search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவு முறை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சாப்பிடும்போது மெதுவாக சாப்பிட வேண்டும்.
    • ஆலிவ் எண்ணெய், நட்ஸ், விதைகள் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் செரிமானத்தை மேம்படுத்தும்.

    ஏப்பம் என்பது நமது உடலில் உள்ள வாயுக்கள் வாய் வழியாக வெளியேறும் நிகழ்வாகும். இது சாதாரணமானது என்றாலும், அடிக்கடி ஏப்பம் உண்டாவது பிரச்சனையாக மாறிவிடும்

    சாப்பிடும்போது மெதுவாக சாப்பிட வேண்டும். வேகமாக சாப்பிடும்போது அதிக காற்று உள்ளே சென்று விடுகிறது. இது ஏப்பத்தை உண்டாக்கும்.

    அடிக்கடி கொழுப்பு நிறந்த உணவுகளான எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்களை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதும் ஏப்பத்தை ஏற்படுத்துகிறது.

    சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பதால், உடலில் உணவுக்கான இடத்தை காற்று நிரப்பிவிடுகிறது. இதனாலும் ஏப்பம் அடிக்கடி வரும்.

    உணவை நன்றாக மென்று சாப்பிடுவதால் செரிமானம் எளிதாகும். இதனால் ஏப்பம் வருவது குறையும்.

    ஆலிவ் எண்ணெய், நட்ஸ், விதைகள் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் செரிமானத்தை மேம்படுத்தும்.

    அதிகப்படியான ஏப்பம் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருந்தால், வயிற்றில் புண் இருக்கிறது என்று அர்த்தம். இதனால் கடுமையான வயிற்று வலியும் உண்டாகும்.

    நீண்ட நாட்களாக மன அழுத்தம், தூக்கமின்மை, சோகமாகவே இருப்பது, மன இறுக்கம் போன்ற பிரச்சனைகளும் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். செரிமான பிரச்சனைகளால் ஏப்பம் அடிக்கடி வரும். எனவே மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    அடிக்கடி ஏப்பம் வருவதுடன், வயிற்று வலி, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்ற மற்ற அறிகுறிகளும், ஏப்பம் வருவது அன்றாட வாழ்க்கை முறையில் பாதிப்பை ஏற்படுத்தினால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

    • ஆண்கள் இரவில் கால்களில் கூச்ச உணர்வு இருந்தால் வைட்டமின் பி12 சரிபார்ப்பது நல்லது.
    • வைட்டமின் பி12 குறைபாடு பரிசோதனை எடுத்து கொள்வது அபாயம் அதிகரிக்காமல் தடுக்க உதவும்.

    வைட்டமின் பி12 என்பது சையனோகோபாலமின் என்று அழைக்கப்படுகிறது. இது இரத்த சிவப்பணுக்கள் மற்றும் டிஎன்ஏ - உருவாக்குவதில் நரம்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் என பலவற்றிலும் முக்கியத்துவம் பெறுகிறது. உடல் செயல்பாடுகளுக்கு அவசியமான ஊட்டச்சத்து இது. வைட்டமின் பி12 உணவில் இருந்து பெறலாம் என்றாலும் போதுமான ஊட்டச்சத்தை பெற முடியாத போது இது இரத்த சோகை , சோர்வு, நரம்பியல் சிக்கல்கள் உண்டு செய்யும். உடல் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் பி12 மிகவும் அவசியம். வைட்டமின் பி12 குறைபாடு இருக்கும் போது ஆண்களுக்கு தென்படக்கூடிய அறிகுறிகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

    ஆண்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு இருக்கும் போது கால்களில் கூச்ச உணர்வு இருக்கும். பரேஸ்டீசியா என்று அழைக்கப்படும் இந்த நிலை வைட்டமின் பி12 இல்லாததால் உண்டாகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இவை அதிகமாக இருக்கும். ஆண்கள் இரவில் கால்களில் கூச்ச உணர்வு இருந்தால் வைட்டமின் பி12 சரிபார்ப்பது நல்லது.

    ஆண்கள் கால்களில் உணர்வின்மை அல்லது அசாதாரண உணர்வு என்பது அசெளகரியமானது. வைட்டமின் பி12 குறையும் போது இரவு நேரத்தில் கால்கள் உணர்ச்சியற்றதாக இருக்கலாம். இந்நிலையில் பி12 அளவை சரிபார்க்க வேண்டியிருக்கும். பெரும்பாலும் நீரிழிவு நோயுடன் இதை தொடர்பு படுத்தி பார்ப்ப்பார்கள். ஆனால் வைட்டமின் பி12 குறைபாடும் கால்களில் உணர்வின்மை ஏற்படுத்தும்.


    நடப்பதில் சிரமம் அல்லது மாலை அல்லது இரவு நேரங்களில் இதன் தாக்கம் அதிகம் இருந்தால் அதற்கு காரணம் வைட்டமின் பி12 குறைபாடாகவும் இருக்கலாம். கால் வலி பொதுவாக வைட்டமின் குறைபாடுடன் தொடர்பு படுத்தி பார்க்கமாட்டார்கள். ஆனால் இந்நிலை மோசமான வைட்டமின் பி 12 குறைபாடாக இருக்கலாம்.

    பலவீனமான பாதங்கள் குறிப்பாக இரவு நேரங்களில் பாதங்கள், கால்கள் பலவீனமாக இருந்தால் உடலில் வைட்டமின் பி12 போதுமான அளவு இல்லாமல் இருக்கலாம். இந்நிலையில் தசை பலவீனம் உடலை சமநிலைப்படுத்தும் வழியில் முழு உடல் ஒருங்கிணைப்பையும் கீழ் உடலில் கால்களிலும் பாதங்களிலும் செலுத்துவதால் இவை ஒட்டுமொத்த வலிமையை பாதிக்கலாம். இதனால் கால் மற்றும் பாதங்களில் வலி அதிகமாக இருக்கும்.

    வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் அது உடலின் சமநிலையை பராமரிப்பதில் சிரமமாக இருக்கும். 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் எனில் வைட்டமின் பி12 குறைபாடு இருக்கும் போது நிற்கும் போது அல்லது நடக்கும் போது சமநிலையை வைத்திருப்பது கடினமாக இருக்கும். இதனால் காயங்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

    மேற்கண்ட அறிகுறிகள் இரவில் அதிகரிக்கும் போது வைட்டமின் பி12 குறைபாடு பரிசோதனை எடுத்து கொள்வது அபாயம் அதிகரிக்காமல் தடுக்க உதவும்.

    வைட்டமின் பி12 நிறைந்த உணவுகள்

    • அசைவ உணவுகளில் விலங்குகளில் ஈரல் மற்றும் சிறுநீரகம்

    • கடல் உணவுகள் - சால்மன், டுனா மீன்

    • முட்டை, பால், தயிர், சீஸ்


    • வாழைப்பழம்

    • பெர்ரி பழங்கள்

    • தானியங்கள்

    • கீரைகள் போன்றவற்றை சேர்க்கலாம்.

    தினசரி அளவில் ஆண்கள் 9-13 வயது பிள்ளைகளுக்கு 1.8 mcg 14-18 வயது ஆண் பிள்ளைகளுக்கு -2.4 mcg மற்றும் 19 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 2.4 mcg அளவும் தேவை.

    • சிறுநீரக செயலிழப்பு சிறுநீரகங்களுக்கு இடையில் பலவீனமான செயல்பாட்டை ஏற்படுத்துகிறது.
    • சில நேரங்களில் உணவு நோயாளிக்கு போதுமான தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை வழங்காது.

