என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாய் தகராறு"
- ஏழுமலை மனைவி பாஞ்சாலை என்பவருக்கும் வீட்டுமனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
- கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே சோமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையபெருமாள் (வயது 45). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மனைவி பாஞ்சாலை என்பவருக்கும் வீட்டுமனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இளையபெருமாளின் மனைவி மணிமேகலை, சம்பவத்தன்று பாஞ்சாலை யிடம் வீட்டுமனை சம்பந்தமாக பேசியுள்ளார். இதில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது பாஞ்சாலை அவரது மகன்கள் முருகன், அன்பழகன், சிவா ஆகியோர் சேர்ந்து மணிமேகலை மற்றும் அவரது கணவர் இளையபெருமாளை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதில் காயமடைந்த மணிமேகலை, இளைய பெருமாள் ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது குறித்து மணிமேகலை கொடுத்த புகாரின் அடிப்படையில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அன்பழகன் (25) என்பவரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்