என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரவுபதி"

    • திரவுபதிக்கு பாதுகாப்பாக இருப்பேன் என்று கிருஷ்ணர் வாக்குறுதி அளித்தார்.
    • சூரியன் அஸ்தமன காலத்திற்கு பிறகு ரக்‌ஷாபந்தன் கொண்டாடக்கூடாது

    இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக ரக்ஷாபந்தன், இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களும் கொண்டாடலாம். ரக்ஷாபந்தன் நாளில், சகோதர சகோதரிகள் ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பரிமாறி, நேசத்தை உறுதி செய்து சகோதரத்துவத்தை கொண்டாடுகிறார்கள்.

    அதன் அடையாளமாக சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் கைகளில் ராக்கி கட்டி, அவர்களின் நெற்றியில் திலகம் பூசிவிடுவார்கள். சகோதரர்கள் தங்கள் சகோதரிகளை பாதுகாப்பதாகவும், அவர்களை நேசிப்பதாகவும் பரிசுப்பொருட்களை கொடுத்து உறுதியளிக்கிறார்கள்.

    மகாபாரதத்தில் ஒருமுறை கிருஷ்ணரின் கையில் இருந்து வழிந்த ரத்தத்தை தடுப்பதற்காக திரெளபதி தனது புடவையை கிழித்து கட்டு போட்டாள். இது கிருஷ்ணரின் மனதை நெகிழச்செய்தது. அன்று முதல் திரெளபதியை தனது சகோதரியாக ஏற்று, எப்போதும் அவளுக்கு பாதுகாப்பாக இருப்பேன் என கிருஷ்ணர் வாக்குறுதி அளித்தார்.

    அதன்படியே கவுரவர்கள் திரௌபதியை துகிலுரிக்க முயன்றபோது அவள் கிருஷ்ணா என குரல் எழுப்ப, அவளது மானத்தை காப்பாற்றினார் கிருஷ்ணர். அதன் நினைவாகவே ரக்ஷாபந்தன் கொண்டாடப்படுகிறது.

    நல்ல நேரம்

    பந்தரகல் எனப்படும் முகூர்த்த நேரத்திலேயே சகோதரிகள் தங்களின் சகோதரர்கள் கைகளில் ராக்கி கட்ட வேண்டும். மற்ற நேரங்களில் ராக்கி கட்டுவது அபசகுணமாகக் கருதப்படுகிறது. பந்தரகல் இந்த ஆண்டு ஆகஸ்ட் 30-ந் தேதி இரவு 9.02 மணிக்கே தொடங்குகிறது. அதனால் இந்த சமயத்தில் மட்டுமே ராக்கி அணிவிக்க வேண்டும்.

    அதேபோல் அக்டோபர் 31-ந்தேதி காலை 6.20 மணிமுதல் 7.50 மணிவரையிலான நேரமும், அதன்பிறகு காலை 11.10  மணிமுதல் மாலை 3.50 மணி வரையிலான நேரமும் ராக்கி அணிவிப்பதற்கான நல்ல நேரமாக சொல்லப்பட்டுள்ளது.

    பொதுவாக சூரியன் அஸ்தமன காலத்திற்கு பிறகு ரக்ஷாபந்தன் விழா கொண்டாடக் கூடாது என்பது ஐதீகம். ஒருவேளை இந்த முகூர்த்த நேரத்தில் தங்களின் சகோதரருக்கு ராக்கி அணிவிக்க முடியாதவர்கள் ஆகஸ்ட் 31-ந் தேதி மாலை 5.30 மணிமுதல் 7.05 மணி வரையிலான நேரத்தில் ராக்கி அணிவிக்கலாம். ஆகஸ்ட் 30-ந் தேதி சகோதரர்களுக்கு ராக்கி அணிவிக்க நினைப்பவர்கள் இரவு 9.05 மணி முதல் 10.48 மணி வரையிலான நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    • ஒருநாள் பாண்டவர்களும், கிருஷ்ணரும் தோட்டத்தில் இருந்த குளத்தில் நீராடினர்.
    • திரவுபதி கொடுத்த துணியை இடுப்பில் சுற்றிக் கொண்டு கண்ணன் கரையேறினான்.

    ஒருநாள் பாண்டவர்களும், கிருஷ்ணரும் தோட்டத்தில் இருந்த குளத்தில் நீராடினர்.

    அனைவரும் கரையேறிய பின்பும் கிருஷ்ணர் நீரிலேயே இருந்தார்.

