search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அகில இந்திய ஹாக்கி"

    • கிரிக்கெட் அல்லாத விளையாட்டு வீரர்கள் இன்றும் பொது வெளியில் அறியப்படாதவர்களாகவே உள்ளனர்.
    • ரசிகர்கள் டோலி சாய்வாலாவிடம் ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

    இந்தியாவில் கிரிக்கெட்டை தவிர்த்து மற்ற விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைப்பது கடினமாகவே இருக்கிறது. ஹாக்கி, பேட்மின்டன், தடகளம் போன்ற விளையாட்டுகளுக்கு இந்தியாவில் சமீப காலத்தில் அதிக வரவேற்பு கிடைத்து வந்தாலும், கிரிக்கெட் அல்லாத விளையாட்டு வீரர்கள் இன்றும் பொது வெளியில் அறியப்படாதவர்களாகவே உள்ளனர்.

    இந்த நிலையில், விமான நிலையம் ஒன்றில் ரசிகர்கள் டோலி சாய்வாலாவிடம் ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்ட சம்பவத்தை இந்திய அணியின் ஹாக்கி வீரர் ஹர்திக் சிங் வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

    இது குறித்து பாட்காஸ்ட் ஒன்றில் பேசிய ஹர்திக், "விமான நிலையத்தில் நான் அதை என் கண்களாலேயே பார்த்தேன். ஹர்மன்ப்ரீத், நான், மன்தீப் என நாங்கள் 5-6 பேர் இருந்தோம். டோலி சாய்வாலாவும் இருந்தார். மக்கள் அவருடன் கிளிக் செய்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்த யாருக்கும் எங்களை அடையாளம் தெரியவில்லை. நாங்கள் ஒருவரையொருவர் பார்க்க ஆரம்பித்தோம்."

    "ஹர்மன்ப்ரீத் 150 கோல்களுக்கு மேல் அடித்துள்ளார், மன்தீப் 100க்கும் மேற்பட்ட ஃபீல்டு கோல்களை அடித்துள்ளார். ஒரு தடகள வீரருக்கு புகழும் பணமும் ஒன்றுதான். ஆனால் மக்கள் உங்களை பார்த்து பாராட்டும் போது, ஒரு விளையாட்டு வீரருக்கு அதைவிட பெரிய திருப்தி வேறெதுவும் இல்லை," என்று அவர் தெரிவித்தார்.

    கிரிக்கெட் மற்றும் ஹாக்கி வீரர்களின் யோ யோ டெஸ்ட் முடிவுகள் பற்றி பேசிய ஹர்திக் சிங், "கிரிக்கெட் வீரர்களின் யோ யோ டெஸ்ட் முடிவுகள் 17 முதல் 18 வரை இருக்கும். ஆனால் ஹாக்கி வீரர்களின் யோ யோ டெஸ்ட் முடிவுகள் 22-23 வரை இருக்கும். மேலும், ஏழு பேர் அடங்கிய ஹாக்கி அணி வீரர்களின் அதிகபட்ச ஸ்கோர் 23.8 வரை இருக்கும்," என்று தெரிவித்தார்.

    • ரெயில்வே அணி இந்தப் போட்டி தொடரில் தோல்வி அடையவில்லை.
    • மற்றொரு ஆட்டத்தில் ராணுவம்- கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

    சென்னை:

    94-வது எம்.சி.சி- முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    10 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் கடைசி லீக் ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது. ஒரு போட்டியில் நடப்பு சாம்பியன் ஐ.ஓ.சி. (இந்தியன் ஆயில் நிறுவனம்) 2-6 என்ற கோல் கணக்கில் மத்திய தலைமை செயலகத்திடம் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறியது.

    மற்றொரு ஆட்டத்தில் இந்திய ராணுவம் 6-0 என்ற கோல் கணக்கில் இந்திய விமானப்படையை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.

    நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் முதல் அரைஇறுதியில் ஏ பிரிவில் முதல் இடத்தை பிடித்த ரெயில்வே- பி பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்த பஞ்சாப் நேஷனல் வங்கி ( பி.என்.பி.) அணிகள் மோதுகின்றன.

    ரெயில்வே அணி இந்தப் போட்டி தொடரில் தோல்வி அடையவில்லை. இதனால் அந்த அணி வீரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடுவார்கள். பஞ்சாப் நேஷனல் வங்கி ஒரு ஆட்டத்தில் மட்டுமே தோற்றுள்ளது. இறுதிப்போட்டியில் நுழைய இரு அணிகளும் கடுமையாக போராடும்.

    நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் 2-வது அரைஇறுதியில். பி பிரிவில் முதல் இடத்தை பிடித்த இந்திய ராணுவம்-ஏ பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்த கர்நாடகா அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் ஒரு ஆட்டத்தில் மட்டுமே தோற்று இருந்தன.

    • இந்திய ராணுவ அணி 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.
    • இந்திய கடற்படை அணி முதல் 2 ஆட்டத்திலும் தோற்று இருந்தது.

    சென்னை:

    94-வது எம்.சி.சி- முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த 5-வது நாள் போட்டிகளில் இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐ.ஓ.சி.) அணி 4-3 என்ற கோல் கணக்கில் கர்நாட காவையும், பஞ்சாப் நேஷனல் வங்கி 1-0 என்ற கணக்கில் இந்திய விமானப் படையையும் தோற்கடித்தன.

    இன்று மாலை 4.15 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் சி.ஏ.ஜி. (தணிக்கை துறை அலுவலகம்) அணிகள் மோதுகின்றன.

    சி.ஏ.ஜி. அணி தொடக்க ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் தமிழகத்துடன் டிரா செய்தது. 2-வது போட்டியில் 6-2 என்ற கணக்கில் பஞ்சாப் நேஷனல் வங்கியையும், 3-வது ஆட்டத்தில் 2-1 என்ற கணக்கில் இந்திய விமானப்படையை தோற்கடித்தது. அந்த அணி இந்திய ராணுவத்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    இந்திய ராணுவ அணி 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

    மாலை 6 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் இந்திய கடற்படை மத்திய தலைமை செயலக அணிகள் மோதுகின்றன.

    இந்திய கடற்படை அணி முதல் 2 ஆட்டத்திலும் தோற்று இருந்தது. ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் அந்த அணி இருக்கிறது.

    மத்திய தலைமை செயலக அணியும் முதல் 2 போட்டியில் தோற்று இருந்தது. அந்த அணியும் முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.

    ×