    சரியான சிறுநீரக உணவுக்கு டயாலிசிஸ் நோயாளியின் திரவ உட்கொள்ளல் மிகவும் கவனமாக கண்காணிக்கப்பட வேண்டும். உடலில் அதிக அளவு திரவங்கள் எடை அதிகரிப்பு அல்லது வீக்கத்தை ஏற்படுத்தும். நுரையீரலில் அதிகப்படியான திரவம் குவிந்தால், நோயாளி சுவாசிப்பதில் சிக்கல்களை எதிர்கொள்வார் மற்றும் பிற இதய பிரச்சினைகள் மற்றும் இரத்த அழுத்தத்தில் ஏற்ற இறக்கங்களுக்கு வழிவகுக்கும்.

    டயாலிசிஸ் சிறுநீரகத்தின் போது கூடுதல் திரவங்கள் அகற்றப்பட்டாலும், ஒரு நேரத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே பாதுகாப்பாக அகற்றப்படும். திரவங்களின் அளவு அதிகமாக இருந்தால், டயாலிசிஸ் நோயாளிக்கு உடல்நிலை சரியில்லாமல் அல்லது தலைச்சுற்றலை ஏற்படுத்தும் மற்றும் இரத்த அழுத்தத்தில் திடீர் வீழ்ச்சியும் பின்விளைவுகளில் ஒன்றாக இருக்கும்.

    ஒரு நோயாளியின் திரவ உட்கொள்ளலைக் கண்காணிக்கும் போது, அறை வெப்பநிலையில் திரவமாக இருக்கும் பொருள் திரவமாக மட்டும் கணக்கிடப்படுவதில்லை, ஆனால் எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு போன்ற சில காய்கறிகள் மற்றும் பழங்களில் திரவம் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மற்றும் அவற்றின் செய்முறையில் திரவத்தை உள்ளடக்கிய உணவுப் பொருட்களும் திரவ நுகர்வில் சேர்க்கப்படும்.


    டயாலிசிஸின் பக்க விளைவுகளில் ஒன்று, செயல்முறையின் போது ஒரு குறிப்பிட்ட அளவு புரதம் இழக்கப்படுகிறது. எனவே, இழப்பை ஈடுசெய்ய அதிக புரத உட்கொள்ளல் அவசியம். உடலில் புரதச் சத்து குறைவதால் உடல் எடை குறைவதோடு, கிருமிகள் மற்றும் தொற்றுநோய்களுக்கு எதிராக போராடும் உடலின் திறனையும் குறைக்கலாம்.

    உயர்தர புரதப் பொருட்களில் சில... கோழிப் பொருட்கள், மீன், இறைச்சி மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு.

    டயாலிசிஸ் நோயாளிக்கு குறைந்த உப்பு நுகர்வு எப்போதும் ஆரோக்கியமான தேர்வாகும், ஏனெனில் உப்பு உட்கொள்வது ஒரு நபருக்கு தாகத்தை உண்டாக்கும் மற்றும் இறுதியில் அதிகப்படியான திரவ நுகர்வுக்கு வழிவகுக்கும்.

    சோடியம் உட்கொள்வதைக் கட்டுப்படுத்த, சமைக்கும் போது முழு மசாலா மற்றும் புதிய மூலிகைகள் பயன்படுத்த வேண்டும் மற்றும் பதிவு செய்யப்பட்ட உணவு, பாட்டில் கோழி சாறு மற்றும் அதிக அளவு சோடியம் கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவு, அதாவது ஒவ்வொரு சேவையிலும் 250 கிராமுக்கு மேல்.

    சமைக்கும் போது குறைந்த அளவு உப்பைப் பயன்படுத்த வேண்டும் அல்லது எதுவும் பயன்படுத்தக்கூடாது. உணவுக்கு ஒரு சுவையை கொடுக்க, சுண்ணாம்பு மற்றும் வினிகர் சிறந்த விருப்பங்கள்.

    பருப்பு, கோகோ பானங்கள், கோலா பானங்கள், பீர், பீன்ஸ் மற்றும் நட்ஸ் போன்ற பாஸ்பரஸ் உள்ள உணவுப் பொருட்களை அதிகமாக உட்கொள்வது டயாலிசிஸ் நோயாளியின் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். டயாலிசிஸ் உடலில் இருந்து பாஸ்பரஸை அகற்றாது, இது இறுதியில் இரத்தத்தில் சேருகிறது, இதன் விளைவாக எலும்புகள் கால்சியத்தை வெளியிடத் தொடங்குகின்றன, இதன் விளைவாக எலும்புகள் பலவீனமாகவும் உடையக்கூடியதாகவும் மாறும். எனவே, இரத்தத்தில் உள்ள இந்த பாஸ்பரஸ் இதயம், மூட்டுகள், இரத்தம் மற்றும் தசைகளில் கால்சியம்-பாஸ்பரஸ் படிகங்களை உருவாக்குகிறது, இது நிலையான வலி, இரத்த ஓட்டத்தில் சிக்கல்கள், கண்ணில் எரிச்சல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

    நோயாளிகள் உண்ணும் உணவில் இருந்து பாஸ்பரஸ் உறிஞ்சப்படுவதை கட்டுப்படுத்துவதன் மூலம் இரத்தத்தில் பாஸ்பேட் அளவைக் கட்டுப்படுத்த பாஸ்பேட் பைண்டர்களை உட்கொள்ள வேண்டும். சிறுநீரக நிபுணர் நோயாளியின் உடல்நிலைக்கு ஏற்ப பாஸ்பேட் பைண்டர் மருந்துகளை பரிந்துரைக்கிறார்.


    டயாலிசிஸ் சிகிச்சை பெற்றவர்கள் தக்காளி, உருளைக்கிழங்கு, வாழைப்பழம் மற்றும் பன்றி இறைச்சி போன்ற அதிக பொட்டாசியம் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிடக்கூடாது. சிறுநீரக செயலிழப்பு சிறுநீரகங்களுக்கு இடையில் பலவீனமான செயல்பாட்டை ஏற்படுத்துகிறது, இது இரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவை உயர்த்துகிறது.

    இரத்தத்தில் அதிக அளவு பொட்டாசியம் தசைகளை வலுவிழக்கச் செய்யலாம் மற்றும் அசாதாரண இதயத் துடிப்பை ஏற்படுத்தும், இது தீவிர நிகழ்வுகளில் இதய செயலிழப்புக்கு வழிவகுக்கும்.

    சில நேரங்களில் உணவு நோயாளிக்கு போதுமான தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை வழங்காது. இதனால் அவர்கள் ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்ஸ் மூலம் தேவையான அளவு தாதுக்கள் மற்றும் வைட்டமின்களைப் பெற முடியும், ஆனால் அந்தந்த சுகாதார நிபுணரின் பரிந்துரையின் கீழ் மட்டுமே.

    • ஊட்டச்சத்துள்ள உணவு ஊட்டச்சத்து இல்லாத துரித, பொருந்தா உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
    • இரவு தூக்கத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் ஒரு தம்ளர் பால் அருந்தலாம்.

    தூக்கம் என்பது மனிதனின் அன்றாட அவசியத் தேவை. நாள் ஒன்றுக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம் என்கின்றனர் நிபுணர்கள். நாள் முழுவதும் ஓடிய உடலுக்கு கண்டிப்பாக ஓய்வு தேவை. உடல் உறுப்புக்கள் சீராக இயங்கவும்

    சுறுசுறுப்பாக இருக்கவும் நல்ல ஆழ்ந்த தூக்கம் வேண்டும்.

