search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமருத்துவம்"

    • வாழ்க்கையை எப்படி நேசிப்பது என்பதற்கான சில வழிமுறைகள்.
    • வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் வாழ வேண்டும்.

    நாம் வாழுகிற வாழ்க்கை இயற்கையின் கொடை. இந்த வாழ்க்கையை நேசிப்பவர்கள் மிக குறைவு. கோபமும், வெறுப்பும், மன அழுத்தமும் அதிகமாகிக் கொண்டு இருப்பதற்கு வாழ்க்கையை நேசிக்காததே அடிப்படை காரணமாகும். வாழ்க்கையை எப்படி நேசிப்பது என்பதற்கான சில வழிமுறைகளை இங்கு பார்ப்போம்!

    வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் வாழ வேண்டும். ஒவ்வொன்றையும் நேசிக்க வேண்டும். காலையில் எழுந்து வெளியே வந்ததும் சூரிய ஒளி உடலில் படும்போது ஏற்படுகிற வெப்பத்தை உணர வேண்டும். மெல்லியக்காற்று நம்மீது படும் போது ஏற்படுகிற அந்த இதமான இன்பத்தை அனுபவிக்க வேண்டும்.

    வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் கலந்தது தான். வெற்றியும் தோல்வியும் நிறைந்ததுதான். அதை நடுநிலையோடு எதிர்கொள்கிற போது சுமைகள் மாறி, சுகமாக தெரியும். அதற்கு நாம் நம்மை எப்போதும் இயங்கி கொண்டு இருப்பவர்களாக மாற்ற வேண்டும். இயங்குதல் என்றால் வழக்கமாய் மேற்கொள்ளும் பள்ளி, கல்லூரி, அலுவலகம், வீட்டு வேலைகள் செய்வது மட்டுமல்ல. அந்த வட்டத்தை கடந்து கிடைக்கும் நேரத்தில் நமக்கு பிடித்த ஒரு வட்டத்தை உருவாக்க வேண்டும்.

    உதாரணமாக இலக்கியம் மீது ஆர்வம் என்றால் ஓய்வாக இருக்கும் நேரத்தில் இலக்கிய கூட்டங்களில் பங்கு பெறலாம். திரைப்பட ஆர்வலர் என்றால் திரைப்படங்களை பார்க்கலாம். திரைப்படங்கள்குறித்து கலந்துரையாடுகிற நிகழ்வுகளில் பங்கு பெறலாம்.


    எது உங்களுக்கு பிடிக்கிறதோ எந்த இடத்தில் இருந்தால் உங்களுக்கு ஒரு மாற்றம் கிடைக்கும் என நினைக்கிறீர்களோ அந்த இடத்தோடு, அந்த நபர்களோடு உங்கள் ஓய்வு நேரத்தை செலவிடுங்கள். அது உங்களுக்குள் உள்ளார்ந்த மாற்றத்தை கொடுக்கும்.

    ஏதோ ஒன்றை திரும்ப, திரும்ப யோசித்து உங்களையே குழப்பிக் கொள்ளாமல் உங்கள் மனநிலையை சீராக வைக்க உங்கள் சிந்தனைகளை ஒருங்கிணைக்க உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள். அது உங்களை மாற்றும்.

    ஏதாவது ஒரு செயலை அன்றாடம் செய்வேன் என முடிவு எடுங்கள். அது காலையில் சிறிது நேரம் நடப்பதாக இருக்கலாம். செடிக்கு தண்ணீர் ஊற்றுவதாக இருக்கலாம். எதுவானாலும் சரி, அதை தொடர்ந்து செய்ய வேண்டும்.


    குடும்பத்திற்காகவும், எதிர்காலத்திற்காகவும் ஓடிக்கொண்டே இருக்கும் பலர் தங்களுக்கென ஓடுவதில்லை. ஒரு நாளின் பத்து நிமிடத்தையாவது உங்களுக்கென செலவிடுங்கள். அமைதியாக அமருங்கள்.

    எல்லாம் கடந்து போகும் என்கிற நம்பிக்கையில் ஒவ்வொரு நாளையும் நகர்த்துங்கள். என்ன நேர்ந்தாலும் அதை எதிர்கொள்ளுங்கள். நாம் செய்கிற ஒவ்வொரு வேலைகளையும் ரசித்து, கவனத்தோடு, நிகழ்கால உணர்வோடு இணைந்து செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை உங்களுக்கு அர்த்தமானதாகவும், அழகானதாகவும் தெரியும்.

    • உடலில் சுமார் 60 ஆயிரம் மைல் நீளத்துக்கான ரத்த நாளங்கள் உள்ளன.
    • இதயம் ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் முறை துடிக்கிறது.

