search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுக்கிர பகவான்"

    • அதிகாலை நேரத்தில் கிழக்கு திசையில் அவர் ஒளியுடன் கீழ் வானத்தில் காட்சியளிப்பார்.
    • அதிகாலை நேரத்தில் கிழக்கில் உள்ள வெள்ளியை எதிர்த்து பிரயாணம் செய்யக்கூடாது என்பர்.

    நான்கு கரங்கள் உடையவர். அவற்றில் கமண்டலம், அட்சமாலையும், தண்டமும், தாங்கியவர்.

    இவருடைய வெள்ளித் தேரில் எட்டு குதிரைகள் பூட்டப்பெற்றுள்ளன.

    பத்து குதிரைகள் தேரை இழுப்பதாகவும் சில நூல்கள் கூறுகின்றன.

    இவர் மீன ராசியில் உச்சமடைகிறார்.

    ரிஷபம், துலாம் இவரது ஆட்சி வீடு.

    பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களுக்கு அதிபதி.

    தசை புத்திகளில் இவருக்குத்தான் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் உள்ளது.

    ஆங்கில எண்ணில் 6க்கு அதிபதி 6, 15, 24ந் தேதியில் பிறந்தவர்களுக்கு இவரே அதிபதி.

    சுக்கிரன் 'வெள்ளி' என்றும் குறிப்பிடப் படுகிறது.

    அதிகாலை நேரத்தில் கிழக்கு திசையில் அவர் ஒளியுடன் கீழ் வானத்தில் காட்சியளிப்பார்.

    அதிகாலை நேரத்தில் கிழக்கில் உள்ள வெள்ளியை எதிர்த்து பிரயாணம் செய்யக்கூடாது என்பர்.

    மேற்கில் சிறிதுதூரம் சென்று பின்னர் கிழக்கில் பயணிப்பதும் சிலர் வழக்கம்.

    கும்பகோணம் அருகே உள்ள கஞ்சனூரில் சுக்கிர பகவானுக்குரிய திருத்தலம் அமைந்துள்ளது. 

    ஓம் சுக்ராய நம!

    ஓம் ஸுசயே நம!

    ஓம் ஸுபகுணாய நம!

    ஓம் ஸுபலக்ஷணாய நம!

    ஓம் ஸோபநாக்ஷலீய நம!

    ஓம் காமபாலாய நம!

    ஓம் கவயே நம!

    ஓம் கல்யாண தாயகாய நம!

    ஓம் பத்ரமூர்த்தயே நம!

    ஓம் பரத்குணாய நம!

    ஓம் பார்க்கவாய நம!

    ஓம் பக்தபாலகாய நம!

    ஓம் போகதாய நம!

    ஓம் புவநாத்யக்ஷலீய நம!

    ஓம் புக்தி முக்திபலப்ரதாய நம!

    ஓம் சாருஸீலாய நம!

    ஓம் சாருரூபாய நம!

    ஓம் சாருசந்த்ரநிபாஸாய நம!

    ஓம் நிதயே நம!

    ஓம் நீகிலஸாஸ்த்ரக்ஞாய நம!

    ஓம் நீதிவித்யாதுரந்தராய நம!

    ஓம் ஸர்வலக்ஷணஸ்ப்பந்நாய நம!

    ஓம் ஸர்வார்த்தகுணவர்ஜிதாய நம!

    ஓம் ஸமாநாதிகநிர்முக்த்தாய நம!

    ஓம் ஸகலாகமபாரகாய நம!

    ஓம் ப்ருகுவே நம!

    ஓம் போகராய நம!

    ஓம் பூமஸுரபாலநதத்பராய நம!

    ஓம் ஸுப்ரரூபாய நம!

    ஓம் சுத்தஸ்படிகபாஸ்வராய நம!

    ஓம் தீநார் திஹாரகாய நம!

    ஓம் தைத்யகுருவே நம!

    ஓம் தேவாபிநந்திதாய நம!

    ஓம் காவ்யாஸக்தாய நம!

    ஓம் பவிபந்தவிமோசகாய நம!

    ஓம் கநாத்யாய நம!

    ஓம் கநாத்யக்ஷலீய நம!

    ஓம் கமபுக்ரீவாய நம!

    ஓம் காளாதராய நம!

    ஓம் ககருண்யரஸஸம்பூரணா நம!

    ஓம் கல்யாணகுணவர்தநாய நம!

