என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நில மோசடி வழக்கு"

    • ஞானம்மாள் திருவாரூர் மாவட்ட குற்றபிரிவு போலீசில் புகார் அளித்தார்.
    • சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் ஞானம்மாள் தரப்பில் சென்னை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 59). அ.தி.மு.க.வை சேர்ந்த இவர், மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக உள்ளார்.

    இவர் கடந்த சில ஆண்டு மன்னார்குடி சேர்ந்த ஞானம்மாள் என்ற பெண்ணுக்கு சொந்தமான ரூ.30 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப்பதிவு செய்துள்ளார். இது குறித்து ஞானம்மாள் திருவாரூர் மாவட்ட குற்றபிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் ஞானம்மாள் தரப்பில் சென்னை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.சந்திரசேகரன் வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றியும், சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி 3 மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

    இந்நிலையில் இன்று காலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மனோகரன் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பரசன் தலைமையில் 25 க்கும் மேற்பட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் உள்ளதா என்பது குறித்தும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடைபெற்று வருவது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோடிக்கணக்கான பணம் பெற்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
    • மகளிர் காவல் நிலையத்தில் ரகசிய அறையில் வைத்து 15 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

    காரைக்கால் பார்வதீஸ்வரர் கோவில் நில மோசடி வழக்கில் காரைக்கால் துணை ஆட்சியர் ஜான்சான் கைது செய்யப்பட்டுள்ளார்.

    அரசு மனைப் பட்டா வழங்குவதாகக் கூறி கோவில் இடம் மோசடியில் கோடிக்கணக்கான பணம் பெற்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

    மகளிர் காவல் நிலையத்தில் ரகசிய அறையில் வைத்து 15 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

    விசாரணையின் இறுதியில் வழக்கு பதிவு செய்து காரைக்கால் துணை ஆட்சியர் ஜான்சனை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இதற்கிடையே, காரைக்காலைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் ஜேசிபி.ஆனந்த் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

    மேலும், போலி ஆவணங்கள் மூலம் நிலம் விற்பதற்கு இடைத்தரகர்களாக செயல்பட்ட காரைக்கால் சிவராமன், திருமலைராஜன், காரைக்கால் நகராட்சி நில அளவையர் ரேணுகாதேவி, பத்திர எழுத்தர் கார்த்தி ஆகியோரை போலீசார் ஏற்கெனவே கைது செய்துள்ளனர்.

    இந்நிலையில், மாவட்ட துணை ஆட்சியர் ஜான்சன் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×