    "கண்ணா, சீக்கிரம் வா!" என்று குரல் கொடுத்துவிட்டு அர்ஜுனன் உலர் ஆடையை அணிந்து கொள்ளப் போய்விட்டான்.

    பெண்கள் பகுதியில் கடைசியாக கரையை அடைந்த திரவுபதி,

    "கண்ணன் இன்னும் ஏன் வெளியே வராமல் நீரிலேயே துலாவிக் கொண்டிருக்கிறான்!" என நின்று யோசித்தாள்.

    "அவன் கட்டியிருந்த உடை நீச்சலடிக்கும்போது நழுவி விழுந்திருக்கும்.

    அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறான்" என யூகம் செய்து புரிந்து கொண்டாள்.

    உடனே தன் புடவையில் ஒரு பகுதியை கிழித்து கண்ணனை நோக்கி வீசிவிட்டு நகர்ந்தாள்.

    திரவுபதி கொடுத்த துணியை இடுப்பில் சுற்றிக் கொண்டு கண்ணன் கரையேறினான்.

    இப்படி கண்ணன் அணிந்து கொள்ள திரவுபதி செய்த உதவியே, துரியோதனன் அவையில் அவளை

    துச்சாதனன் துகிலுரிய முற்பட்டபோது, அவளது மானம் காக்கப்பட பிரதியுபகாரமாக அமைந்தது என சான்றோர்கள் கூறுகின்றனர்.

    • அந்த அனாதரட்சகன் உடனே கருணை புரிய, திரவுபதியின் புடவை வளர்ந்து கொண்டே போனது.
    • துச்சாதனன் இழுத்து போட்ட புடவை மலைபோல் கிடக்க அவன் கை ஓய்ந்து, கீழே சாய்ந்தான்.

    பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்றதால் துரியோதனன், திரவுபதியை துகிலுறியுமாறு துச்சாதனிடம் சொன்னான்.

    அந்த துஷ்டனும் சிறிதும் இரக்கமில்லாமல் திரவுபதியின் புடவை தலைப்பை இழுத்து இழுக்கத் தொடங்கினான்.

    சபையில் இருந்தவர்கள் எல்லாம் செயலற்று, வாய்மூடி ஊமைகளாயினர்.

    திரவுபதி இரண்டு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்தி, "ஹரி ஹரி கிருஷ்ணா, அபயம்! அபயம்! நீதான் எனக்கு துணை" என ஓல மிட்டாள்.

    அந்த அனாதரட்சகன் உடனே கருணை புரிய, திரவுபதியின் புடவை வளர்ந்து கொண்டே போனது.

    துச்சாதனன் அதைப்பற்றி இழுத்து இழுத்து போட்ட புடவை மலைபோல் கிடக்க அவன் கை ஓய்ந்து, கீழே சாய்ந்தான்.

    பகவானுக்கு சிறிய அளவு நிவேதனம் படைத்தாலும், அவர் பன்மடங்கு அனுக்கிரகம் செய்வார் என்பதையே இது காட்டுகிறது.

    • நம் வார்த்தைகள் கூட, பின்னால் நடக்கும் சில விளைவுகளுக்கு பொறுப்பு.
    • பேசும் வார்த்தைகளில் விஷத்தைக் கக்கும் ஒரே இனம் மனித இனம் தான்.

    பாரதப் போர் நிறைவு பெற்றது. திரவுபதி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தனக்கு மிகவும் வயதானதைப் போல உணர்ந்தாள். அஸ்தினாபுரம் நகரைச் சுற்றி கைம்பெண்கள் அதிகமாக இருந்தனர். ஒரு சில ஆண்கள் மட்டுமே தெருக்களில் தென்பட்டனர்.

    ஆதரவற்ற நிலையில் இருந்த பிள்ளைகள் பலரும், வீதிகளில் சுற்றித் திரிவதைக் கண்டு திரவுபதி மனம் வருந்தினாள். ஒரு போர்க்களம் மக்கள் வாழ்வை புரட்டிப் போட்டுவிட்டதை அவள் உணர்ந்தாள். அஸ்தினாபுரத்தின் அரண்மனையில் நின்று ஓரிடத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    அப்போது அவள் நின்ற அறைக்குள் நுழைந்தார் கிருஷ்ணர். அவரைக் கண்ட தும் ஒடோடி வந்து அவர் பாதம் பணிந்து வணங்கினாள். கிருஷ்ணர், அவளின் தலையை தொட்டு ஆசீர்வதித்தார். திரவுபதியோ அழத் தொடங்கினாள்.