    ஓம் ஸ்வேதாம்பராய நம!

    ஓம் ஸ்வேதவபுஷே நம!

    ஓம் சதுர்புஜஸமந்விதாய நம!

    ஓம் அக்ஷமாலாதராய நம!

    ஓம் அசிந்த்யாய நம!

    ஓம் அக்ஷீணகுணபாரஸுராய நம!

    ஓம் நக்ஷத்ரகணஸஞ்சாராய நம!

    ஓம் நவதாய நம!

    ஓம் நீதிமார்க்கதாய நம!

    ஓம் வர்ஷப்ரதாய நம!

    ஓம் ஹ்ருஷீகேஸாய நம!

    ஓம் கலேஸநாஸகராய நம!

    ஓம் நவயே நம!

    ஓம் சிந்திதார்த்தப்ரதாய நம!

    ஓம் ஸாந்திமதயே நம!

    ஓம் சித்தஸ்மாதிக்ருதே நம!

    ஓம் ஆதிவ்யாதிஹாராய நம!

    ஓம் மநஸ்விநே நம!

    ஓம் மாகாதாய நம!

    ஓம் மாத்யாய நம!

    ஓம் மஹாஸயாய நம!

    ஓம் பலிப்ரஸந்நாய நம!

    ஓம் அபதாய நம!

    ஓம் பலநே நம!

    ஓம் பலபராக்ரமாய நம!

    ஓம் பவபாஸபரித்யாதாய நம!

    ஓம் மந்தஹாஸாய நம!

    ஓம் பஹாஸுரராய நம!

    ஓம் முக்தாயலஸமாநாபாவ நம!

    ஓம் முக்திதாய நம!

    ஓம் முஸிந்துதாய நம!

    ஓம் ரத்ஸீஹாஸகாருடாய நம!

    ஓம் ரதஸ்தாய நம!

    ஓம் ரஜிப்ரபாய நம!

    ஓம் சூரியப்ராக்தேஸந்தராய நம!

    ஓம் ஸுரஸத்ருஸுஹருதே நம!

    ஓம் கவயே நம!

    ஓம் துலாவ்ரூஷபராஸீஸாய நம!

    ஓம் துர்தராய நம!

    ஓம் தர்மபாலதாய நம!

    ஓம் பாக்யதாய நம!

    ஓம் பூரிவிக்ரமாய நம!

    ஓம் புண்ணியதாயகாய நம!

    ஓம் புராணபுருஷாய நம!

    ஓம் புஜ்யாய நம!

    ஓம் புருஹூதாதிஸந்ஜதாய நம!

    ஓம் அஜேயாய நம!

    ஓம் விஜிதாராதயே நம!

    ஓம் விவதாபரணோஜ்ஜவலாய நம

    ஓம் குந்தபுஷ்பப்ரதீகாஸாய நம!

    ஓம் பவ்யதாரித்ராய நம!

    ஓம் பவபாசவிமோசாய நம!

    ஓம் கௌடதேஸேஸ்வராய நம!

    ஓம் கோப்த்ரே நம!

    ஓம் குணிநே நம!

    ஓம் ஜ்யேஷ்டநக்ஷத்ரஸ்வபூதாய நம!

    ஓம் ஜயேஷ்டாய நம!

    ஓம் ஸ்ரேஷ்டாய நம!

    ஓம் ஸுசிஸ்மிதாய நம!

    ஓம் அபவர்கபரதாய நம!

    ஓம் அநந்தாய நம!

    ஓம் ஸந்தாநபலதாயகாய நம!

    ஓம் ஸர்வைஸ்வர்யப்ரதாய நம!

    ஓம் ஸர்வகீர்வரணஸந்துதாய நம!

    • இதை கண்ட மகாபலி இவரால் இடையூறு வருவதால் தனது பவித்திரத்தை கெண்டியின் மூக்கினுள் செருகினார்.
    • அது சுக்கிரரின் ஒரு கண்ணில் குத்த அதனால் சுக்கிரன் ஒரு கண்ணை இழந்தார்.

    வயல்கள், அழகிய வீடுகள், அலங்கரிக்கப்பட்ட இடங்கள், படுக்கையறை போன்றவற்றில் வாசம் செய்பவர்.

    பால் உணர்ச்சியை தூண்டும் கிரகம். மழைக்கு காரகர்.

