search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மைதா"

    • மைதா மாவை வேக வைத்து கவனமாக உருட்டி, வண்டி இழுக்கும் குதிரைகளுக்கும், பொதி சுமக்கும் கோவேறு கழுதைகளுக்கும் உணவாக வழங்கப்பட்டன.
    • அதிக எண்ணெய் சத்துள்ள உணவுகள் செரிமானத்தை மெதுவாக்கி, அஜீரணம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கலாம்.

    மைதா என்பது கோதுமையின் எண்டோஸ்பெர்மில் இருந்தே தயாரிக்கப்படுகிறது. எண்டோஸ்பெர்ம் எனப்படும் கோதுமையின் உள்பகுதியை அரைத்தால், மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதனுடன் அசோடிகார் போனமைட், குளோரின் வாயு, பென்சாயில் பெராக்சைடு போன்ற வேதிப்பொருட்கள், மிருதுவாக மாற்ற அலக்ஸான் எனும் வேதிப்பொருள் போன்றவை சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது மைதா.

    பென்சாயில் பெராக்ஸைடு' என்பது, அழகு நிலையங்களில் முகத்தை பொலிவு படுத்தவும், முகப்பருவை போக்கவும் பயன்படும் மருந்தாகும். 'அலாக்ஸான்' என்பது படிகத்தன்மை கொண்ட வேதிக்கலவை. இது உணவில் கலந்தால், நீரிழிவு நோய் உண்டாகும் என, ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், மைதாவில் 'அலாக்ஸான்' கலப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.

    மைதா மாவில் தயாரிக்கப்படும் பரோட்டா, நம் பாரம்பரிய உணவு இல்லை; பாரசீக நாட்டு உணவாகும். ஆரம்பத்தில், இது வீட்டில் வளர்க்கும் விலங்குகளுக்கான உணவாக இருந்தது.

    மைதா மாவை வேக வைத்து கவனமாக உருட்டி, வண்டி இழுக்கும் குதிரைகளுக்கும், பொதி சுமக்கும் கோவேறு கழுதைகளுக்கும் உணவாக வழங்கப்பட்டன. ஒரு நாளைக்கு உணவு கொடுத்தால் போதும், பிறகு இரண்டு நாட்களுக்கு உணவு கொடுக்கத் தேவையில்லை. இதில், கொழுப்புச் சத்து அதிகம் இருப்பதால், பன்றிகளுக்கும் உணவாக கொடுக்கப்பட்டது. காலப்போக்கில் இதில் ரொட்டி தயாரித்து மனிதர்களும் சாப்பிடத் துவங்கினர்.

    பரோட்டா மட்டுமல்லாமல் அதற்கு ஊற்றப்படும் குழம்பில் அஜினமோட்டோ போன்ற சுவையூட்டிகள் சேர்க்கப்படுகின்றன.எனவே கவனம் அவசியம்.

    கேக், நாண், பிஸ்கட், ரொட்டி வகைகள், சிற்றுண்டிகள், பிரதான உணவுகள்... என அனைத்திலும் இன்றைக்கு மைதாவின் ஆதிக்கம் இருக்கிறது. `கோதுமையில் இருக்கும் நுண்ணூட்டச் சத்துகள் அனைத்தும் நீக்கப்பட்டு, வியாபார கட்டாயத்தினால் மங்கிய நிறத்தை வெண்மையாக்க ரசாயனத் தாக்குதலால் 'பிளீச்' செய்யப்பட்டு, இறுதியில் வெண்மையாக வெள்ளந்தியாகக் காட்சியளிக்கும் மைதாவால், உடலுக்கு உண்டாகும் ஆபத்துகள் மிக அதிகம்' என எச்சரிக்கிறது மருத்துவ உலகம்'. பரோட்டாக்களை அதிகளவில் சாப்பிட்டுவந்தால், சர்க்கரைநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

    நீரிழிவு

    இது கணையநீர் சுரப்பியை சோர்வடைய செய்து, சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த விடாமல் தடுக்கிறது. இதனால் கணையத்தில் இன்சுலின் சுரப்பது தடை படுகிறது. இதனால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. மைதாவில் தயாரிக்கப்படும் உணவுகளை அதிகம் சாப்பிவோருக்கும் நீரிழிவு நோய் வர அதிகமான வாய்ப்புள்ளது.

