என் மலர்
நீங்கள் தேடியது "இந்தோ சீனா எல்லை"
- 19-வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வி என காங்கிரஸ் விமர்சனம்
- சீனா இந்திய எல்லையை தாண்டவில்லை என்றால், பேச்சுவார்த்தை ஏன்?
இந்தியா- சீனா இடையில் எல்லைக் கட்டுப்பாடு கோடு (LAC) தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவியது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அப்போது இந்திய ராணுவ வீரர்கள் 30-க்கும் மேற்பட்டோர் வீரமரணம் அடைந்தனர். இதனால் போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. பின்னர், பேச்சுவார்த்தைக்குப்பின் பதற்றம் தணிந்தது.
இந்த சம்பவத்தின்போது சீன ராணுவம் இந்தியாவில் பல மைல் தூரம் நுழைந்து ஆக்கிரமித்ததாக தகவல் வெளியானது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், இந்தியாவின் நிலத்தை யாரும் ஆக்கிரமிக்க முடியாது என மோடி அரசு தெரிவித்தது.
எல்லைக் கட்டுப்பாடு கோடு தொடர்பாக இந்தியா- சீனா இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. என்றாலும், இந்தியப் பகுதியில் இருந்து சீனா வெளியேறவில்லை.
இந்த நிலையில்தான் கடந்த இரண்டு நாட்களாக இந்தியா- சீனா ராணுவ கமாண்டர்கள் அளவிலான 19-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது இந்திய எல்லை கட்டுப்பாடு கோட்டை தவிர்த்து மற்ற பிரச்சினைகளை தீர்க்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. ஆனால், சீனா ஆக்கிரமிப்பு செய்த பகுதியில் இருந்து வெளியேறுவது குறித்து எந்த முன்னேற்றமும் இல்லை. இருதரப்பு பேச்சுவார்தை நேர்மறையாக, ஆக்கப்பூர்வமாக, ஆழமானதாக அமைந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 19-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி. பாரத மாதாவை பாதுகாக்க சொல்லாட்சியை தாண்டி எப்போது முன்னோக்கி பயணிப்பீர்கள் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் சுர்ஜிவாலா கூறுகையில் ''கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில இருந்து தற்போது மூன்று வருடங்கள், மூன்று மாதங்கள் ஆகியும் முந்தைய நிலை திரும்பவில்லை. டெப்சாங் பகுதியில் இந்தியப் படைகள் 65 பாதுகாப்பு பாயிண்ட்களில் 26-ல் பாதுகாப்பை தொடர் முடியாது.
சீனா, இந்தியாவில் உள்ள ஒய் ஜங்சன் என அழைக்கப்படும் பாட்டல்நெக்கில் இந்திய ராணுவத்தை தடுக்கிறது. சீன ராணுவம் வெட்கமின்றி ஆக்கிரமித்த நமது பகுதியில் இருந்து, எப்போது வெளியேற்றப்படுவார்கள்?
2020 ஏப்ரல் மாதத்திற்கு முந்தைய நிலை எப்போது உருவாகும். அனைத்துக்கட்சி கூட்டத்தின்போது, இந்திய எல்லைக்குள் யாரும் நுழையவில்லை என்று மோடி கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 20-ந்தேதி தெரிவித்தாரே, அதே நிலையில் இருக்கிறாரா? அல்லது நாட்டை தவறாக வழி நடத்தினாரா?
சீனா இந்திய எல்லையை ஆக்கிரமிக்கவில்லை என்றால், ஏன் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறீர்கள். பாரத மாதாவை பாதுகாக்க சொல்லாட்சியை தாண்டி எப்போது முன்னோக்கி பயணிப்பீர்கள். எல்லையில் எப்போது முந்தைய நிலை திரும்பும்.
இவ்வாறு சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
- இந்தோ- சீனா எல்லையில் கட்டமைப்புகளை அதிகரித்து வருகிறது சீனா
- சாலைகள், ஹெலிபேடுகள் அமைத்துள்ளதாக பென்டகன் தகவல்
இந்தியா- சீனா இடையில் எல்லை கட்டுபாட்டுக் கோடு தொடர்பாக பிரச்சினை தொடர்ந்து இருந்த வண்ணம் உள்ளது. அவ்வப்போது சீனா இந்தியா எல்லைக்குள் ஊடுருவது உண்டு. பின்னர், இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததும் பின்வாங்கிவிடும்.
கடந்த 2020-ல் கல்வான் பள்ளத்தாக்கில் இதுபோன்ற சம்பவத்தின்போது இருநாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இதனால் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. அதன்பின் இந்தியா எல்லை அருகே பாதுகாப்பை அதிகரித்துள்ளது. என்றபோதிலும், சீனாவும் கட்டமைப்புகளை அதிகரித்து வருகிறது.
கடந்த ஆண்டு சாலைகள் அமைத்தல், இரு பயன்பாட்டுக்கான விமான நிலையம் அமைத்தல், பல்வேறு ஹெலிபேடுகள் அமைத்தல் போன்ற செயல்களில் சீனா ஈடுபட்டு வந்ததாக பென்டகன் தெரிவித்துள்ளது.
டோக்லாம், பாங்காங் லேக் போன்ற எல்லைப் பகுதியில் இந்த கட்டமைப்புகளை ஏற்படுத்தியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- லடாக் பகுதியில் இருதரப்பு ராணுவமும் அவர்களை பழைய இடத்திற்கு திரும்பி கொஞ்ச நாட்கள்தான் ஆகிறது.
- அதற்குள் லடாக் பகுதிகளை தங்களுடைய மாவட்டம் என சீனா அறிவித்துள்ளது.
கிழக்கு லடாக்கின் டெம்சோக் மற்றும் டெப்சாங் பகுதியில் இருந்து இருதரப்பு ராணுவமும் தங்களது இடத்திற்கு திரும்பியது. இந்த சம்பவம் நடைபெற்று ஓரிரு மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் லாடாக் பகுதிகளை இணைத்து ஹோடன் மாகாணத்தில் இரண்டு புதிய மாவட்டங்கள் பெயரை சீனா அறிவித்துள்ளது.
இந்த நிலையில் சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாது என இந்தியா தெரிவித்துள்ளது.
"இந்தியப் பிரதேசத்தில் சீனா சட்ட விரோதமாக ஆக்கிரமித்ததை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. சீனாவின் ஹோடன் மாகாணத்தில் இரண்டு புதிய மாவட்டங்களை நிறுவுவது தொடர்பான அறிவிப்பை நாம் பார்த்தோம்.
இந்த மாவட்டங்கள் என்று அழைக்கப்படும் பகுதிகளின் அதிகார வரம்பு இந்தியாவின் லடாக் யூனியன் பிரதேசத்தில் வருகிறது" என வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பிரம்மபுத்திரா ஆற்றில் உலகப் பெரிய அணை கட்ட இருப்பதாக சீனா அறிவித்துள்ளது. இது தொடர்பான இந்தியா தொடர்ந்து கண்காணித்து வருகிறத. நமது நலனை காக்கும் வகையில் தேவையைனா நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.