    சிலர் படுத்தவுடன் தூங்கிவிடுவதெல்லாம் உண்மையில் வரம்தான். சிலர் நாள் முழுவதும் உழைத்துத் களைத்துத் வந்தாலும் தூக்கம் வராது. தூங்காமல் இருப்பது உடலின் பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

    இரவு தூக்கம் வராதவர்கள், மருத்துவ நிபுணர்கள் கூறும் கீழ்குறிப்பிட்ட சில வழிகளை முயற்சி செய்து பார்க்கலாம்.

    ஊட்டச்சத்துள்ள உணவு ஊட்டச்சத்து இல்லாத துரித, பொருந்தா உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக இரவு நேரங்களில் அதிக செரிமானம் கொண்ட உணவுகளை சாப்பிடக்கூடாது. பழங்கள், காய்கறிகளை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை உண்பது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

    குறிப்பாக தூக்கத்திற்கான மெலடோனின் சுரப்பை அதிகப்படுத்தும் சிக்கன், முட்டை, கடல் உணவுகள் என புரதம் அதிகமுள்ள உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

    பாஸ்தா, ரொட்டிட் , அரிசி, உருளைக்கிழங்கு போன்ற உணவுகளை அளவாக எடுத்து கொள்ள வேண்டும்.

    சிலருக்கு இரவு சாப்பிடாவிட்டால் தூக்கம் வராது என்று கூறுவார்கள். இரவு சாப்பிடாமல் படுப்பது சரியல்லதான். குறைந்த அளவு உணவு எடுத்து கொள்ள வேண்டும். ஆனால், சிலர் பசி காரணமாக நள்ளிரவில் எழுந்து சாப்பிடும் பழக்கம் இருக்கும். இது முற்றிலும் தவறு. அதிலும் குறிப்பாக நொறுக்குத் தீனிகளை நள்ளிரவு சாப்பிடக்கூடாது. நள்ளிரவு பசியைக் கட்டுபடுத்த முடியவில்லை என்றால் ஒரு பழம் சாப்பிடலாம். மாறாக, அரிசி உணவுகள், ஸ்நாக்ஸ் சாப்பிடுவது உடல் இயக்கத்தை சீர்குர் லைக்கும். இது தூக்கத்தையும் கெடுக்கும்.

    சிலர் இரவு உறங்கச் செல்வதற்கு முன்னர்தான் சாப்பிடுவார்கள். இது செரிமானத்தில் கோளாறை ஏற்படுத்துவதுடன் உடல் பிரச்னைகளை உண்டுபண்ணும். இரவு தூங்கச் செல்வதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னதாகவே சாப்பிட்டு விட வேண்டும். உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதுபோல இரவில் வயிற்றை முழுவதும் நிரப்பக்கூடாது.

    பகல் நேர உணவு அளவில் பாதி சாப்பிடலாம். எளிதாக செரிமானம் அடையும் உணவுகளை சாப்பிடுங்கள். நல்ல தூக்கம் கிடைக்கும்.


    டிரிப்டோபன், மெலடோனின் இந்த இரண்டும் பாலில் உள்ள மூலக்கூறுகள். மூளை வெளியிடும் மெ லடோனின், தூக்க ஹார்மோர் என்றும் அழைக்கப்படுகிறது. இது சர்க்காடியன் தாளத்தை ஒழுங்குபடுத்த உதவுகிறது, உடலை தூக்கத்திற்கு தயார்படுத்துகிறது. டிரிப்டோபன், மெலடோனின் இரண்டும் நல்ல தூக்கத்திற்கு உதவும். இவை இரண்டும் பாலில் இருப்பதால் இரவு தூக்கத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் ஒரு தம்ளர் பால் அருந்தலாம்.

    பாதாம், அக்ரூட் பருப்புகள், பிஸ்தா, முந்திரி ஆகியவை தூக்கத்திற்கு உதவும் உணவுகள். இவற்றில் மெலடோனின், மெக்னீசியம், துத்தநாகம் உள்ளிட்டவை இருக்கின்றன. இவை தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இரவு உணவிற்கு முன் இந்த உணவுகளை சாப்பிட்டால் நல்ல தூக்கம் கிடைக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

    • உடம்பில் எனர்ஜி இல்லாமல், உடற்பயிற்சிகளைச் செய்யக் கூடாது.
    • கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை முழுமையாக தவிர்த்துவிட வேண்டும்.

    'எக்சர்சைஸ் செஞ்சுட்டு வந்தவுடனே, சர்க்கரைப் பொருள்கள், கேக், ஜூஸ் போன்றவற்றை உட்கொண்டால், செய்த உடற்பயிற்சிக்கான பலன் கிடைக்காது' என ஒரு கருத்து இருக்கிறது. `இது உண்மைதான்' என்கிறது மருத்துவம். தவிர்க்கவேண்டிய பொருள்களின் பட்டியலில், சர்க்கரையைப்போலவே வேறு சில உணவுப் பொருள்களும் இருக்கின்றன. அந்த வகையில், உடற்பயிற்சிக்கு முன்னரும் பின்னரும் சாப்பிடக் கூடாதவை, சாப்பிடவேண்டியவை, எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும், உணவுக்கும் உடற்பயிற்சிக்குமான இடைவெளி எவ்வளவு நேரம் இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

    ``வீட்டிலேயே உடற்பயிற்சி செய்பவர்கள், ஜிம்முக்குப் போய் பயிற்சி செய்பவர்கள் என இரண்டு வகையினர் இருக்கிறார்கள். வீட்டிலேயே பயிற்சி மேற்கொள்கிறவர்களில் சிலர், சாப்பிட்டவுடனேயே உடற்பயிற்சியை ஆரம்பித்துவிடுவார்கள். ஜிம்மில் வொர்க்-அவுட் செய்பவர்கள் சிலர் காலை எழுந்ததுமே ஜிம்முக்குக் கிளம்பிவிடுவார்கள். இவர்களெல்லாம் உடற்பயிற்சிக்கு முன்னர் சாப்பிடவேண்டிய உணவில் அக்கறை காட்டுவதில்லை. உடம்பில் எனர்ஜி இல்லாமல், உடற்பயிற்சிகளைச் செய்யக் கூடாது. உண்மையில் தசை, தொடை போன்ற பகுதிகளுக்கான பயிற்சி செய்பவர்களிலிருந்து, மன அமைதிக்காக மெடிடேஷன் செய்பவர்கள் வரை அனைவருக்கும் அவரவர் செய்யும் பயிற்சிக்கேற்ப எனர்ஜி தேவை.

    உடற்பயிற்சிக்கு முன்னர்...

    சாப்பிடும் உணவுகள், ரத்த சர்க்கரை அளவை கணிசமாக உயர்த்துவதாக இருக்க வேண்டும். காரணம், ரத்த சர்க்கரை அளவு அதிகமாகும்போது அடுத்த சில மணி நேரங்களுக்கு உடல் எனர்ஜெட்டிக்காக இருக்கும். அந்த வகையில், வொர்க்-அவுட் செய்வதற்கு முன்னர் சாப்பிடவேண்டிய உணவுகளின் பட்டியல் இங்கே...

    * ஆப்பிள்

    * ஆரஞ்சு

    * பேரிக்காய்

    * பப்பாளி

    * பீனட் பட்டர் தடவிய முழு தானிய ரொட்டி

    * ஓட்ஸ்

    * தயிர்

    *கிரீன் டீ

    * நட்ஸ்.