    கொழுப்பு படிதல்

    மைதா உணவைச் சாப்பிடுவதால் இதயத்திற்குச் செல்லும் ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதோடு, கொழுப்பு படிதல், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் இளம் வயதிலேயே வரும் என்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

    செரிமானப் பிரச்சனைகள்

    புரோட்டா பொதுவாக மைதா எனப்படும் வெள்ளை மாவு கொண்டு தயாரிக்கப்படுகிறது. மைதாவில் நார்ச்சத்து குறைவு. இதனால், அதிகம் புரோட்டா சாப்பிட்டால் மலச்சிக்கல், வயிற்றுப்பூச்சம் போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம். புரோட்டாவில் எண்ணெய் அதிகம் இருக்கும். அதிக எண்ணெய் சத்துள்ள உணவுகள் செரிமானத்தை மெதுவாக்கி, அஜீரணம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கலாம்.

    இதய நோய்கள்

    புரோட்டாவில் கெட்ட கொழுப்பு (saturated fat) அதிகம் இருக்கும். அதிக கெட்ட கொழுப்பு ரத்தத்தில் LDL (கெட்ட) கொழுப்பின் அளவை அதிகரிக்கக்கூடும். இது இதய நோய்கள், பக்கவாதம் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். புரோட்டாவில் சர்க்கரை சேர்க்கப்படலாம். அதிக சர்க்கரை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும். இது சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்களுக்கு ஒரு ஆபத்து காரணியாகும்.


    உடல் பருமன்:

    புரோட்டா கலோரிகள் நிறைந்த உணவு. அதிக கலோரிகள் உட்கொள்வது உடல் எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். உடல் பருமன் இதய நோய்கள், சர்க்கரை நோய், கீல்வாதம் போன்ற பிற நோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.

    பிற பிரச்சனைகள்

    சிலருக்கு, புரோட்டாவில் உள்ள கிளூட்டன் என்பதால் அலர்ஜி இருக்கலாம். கிளூட்டன் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு, புரோட்டா சாப்பிட்டால் வயிற்று வலி, வீக்கம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். அதிகப்படியான உப்பு சேர்க்கப்பட்ட புரோட்டா உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
    • அலுவலகம் செல்வோர் மிகவும் ஈஸியாக இந்த டிஸ்சை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    மைதா- ஒரு கப்

    முட்டை- 1

    உப்பு, சர்க்கரை- தலா ஒரு சிட்டிகை

    ஏலக்காய் பொடி- ஒரு டீஸ்பூன்

    பால்- அரை கப்

    தேங்காய் பால்- ஒரு கப்

    தேங்காய் துருவல் ஒரு கப்

    நெய்- தேவையான அளவு

    செய்முறை:-

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ஒரு சிட்டிகை உப்பு, சர்க்கரை மற்றும் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதில் அரை கப் பால் சேர்த்து நன்றாக அடித்து கலக்க வேண்டும். மாவுக்கலவை கட்டி இல்லாமல் நன்றாக அடித்து தோசை மாவு பதத்திற்கு கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    இந்த மாவுக்கலவையை தோசை தவாவில் நெய் தடவி ஊற்றி மூடி போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். மீண்டும் ஒரு சிறிய பாத்திரத்தில் துருவிய தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய் பொடி ஆகிவற்றை நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    வேகவைத்த அப்பத்தின் நடுவே கலந்து வைத்து தேங்காய் துருவல் கலவையை சேர்த்து அதனை சுருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இதனை சாப்பிடும் போது இதனுடன் தேங்காய் பால் இதற்கு மேல் ஊற்றி பரிமாறவும். கேரளா ஸ்டைலில் சுவையான சுருளப்பம் தயார். இதனுடன் சூடான லெமன் டீ, அல்லது புதினா டீ நல்ல காமினேஷனாக இருக்கும்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். காலை உணவாக எடுத்துக்கொள்ள ஏற்றது. எளிய முறையில் தயார் செய்துகொள்ளலாம். அலுவலகம் செல்வோர் மிகவும் ஈஸியாக இந்த டிஸ்சை செய்யலாம். நேரமும் மிச்சமாகும்.

    ×