    கால்களின் ஆடுதசைகள் உடலின் 2-ம் இதயம் போல இயங்குகின்றன. கால்களின் ஆடுதசைகளை உடற்பயிற்சி மூலம் பலப்படுத்தும் போது இதயம் நன்றாக செயல்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.

    இந்தியாவில் ஏற்படும் மரணங்களில் தோராயமாக 28 சதவீதம் இதய நோய்களால் ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.


    உயர் ரத்த அழுத்தம், புகைத்தல், நீரிழிவு நோய், உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை ஆகியவை இதய நோய்களுக்கு காரணமாக உள்ளன.

    உடலின் உயிரணுக்களுக்கு தேவையான பிராண வாயுவை வழங்க இதயத்தின் உந்து சக்தி நுரையீரலில் இருந்து பிராணவாயு கலக்கப்பட்ட ரத்தத்தை தமனிகள் மற்றும் சிரைகள் வழியாக உந்தித் தள்ள செய்கிறது.


    இவ்வாறு செல்களுக்கு கொண்டு செல்லப்பட்ட ரத்தமானது, சிரை அமைப்பு மூலம் இதயத்திற்கு திரும்புகிறது. பின்னர் நுரையீரலுக்கு மீண்டும் சென்று பிராணவாயு கலக்கப்படுகிறது. இந்த சுழற்சி தொடர்ந்து நடைபெறுகிறது.

    உடலில் சுமார் 60 ஆயிரம் மைல் நீளத்துக்கான ரத்த நாளங்கள் உள்ளன. இதயம் ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் முறை துடிக்கிறது. 2,250 கேலன் ரத்தத்தை உந்தி தள்ளுகிறது.

    இதயத்தின் இவ்வளவு கடினமான பணிச்சுமையை குறைக்க கால்களின் பின்புறம் உள்ள ஆடுதசைகள் உடலின் 2-ம் இதயம் போலவே இயங்கி உடலின் கீழ்ப்பகுதிக்கு வரும் பிராண வாயு கலக்கப்பட்ட ரத்தத்தை மீண்டும் இதயம் மற்றும் நுரையீரலுக்கு தள்ள ஒன்றாக வேலை செய்கின்றன.


    இதயம் நன்றாக இயங்க கால்களின் ஆடுதசைகளை வலுப்படுத்த வேண்டும் என்கிறார்கள் டாக்டர்கள். இதற்கு உடற்பயிற்சி அவசியம் அல்லது உட்கார்ந்த நிலையில் கூட கால் பாதங்களை முன்பின் மடித்து நீட்டுவதால் கன்று தசைகள் நன்கு இயங்கி ரத்தத்தை சரியான விசையுடன் இதயத்தை நோக்கி உந்தி தள்ள வழிசெய்யும் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.

    • மூட்டு தேய்மானம் என்பது இன்று பொதுவாக பலரையும் பாதிப்பதாக உள்ளது.
    • கால் வீக்கம், கால் வளைந்து இருப்பது பொதுவான அறிகுறிகளாகும்.

    உடல் உழைப்பு மற்றும் உடற்பயிர்சி இல்லா வாழ்க்கை முறை, ஒரே இடத்தில் நீண்டநேரம் அமர்ந்து பணியாற்றுவது போன்றவர்களுக்கு மூட்டுத்தேய்மானம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

    மூட்டு தேய்மானம் என்பது இன்று பொதுவாக பலரையும் பாதிப்பதாக உள்ளது. குறிப்பாக, 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் இருக்கும். நடக்க, அன்றாட பணிகளை மேற்கொள்வதில் சிரமம், கால் வலி, மூட்டு இறுக்கமாகுதல், காலை இயல்பாக நீட்டி மடக்க முடியாதது, கால் வீக்கம், கால் வளைந்து இருப்பது பொதுவான அறிகுறிகளாகும்.

    உடல் பருமனாக இருப்பவர்கள், எந்த வேலையும் செய்யாமல் அமர்ந்தே இருப்பவர்கள், அதிகமான உடலுழைப்பை செலுத்தி வேலைகள் செய்பவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

    மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொண்டால், தேய்மானத்தின் பாதிப்புக்கு நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

    பிசியோதெரபி பயிற்சி, பணிகளை மாற்றி செய்வது, உடற்பயிற்சி செய்வது போன்ற எளிமையான வழிமுறைகள் வாயிலாக பாதிப்பு தீவிரமடையாமல் தடுக்கலாம்.

    உணவுமுறைகளில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும். ஏனென்றால் துரித உணவுகளை சாப்பிடும் போது உடல் பருமன் ஏற்பட்டு மூட்டுவலி ஏற்படும். இதனால் டயட் ஃபாளோ செய்ய வேண்டும். 