    மனித உடலில் கழுத்து, தொண்டை, மார்பு, இடுப்பு பக்கம் அசுத்த ரத்த குழாய்கள் ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்துகிறார்.

    சுக்கிரன் ஜாதகத்தில் அமையும் இடத்தை பொருத்து பால்வினை நோய்கள், சர்க்கரை வியாதி, கண்நோய், வீரியமின்மை, சிறுநீர் வழி வியாதிகள் உண்டாகிறது.

    ஒற்றை கண்ணை உடையவர்.

    மகாபலி சக்ரவர்த்தியிடம் திருமால் வாமனராக வந்து மூன்றடி மண் கேட்ட பொழுது சுக்ராச்சாரியார் அவ்வாறு கொடுக்க வேண்டாம் என்று தடுத்தார்.

    மகாபலி அவர் சொல்லைக்கேளாமல் நீர்வார்த்து மூன்றடி மண் கொடுக்க முற்படும்பொழுது நீர்வார்க்குன் கெண்டியின் மூக்கினுள் வண்டாக சுக்கிரர் உருவெடுத்து நீர் வராமல் அடைத்துக் கொண்டார்.

    இதை கண்ட மகாபலி இவரால் இடையூறு வருவதால் தனது பவித்திரத்தை கெண்டியின் மூக்கினுள் செருகினார்.

    அது சுக்கிரரின் ஒரு கண்ணில் குத்த அதனால் சுக்கிரன் ஒரு கண்ணை இழந்தார்.

    • நவக்கிரகங்களில் சுக்கிர பகவான் அசுரர்களின் குருவாக திகழ்கிறார்.
    • பிருகு முனிவருக்கும், புலோமிசை என்பவளுக்கும் மகனாகப் பிறந்தவர்.

    நவக்கிரகங்களில் சுக்கிர பகவான் அசுரர்களின் குருவாக திகழ்கிறார்.

    பிருகு முனிவருக்கும், புலோமிசை என்பவளுக்கும் மகனாகப் பிறந்தவர்.

    உச்சநிலை கிரகம், மூலக்கிரகம் என்றும் கூறப்படுவதுண்டு.

    நீர்க்கிரகம், பெண்கிரகம், வெண்மை நிறமுடையவராதலால் வெள்ளி என்ற பெயரும் உண்டு.

    அசுரர்களுக்கு குரு என்பதால் 'அசுரகுரு' என்ற பெயரும் உண்டு.

    தன்னை வழிபடுபவர்களுக்கு நன்மதிப்பையும், சுகபோகங்களையும், அதிர்ஷ்டத்தையும் அளிப்பவர்.

    இவர் கலா ரசிகர். அழகானவர், கலாவல்லவர், கவிஞர், சுக்ரநீதி என்ற நீதி சாஸ்திரத்தை எழுதியவர்.

    சுக்கிரனுக்குரிய நாள் வெள்ளிக்கிழமை.

    இது இரு கண்ணுடைய நாள். திசை கிழக்கு.

    ஒரு ராசியை கடக்க ஆகும் காலம் ஒரு மாதம்.

    ஒருவருடைய ஜாதகத்தில் மனைவியின் நிலை, இசை, நாட்டியம் போன்ற கலைகள், இன்பம் ஆகியவை சுக்கிரனை கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.

    இவர் வாகனகாரகன் என்றும் சொல்லப்படுகிறார்.

    வாகனங்கள் வைத்து ஆளக்கூடிய அம்சத்தை தருபவர். 

    • சுக்கிரக் கிரகம் களத்திரகாரகன் என்றழைக்கப்படும் கிரகம் ஆகும்.
    • ஒருவரது திருமண வாழ்வை நிர்ணயிக்கும் கிரகமாகச் சுக்கிரன் திகழ்கிறது.

    சுக்கிரக் கிரகம் களத்திரகாரகன் என்றழைக்கப்படும் கிரகம் ஆகும்.

    ஒருவரது திருமண வாழ்வை நிர்ணயிக்கும் கிரகமாகச் சுக்கிரன் திகழ்கிறது.

    சூரியனார்கோயிலில் சூரியனுக்கு வடக்கில் தெற்கு முகமாக நின்ற திருக்கோலத்தில் காணப்பெறும் சுக்கிர பகவான் வலது கையால் அபய முத்திரையினையும் இடது கையைத் துடையில் ஊன்றியவாறும் காட்சி அளிக்கின்றார்.