    உடற்பயிற்சிக்குப் பின்னர்...

    உடற்பயிற்சி செய்யும்போது, உடலிலிருக்கும் சக்தி அனைத்தும் பயன்படுத்தப்பட்டிருக்கும். எனவே, உடற்பயிற்சிக்குப் பின்னர் உட்கொள்ளும் உணவுகள் அனைத்தும் எளிதில் விழுங்கக்கூடிய, அதிகம் மென்று சாப்பிட அவசியமில்லாத உணவுகளாக இருக்க வேண்டும். பொதுவாக, உடற்பயிற்சி செய்து முடித்ததும் பலரும் எனர்ஜிக்காக எலெக்ட்ரோலைட்ஸ், புரோட்டீன் டிரிங்ஸ் போன்றவற்றை உட்கொள்வார்கள். அவர்கள், அவற்றுக்குப் பதிலாக

    * தண்ணீர்

    * இளநீர்

    * வாழைப்பழம் போன்றவற்றை உட்கொள்ளலாம்.

    * வொர்க்-அவுட் செய்யும்போது, உடலிலிருக்கும் அமினோ அமிலம் அனைத்தும் நீங்கிவிடும் என்பதால், அமினோ அமிலம் அதிகமிருக்கும் உணவுகளை உட்கொள்ளலாம். தசைக்கான வலிமையை அதிகரிப்பதில் அமினோ அமிலத்துக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. அந்த வகையில், அவித்த முட்டை, தயிர், மோர், பால் போன்றவற்றை உட்கொள்வது மிக நல்லது. கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை முழுமையாக தவிர்த்துவிட வேண்டும்.

    உகந்த நேரம்

    * செரிமானத்துக்குப் பிறகுதான், தேவையான சக்தி உடலுக்குக் கிடைக்கும் என்பதால், 20 - 30 நிமிடங்களுக்குள் செரிமானம் ஆகக்கூடிய வாழைப்பழம், பேரீச்சம்பழம் போன்றவற்றை உட்கொள்ளவும்.

    * உடற்பயிற்சி செய்யப் போவதற்கு, 40 முதல் 60 நிமிடங்களுக்கு முன்னர் சாப்பிட்டுவிட வேண்டும்.

    * உடற்பயிற்சி செய்து முடித்த அடுத்த ஒரு மணி நேரம், மிகவும் மதிப்புவாய்ந்தது. காரணம், அந்த நேரத்தில்தான் தசைகள் சத்துக்காகக் காத்திருக்கும். அப்போது சாப்பிடும் உணவு, நீங்கள் செய்த உடற்பயிற்சியை முழுமையாக்கி, உடல் வலிமைக்கு வலுசேர்க்கும்.

    * உடற்பயிற்சி செய்து முடித்த 20 நிமிடங்களுக்குள் ஏதாவதொரு ஹெல்த்தி ஸ்நாக்ஸைச் சாப்பிட வேண்டும். அதிகபட்சம் 3 முதல் 4 மணி நேரத்துக்குப் பிறகு, உணவு உட்கொள்ளலாம்.

    தண்ணீர் அவசியம்!

    * உடற்பயிற்சிக்கு முன்னரும் பின்னரும், 2 முதல் 3 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    * உடற்பயிற்சியின்போது, ஒவ்வொரு 15 - 20 நிமிடங்களுக்கும் சிறிது தண்ணீர் குடிக்கவும். பெரும்பாலும் பயிற்சி செய்யும்போது அதிகமாக தண்ணீர் தாகம் எடுக்கும். தாகம் எடுத்தவுடன் வேக வேகமாக தண்ணீர் அருந்திவிடாமல், கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கவும்.

    ஃபிட்னெஸுக்கான....

    * சர்க்கரைப் பொருள்களையும், கொழுப்புச்சத்துள்ள உணவுகளையும் அன்றாட உணவிலிருந்து முழுமையாகத் தவிர்த்துவிடுங்கள்.

    * முழுதானிய உணவுகள், பழங்கள், காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும். உடலில் நீர் வறட்சி ஏற்படாத அளவுக்குத் தண்ணீர் குடிக்கவும்.

    * அத்லெட்ஸ், பாடி-பில்டர்ஸ் போன்ற அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்கள், பயிற்சியாளர்களின் பரிந்துரைப்படி தண்ணீரோடு சேர்த்து ஸ்போர்ட்ஸ் டிரிங்ஸ், எலெக்ட்ரோலைட்ஸ் போன்றவற்றை அருந்தலாம்.

    * தினசரி உணவில், 55-60 சதவிகிதம் கார்போஹைட்ரேட்ஸ் (ஓட்ஸ், பீன்ஸ், பழங்கள், காய்கறிகள், கோதுமை, பாஸ்தா போன்றவை), 15-20 சதவிகிதம் கொழுப்புச்சத்து (மீன், நட்ஸ்), 15-20 சதவிகிதம் புரதம் (மீன், சிக்கன், குறைந்த கொழுப்புச்சத்துள்ள பால் பொருள்கள்) உட்கொள்ளலாம்.

    * முழு உணவாக ஒரே நேரத்தில் உட்கொள்வதற்குப் பதிலாக, உணவைப் பிரித்து 5 முதல் 7 தடவையாகச் சாப்பிடுங்கள்.

    * முதன்முறையாக உடற்பயிற்சி செய்யும் சிலர், வார்ம்-அப் செய்யாமல் நேரடியாகப் பயிற்சிகளை மேற்கொள்வதுண்டு. வார்ம்-அப் செய்யாமல், பயிற்சியைத் தொடங்கவேண்டாம். புதிதாக ஜிம் போகும் சிலர், ஆர்வத்தில் அளவுக்கதிகமாக பயிற்சி செய்துவிடுவதுமுண்டு. கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் பயிற்சி நேரத்தையும், பயிற்சி முறைகளையும் அதிகப்படுத்துங்கள். அதுதான் உடலுக்கும் ஆரோக்கியத்துக்கும் நல்லது.

    • உடற்பயிற்சி செய்வதற்கான சிறந்த நேரம் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபடலாம்.
    • கல்லீரல் உள்ளிட்ட உடல் உள்ளுறுப்புகளை சுற்றியுள்ள வயிற்றுப்பகுதி கொழுப்புகள் ஆபத்தானது என்பதால் இது மிகவும் முக்கியமானது.

    எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்தாலும் அது நல்லதுதான். ஆனால், உடற்பயிற்சியால் உண்டாகும் சிறந்த பலனை அடைவதற்கு நேரம் முக்கியம். அதிலும் உடற்பயிற்சி செய்வதற்கான சிறந்த நேரம் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபடலாம்.

    பெண்கள் காலையில் உடற்பயிற்சி செய்யும்போது உடலில் உள்ள அதிக கொழுப்பு கரைவதாகவும், இதுவே ஆண்கள் மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்யும்போது நிகழ்வதாக தெரியவந்துள்ளது.


    ஒவ்வொரு பாலினத்திற்கும் வேறுபடும் ஹார்மோன்கள் மற்றும் உறங்கும் நேரம், விழித்திருக்கும் நேரம், உணவு உண்ணும் நேரம் என அனைத்து உடல் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தும் நம் 'உடல் கடிகாரம்' ஆகியவை இதில் முக்கிய பங்கு வகிக்கலாம்.