    மேலும் மூட்டு தேய்மானத்திற்கான ப்ரப் சிகிச்சை பற்றி விரிவான விளக்கம் அளிக்கிறார் டாக்டர் லட்சுமிநாதன்.

    • மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கு ஸ்டெம் செல் அருமையான வழிமுறையாகும்.
    • மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க ஸ்டெம் செல் சிகிச்சை உதவுகிறது.

    நீரிழிவு நோய்க்கு தீர்வு காண்பதிலும் ஸ்டெம் செல் சிகிச்சை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கணையத்தில் உள்ள செல்களின் வளர்ச்சியை தூண்டுவதற்கும், அந்த செல்களை மீண்டும் உருவாக்குவதற்கும் ஸ்டெம் செல் சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மருந்து, மாத்திரைகள் இல்லாமல் நீரிழிவு நோயானது இயற்கையாகவே கட்டுப்படுத்தப்படுகிறது.


    நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை நல்ல பலனை தருகிறது. சில புற்றுநோய்களுக்கும் ஸ்டெம் செல் சிகிச்சை மிகச்சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.

    ரத்தப் புற்றுநோய் உள்ளிட்ட சில புற்றுநோய்களுக்கு இந்த ஸ்டெம் செல் சிகிச்சை ஒரு அருமையான சிகிச்சையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்டெம் செல் சிகிச்சையானது புற்றுநோய் பாதித்த செல்களை பழுதடையச் செய்து புற்றுநோயை கட்டுப்படுத்துகிறது.

    மேலும் புதிய நல்ல செல்களையும் உருவாக்குகிறது. இதன் மூலம் சில புற்று நோய்களுக்கு தீர்வு காணப்படுகிறது.

    மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மார்பகத்தை அகற்ற வேண்டிய நிலை வரலாம். சில நேரங்களில் மார்பகம் வளர்ச்சி அடையாத பெண்களுக்கு மார்பக வளர்ச்சி தேவைப்படலாம். எனவே மார்பக சிகிச்சைக்கும் ஸ்டெம் செல் என்பது மிக அருமையான வழிமுறையாகும்.

    இதன் மூலம் புற்றுநோய் பாதித்த பெண்கள் தங்களுடைய மார்பகத்தை காப்பாற்றிக்கொள்ள முடியும். மேலும் மார்பகத்தை அழகாக மாற்றுவதற்கும் ஸ்டெம் செல் சிகிச்சை நல்ல வழிமுறையாகும்.

    புற்றுநோய் பாதித்த பெண்களுக்கு எந்த திசுவில் புற்றுநோய் இருந்தாலும் அதையும் ஸ்டெம் செல் சிகிச்சை சரி செய்கிறது. இது தொடர்பாக பல ஆய்வு முடிவுகளும் வெளிவந்துள்ளன.

    ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும் போது இதயத்தில் உள்ள திசுக்கள் மற்றும் செல்கள் குறைந்து விடும் அல்லது இறந்து விடும். மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க ஸ்டெம் செல் சிகிச்சை உதவுகிறது.

    ஒருவருக்கு இதய செல்கள் குறையும் போது ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் இதய செல்களை உருவாக்க முடியும். இதன் மூலம் இதயத்தின் செயல்பாடுகளையும் சீராக்கி மாரடைப்பை தடுக்க முடியும்.

    மேலும் மூட்டு பகுதிகளில் உள்ள தேய்மானங்களுக்கும் ஸ்டெம் செல் என்பது நன்மை பயக்கும் சிகிச்சையாகும். மூட்டு தேய்மானம், முதுகெலும்புகளில் ஏற்படக்கூடிய தேய்மானங்கள் இவை அனைத்தையுமே சீராக்கு வதற்கு ஸ்டெம் செல் சிகிச்சை முக்கியமான வழிமுறையாக உள்ளது.


    ஆட்டோ இம்யூன், பக்கவாதம், உடல் பருமனுக்கு தீர்வு:

    நமது உடலில், நோய் தொற்றுக்களை அழிக்கக்கூடிய நோய் எதிர்ப்பு அமைப்பானது சிலநேரங்களில் தவறுதலாக ஆரோக்கியமான செல்களை தாக்கி அழிக்கிறது. இந்த பாதிப்புக்கு ஆட்டோ இம்யூன் என்று பெயர். அவர்களுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை மிகச் சிறந்த பலனை தருகிறது.

    இந்த பாதிப்பானது சமீப காலமாக மிகவும் அதிகரித்து வருகிறது. வைரஸ்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாசு காரணமாக செல்களில் மாற்றங்கள் ஏற்பட்டு மரபணு பிரச்சினைகள் உருவாகி அதன் மூலமாக ஆட்டோ இம்யூன் பாதிப்பு ஏற்படுகிறது.

