search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நூல் வெளியீடு"

    • கலைஞர் எனும் தாய் புத்தகத்தில் கட்டுரை தொகுப்பின் தலைப்புகளே புத்தக தலைப்புகள் போன்றுள்ளன.
    • இனம், மொழி, மாநில உரிமைகளுக்காக உழைப்பதே கலைஞருக்காக செலுத்தும் அஞ்சலி.

    தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' என்கிற புத்தக வெளியீடு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது.

    அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் .

    இந்த புத்தகத்தை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.

    இந்நிலையில், கலைஞர் எனும் தாய் நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு பின்னர் உரையாற்றினார்.

    அவர் உரையாற்றியதாவது:-

    கலைஞரின் தாய் தங்களை எப்படி பேணி வளர்த்தார் என சிவாஜி, எம்ஜிஆர் ஆகியோர் கூறுவார்கள். பலருக்கும் தாய் போலவே செயலாற்றிய கலைஞரை தாய் என விளிப்பது சாலப் பொருத்தம்.

    என் கண் அசைவை புரிந்து கொண்டு செயலாற்றுபவர் எ.வ.வேலு என கலைஞர் கூறுவார். இப்போது எனக்கும் அதே போன்ற செயல்மிக்க அமைச்சராக எ.வ.வேலு செயல்பட்டு வருகிறார். எத்தனை வேலை கொடுத்தாலும் சிறப்பாக செயல்படுத்தி முடிப்பவர் எ.வ.வேலு.

    தாய் "தாய் காவியத்தை தமிழ் வடிவில் தீட்டிய கலைஞருக்கு தமிழோவியம் தீட்டியிருக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு. எனக்கு தந்தை மட்டுமல்ல, தாயுமாகவும் இருந்தவர் கலைஞர். எனக்கு மட்டுமல்ல, லட்சோபலட்சம் பேருக்கு தாயாய், தந்தையாய் இருந்தவர் கலைஞர்.

    கலைஞர் எனும் தாய் புத்தகத்தில் கட்டுரை தொகுப்பின் தலைப்புகளே புத்தக தலைப்புகள் போன்றுள்ளன.

    புத்தகத்தில் இடம்பெற்றுள்ள வரலாற்று சம்பவங்களை படித்தபோது எனக்கு வியப்பாக இருந்தது. கலைஞரின் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய அனுபவங்கள் அனைத்தும் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

    கலைஞரின் வரலாறு மட்டுமல்ல, கழகத்தின் வரலாறும் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இனம், மொழி, மாநில உரிமைகளுக்காக உழைப்பதே கலைஞருக்காக செலுத்தும் அஞ்சலி.

    நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஜினிகாந்திற்கு நன்றி. என்னை விட வயதில் மூத்தவர் ரஜினி அவர் அறிவுரையை ஏற்கிறேன். பயப்பட வேண்டாம்.. நான் என்றும் கவனமாக இருப்பேன். நீங்கள் மனம் திறந்து பாராட்டியதற்கு நன்றி.

    ரஜினிகாந்த், என்.ராம் உள்ளிட்டோரும் கலைஞரின் உடன் பிறப்புகள் தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை கலைவாணர் அரங்கில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
    • 'கலைஞர் எனும் தாய்' எனும் புத்தகத்தை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.

    தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' என்கிற புத்தக வெளியீடு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது.

    அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் .

    இந்த புத்தகத்தை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.

    நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர், "எ.வ.வேலு என்றால் எதிலும் வல்லவர் மட்டுமல்ல, எழுத்திலும் வல்லவர்"என்றார்.

    தொடர்ந்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், " இந்த நூலை எழுத உந்து சக்தியாக இருந்தது கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி" என்றார்.

    புத்தகத்தை பெற்றுக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில், "

    முதலமைச்சரின் கையில் புத்தகத்தை பெற்றது பெருமை அளிக்கிறது. கலைஞர் எனும் தாய் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

    கருணாநிதி என்று கூறினால், சினிமா, இலக்கியம், அரசியல். கலைஞர் எனும் தாய் என்ற நூல் காவியமாக அமைந்துள்ளது.

    தமிழினத்திற்காக தொடர்ந்து போராடிய தலைவர் கருணாநிதி. முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரு ஆலமரம். கருணாநிதி மறைவுக்கு பிறகு, அவரது புகழ் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

    எந்த மாதிரியான விமர்சனங்களையும் ஆக்கப்பூர்வமாக கையாண்டவர் கலைஞர். தற்போது அலர் விமர்சனம் செய்கின்றனர். ஆனால், பிறர் மனதை நோகடிக்கும் வகையில் விமர்சனங்கள் உள்ளன. பிறர் | மனதை நோகடிக்கும் வகையில் விமர்சனங்கள் கூடாது.