    சுக்கிர பகவானுக்கு அசுரகுரு, உஷனன், ஒள்ளியோன், கவி, காப்பியன், சல்லியன், சிதன், சுக்கிரன், சுங்கன், சைக்கியன், திங்கள், தைத்யமந்திரி, பளிங்கு, பார்க்கவன், பிரசுரன், பிருகு, புகர், புயல், மழைக்கோள் என்றும் வேறு பெயர்கள் உண்டு.

    ரிஷபம், துலாம் ராசிகளுக்கு அதிபதியான இவருக்குரிய அதிதேவதை இந்திராணி, வாகனம் முதலை, தானியம் மொச்சை, வெண்தாமரை, வெள்ளைநிற ஆடை, வைரம், மொச்சைப் பொடி அன்னம், அத்தி சமித்து, வெள்ளி, உலோகம் ஆகியன இவருக்கு உரியன ஆகும். 

    • நிவேதனமாக, சர்க்கரை சேர்ந்த பால் வைத்து வெள்ளிக்கிழமைகளில் சொல்ல ஆரம்பிக்கவேண்டும்.
    • தினமும் 16 முறைக்குக் குறையாமல் சொல்ல வேண்டும். 108 முறை சொல்வது உத்தமம்.

    மகாலட்சுமி மந்திரம்

    ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி

    ஆகச்ச ஆகச்ச,

    மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா

    மஹாலக்ஷ்மி மூல மந்திரம்

    ஓம் ஸ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி

    மஹாலக்ஷ்மி ஏஹ்யேஹி

    ஏஹ்யேஹி ஸர்வ

    ஸெளபாக்யம் மே தேஹி ஸ்வாஹா

    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம். கமலே

    கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத.

    ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்

    ஓம் மஹாலக்ஷ்ம்யை நம.

    பீஜ மந்திரத்துடன் கூடியவை இந்த மஹா மந்திரங்கள்.

    இதில் ஏதேனும் ஒரு மந்திரத்தை மனம் உருகி சொன்னால் சிறப்பான பலன் தரும் என்பது ஐதீகம்.

    இதனை சொல்லும் முன், மகாலட்சுமியின் படத்துக்கு பொட்டு வைத்து, பூ சூட்டி, நெய் தீபம் ஏற்றி குல தெய்வத்தை முதலில் வணங்கி அதன் பிறகே, மந்திரம் சொல்லி வழிபாட்டை ஆரம்பிக்க வேண்டும்.

    நிவேதனமாக, சர்க்கரை சேர்ந்த பால் வைத்து வெள்ளிக்கிழமைகளில் சொல்ல ஆரம்பிக்கவேண்டும்.

    தினமும் 16 முறைக்குக் குறையாமல் சொல்ல வேண்டும். 108 முறை சொல்வது உத்தமம்.

    இப்பூஜையின் நிறைவில் குழந்தைகளுக்கு இனிப்பு வகைகளில் ஏதேனும் ஒன்றை தந்து வருவது சிறப்பாகும்.

    வீட்டில் மகாலட்சுமி வசம் செய்யும் துளசியுடன் கூடிய மாடம் இருந்தால் இதேபோல் அதற்கு வெள்ளிக்கிழமையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது இன்னும் சற்று கூடுதல் பலன் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒருவன் வாழ்வில் அனைத்து வகையான இன்பங்களை அனுபவிக்க ஜாதகத்தில் சுக்கிர பகவான் உச்சமோ பெற்றிருக்க வேண்டும்
    • செல்வ வளம் பெற்று நலம் காண தினமும் காலை, மாலை இம்மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.

    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்

    கணபதயே வரவரத ஸர்வ ஜனம் மே

    வசமானய ஸ்வாஹா

    ஒருவர் தனது வாழ்வியலில் அனைத்து வகையான செல்வங்களையும் பெற்று உடல் நலத்துடன் வாழ்ந்து வந்தால் அவருக்கு "சுக்கிரத் திசை" என சிலர் கூற நாம் கேள்விப் பட்டிருப்போம்.

    ஒரு மனிதனின் வாழ்வில் அனைத்து வகையான இன்பங்களை அனுபவிக்க அவரது ஜாதகத்தில் சுக்கிர (கிரகம்) பகவான் ஆட்சியோ, உச்சமோ பெற்றிருக்க வேண்டும் என்பது ஐதீகம்.