    ஸ்டெம் செல் சிகிச்சையானது ஆட்டோ இம்யூன் பாதிப்பு கொண்டவர்களின் செல்களில் ஏற்படும் மாற்றங்களை சீரமைப்பதன் மூலம் அவர்களின் நோயையும் குணப்படுத்துகிறது.

    ஒருவருக்கு வயதாகும்போது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு பக்கவாதம் வரலாம். அதுபோன்ற பக்கவாதத்துக்கும் ஸ்டெம் செல் சிகிச்சை நல்ல பலனை தரும்.

    ஒவ்வொரு உறுப்புகளில் ஏற்படுகிற சேதம் மற்றும் மீளுருவாக்கத்தை சரி செய்வதற்கு ஸ்டெம் செல் மிகவும் அற்புதமான வழிமுறை என ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடி க்கப்பட்டுள்ளது.

    பெண்களை பொருத்தவரைக்கும் வயதாகும் போது அவர்களுக்கு உடல் பருமன் ஏற்படுகிறது. பெரும்பாலான பெண்கள் உடல்பருமன் பிரச்சினையால் பாதிக்கப்படுகிறார்கள். உடல் பருமன் கொண்ட பெண்களுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை அளிக்கும் போது அவர்களுக்கு உடல் எடை குறைகிறது.

    பெண்களின் உடல் உறுப்புகளில் எந்த வகையான பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதை ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் சீராக்க முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்டெம் செல் சிகிச்சை என்பது ஒரு எளிய வழிமுறை ஆகும்.

    அந்த வகையில் ஒவ்வொரு திசுவின் உருவாக்கம், பழுதுபார்த்தல், மீளுருவாக்கம் ஆகியவைகளுக்கான அடிப்படையே அந்த திசுக்களில் உள்ள ஸ்டெம் செல் தான். இதனால் ஸ்டெம் செல் சிகிச்சை என்பது பெண்களுக்கு மிகவும் நன்மை தரக்கூடியதாக அமைகிறது.

    ஸ்டெம் செல் சிகிச்சை பற்றி நிறைய ஆய்வுகள் சமீப காலமாக வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இதன் சக்சஸ் ரேட் இன்னும் கொஞ்ச காலத்தில் மிகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதன் மூலம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.

    • இளம் வயதினரும் நியாபக மறதி பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள்.
    • தியானத்துக்கும், ஞாபக மறதிக்கும் தொடர்பு உண்டு.

    ஞாபக மறதியால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. முதியவர்கள் மட்டுமின்றி இளம் வயதினரும் இந்த பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். சில எளிய நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் ஞாபக மறதியை கட்டுப்படுத்தலாம்.


    * தியானத்துக்கும், ஞாபக மறதிக்கும் தொடர்பு உண்டு. தினமும் 10 நிமிடங்கள் தியானம் செய்து வருவது மனநலத்துக்கு மட்டுமல்ல ஞாபக மறதி பிரச்சனையின் வீரியத்தை குறைக்கவும் உதவும். குறிப்பாக நினைவுத்திறனையும், மனநிலையையும் மேம்படுத்தும்.


    * மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் அதன் செயல்திறனை அதிகரிக்க செய்யலாம். பொதுவாக எந்த வேலை செய்வதாக இருந்தாலும் வலது கையைத்தான் அதிகமாக பயன்படுத்துவோம். அதற்கு மாற்றாக இடது கையை உபயோகிக்கலாம். அதன் மூலம் மூளையின் செயல்திறன் மேம்படும். ஞாபக மறதியின் வீரியம் குறையும்.


    * ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்வதும் மூளை சிறப்பாக செயல்பட உதவும். அதனால் மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் பயிற்சிகளை செய்து வரலாம். யோகாசனங்களும் பலன் கொடுக்கும். அவை ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், நினைவுத்திறனை மேம்படுத்தவும் உதவிடும்.

    * உணவுக்கட்டுப்பாடும் அவசியமானது. சரியான உணவுப்பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். அதுவும் நினைவாற்றல் திறனை அதிகரிக்க உதவும் புரோக்கோலி, அக்ரூட் பருப்புகள், பூசணி விதைகள், மீன் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    • இரவில் தூங்க செல்வதற்கு முன்பு பால் பருகுவதும் நல்லது.
    • மன அழுத்தத்தில் இருக்கும்போது பெர்ரி வகை பழங்களை உட்கொள்ளலாம்.

    இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம் தவிர்க்க முடியாத தொற்று வியாதியாக பலரையும் ஆட்கொண்டிருக்கிறது. அந்த சமயத்தில் உட்கொள்ளும் உணவு தேர்வில் கவனம் செலுத்த வேண்டும்.


