

    இதுகுறித்து அவர வெளியிட்ட அறிக்கையில் " எல்லாருக்கும் வணக்கம், நான் தற்பொழுது நலமாக இருக்கிறேன், நான் இந்த புற்று நோயை மீண்டு வருவதற்கான அனைத்து செயல்களையும் செய்து வருகிறேன். நான் இன்னும் அதிக வலிமையுடன் வருவேன். இந்த நிலைமையை புரிந்துக் கொண்டு ரசிகர்கள் ஒத்துழைக்கவேண்டும். உங்கள் ஆசிர்வாதமும், வேண்டுதலும் நான் குணமடைய கண்டிப்பாக தேவை எனக்காக பிரார்தனை செய்யுங்கள் " என அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 40 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்த மாலி யானைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
    • மணிலா மேயர் ஹனி லகுனா கூறும்போது மாலி எங்கள் மதிப்புமிக்க உடைமை மற்றும் மணிலா மிருகக்காட்சி சாலையில் நட்சத்திர ஈர்ப்பாக இருந்தது.

    உலகின் சோகமான யானை என்று அழைக்கப்படும் 'மாலி' யானை உயிரிழந்தது. அந்த யானை பிலிப்பைன்சில் உள்ள மிருகக்காட்சி சாலையில் பராமரிக்கப்பட்டு வந்தது. 40 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்த மாலி யானைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. சுவாசிக்க மிகவும் சிரமப்பட்டு வந்த யானை சிகிச்சை பலனின்றி இறந்தது. பிரேத பரிசோதனையில் யானைக்கு கணைய புற்று நோய் இருப்பது தெரிய வந்தது. மாலி யானை தனது வாழ்நாளில் பெரும்பகுதியை தனியாகவே கழித்தது.

    மாலி யானை பிலிப்பைன்ஸின் முதல் பெண்மணி என அழைக்கப்படும் இமெல்டா மார்கோஸுக்கு 1981-ம் ஆண்டு 11 மாத குழந்தையாக இருந்தபோது இலங்கை அரசால்பரிசாக வழங்கப்பட்டது. மிருகக்காட்சிசாலையில் 1990-ம் ஆண்டு ஷிவா என்ற யானை உயிரிழந்ததிலிருந்து மாலி யானை மட்டுமே இருந்தது. மணிலா மேயர் ஹனி லகுனா கூறும்போது மாலி எங்கள் மதிப்புமிக்க உடைமை மற்றும் மணிலா மிருகக்காட்சி சாலையில் நட்சத்திர ஈர்ப்பாக இருந்தது. அவள் எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்ததால் அது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது என்றார்.

    • ரோபோடிக் முறையில் கணைய புற்றுநோய்க்கு இந்தியாவிலேயே முதல் முறையாக ஜிப்மரில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
    • சிறு துவாரங்கள் மூலம் ரோபோடிக் முறையில் ஆபரேஷன் செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் வயிற்று வலி காரணமாக 38 வயது பெண் அனுமதிக்கப்பட்டார். சி.டி.ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு கணைய புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.

    மேலும் அந்த புற்றுநோய் கல்லீரல் மற்றும் இரைப்பைக்கு ரத்தம் கொண்டு செல்லும் 'சீலியாக் ஆக்ஸிஸ்' எனப்படும் ரத்த நாளத்தை பாதித்து இருப்பது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து புற்று நோய் எதிர்ப்பு மருந்து கொடுக்கப்பட்டது. 3 சுற்று சிகிச்சைக்கு பிறகு அவருக்கு புற்றுநோய் அளவு குறைந்தது. இருந்தபோதிலும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட ரத்த நாளத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

    இதைத்தொடர்ந்து டாக்டர்கள் கணையம், மண்ணீரல் மற்றும் சீலியாக் ஆக்ஸிஸ் ரத்த நாளம் ஆகியவற்றை எடுக்கும் அறுவை சிகிச்சையை செய்ய முடிவு செய்தனர்.

    பொதுவாக இந்த அறுவை சிகிச்சை 25 முதல் 30 செ.மீ. அளவுக்கு வயிற்று பகுதி கிழிக்கப்பட்டு திறந்த முறையில் (ஓபன் சர்ஜரி) செய்யப்படும். ஆனால், ஜிப்மர் குடலியல் அறுவை சிகிச்சை தலைவர் டாக்டர் கலையரசன் மற்றும் டாக்டர் பிஜூ போட்டாக் கட் தலைமையிலான குழுவினர் கணைய புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சையை ரோபோடிக் முறையில் 10 மணி நேரம் மேற்கொண்டனர்.

    அதாவது, சிறு துவாரங்கள் மூலம் ரோபோடிக் முறையில் ஆபரேஷன் செய்தனர். சிகிச்சை முடிந்த 6-வது நாள் பெண் நோயாளி முழுவதுமாக குணமாகி வீடு திரும்பினார்.

    'ரோபோடிக்' அறுவை சிகிச்சையில் குடலியல் அறுவை சிகிச்சை துறை முன்னோடியாக திகழ்வதாகவும், இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை உலகில் சிலமருத்துவ மனைகளில் மட்டுமே செய்யப்படுவதாகவும் ஜிப்மர் இயக்குனர்ராகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

    ரோபோடிக் முறையில் கணைய புற்றுநோய்க்கு இந்தியாவிலேயே முதல் முறையாக ஜிப்மரில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், ரோபோடிக் முறையில் இதர புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சைகள் இதுவரை 1,400-க்கும் மேற்பட்டவை செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவ கண்காணிப்பாளர் துரைராஜன் கூறினார்.

    ×