    நல்ல ஆரோக்கியமான, சுறுசுறுப்பான 30 ஆண்கள் மற்றும் 26 பெண்களிடையே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் அனைவரும் 25 முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்கள். 12 வாரங்கள் அவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், ஸ்ட்ரெச்சிங், ஓட்டம், ரெசிஸ்டன்ட் எனப்படும் எதிர்ப்பு பயிற்சி, தசையை வலுவாக்கும் பயிற்சிகள் என, பல்வேறு விதமான உடற்பயிற்சிகளை அவர்கள் மேற்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் கண்காணிக்கப்பட்டன.


    ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களுள் ஒரு குழுவினர் காலை 8:30 மணிக்கு முன்னதாக உடற்பயிற்சி செய்தனர். மற்றொரு குழுவினர் அதே உடற்பயிற்சிகளை மாலை 6 மணி முதல் 8 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் மேற்கொண்டனர். அனைத்து பங்கேற்பாளர்களும் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட உணவுமுறையைக் கடைபிடித்தனர்.

    பங்கேற்பாளர்களின் ரத்த அழுத்தம் மற்றும் உடல் கொழுப்பின் அளவை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகாலத்தில் பரிசோதித்து வந்தனர். மேலும், இந்த காலகட்டத்தில் அவர்களின் உடல் நெகிழ்வு தன்மை, பலம், ஏரோபிக் ஆற்றல் ஆகியவையும் பரிசோதிக்கப்பட்டது.

    இந்த ஆய்வில் பங்கேற்ற அனைவரும் எந்த நேரத்தில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்தாலும் அவர்களுடைய ஒட்டுமொத்த உடல்நலனும் மேம்பட்டுள்ளது.


    "ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒவ்வொரு நேரம் சிறந்தது"

    "உங்களால் எந்த நேரத்தில் உடற்பயிற்சி மேற்கொள்ள முடியுமோ, அந்த நேரம்தான் உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரமாகும். உங்களின் நேரத்திற்கு ஏற்ப உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

    வயிற்றுப்பகுதியில் உள்ள கொழுப்பை குறைக்க விரும்பும் மற்றும் தங்களின் ரத்த அழுத்தத்தைக் குறைக்க முயலும் பெண்கள் காலையில் உடற்பயிற்சி செய்வதை இலக்காக வைக்க வேண்டும்.

    கல்லீரல் உள்ளிட்ட உடல் உள்ளுறுப்புகளை சுற்றியுள்ள வயிற்றுப்பகுதி கொழுப்புகள் ஆபத்தானது என்பதால் இது மிகவும் முக்கியமானது.

    எனினும், உடலின் மேல்பகுதியில் தசை பலத்தை அதிகரிக்க முயற்சிக்கும் பெண்கள் மற்றும் தங்களின் மனநிலை, உட்கொள்ளும் உணவை மேம்படுத்த விரும்பும் பெண்களும் மாலையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.


    ஆண்கள் காலை, மாலை என எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்தாலும் அவர்களின் உடல்பலம் அதிகரிக்கும்.

    ஆனால், "தங்களின் இதயநலன், வளர்சிதை மாற்றம் (மெட்டபாலிசம்) மற்றும் மனநலனை மேம்படுத்த விரும்பும் ஆண்களுக்கு மாலை நேர உடற்பயிற்சி சிறந்ததாக உள்ளது.

    மாலை நேர உடற்பயிற்சி வளர்சிதை மாற்ற நலனை மேம்படுத்துவதுடன், உடல் பருமன், இரண்டாம் வகை நீரிழிவு நோய் மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்படுவதற்கான ஆபத்துகளையும் குறைக்கிறது.

    பெண்களுக்கு அதிகளவில் வயிற்றுப்பகுதியில் கொழுப்புகள் இருப்பதால், அவர்கள் காலையில் அதிகளவிலான கொழுப்பை எரிக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஏற்கெனவே கூறப்பட்டதுபோல உடல் கடிகாரமும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

    • பி.சி.ஒ.எஸ் இருப்பவர்கள் குறைந்த கிளைசெமிக் உணவுகளை எடுக்க வேண்டும்.
    • ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.

    நீர்க்கட்டி பிரச்சனை என்னும் பாலிசிஸ்டிக் ஓவரியன் இருக்கும் பெண்களுக்கு இது குறிப்பிடத்தக்க தாக்கத்தை உண்டு செய்கிறது என்கிறது ஆய்வுகள். பி.சி.ஒ.எஸ் பிரச்சனை கொண்டு இருப்பவர்கள் குறைந்த கிளைசெமிக் உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும். ஏனெனில் சில கார்போஹைட்ரேட்டுகள் போன்ற உணவுகளை விட இன்சுலின் அளவு அதிகமாகவோ அல்லது விரைவாகவோ இவை உண்டாக்காது.

    குறைந்த கிளைசெமிக் உணவுகளில் உள்ள முழு தானியங்கள், பருப்பு வகைகள், கொட்டைகள், விதைகள், பழங்கள், மாவுச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பதப்படுத்தப்படாத குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகள் அடங்கும்.

    அழற்சி எதிர்ப்பு உணவு பெர்ரி, கொழுப்பு நிறைந்த மீன், இலைகள் கொண்ட காய்கறிகள், கீரைகள் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற அழற்சி எதிர்ப்பு உணவுகள் எடுத்துகொள்ளலாம்.

    இதய நோய்களின் ஆபத்து அல்லது தாக்கத்தை குறைக்க உயர் ரத்த அழுத்த உணவை தவிர்த்து உணவு முறைகளை மாற்ற மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள். இவையும் பி.சி.ஓ.எஸ் அறிகுறிகளை நிர்வகிக்க உதவுதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

    மீன், கோழி, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றூம் குறைந்த கொழுப்புள்ள பால் பொருள்கள் கொண்ட டயட்டை 8 வாரங்கள் தொடர்ந்து பின்பற்றியவர்கள் மற்றவர்களை காட்டிலும் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் தொப்பை கொழுப்பு குறைவதை கண்டதாக 2015-ம் ஆண்டு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    ஆரோக்கியமான பி.சி.ஓ.எஸ் உணவில் இயற்கை உணவுகள், பதப்படுத்தப்படாத உணவுகள், உயர் நார்ச்சத்து கொண்ட உணவுகள், சால்மன், டுனா, மத்தி மற்றும் கானாங்கெளுத்தி உள்ளிட்ட கொழுப்பு மீன்கள், காலே, கீரைகள், அடர்ந்த பச்சை நிற காய்கறிகள், சிவப்பு திராட்சை, பெர்ரி பழங்கள், கருப்பட்டை, அடர் சிவப்பு பழங்கள், காய்களில் ப்ரக்கோலி, காலிஃப்ளவர், உலர்ந்த பீன்ஸ் வகைகள், பயறு வகைகள், ஆலிவ் எண்ணெய், அவகேடோ மற்றும் தேங்காயெண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள், பைன் கொட்டைகள், அக்ரூட் பருப்புகள், பாதாம் மற்றும் பிஸ்தா உள்ளிட்ட கொட்டைகள், கருப்பு சாக்லேட், மசாலாவில் இலவங்கப்பட்டை போன்றவை ஆரோக்கியமான உணவு முறையில் பின்பற்ற வேண்டியவை.

    கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்சனை உள்ள பெண்கள் ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். குறிப்பாக ரீபைண்ட் செய்யப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகள், வெள்ளை ரொட்டி, சுத்திகரிக்கப்பட்ட உணவுகள், துரித உணவுகள், வறுத்த உணவுகள், சோடாக்கள் மற்றும் எனர்ஜி பானங்கள் போன்ற சர்க்கரை பானங்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், திடமான கொழுப்புகள், அதிகப்படியான சிவப்பு இறைச்சி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

    • முகத்தை எப்பொழுதும் ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும்.
    • மன அழுத்தத்தில் இருந்தாலும் கொலாஜன் உற்பத்தி பாதிக்கப்படும்.

    அழகாக இருக்க வேண்டும் என்று அனைவருக்கும் ஆசை தான். இதனால் பலரும் சந்தையில் விற்கப்படும் கிரீம்களை முகத்தில் அப்ளை செய்துவருகிறார்கள். சிலர் இயற்கை முறையில் தங்களை அழகு படுத்திக் கொள்கின்றனர். இருந்தாலும் பல நபர்களுக்கு இளம் வயதிலேயே தோல் சுருக்கங்கள் ஏற்படுகிறது. அதிலும் வயதானால் தோல் சுருக்கம் ஏற்படுவது இயல்பு தான். அதுவே இளம் வயதிலேயே தோல் சுருங்குகிறது என்றால் வருத்தமாக தான் இருக்கும். இதற்கு காரணம் நாம் எடுத்து கொள்ளும் உணவு முறை, பழக்க வழக்கம் போன்றவை தான் இளமையிலே முதுமை தோற்றம் வருவதற்கு காரணமாக இருக்கிறது.

    புற ஊதா கதிர்கள் தான் தோல் சுருங்குவதற்கு காரணமாக அமைகின்றன. இந்த புற ஊதாக்கதிர்கள் தோலில் உள்ள கொலாஜன் உற்பத்தியை குறைத்து தோலினை சுருங்கச்செய்கிறது.

    நீங்கள் வீட்டில் இருந்தாலும் சரி, வெளியில் சென்று வந்தாலும் சரி, வெயிலில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள உடல் முழுவதையும் ஆடைகளால் மறைத்துக்கொள்வது நல்லது.

    இளமையை தக்கவைத்துக்கொள்வதற்கு புகைப்பழக்கம் மற்றும் மது குடிப்பது போன்றவற்றை தவிர்த்துவிடுவது நல்லது. இது ரத்த ஓட்டத்தை குறைத்துவிடும். இதனால் தோல்கள் பலம் இல்லாமல் தொங்க ஆரம்பித்துவிடும்.

    ஒரு மனிதன் மன அழுத்தத்தில் இருந்தாலும் கொலாஜன் உற்பத்தி பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனாலேயும் தோல் சுருக்கம் ஏற்படும். எப்பொழுதாவது மன அழுத்தம் ஏற்பட்டால் பிரச்சினை இல்லை. இதனால் மன அழுத்தம் ஏற்படும் போதெல்லாம் உங்களுக்கு பிடித்தவற்றை செய்து மன அழுத்தத்தில் இருந்து வெளியே வருவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

    வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு கூட தோல் சுருக்கங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனால் வறண்ட சருமம் கொண்டவர்கள் முகத்தை எப்பொழுதும் ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும்.

    சரியாக தூங்காமல் இருந்தாலும் பிஎச் அளவு மற்றும் ஈரப்பதம் இவை இரண்டும் குறைந்து தோலின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. மேலும் கொலாஜன் உற்பத்தியையும் குறைத்துவிடுகிறது. அதனால் சரியான தூக்கம் என்பது மிகவும் அவசியம்.

    உடலில் சத்துக்கள் குறைந்தாலும் தோல் சுருக்கம் மற்றும் தோல் வியாதிகள் ஏற்படும். இதனால் தினமும் ஜூஸ் அல்லது ஏ.பி.சி. ஜூஸ் குடித்து வரும் போது தோலில் உள்ள சுருக்கங்கள் மறைந்து தோற்றம் பொலிவுபெறும்.

    • கர்ப்பகாலத்தில் ப்ரீக்ளாம்சியா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
    • உணவு முறையில் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

    கர்ப்ப கால மன அழுத்தம் என்பது, ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது பலவிதமான உணர்ச்சிகளுக்கு ஆளாகலாம். இதில் கவலை அல்லது மன அழுத்தமும் ஒன்று. இது சாதாரணமானது.

    பொதுவான காரணங்கள்:

    * கர்ப்ப இழப்பு

    * கர்ப்பம் குறித்த பயம்

    * பிரசவ பயம்

    * குமட்டல்

    * சோர்வு

    * மனநிலை மாற்றங்கள்

    * தாங்கமுடியாத முதுகுவலி

    * குழந்தையை நல்லபடியாக வளர்க்க முடியுமா என்னும் பயம் போன்றவை பொதுவான காரணங்களாக சொல்லப்படுகிறது.

    கர்ப்பகாலத்தில் மன அழுத்தம் உடலில் தலைவலி, தூங்குவதில் சிக்கல் அல்லது அதிகப்படியான உணவை எடுத்துகொள்ளும் நிலையை உண்டாக்க கூடும். இது வயிற்றில் வளரும் குழந்தையை பாதிக்கும். இதனால் ப்ரீக்ளாம்சியா அதுகுறித்த பயம் இன்னும் மன அழுத்தத்தை உண்டாக்கும். குறிப்பாக கர்ப்பிணிக்கு ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம் இருந்தால், கர்ப்பகாலத்தில் ப்ரீக்ளாம்சியா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

    கர்ப்பிணி பெண்களை குடும்பத்தில் இருப்பவர்களும் நட்பு வட்டமும் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். அதை ஏற்றுகொள்ளும் விதமாக கர்ப்பிணி பெண்களும் ஒத்துழைக்க வேண்டும். உணவு முறையில் சீரான சத்தான உணவுகளை எடுத்துகொள்ளுங்கள். கர்ப்ப காலத்தில் என்ன மாதிரியான உணவுகளை எடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். இது குறித்து டயட்டீஷியனிடம் ஆலோசனை மேற்கொள்ளலாம்.

    நாவிற்கு சுவை அளிக்கும் ஜங்க் ஃபுட் உணவுகளை தவிருங்கள். கார்பனேட்டட் பானங்கள் தவிர்த்து பழச்சாறுகள், திரவங்கள் அதிகமாக எடுத்துகொள்ள வேண்டும். உணவை பகுதி பகுதியாக பிரித்து உண்ணுங்கள். உடலை சுகாதாரமாக வைத்துகொள்ளுங்கள். தினமும் இரண்டு வேளை வெதுவெதுப்பான நீரில் குளியுங்கள்.

    மனதுக்கு பிடித்த இசையை கேளுங்கள். புத்தகம் படியுங்கள். துணையுடன் நேரம் செலவிடுங்கள். வயிற்றில் குழந்தையுடன் பேசுங்கள். வேகமான உடற்பயிற்சி இல்லாவிட்டாலும் மிதமான நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். யோகா, தியானம் போன்றவை மன அழுத்தத்தை குறைக்க கூடுதலான பலன் அளிக்கும்.

    • சர்க்கரை பானங்களை மட்டும் தவிர்ப்பது நல்லது.
    • நல்ல தூக்கம் எடையை பராமரிப்பதில் பெரும் பங்கு வகுக்கிறது.