    ஜாதகத்தில் அப்படிப்பட்ட நிலை இல்லாதவர்களும் செல்வ வளம் பெற்று நலம் காண தினமும் காலை, மாலை உச்சரிக்க வேண்டிய "ஸ்ரீ சுக்கிர பகவான் மற்றும் ஸ்ரீமகாலட்சுமியின் மூல மந்திரங்கள் வருமாறு:

    சுக்கிர பகவான் மந்திரம்

    "ஹிமிகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம் குரும்.

    ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம்"

    சுக்கிர மூர்த்தி சுபம் மிக ஈவாய்

    வக்கிரமின்றி வரம்மிகத் தருவாய்!

    வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே

    அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே!!

    சுக்ர காயத்ரீ மந்திரம்

    ஓம் அச்வ த்வஜாய வித்மஹே

    தநுர் ஹஸ்தாய தீமஹி

    தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்

    • ஒருநாள் ஹரதத்தரின் மனைவி, அரிசியை முற்றத்தில் வைத்து விட்டு அடுக்களையில் வேலையாக இருந்தாள்.
    • அப்போது அங்கு வந்த ஒரு நாய் அந்த அரிசியை உண்ணத் துவங்கியது.

    ஒருநாள் ஹரதத்தரின் மனைவி, அரிசியை முற்றத்தில் வைத்து விட்டு அடுக்களையில் வேலையாக இருந்தாள்.

    அப்போது அங்கு வந்த ஒரு நாய் அந்த அரிசியை உண்ணத் துவங்கியது.

    அதைக் கண்டு கோபம் கொண்ட கமலாட்சி, அந்த நாயை விரட்டுவதற்காக அரிவாள் மனையை அதன் மீது வீசி எறிந்தாள். நாயும் வெட்டுப்பட்டு இறந்தது.

    ஹரதத்தர் இறந்த அந்த நாய்க்கு விபூதி பூசி விட்டு அதன் காதில் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதினார்.

    அதனால் அந்த நாய் நற்கதி பெற்று விமானமேறி தேவலோகம் அடைந்தது.

    தனது தாயார் காளை மாட்டை கோலால் அடித்து விரட்டிய பாவத்தையும், மனைவியார் நாயைக் கொன்ற பாவத்தையும் தீர்ப்பதற்காக ஒரு ஸ்லோகம் எழுதத் தொடங்கினார்.

    பிராயச்சித்தம் என்ன வென்று விளங்காததால் இரண்டே வரிகள் எழுதித் தொடங்கப்பெற்ற ஸ்லோகத்தைப் பூர்த்தி செய்யாமல் காவிரிக்கு நீராடச் சென்றார்.

    வீட்டிற்குத் திரும்பியதும் தான் எழுதிய ஓலைச்சுவடியைக் கொண்டுவந்து பிரித்துப் பார்த்தால் அந்த ஸ்லோகத்தின் மீதி இரண்டு வரிகள் எழுதப்பட்டிருந்தன.

    பஞ்சட்சர ஜபம் செய்வதே பிராயச்சித்தம் என்ற பொருள் உடையவை அவ்வரிகள்.

    இதை யார் எழுதியது என்று மனைவியிடம் கேட்ட போது அதற்கு அவர், தாங்கள் தானே திரும்பி வந்து எழுதி வைத்து விட்டுக் காவிரிக்கு சென்றீர்கள்? என்றார்.

    தம் உருவில் வந்து எழுதியது அக்னீசுவரரே என்று ஹரதத்தருக்கு அப்போது தான் புலப்பட்டது.

    • வண்டிக்காரர் ஹரதத்தரிடம், பூபதி தங்களிடம் நாற்பது கோட்டை நெல்லைக் கொடுத்து வரச் சொல்லியிருந்தார்.
    • வரும் வழியில் ஆற்று வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட இருபது மூட்டைகள் போக மீதி இருப்பதே மிஞ்சின என்றார்.

    ஹரதத்தரின் தாயார் ஒரு சமயம் வீட்டு வாசலில் நெல்லை உலற வைத்திருந்த போது ஒரு காளை மாடு அங்கு வந்து அந்த நெல்லைச் சிறிது தின்றது.

    மிஞ்சியிருந்த நெல்லை அங்கு வந்த ஹரதத்தர் குவித்து வைத்து, அக்காளை மாடு உண்ணுமாறு உதவினார்.

