search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்மன் சிலை"

    • கோவில் வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் நாக தேவதை அம்மன் சிலை உள்ளது.
    • கிராம மக்கள் திரண்டு வந்து சாமி சிலை மீது பாம்பு ஆடுவதை கண்டு பக்தி பரவசம் அடைந்தனர்.

    ஆந்திர மாநிலம், பெத்த பள்ளி அடுத்த ஒடேலாவில் சம்பு லிங்கேஸ்வரர், ஆபத் சகாயஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

    கோவில் வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் நாக தேவதை அம்மன் சிலை உள்ளது. கோவில் பூசாரி நாக தேவதை அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது திடீரென நல்ல பாம்பு ஒன்று வந்து நாக தேவதை அம்மன் சிலையின் மீது அமர்ந்தது. பின்னர் சாமி சிலையின் மீது படம் எடுத்து ஆடியது. இந்த செய்தி ஊர் முழுவதும் காட்டு தீ போல் பரவியது. ஏராளமான கிராம மக்கள் திரண்டு வந்து சாமி சிலை மீது பாம்பு ஆடுவதை கண்டு பக்தி பரவசம் அடைந்தனர். சாமியை வணங்கி சென்றனர்.

    இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

    • உடனடியாக அங்கு ஊர் மக்கள் திரண்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    • பழமையான கோவிலில் அம்மன் சிலையை உடைத்து சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.

    கோவை:

    கோவை காருண்யா நகர் அருகே நல்லூர் வயல்பதி என்ற மலைவாழ் மக்களின் கிராமம் உள்ளது.

    இந்த கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான சடையாண்டியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக ராம் கணேஷ் (வயது28) என்பவர் இருந்து வருகிறார்.

    இவர் வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழைமைகளில் கோவிலுக்கு சென்று பூஜை செய்வது வழக்கம். அதன்படி பூசாரி ராஜ்குமார் நேற்று காலை 10.30 மணியளவில் கோவிலுக்கு பூஜை செய்வதற்காக சென்றார்.

    அப்போது கோவில் உள்ள பூமாரியம்மன் சாமி சிலையில் தலை மற்றும் இடது கை ஆகியவை சேதப்படுத்தப்பட்டு உடைந்து கிடந்தது.

    சிலையை யாரோ மர்மநபர் உடைத்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து பூசாரி ராஜ்குமார் ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக அங்கு ஊர் மக்கள் திரண்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த தகவல் கிடைத்ததும் காருண்யாநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஊர் பொதுமக்கள் அம்மன் சிலையை உடைத்தவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இது குறித்து காருண்யா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மலைவாழ் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான கோவிலில் அம்மன் சிலையை உடைத்து சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.

    ×