    அனைத்து பாலினத்தை சேர்ந்தவர்களுக்கும் வயது ஏற ஏற உடலில் பல வகையான மாற்றங்கள் ஏற்படுவது சகஜமான ஒன்றாகும். 40 களை கடக்கும் போது மெட்டபாலிச சக்திகளின் மாறுபாடு, ஹார்மோன் மாற்றங்கள் என பலவகையான மாற்றங்கள் ஏற்படும் என மருத்துவ ஆராய்ச்சிகள் பல கண்டுபிடித்துள்ளன. இதுபோன்ற மாற்றங்கள் நமது உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் என்றாலும், வேறு வகையில் இன்னும் பிற உடல் நல பிரச்சினைகளையும் இழுத்து விடும்.

    குறிப்பாக பெண்களுக்கு, 40 வயதிற்கு பிறகு உடலில் பல மாற்றங்கள் ஏற்படுவதால் அவர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெரிய தாக்கத்திற்கு ஆளாகிறார்களாம். இங்கு, 40 களை கடக்கும் பெண்கள் தங்களது மெட்டபாலிச சக்தியை அதிகரிக்கவும் ஹெல்தியான முறையில் எடையை பராமரிக்கவும் சில டிப்ஸ்களை பார்க்கலாம்.

     பெண்களுக்கு வயதாகும்போது, தசைகள் இலகுவானதாக மாறி தளர்வடைய ஆரம்பிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இது மெதுவான வளர்சிதை மாற்றத்திற்கு வழிவகுக்கிறது. இதை எதிர்த்துப் போராடுவதற்கு வழக்கமான வலிமையான பயிற்சியை அவர்கள் உடற்பயிற்சி வழக்கத்தில் சேர்த்துக்கொள்வது முக்கியமானதாகும்.

    எடை தூக்குவது, பேண்டுகளை வைத்து இழுத்து ட்ரெயின் செய்வது போன்ற பயிற்சிகள், உங்கள் தசைகள் வலுவடைய உதவுகிறது. இது மெட்டபாலிச சத்துகள் அதிகமாவதற்கு உதவுவதோடு மட்டுமன்றி ஒட்டுமொத்த உடல் பலத்திற்கும், எலும்புகளை வலுவாக்குவதற்கும் கூட உதவி புரிகிறது.

     தீவிர உடற்பயிற்சி:

    உயர்-தீவிர இடைவெளி பயிற்சி என்பது கொழுப்பை குறைப்பதற்கும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதற்கும் பயனுள்ள உடற்பயிற்சி முறையாக பார்க்கப்படுகிறது. தீவிர உடற்பயிற்சியின் குறுகிய கால இடைவெளிகளைத் தொடர்ந்து சிறிது ஓய்வு நேரத்தை சேர்த்துக்கொள்வது வொர்க்அவுட்டை முடித்த பின்னரும் கலோரிகளை எரிக்க உதவும். HIIT உடற்பயிற்சிகளை பல்வேறு உடற்பயிற்சி நிலைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க முடியும். 40 வயதை கடந்த பெண்களின் விருப்பமான உடற்பயிற்சிகளுள் இதுவும் ஒன்றாக உள்ளது.

    நல்ல தூக்கம்:

    போதுமான மற்றும் நல்ல தூக்கம் எடையை பராமரிப்பதில் பெரும் பங்கு வகுக்கிறது. தூக்கமின்மை ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது அதிக உணவுகளை நாம் உட்கொள்வதற்கும் மற்றும் மெதுவான வளர்சிதை மாற்றத்திற்கும் வழி வகுக்கிறது. உங்கள் உடலின் இயற்கையான கொழுப்பை எரிக்கும் செயல்முறைகள் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்விற்காக தினமும் 7-9 மணிநேர தடையற்ற தூக்கத்தை கடைப்பிடிப்பது என்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

     கவனமான உணவு முறை:

    அனைவருக்கும் வயதுக்கு ஏற்ப வளர்சிதை மாற்றம் இயற்கையாகவே குறைவதால், எந்த உணவை எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதில் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும். அது மட்டுமன்றி சாப்பிடும் போது மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

    உணவின் போது ஒவ்வொரு வாய் உணவையும் ருசித்து, பொறுமையாக சாப்பிட வேண்டும். மேலும், உணவு கட்டுப்பாட்டு பயிற்சியை செய்வது அதிகப்படியான உணவைத் தடுக்கும் மற்றும் ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவும். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுப்பது மற்றும் பழங்கள், காய்கறிகள் மற்றும் மெல்லிய புரதங்களை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது எடை நிர்வாகத்தை நாம் ஆதரிக்க உதவும்.

    நீர்ச்சத்து:

    தினமும் சரியான அளவு தண்ணீர் குடிப்பதால், உடலை நீர்ச்சத்து நிறைந்ததாக வைத்துக்கொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அவசியமானதாகும். மேலும், எடையை பராமரிக்க உதவும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை சீராக்க உதவுகிறது. இது, முழுமையான உணர்வுக்கும் பங்களிக்கிறது, அதிகப்படியான உணவை உட்கொள்வதை தடுத்து, கலோரி உட்கொள்ளலைக் குறைக்கவும் உதவுகிறது. உங்கள் உடலின் இயற்கையான கொழுப்பை எரிக்க, சர்க்கரை பானங்களை மட்டும் தவிர்ப்பது நல்லது.

    • யூரிக் அமிலம் என்பது பியூரின்களின் சிதைவால் உடல் உற்பத்தி செய்யும் ஒரு கழிவாகும்.
    • யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால் பல்வேறு நோய்கள் உருவாகும்.

    யூரிக் அமிலம் என்பது பியூரின்களின் சிதைவால் உடல் உற்பத்தி செய்யும் ஒரு கழிவாகும். இந்த யூரிக் அமிலத்தின் அளவு உடலில் அதிகரிப்பதால் பல்வேறு நோய்கள் உருவாகும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

    * உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால் ஹைப்பர்யூரிசிமியா என்ற நிலை ஏற்படும்.

    * யூரிக் அமிலம் அதிகரிப்பதன் பொதுவான அறிகுறிகளில் கீல்வாதம் முக்கியமான ஒன்று.

    * இது மூட்டுகளில் வலி, சிவந்து போவது மற்றும் விறைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் ஒரு மூட்டுவலி.

    * யூரிக் அமிலம் உடலில் அதிகரித்தால் சிறுநீரகத்தில் கல் போன்ற பிரச்சினைகள் உருவாகும்.

    * மேலும் வயிற்று வலி, சிறுநீர் கழிப்பதில் சிரமம், காய்ச்சல் போன்றவையும் யூரிக் அமில அதிகரிப்பின் விளைவுகளாக இருக்கலாம். மருத்துவர்கள் ரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை கணக்கிட சில சோதனைகளை செய்கின்றனர்.

    * யூரிக் அமில அளவின் அடிப்படையில் மருந்துகள், உணவு முறை, தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்

    * யூரிக் அமில அதிகரிப்பு குறித்த சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைக்கு மருத்துவ நிபுணரை அணுகுவது சிறந்தது.

    • மாதவிலக்கு சுகாதாரம் குறித்தும் அவர்களுக்கு கட்டாயம் சொல்லித் தருதல் வேண்டும்.
    • மாதவிடாய் சுகாதாரத்தை சுத்தமாக வைத்திருப்பதை போல் சுற்றுச்சூழலையும் தூய்மையாக வைத்திருப்பது அவசியம்.

    பூப்படைந்த பெண்கள் என்னமாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம், அவர்களுக்கு கண்டிப்பாக கொடுக்க வேண்டிய உணவு முறைகள் எவை என்பதை பற்றி இன்று பார்க்கலாம்.