    இல்லாவிட்டால் மன அழுத்தத்தை கூடுதலாக தூண்டி பாதிப்பை அதிகரிக்கச் செய்துவிடும். மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்க சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.


    மன அழுத்தத்தில் இருக்கும்போது பெர்ரி வகை பழங்களை உட்கொள்ளலாம். ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்த அவை, செல்கள் சேதம் அடைவதை தடுக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும்.

    மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் துத்தநாகத்துக்கு முக்கிய பங்கு இருக்கிறது. உடலில் துத்தநாகம் குறைவாக இருந்தால் மன அழுத்த பாதிப்பு அதிகமாகிவிடும்.

    முந்திரி பருப்பில் 14 முதல் 20 சதவீதம் வரை துத்தநாகம் இருக்கிறது. அதனை உட்கொள்வது துத்தநாக குறைபாட்டை ஈடு செய்து மன அழுத்தத்தையும், கவலையையும் குறைக்க உதவும்.


    மெக்னீசியமும் மனநிலையை மேம்படுத்துவதற்கு வழிவகை செய்யும். சியா விதைகள், பூசணி விதைகள் மற்றும் முட்டையில் மெக்னீசியம் உள்ளது. இவை மனநிலை முன்னேற்றத்துக்கும் வித்திடும்.


    அவகேடோவிலும் மன அழுத்தத்தை எதிர்த்து போராடும் சேர்மங்கள் இருக்கின்றன. குறிப்பாக ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, வைட்டமின்கள் சி, பி6 ஆகியவை உள்ளடக்கி இருக்கின்றன. அவை மனஅழுத்தத்தையும், ரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவிடும்.

    கீரைகளையும் உட்கொள்ளலாம். அதில் இருக்கும் போலேட்டுகள் பதற்றத்தை தணிக்க உதவும். சால்மன், மத்தி போன்ற மீன் வகைகளையும் உட்கொள்ளலாம். அதில் இருக்கும் வைட்டமின் டி, பதற்றம் மற்றும் மனநல கோளாறுகளை தணிக்கும்.

    இரவில் தூங்க செல்வதற்கு முன்பு பால் பருகுவதும் நல்லது. பாலில் இருக்கும் டிரிப்டோபன், மெலடோனின் மற்றும் பி-வைட்டமின்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் மன அழுத்தத்தைக் குறைத்து தூக்கத்தை தூண்டிவிடும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெண்களுக்கு கருத்தரித்தல் பிரச்சினை.
    • 3 ஆயிரம் ரசாயனங்களை நம்மை அறியாமலேயே நாம் பயன்படுத்துகிறோம்.

    உலக பாலியல் நல தினம், ஸ்டெம்செல் விழிப்புணர்வு தினத்தை யொட்டி பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வு அறிக்கையின் படி திருமணத்துக்கு பிறகு தாம்பத்திய உறவில் திருப்தி இல்லாதவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

    தற்போது ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு பிரச்சனைகளும், பெண்களுக்கு கருத்தரித்தல் பிரச்சினைகளும் அதிகரித்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

    வேலைப்பளுவால் ஏற்படும் மன அழுத்தம், சுற்றுச்சூழல் மாசு அதிகரிப்பு, ரசாயன பொருட்களின் பயன்பாடு அதிகரிப்பு ஆகியவையே இதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது.

    இப்போது பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உணவு பொருட்கள் நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருக்க அதில் அதிக அளவில் ரசாயனம் சேர்க்கப்படுகிறது.


    நாம் அன்றாடம் பயன்படுத்தும் அழகுப்பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களிலுமே ரசாயனம் உள்ளது. வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் காற்று மாசுபடுகிறது. இந்த காற்றை சுவாசிப்பதாலும் நமது உடலுக்குள் ரசாயனம் செல்கிறது.

    இப்படி தினமும் 3 ஆயிரம் ரசாயனங்களை நம்மை அறியாமலேயே நாம் பயன்படுத்துகிறோம். இந்த ரசாயனங்கள் பெண்கள் கருத்தரிப்பதற்கு இடையூறாக இருப்பதற்கும், ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுவதற்கும் ஒரு காரணமாக அமைகிறது.

    இதன் மூலம் ரசாயன பயன்பாடு தாம்பத்திய உறவை சீர்குலைப்பதற்கு ஒரு காரணமாக இருப்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. மேலும் சர்க்கரை நோயும் பலருக்கு ஆண்மைக்குறைவு ஏற்பட காரணமாக அமைகிறது.

    • பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
    • கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ்-எஜிப்டை வகை கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய்களைப் பரப்பி வருகின்றன.