    இதைப் பார்த்துக் கொண்டே வந்த ஹரதத்தரின் தாயார் நெல்லை மாடு தின்று விட்டதே என்று எண்ணி அதைக் கோலால் அடித்து விரட்டினாள்.

    அப்போது அங்கு வந்த ஹரதத்தர், " காளை மாடு ஈசுவரனின் வாகனம் அல்லவா? இப்படி வாயில்லா ஜீவனை அடிக் கலாமா? என்றார்.

    சிறுது நேரத்தில் அவர் வீட்டு வாயிலில் சிவலிங்க பூபதி கொடுத்து அனுப்பிய நெல் மூட்டைகள் வந்து இறங்கின.

    வண்டிக்காரர் ஹரதத்தரிடம், பூபதி தங்களிடம் நாற்பது கோட்டை நெல்லைக் கொடுத்து வரச் சொல்லியிருந்தார்.

    வரும் வழியில் ஆற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட இருபது மூட்டைகள் போக மீதி இருப்பதே மிஞ்சின என்றார்.

    அவர் விடைபெற்றுச் சென்ற பிறகு ஹரதத்தர், தாயாரிடம் அம்மா, நீ உலர்த்திய நெல்லில் பாதியைக் காளை தின்றது என்று அதை அடித்தாயல்லவா? நமக்கும் பாதி நெல்லே வந்து சேர்ந்தது என்றார்.

    • சுவாமி அப்போது அசரீரியாக, முன்பு உனக்குத் திருவடி தீட்சை தந்தோம்.
    • இப்போது குருவாகிய யாம் உண்ட சேஷத்தை உனக்குத் தந்தோம் என்று அருளினார்.

    ஹரதத்தரது மனைவி கமலாட்சி, அடுக்களையில் உணவு சமைத்து வைத்திருந்த போது ஒரு நாய் அங்கு புகுந்து அதில் ஒரு கவளத்தை உண்டது.

    புலையன் சொன்னது போல் காவிரி மணல் யாவும் சிவன் என்றால் நாயும் சிவன் தானே! அப்படியானால் நாய் உண்டதை சிவன் உண்டதாகக் கருதி அதனை பிரசாதமாக ஏற்று உண்பது தானே முறை எனக்கருதினார் ஹரதத்தர்.

    அப்போது அந்த நாய் சிவனாகக் காட்சி தந்து மறைந்ததை இருவரும் கண்டனர்.

    சுவாமி அப்போது அசரீரியாக, முன்பு உனக்குத் திருவடி தீட்சை தந்தோம்.

    இப்போது குருவாகிய யாம் உண்ட சேஷத்தை உனக்குத் தந்தோம் என்று அருளினார்.

    ஆனந்தக் கூத்தாடிய ஹரதத்தர் திருவருளை வியந்தவராக நாய் உண்ட சேஷத்தை உண்டு, வீட்டிலுள்ளோரையும் உண்ணச் செய்தார்.

    • கற்பூர ஆர்த்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சனிக்கிரஹ தோஷம் நீங்கும்.
    • சண்முக பிரியா ராகத்தில் கேது கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்தால் கேதுக்கிரகதோஷம் நீங்கும்.

    நவக்கிரக தோஷ பரிகாரங்கள்

    1. சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அபிஷேகம் செய்து சிவப்பு வஸ்த்திரம் சிவப்புமணி செந்தாமரையால் அலங்காரம் செய்து, சூரிய மந்திரங்களை ஓதி ,யாகத்தீயை எழுப்பி கோதுமை சர்க்கரைப் பொங்கல் படைத்து தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, சவுராட்டிர ராகத்தில் சூரிய கீர்த்தனைகளைப் பாடி பிராத்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சூரியக் கிரகதோஷம் நீங்கும்.

    2. சந்திர பகவானுக்குத் திங்கட்கிழமையில் அபிஷேகம் செய்வித்து வெள்ளை வஸ்த்திரம் முத்துமாலை வெள்ளலரி என்பவற்றால் அலங்காரம் செய்து சந்திர மந்திரங்களை ஓதி எருக்கஞ்சமித்தினால் யாகத் தீயை எழுப்பி பச்சரிசி, பாலண்மை, தயிரன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து, அர்ச்சனை செய்து, தூப தீய நைவேத்தியம் கொடுத்து, அசாவேரி ராகத்தில் சந்திர கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சந்திரக் கிரக தோஷம் நீங்கும்.