    திரவுபதி ஆசுவாசப்படுத்திக் கொள்ள நேரம் கொடுத்த கிருஷ்ணர். அங்கிருந்து விலகி ஓரிடத்தில் அமர்ந்தார். பின்னர் அவளிடம் கேட்டார் "திரவுபதி என்ன நடந்து விட்டது?"

    "ஒன்றும் நடக்கவில்லையே கிருஷ்ணா!" என்று விரக்தியாக பதிலளித்தாள், திரவுபதி.

    கிருஷ்ணரோ, "விதி கொடூரமானது பாஞ்சாலி, நாம் நினைப்பது போல் வேலை செய்யாது! அது அதன் போக்கில் அதனுடைய செயல்களைச் செய்கிறது.

    முடிவுகளையும் மாற்றுகிறது. நீ பழிவாங்க நினைத்தாய்... அதில் வெற்றியும் பெற்றுவிட்டாய். உன் பழிவாங்கல் முடிந்தது. துரியோதனனும், துச்சாதனனும் மட்டுமல்ல, கவுரவர்கள் அனைவரும் மடித்துவிட்டனர். நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்! என்றார்.

    "சகோதரா.. என் காயங்களை ஆற்ற வந்தீர்களா? அல்லது அதை இன்னும் கிளறி புண்படுத்த வந்தீர்களா?" என்று கோபமாக கேட்டாள் திரவுபதி.


    கிருஷ்ணரிடம் என்றும் மாறாத புன்னகை உதித்தது. "திரவுபதி, உண்மை நிலையை உனக்கு உணர்த்தவே வந்தேன். எல்லாம் நமது தொலைநோக்கு பார்வையற்ற செயல்களின் விளைவு என்பதை உணர்த்த வந்தேன்' என்றார். "இப்போது என்ன சொல்ல வருகிறீர்கள் கிருஷ்ணா.. அனைத்துக்கும் நான்தான் பொறுப்பா?" என்றாள், திரவுபதி.

    "இல்லை திரவுபதி. நீ மட்டுமே காரணம் இல்லை.

    ஆனால், உன்செயல்களில் நீ கொஞ்சம் தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருந்தால், இவ்வளவு துன்பங்கள் நேர்ந்திருக்காது''

    "நான் என்ன செய்திருக்க முடியும் கிருஷ்ணா?"

    நீ நிறைய செய்திருக்க முடியும் பாஞ்சாலி, உனது சுயம்வரம் நடந்தபோது கர்ணனை அவமானப்படுத்தாமல் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பளித்து இருந்தால், ஒருவேளை முடிவு வேறுவிதமாக இருந்திருக்கக் கூடும்.

    குந்தி உன்னை ஐந்து பேருக்கு மனைவியாகும்படி கட்டளையிட்டதை, ஏற்றுக் கொள்ளாமல் இருந்தாலும், முடிவு வேறுவிதமாக இருந்திருக்கும்.

    உன் அரண்மனையில் துரியோதனனை பார்வையற்றவரின் மகன்கள் குருடர்கள்' என்று அவமதித்தாய், அவ்வாறு நீ சொல்லாமல் இருந்திருந்தால். துரியோதன சபையில் உனக்கு நேர்ந்த அவமானத்தை தவிர்த்திருக்கலாம்.

    நம் வார்த்தைகள் கூட, பின்னால் நடக்கும் சில விளைவுகளுக்கு பொறுப்பு தான் திரவுபதி. பேசுவதற்கு முன் ஒவ்வொரு வார்த்தையையும் எடைபோடுவது மிகவும் முக்கியமானது. இல்லையெனில், அதன் தீய விளைவுகள் உன்னை மட்டுமல்ல, உனது சுற்றுப்புறத்தையும் மகிழ்ச்சியற்றதாக ஆக்கிவிடும்.


    பற்களில் விஷம் இல்லாமலேயே, பேசும் வார்த்தைகளில் விஷத்தைக் கக்கும் ஒரே இனம் மனித இனம் தான். இப்போது உனக்கு புரிகிறதா திரவுபதி?" என்று தன்னுடைய விளக்கத்தை அளித்தார். கிருஷ்ணர்.

    நாம் எப்போதும் வார்த்தைகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டும். யாருடைய மனதையும் நம் வார்த்தைகள் புண்படுத்திவிடக்கூடாது என்று திரவுபதி உணர்ந்துகொண்டாள்.

    ×