    தமிழகத்தில் நிகழாண்டில் 11,743 போ் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளானதாகவும், அதில் 4 போ் உயிரிழந்ததாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

    இதையடுத்து, மாநிலம் முழுவதும் நோய்த் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது:-

    மாநிலம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொசு ஒழிப்புப் பணிகளில் 25,000 போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

    அவா்களுடன் ஊராட்சிக்கு ஒரு சுகாதார அலுவலரும், நகா்ப்புறங்களில் வாா்டுக்கு ஒரு சுகாதார அலுவலரும், மாநகராட்சிகளில் தெருக்களின் அடிப்படையில் சுகாதார அலுவலா்களும் நியமிக்கப்பட்டு வீடுகள்தோறும் மருத்துவ கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    காய்ச்சல் பாதிப்பு, மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சந்தேகங்களுக்கு 104 என்ற எண்ணுக்கு அழைக்க

    லாம். எத்தகைய சூழலையும் எதிா்கொண்டு சிகிச்சையளிக்கும் வகையில் மருத்துவமனைகளில் டெங்கு வாா்டுகளையும், படுக்கைகளையும் அமைத்து போதிய மருத்துவ வசதிகளைத் தயாா் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    ரத்த வங்கிகளையும் தயாா் நிலையில் வைத்திருக்கவும், அவசரகால சூழல்களை சமாளிக்கும் வகையில் விரைவு உதவிக் குழுக்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாள்பட்ட காபி பழக்கத்தை டாக்டர்கள் எச்சரித்துள்ளார்கள்.
    • இதய துடிப்பில் பிரச்சனையை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

    ஒரு காபி குடிச்சாத் தான் வேலை செய்ய மூடு வரும் என்று, செய்து கொண்டிருக்கும் வேலையை அப்படியே அரை குறையாக போட்டுவிட்டு எழுந்து சென்று காபி குடித்து விட்டு வருபவர்களை பார்க்கலாம்.

    வேலைக்கு புறப்பட்டு செல்லும்போதும், சரி திரும்பி வரும்போது சரி டீ கடை ஓரத்தில் வண்டியை நிறுத்தி ஒரு டீயோ அல்லது காபியோ குடித்துவிட்டுத் தான் உற்சாகமாக புறப்படுவார்கள்.

    காலையில் எழுந்தது முதல் இரவு தூங்க செல்வதற்குள் எப்படியும் ஐந்தாறு காபி குடித்து விடுவேன் என்று சொல்லும் பலரை தினமும் பார்த்து இருப்போம்.

    ஆனால் அந்த காபிக்குள் உற்சாகம் மட்டுமல்ல. உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் விவகாரமும் ஒளிந்து இருக்கிறது என்பது பலரும் அறியாத விஷயம்.

    டெல்லியில் அமெரிக்கன் கல்லூரியின் இதயவியல் துறையில் நடந்த கருத்தரங்கில் இந்த அதிர்ச்சி தகவலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். தினமும் 4 காபி குடிப்பதே இதயக்கோளாறுக்கு வழிவகுக்கலாம் என்று கூறி இருக்கிறார்கள்.

    நாள்பட்ட காபி பழக்கத்தை டாக்டர்கள் எச்சரித்துள்ளார்கள். அதிகப்படியான டீ, காபி மற்றும் குளிர்பானங்கள் குடிப்பதால் இதய நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

    எவ்வளவு ஆரோக்கியமானவராக இருந்தாலும் ஒரு நாளைக்கு 400 மில்லி காபியின் நுகர்வு இதயக் கோளாறுக்கு வழிவகுக்கும். இது உடலின் 'பாராசிம்பேடிக்' அமைப்பை தொந்தரவு செய்யலாம். இது உயர் ரத்த அழுத்தத்தை உருவாக்கும்.

    இதய துடிப்பில் பிரச்சனையை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்கள். காபி, டீ மற்றும் பெப்சி, ரெட் புல், மான்ஸ்டர் ஆகிய பானங்களை அடிக்கடி குடிக்கும் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களிடம் இந்த ஆய்வை நடத்தி இருக்கிறார்கள். அதில் பலருக்கு ரத்த அழுத்தம், இதய துடிப்பு பிரச்சனை இருப்பது தெரிய வந்தது.

    இந்த ஆய்வின் போது பெண்களிடமும் அதிக அளவு காபி அல்லது குளிர்பானங்கள் அருந்தும் பழக்கம் இருப்பது தெரிய வந்தது. நகர வாழ்க்கை முறை மற்றும் தொழில் ரீதியான பழக்கங்கள் தான் இதற்கு காரணம் என்கிறார்கள்.