    3. அங்காரக பகவானுக்கு செவ்வாய்கிழமைகளில் அபிஷேகம் செய்துவித்து சிவப்பு வஸ்திரம் பவழம் சிவப்பு அலரி என்பவற்றால் அலங்காரம் செய்து அங்காரக மந்திரங்களை ஓதி கருங்காலி சமித்தினால் யாகத்தீயை எழுப்பித்த வரம் பருப்புப் பொடி அன்னத்தை ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, சுருட்டி ராகத்தில் அங்காரகக் கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் அங்காரக கிரக தோஷம் நீங்கும்.

    4. புதபகவானுக்குப் புதன்கிழமையில் அபிஷேகம் செய்வித்துப் பச்சை வஸ்திரம் மரகமணி வெண்தாமரை என்பவற்றால் அலங்காரம் செய்து, புதன் மந்திரங்களை ஓதி நாயுருதி சமித்தால் யாகத் தீயை எழுப்பிப் பாசிப்பயத்தம் பருப்புப்பொடி அன்னத்தை ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீய நைவேத்தியம் கொடுத்து, நாட்டக்குறிச்சி ராகத்தில் புதன் கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் புதக்கிரகதோஷம் நீங்கும்.

    5. குருபகவானுக்கு வியாழக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து மஞ்சள் நிற வஸ்திரம் புஷ்பராகமணி, வெண்முல்லை என்பவற்றால் அலங்காரம் செய்து குரு மந்திரங்களை ஓதி அரசஞ்சமித்தினால் யாகத்தீயை எழுப்பி கொத்து கடலைப் பொடி அன்னம் எலுமிச்சை பழ அன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீய நைவேத்தியம் கொடுத்து அடாணாராகத்தில் குரு கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் குருக்கிரக தோஷம் நீங்கும்.

    6. சுக்கிர பகவானுக்கு வெள்ளிக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து, வெள்ளை வஸ்த்திரம் வைரக்கல் வெண்தாமரை மலர் என்பவற்றால் அலங்காரம் செய்து சுக்கிர மந்திரங்களை ஓதி அத்தி சமித்தினால் யாகத்தீயை எழுப்பி மொச்சைப் பொடியன்னம் தயிரன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, பரசுராகத்தில் சுக்ர கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சுக்கிரக் கிரகதோஷம் நீங்கும்.

    7. சனிபகவானுக்கு சனிக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து, கருப்பு வஸ்த்திரம், நீலக்கல் நீலோற்பலம் (கருங்குவளை) என்பவற்றால் அலங்காரம் செய்து, சனிபவகானின் மந்திரங்களை ஓதி வன்னி சமித்தினால் யாகத்தீயை எழுப்பி, எள்ளுத்தானியம், எள்ளுப்பொடி அன்னம் என்பனவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து நல்ல எண்ணைத் தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, யதுகுல காம்போதி ராகத்தில் சனிபகவான் கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆர்த்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சனிக்கிரஹ தோஷம் நீங்கும்.

    8. ராகு பகவானுக்கு ஏதாவதொரு கிழமையில் அபிஷேகம் செய்வித்து, கருப்பு வஸ்திரம் கோமேதக மணி நீலமந்தாரை இலுப்பைப்பூ என்பவற்றால் அலங்காரம் செய்து ராகு மந்திரங்களை ஓதி அறுகம் புல்லால் யாகத்தீயை எழுப்பி உளுந்து தானியம் உளுத்தம் பருப்புப்பொடி அன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூபதீப நைவேத்தியம் கொடுத்து, ராகப்பிரியா ராகத்தில் கீர்த்தனைகளைப் பாடி பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் ராகுக் கிரகதோஷம் நீங்கும்.

    9. கேது பகவானுக்கு ஏதாவதொரு கிழமையில் செய்வித்து, பலவர்ண ஆடை வைடூர்ய மணி செவ்வல்லிமலர் என்பவற்றால் அலங்காரம் செய்து கேது மந்திரங்களை ஓதித் தருப்பையினால் யாகத்தீயை எழுப்பிப் கொள்ளுதானியய் கொள்ளுப்பொடி அன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்துச் சண்முக பிரியா ராகத்தில் கேது கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் கேதுக்கிரகதோஷம் நீங்கும். 

    ×