    பேச்சு, செயலில் தனக்கான பாணியை உருவாக்கியவர் அமைச்சர் உதயநிதி. அறிவார்ந்தவர்கள் சபையில் பேசாமல் இருப்பது தான் நல்லது. ஆனால் தற்போது பேசி தான் ஆக வேண்டும்.

    கலைஞர் நூற்றாண்டு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. உலகில் எந்த தலைவருக்கும் இவ்வளவு சிறப்பாக விழா கொண்டாடியது கிடையாது.

    எதை பேச வேண்டும் என்பதைவிட, எதை பேசக் கூடாது என்பது முக்கியமானது. முதலமைச்சர் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் மிகப் பெரிய வெற்றி.

    ஒரு கட்சியை கட்டி காப்பது என்பது மிக கடினம். அதை சிறப்பாக செய்கிறார் முதலமைச்சர். பள்ளியில் புதிய மாணவர்களை விட, பழைய மாணவர்களை சமாளிப்பது கடினம்.

    திமுகவில் பழைய தலைவர்களை சிறப்பாக சமாளித்து விருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். படப்பிடிப்பிற்காக திருவண்ணாமலை சென்ற என்னை சிறப்பாக கவனித்தார் எ.வ.வேலு.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்தியா மற்றும் உலக நாடுகளில் 150-க்கும் மேற்பட்ட திருவள்ளுவர் சிலையினை நிறுவி தமிழுக்கு பெருமைச் சேர்த்து வருகிறோம் என்றார்.
    • நூலின் முதல் பிரதியை ரோமா குழும இயக்குநா் ஆர்.வி.எம்.ஏ. ராஜன் பெற்றுக் கொண்டார்.

    சென்னை:

    வி.ஜி.பி. குழுமத் தலைவரும், வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனரு மான டாக்டர் வி.ஜி சந்தோசத்தின் 87 -வது பிறந்த நாள் விழாவில் திராவி டர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கி, டாக்டர் வி.ஜி. சந்தோசம் எழு திய "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்னும் நூலினை வெளியிட்டு பேசுகையில், வி.ஜி.சந்தோசம் பிறந்த நாள் விழாவில் அவரை வாழ்த்துவதற்காக பல்வேறு நாடுகளிலிருந்து வருகை புரிந்து சிறப்பித்தது யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற நூலிற்கு பொருத்தமானது. வி.ஜி.சந்தோசம் உலகெங்கிலும் திரு வள்ளுவர் சிலையை நிறுவி, தமிழா்களுக்கு பெருமை சேர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது என்றார். நூலின் முதல் பிரதியை ரோமா குழும இயக்குநா் ஆர்.வி.எம்.ஏ. ராஜன் பெற்றுக் கொண்டார்.

    மூன்று தமிழறிஞர்களுக்கு வி.ஜி.பி. இலக்கிய விருதினையும், பொற்கிழியையும் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் வழங்கி வாழ்த்தி பேசினார். ம.தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும் மல்லை தமிழ்ச் சங்கத் தலைவருமான மல்லை சி.ஏ.சத்யா, செய்யூா் சட்ட மன்ற உறுப்பினா் பனையூர் பாபு இணைந்து ஆதரவற்றோருக்கு தையல் இயந்திரத்தை வழங்கினார்கள். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் அருட்தந்தை ஆரோக்கியராஜ், தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின் தலைவர் ஏ.எம். விக்கிரம ராஜா, சென்னை வளர்ச்சிக் கழகத் தலைவர் வி.ஆா்.எஸ் சம்பத், பிலிப்பைன்ஸ் கிங்க்ஸ் மருத்துவ நிறுவனத்தின் தலைவர் டேவிட் பிள்ளை வாழ்த்திப்பேசி னார்கள். வி.ஜி.சந்தோசம் பிறந்த நாள் கேக் வெட்டி ஏற்புரை ஆற்றுகையில் நாம் அனை வரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் பின்பு தொழில் செய்து தொண்டு செய்ய வேண்டும். தொடர்ந்து வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் சார்பாக, இந்தியா மற்றும் உலக நாடுகளில் 150-க்கும் மேற்பட்ட திருவள்ளுவர் சிலையினை நிறுவி தமிழுக்கு பெருமைச் சேர்த்து வருகிறோம் என்றார்.

    இவ்விழாவில் இலங்கை, அமெரிக்கா, தைவான், மலேசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்தும் தமிழ்நாட்டில் இருந்தும் பல்வேறு தமிழறிஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வரவேற்புரையை வி.ஜி.பி. நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் வி.ஜி.பி. ரவிதாசும், நன்றியுரையை வி.ஜி.பி. முதன்மை இயக்குநர் வி.ஜி.பி .ராஜா தாசும் வழங்கினர்.

    ×