    • மன உணர்வுகள் அதிகரித்து, தாம்பத்ய குறைபாடு நீங்கும்.
    • மனதுக்கும் உற்சாகத்தை தரும்.

    தாம்பத்திய குறைபாடு என்பது நரம்பு, ஹார்மோன், உடல் நலன் மற்றும் உளவியல் காரணிகளை அடிப்படையாக கொண்டது. இந்த பிரச்சனை நீங்க என்ன உணவுகள், பழக்கவழக்கங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

    எல்-ஆர்ஜினின், எல்-கார்னிடைன், எல்.சிட்ருலின், எல்.டைரோசின் ஆகிய அமினோ அமிலங்கள், புரோமிலென் என்ற என்சைம், லைக்கோபீன், ஒமேகா 3 மற்றும் 6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் உங்களுக்கு பயன்தரும். அந்த சத்துக்கள் நிறைந்த உணவுகள்:-


    காய்கறிகள்:

    தக்காளி, கேரட், பீட்ரூட், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், பூண்டு, முருங்கைக்காய், தூதுவளை கீரை, தாளிக்கீரை, பசலைக்கீரை


    பழங்கள்:

    நேந்திரன் வாழை, செவ்வாழை, பேரிச்சை, அத்திப்பழம், மாதுளம்பழம், மாம்பழம், பலாப்பழம், துரியன் பழம், தர்பூசணி, ஆரஞ்சு, எலுமிச்சை.


    விதைகள்:

    பூசணி விதைகள், எள், சோயாபீன்ஸ், வேர்க்கடலை, பட்டர் பீன்ஸ், பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு, கடற்பாசிகள். சாக்லேட்டுகள், கருப்பு திராட்சை


    அசைவ உணவுகள்:

    கோழி இறைச்சி, வான்கோழி, சிகப்பு இறைச்சி வகைகள், மத்திச்சாளை, சூரை மீன், கணவாய், இறால், நண்டு, முட்டை, பால்


    அரிசி:

    சிவப்பு அரிசி, மாப்பிள்ளை சம்பா, கறுப்பு கவுனி அரிசி

    மூலிகைகள்:

    சித்த மருத்துவத்தில் பயன்படுத்தும் மூலிகைகளில், நெருஞ்சில், இந்தியன் ஜின்செங் என்றழைக்கப்படும் அமுக்கராக் கிழங்கு, தண்ணீர் விட்டான் கிழங்கு, பால் மிதப்பன் கிழங்கு, வாலுழுவை, பூமி சர்க்கரைக் கிழங்கு, நிலப்பனைக் கிழங்கு, மதனகாமப் பூ, குங்குமப் பூ, பூனைக்காலி விதை போன்றவை நரம்புக்கு நல்ல வலுவைத் தந்து தாம்பத்தியத்தில் திருப்தியைத் தரும்.

    சித்த மருந்துகளில் மதன காமேஸ்வர லேகியம், சாலாமிசிறி லேகியம் ஆகியவற்றை தலா 1-2 கிராம் வீதம் காலை, இரவு இரு வேளை சாப்பிட வேண்டும்.

    மேலே குறிப்பிட்டுள்ள உணவு வகைகள், மருந்துகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் உற்சாகம் பெருகும். ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் சீராகும். மன உணர்வுகள் அதிகரித்து, தாம்பத்ய குறைபாடு நீக்கி உடலுக்கும், மனதுக்கும் உற்சாகத்தை தரும்.

    • தினசரி உணவில் சில காய்கறிகளை உட்கொள்வது அவசியமானது.
    • தினசரி அவசியம் சாப்பிடவேண்டிய ஊட்டச்சத்துமிக்க காய்கறிகள்.

    உடல் சோர்வு, செரிமான கோளாறு, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்ற பிரச்சனைகளை தொடர்ந்து அனுபவித்தால் தினசரி உணவில் சில காய்கறிகளை உட்கொள்வது அவசியமானது. அவை ஊட்டச்சத்து தேவைகளை திறம்பட நிறைவேற்றி ஆரோக்கியத்தை மேம்படுத்த வழிவகை செய்யும்.

    ஊட்டச்சத்தின் அவசியத்தை அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாகவும், அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் ஆண்டு தோறும் செப்டம்பர் 1-ந் தேதி முதல் 7-ந்தேதி வரை தேசிய ஊட்டச்சத்து வாரம் கடைப்பிடிக்கப்படும் நிலையில் தினசரி அவசியம் சாப்பிடவேண்டிய ஊட்டச்சத்துமிக்க காய்கறிகள் இவை..


    பீர்க்கங்காய்:

    'டோரி' என்றும் அழைக்கப்படும் இந்த காயில் நார்ச்சத்து, வைட்டமின்கள் சி, ஏ, இரும்பு, மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது செரிமானத்தை மேம்படுத்துவதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் துணை புரியும்.


