search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநிலங்களவை உறுப்பினர்"

    • உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
    • இதனால் இந்தியாவின் பதக்கம் பறிபோனது. இந்த விவகாரத்தால் நாடே கொதிப்படைந்துள்ளது.

    புதுடெல்லி:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.

    ஆனால், வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி திடீரென அறிவித்தது. இதனால் இந்தியாவின் பதக்கம் பறிபோனது. இந்த விவகாரத்தால் நாடே கொதிப்படைந்து இருக்கிறது.

    இந்த விவகாரம் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. வினேஷ் போகத் தகுதிநீக்கம் விவகாரத்தில் யார் பின்னால் இருக்கிறார்கள் என்பதை அறிய விரும்புவதாக எதிர்க்கட்சிகள் குரலெழுப்பின. இந்தப் பிரச்சனையை எழுப்ப அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் அனுமதிக்காததால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    இதற்கிடையே, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை அரியானா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது என முன்னாள் முதல் மந்திரி பூபிந்தர் சிங் ஹூடா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தால் அரியானா சார்பில் அவரை ராஜ்யசபாவுக்கு அனுப்புவோம் என தெரிவித்தார்.

    இந்நிலையில், வினேஷ் போகத் ராஜ்யசபா உறுப்பினர் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ராஜ்யசபா உறுப்பினராக 30 வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வினேஷ் போகத்துக்கு ஆகஸ்ட் 25-ம் தேதி 30 வயதாகிறது.

    ராஜ்யசபா தேர்தல் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள் ஆகஸ்ட் 21 ஆகும். எனவே வினேஷ் போகத்தால் வேட்புமனு தாக்கல் செய்யமுடியாது என்பதால் அவர் ராஜ்யசபா உறுப்பினர் பதவி பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெய்சங்கர் இதற்கு முன் 2019-ல் மாநிலங்களை உறுப்பினராக தேர்வானார்
    • திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஐந்து பேர் பதவி ஏற்பு

    மத்திய அரசின் வெளியுறவுத்துறை மந்திரியாக இருப்பவர் ஜெய்சங்கர். இவர் மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார். இதன்மூலம் 2-வது முறையாக ஜெய்சங்கர் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

    மேலும், பாபுபாய் ஜெசங்பாய் தேசாய் (குஜராத்), கேஸ்ரீதேவ்சிங் திக்விஜய் சங் ஜாலா (குஜராத்), நாகேந்த்ரா ராய் (மேற்கு வங்காளம்) ஆகியோர் பா.ஜனதா மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டனர்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தெரிக் ஓ'பிரைன், டோலா சென், சுகேந்து சேகர் ராய், பிரகாஷ் சிக் பராய்க், சமிருல் இஸ்லாம் ஆகிய ஐந்து பேரும் மாநிலங்களை எம்.பி.யாக பதவி ஏற்றனர்.

    இவர்களுக்கு மாநிலங்களவை சேர்மன் ஜெக்தீப் தன்கார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஜெய்சங்கர் ஆங்கிலத்திலும், ஓ'பிரைன், சென், ராய் ஆகியோர் பெங்கால் மொழியிலும் பதவி ஏற்றனர்.

    ×