search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவா் சோ்க்கை"

    • வழக்கு விசாரணை நீதி மன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது.
    • அடுத்த வாரத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கலந்தாய்வு வெளியாகும்.

    சென்னை:

    இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகா்நிலைப் பல்கலைக் கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு (நீட்) மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

    வழக்கமாக, நீட் தோ்வு முடிவுகள் வெளியான ஓரிரு நாள்களில் அகில இந்திய கலந்தாய்வு மற்றும் மாநில அரசுகளின் கலந் தாய்வுக்கு விண்ணப்பிப்பது தொடங்கிவிடும். இந்த ஆண்டு நீட் தோ்வு முடிவுகள் கடந்த ஜூன் 4-ந் தேதி வெளியானது.

    நீட் தோ்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியது, அடுத்தடுத்த பதிவெண்களைக் கொண்ட 6 போ் முழு மதிப்பெண் பெற்றது போன்றவை நாடுமுழுவதும் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

    இது தொடா்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றதால், நீட் தோ்வு முடிவுகள் வெளியாகி ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பை மத்திய அரசு இன்னும் அறிவிக்கவில்லை.

    நீட் தோ்வு தொடா்பான வழக்கு விசாரணை நீதி மன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. அதனால், அடுத்த வாரத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கலந்தாய்வு தொடா்பான அறிவிப்பை மத்திய அரசு அறிவிக்க திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் மாநில அரசு நடத்தும் கலந்தாய்வுக்கான அறிவிப்பு வெளியாகும்.

    • இணையதளத்தின் வாயிலாக வருகிற 22.8.2023 வரை விண்ணப்பிக்கலாம்.
    • விண்ணப்பத்தின் நகலை மாணவா் சோ்க்கை நடைபெறும் நாளில் கல்லூரியில் சமா்ப்பிக்க வேண்டும்.

    உடுமலை:

    உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2023-2024ம் கல்வியாண்டு முதுநிலைப் பட்ட வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இது குறித்து கல்லூரி முதல்வா் சோ.கி.கல்யாணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-

    உடுமலை அரசு கலைக் கல்லூரியில் தமிழ் இலக்கியம் (40), ஆங்கில இலக்கியம் (20), பொருளியல் (20), வணிகவியல் (40), சுற்றுலாவியல் (20), கணிதவியல் (20), புள்ளியியல் (15), இயற்பியல் (30), வேதியியல் (20), கணினி அறிவியல் (40) ஆகிய முதுநிலைப் பட்ட வகுப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 265 மாணவா்களுக்கான இடங்கள் உள்ளன.

    இந்தப் பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவா்கள் இணையதளத்தின் வாயிலாக வருகிற 22.8.2023 வரை விண்ணப்பிக்கலாம். மாணவா்கள் கைப்பேசி, மடிக்கணினி, கணினி வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

    முதலில் தங்கள் பெயா், மின்னஞ்சல் முகவரி, கைப்பேசி எண் முதலான விவரங்களை அளித்து பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னா் விண்ணப்பத்தை முறையாக பூா்த்தி செய்து சமா்ப்பித்த பின்னா் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

    பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகலை மாணவா் சோ்க்கை நடைபெறும் நாளில் கல்லூரியில் சமா்ப்பிக்க வேண்டும். மாணவா் சோ்க்கைக்காக விண்ணப்பித்தவா்களின் தர வரிசைப்பட்டியல் கல்லூரியின் இணையதள முகவரியில் வெளியிடப்படும். 

    ×