    கோவைக்காய்:

    வைட்டமின்கள் ஏ, சி, பி-காம்ப்ளக்ஸ் போன்ற வைட்டமின்களால் இந்த காய் நிரம்பியுள்ளது. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற அத்தியாவசிய தாதுக்களும் நிறைந்துள்ளது. அவை எலும்பு ஆரோக்கியத்திற்கும், ரத்த ஓட்டத்திற்கும் நன்மை பயக்கும்.


    புடலங்காய்:

    குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட இந்த காய், எடை மேலாண்மையை நிர்வகிக்கவும், செரிமான ஆரோக்கியத்திற்கும் உதவிடும் சிறந்த காய்கறியாகும். வைட்டமின் சி போன்றவைகளும் நிறைந்திருப்பது கூடுதல் பலம் சேர்க்கும்.


    சுரைக்காய்:

    இதனை அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் அபரிமிதமான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். இதில் கலோரிகள் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் நீரேற்றத்துக்கும், உடல் எடை குறைப்புக்கும் சிறந்தது. மேலும் சுரைக்காயில் வைட்டமின்கள் சி, கே, கால்சியம், மெக்னீசியம் போன்றவையும் நிறைந்துள்ளன. ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், செரிமானத்தையும் மேம்படுத்தும்.

     



    பாகற்காய்:

    தனித்துவமான கசப்பான சுவை கொண்ட இந்த காய் ரத்த சர்க்கரை அளவை குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வழிவகுக்கும். பாகற்காயில் வைட்டமின்கள் ஏ, சி, கே, இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து ஆகியவை அபரிமிதமாக நிறைந்துள்ளன.


    வெள்ளைப்பூசணி:

    மிகக் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட இதுவும் உடல் எடை குறைப்புக்கு வழிவகுக்கும் ஊட்டச்சத்துக்கள் கொண்டது. இதில் வைட்டமின்கள் ஏ, சி போன்றவை மிகுந்துள்ளன. இதய ஆரோக்கியம் மற்றும் தசை செயல்பாட்டிற்கு முக்கியமான பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளன. இவைகளில் ஒன்றையாவது தினசரி உணவில் இடம் பெற செய்வது ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். உடலின் ஊட்டச்சத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும்.


    வெண்டைக்காய்

    'பிந்தி', 'லேடி பிங்கர்' என்றும் அழைக்கப்படும் இது குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட சுவையான காய்கறியாகும். உடல் எடை மேலாண்மைக்கும், செரிமானத்துக்கும் நன்மை பயக்கும். வைட்டமின்கள் ஏ, சி, பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் மிகுந்தது. உடலின் இணைப்பு பகுதிகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆரோக்கியத்திற்கு பாதகமாக செயல்படாது.
    • அதிகமான பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.

    சர்க்கரை நோயாளிகளில் பலர் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக குறைந்த கலோரிகள் கொண்ட செயற்கை இனிப்பூட்டிகளை பயன்படுத்துகின்றனர்.

    அஸ்பார்டேம், சாக்கிரின், சுக்ரலோஸ், ஸ்டிவியா, சார்பிட்டால், அசிசல் பேம் போன்றவை கலந்த செயற்கை இனிப்பூட்டிகள் ஐஸ்கிரீம், குளிர்பானங்கள், செயற்கை பழச்சாறுகள், சூயிங்கம் ஆகியவற்றில் சேர்க்கப்படுகிறது.

    வேதியியல் ரீதியாக தயாரிக்கப்படும் இவை வெள்ளை சர்க்கரையை விட 200 முதல் 700 மடங்கு இனிப்பு அதிகம் கொண்டவை. இது குளுக்கோசில் இருந்து மாறுபடுவதால் ரத்த சர்க்கரையை அதிகப்படுத்தாது.

    நிபுணர்கள் பரிந்துரையின்படி அஸ்பார்டேம் போன்ற செயற்கை இனிப்பூட்டிகளை ஒரு கிலோ உடல் எடைக்கு 40 மில்லி கிராம் வரை ஒருவர் உட்கொள்ளலாம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    செயற்கை இனிப்பூட்டிகளை பயன்படுத்துவதால் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் என்று எந்த ஆராய்ச்சியும் இதுவரை நிரூபிக்கவில்லை. தினசரி உட்கொள்ளும் மிகக் குறைந்த அளவு செயற்கை இனிப்பூட்டிகளால் புற்றுநோய் ஏற்படாது.

    செயற்கை இனிப்பூட்டிகளை பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு பாதகமாக செயல்படாது. இருப்பினும் அதிகமான பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.

    ×