    பூப்படைந்த குழந்தைகளுக்கு மன ரீதியிலும், உடல் ரீதியிலாகவும் நாம் ஆதரவு கொடுக்க வேண்டும். உடல்ரீதியாக வரக் கூடிய மாற்றங்களை அவர்கள் எப்படி சமாளிக்க வேண்டும். மாதவிலக்கு சுகாதாரம் குறித்தும் அவர்களுக்கு கட்டாயம் சொல்லித் தருதல் வேண்டும். உணவுமுறைகள் இதனை பின்பற்றுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி அவர்களுக்கு விழிப்புணர்களை ஏற்படுத்த வேண்டும். பெண் குழந்தை பூப்பெய்தியதும் உடலுக்குத் தேவையான அளவு மற்றும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியவது அவசியம்.

    கறுப்பு உளுந்து - தோல் நீக்காமல் உளுந்தில் வடை, களி, சத்துமாவாக பொடித்தும் சாப்பிடலாம். சத்துமாவு மற்றும் களி தயாரிப்பதற்கு கறுப்பு உளுந்தை நன்றாக வறுத்துப் பொடித்துக் கொள்ள வேண்டும். பின் நாட்டுச் சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து சத்துமாவாகச் சாப்பிடலாம். அதே மாவைக் கூழ் போன்று காய்ச்சி, நல்லெண்ணெய், காய்ந்த திராட்சை, முந்திரி மற்றும் பாதாம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடக் கொடுக்கலாம். எலும்புகள் வலுவாகவும், சீரான மாதவிடாய்சுழற்சிக்கும், ஹார்மோன்கள் சீராகச் செயல்படவும் கறுப்பு உளுந்து உதவும்.

    நல்லெண்ணெய் - நல்லெண்ணெய்யில் இருந்து கிடைக்கும் கொழுப்பு, நல்ல கொழுப்பு வகையைச் சேர்ந்தது. எனவே, உணவில் அடிக்கடி நல்லெண்ணெய் மற்றும் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    நாட்டு முட்டை - பெண் குழந்தைகள் பூப்பெய்திய உடன் உடலுக்குத் தேவையான கொழுப்புச்சத்தை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒன்று அல்லது இரண்டு நாட்டு முட்டையை மஞ்சள் கருவுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிட வேண்டும்.

    கம்பு - வறுத்த கம்பு தானியத்தைப் பொடித்து, கூழாகவோ அல்லது களியாகவோ சமைத்து சாப்பிடலாம். எலும்புகள் வலுப்பெற கம்பு உறுதுணை புரியும்.

    பொட்டுக் கடலை - பொட்டுக்கடலையை அப்படியே சாப்பிடலாம் அல்லது பொடித்து நாட்டுச் சர்க்கரை சேர்த்து சத்துமாவாக சாப்பிடலாம். இதுவும் எலும்பை வலுப்படுத்த உதவும்.

    அசைவ உணவுகள் - மீன், ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் குறைவான அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

    கீரை வகைகள் - மாதவிடாய் நாள்களில் ரத்தப்போக்கு ஏற்படுவதால், சிலருக்கு ரத்தச்சோகை வர வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்க முருங்கைக் கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பசலைக் கீரை மற்றும் முள்ளங்கி கீரை இவற்றில் ஏதேனும் ஒரு கீரையை வாரத்திற்கு 3 முறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    பாகற்காய், சுண்டைக்காய் - சில பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் நாள்களில் ரத்தப்போக்கு சற்று குறைவாக இருக்கும். மேலும் உடலில் ரத்தத்தின் அளவும் குறைய நேரிடும். இதற்கு வயிற்றில் இருக்கும் நாக்குப் பூச்சியும் காரணமாக இருக்கலாம். உணவில் பாகற்காய், சுண்டைக்காய் ஆகிய இரண்டையும் அதிக அளவில் சேர்த்துக்கொண்டால் நாக்குப்பூச்சி தொந்தரவு ஏற்படாது.

    சத்து மாவு உருண்டை - கேழ்வரகு, கம்பு, நாட்டுச் சோளம், பொட்டுக்கடலை மற்றும் பயத்தம் பருப்பு ஆகியவற்றால் தயாரிக்கப்படும் சத்து மாவு உருண்டையை மாதத்திற்கு 3 நாள்கள் சாப்பிட வேண்டும். மாதவிடாய் நாள்களில் சாப்பிட்டால் அதிக அளவு பலன் பெறலாம்.

    கொண்டைக் கடலை - கருப்பு அல்லது வெள்ளைக் கொண்டைக் கடலையை வாரத்திற்கு 2 முறை சேர்த்துக் கொண்டால் கர்ப்பப்பை ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

    சத்துகள்

    பூப்படைந்த முதல் 3 நாட்கள் நாம் தர வேண்டியது என்னவென்றால் வேப்பங்கொழுந்தும் மஞ்சளும்தான். இந்த இரண்டையும் அரைத்து சிறிய நெல்லிக்காய் அளவுக்கு மூன்று நாள்களும் தர வேண்டும். உடலில் இருக்கக் கூடிய கழிவுகள் வெளியேறவும், தொற்றுகள் ஏற்படாமலும் உடலை சுத்தப்படுத்த இந்த உருண்டை மிகவும் உதவும்.

    புரதச்சத்து

    இரும்புச் சத்து, கால்சியம் சத்து, புரதச் சத்து ஆகிய மூன்றும் தேவைப்படுகிறது. இந்த மூன்றையும் நாம் சம அளவில் தர வேண்டும். எள் உருண்டை பூப்படைந்த பெண்களுக்கு கொடுக்கலாம். இதை முதல் இரு தினங்கள் கொடுக்கலாம். ஒரு வேளை ரத்த போக்கு அதிகமாக இருந்தால் அதை நிறுத்திவிடலாம். எள்ளுடன் பனை வெல்லத்தையும் சேர்த்து நாம் தரும்போது இதில் இருக்கக் கூடிய ஜின்க், இரும்புச் சத்து, கால்சியம் ஆகியவை நாம் கொடுத்தால் அதிக ரத்த போக்கை சீர் செய்ய இது உதவுகிறது.

    பனை வெல்லத்தை காய்ச்சி வறுத்த எள்ளுடன் உருண்டை செய்து கொடுக்கலாம். ஒரு சில குழந்தைகளுக்கு உடல் உஷ்ணம் அதிகமாகவே இருக்கும். அந்த சமயத்தில் கற்றாழையை நாம் தர வேண்டும். கற்றாழையில் உள்ள ஜெல்லை நன்றாக கழுவிவிட்டு பனை வெல்லத்துடன் சேர்த்து நாம் மோர் போல் அடித்து தரலாம். மோருடன் இந்த கற்றாழை ஜெல்லை சேர்த்து கொடுக்கலாம்.

    இதை கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு உடல் உஷ்ணம் குறைந்து சீரான ரத்த போக்கு ஏற்படும். ஒரு சில குழந்தைகளுக்கு வெள்ளைப்படுதல் இருக்கும். இது அதிகரித்தால் சிறுநீர் தொற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு. இதை சரி செய்ய முள்ளங்கி, சுரக்காய், வெள்ளை பூசணி ஆகியவற்றை சாப்பிட வேண்டும். இதன் மூலம் வெள்ளைப்படுதல் இல்லாமல் உடல் உஷ்ணம் குறைந்து சீரான ஹார்மோன் பேலன்சை தக்க வைத்துக் கொள்ள உதவும். இதனை அவர்களுக்கு ஒவ்வாமை இருக்கும் பட்சத்தில் இதனை எடுத்துக்கொள்ளலாம்.

    ×