என் மலர்
நீங்கள் தேடியது "பஞ்சமி வழிபாடு"
- பெருவாரியான குடும்பங்களுக்கு நாகங்கள் குலதெய்வமாக வணங்கப்பட்டு வருகிறது.
- இறைவனை நாகங்கள் வழிபட்டு பேறு பெற்ற தலங்கள் அநேகம் உள்ளது.
ஆனி மாதத்தில் ஸ்கந்த பஞ்சமி, ஆடியில் நாக பஞ்சமி, ஆவணியில் ரிஷி பஞ்சமி, கார்த்திகையில் நாக பஞ்சமி, தை மாதத்தில் வசந்த பஞ்சமி, மாசியில் ரங்க பஞ்சமி, பங்குனியில் ஸ்ரீபஞ்சமி என்று ஏழு பஞ்சமி விரதங்களை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவது தமிழகத்தின் மரபாகும்.
பெருவாரியான குடும்பங்களுக்கு நாகங்கள் குலதெய்வமாக வணங்கப்பட்டு வருகிறது. ஆயில்யம் நட்சத்திர அதிதேவதை நாகராசாவாகும். நாகதோஷ நாக சாப பரிகார பூஜைகளுக்கு ஆயில்யம் நட்சத்திரமும், நாகங்களின் அனுக்கிரகம், அருள் நலம் வேண்டி பூஜித்திட பஞ்சமி திதியும் உத்தமமாகும்.

உரகம், ர, அ, பணா, கவ்வை, அரவு, நாகம், பாம்பு, சர்ப, ஆஷ்லேஷா, கட்செவி, போகி, சுகி, அரி, வியாளம், பன்னகம், மாசுணம், சக்கிரி, புயங்கம், பாந்தள், அங்கதம் எனும் 21 பெயர்களால் அழைக்கப்படுவது ஆயில்யம் நட்சத்திரம்.
பஞ்ச பிரம்மாக்களில் ஒருவரான கசியபமுனிவர் முதலில் கத்துரு முனி பத்னி மூலம் ஆயிரம் சர்ப்பங்களையும், இரண்டவதாக சுவரசை முனி பத்னி மூலம் ஆயிரம் பாம்புகளையும் தோற்றுவித்தார்.
முதன் முதலில் பிறந்தவர் சேஷன் அதனால் ஆதிசேஷன் என்ற பெயருடன் நாகராசாவாக முடி சூட்டப்பட்டார். சாத்வீக குணமும், பொறுமையும், நல்ல சிந்தனையும், கொண்ட ஆதிசேஷனுக்கு சர்ப்பங்களின் பழிவாங்கும் குணமும், கோபமும், முரட்டு சுபாவமும் பிடிக்காமல் அரச பதவியில் இருந்து விலகி தவம் மேற்கொண்டார். தவத்தின் பயனாக இறைவனிடம் வேண்டிய வரத்தின் மூலம் ஆயிரம் தலைகளுடன் பூமியைத் தாங்கும் வர பலத்தை பெற்று வணங்கத்தக்கவரானார்.
பின்னர் சர்பங்களுக்கு அரசனாக அனந்தனும் பாம்புகளுக்கு அரசனாக வாசுகியும் ஆனார்கள், ஆதிசேஷனின் தம்பியர்களான அனந்தன், வாசுகி, தட்சகன், கார்கோடகன், பத்மன், சங்கபாலன், குளிகன், மகாபத்மன் எண்மரும் அண்ணனைப்போல தவமிருந்து அண்ணனுக்கு துணையாக இந்த பூமியை 8 திக்கில் இருந்தும் காக்கும் வரத்தைப் பெற்று அஷ்டதிக் நாகர்கள் ஆனார்கள்.

இறைவனை நாகங்கள் வழிபட்டு பேறு பெற்ற தலங்கள் அநேகம் உள்ளது. நாகர்கோவில், அனந்தமங்கலம். கார்கோடகநல்லூர், வாசுதேவநல்லூர், தச்சநல்லூர், பத்மநேரி, சங்க பாலபுரம் என்று பலவுள்ளன. நாகராசாவான அனந்தின் பெயரால் அனந்த விரதம் திருவனந்தபுரம், அனந்த பத்மநாபன், நாகநாதர், நாகேஸ்வரர்,நாகவல்லி, நாகம்மன், சேஷபுரீஸ்வரர், பாம்புரநாதர் என்ற திருப்பெயர்களும், தெய்வங்களுக்கு குடையாக படுக்கையாக, அணிகலன்கலாக, கச்சைகளாகவும் நாகங்கள் தனி இடத்தைப் பெற்றுள்ளன. புன்னாக மரம் என்ற புன்னை மரமும், புன்னாகவராளி என்ற ராகமும் விசேஷமாக உள்ளது.
- பஞ்சமி திதி என்பது பெண் தெய்வங்களை வழிபடுவதற்கு உகந்த நாளாகும்.
- விரலி மஞ்சளில் மாலை கட்டி வாராஹி அம்மனுக்கு சாற்றலாம்.
தேய்பிறை பஞ்சமி அன்று உக்கிர தெய்வங்களான வாராஹி அம்மன், பிரத்தியங்கரா தேவி, மகாகாளி, உள்ளிட்ட தெய்வங்களை வழிபடுவது வாழ்வில் ஏற்படக்கூடிய இன்னல்களை போக்கும், எதிர்மறையாற்றல், கண் திருஷ்டி, போன்றவை விலகும் என்பதோடு மட்டுமல்லாமல் ஜாதக ரீதியாக ஏற்படக்கூடிய தோஷங்களையும் போக்கும்.
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு பிறகு வரும் ஐந்தாவது நாள், தேய்பிறை பஞ்சமியாக கொண்டாடப்படுகிறது. பஞ்சமி திதி என்பது பெண் தெய்வங்களை வழிபடுவதற்கு உகந்த நாளாகும்.

பஞ்சமி நாளில் வாராஹி அம்மன் வழிபாடு நிலம் கடன் மற்றும் எதிரிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்க உதவும். நீண்ட காலமாக கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், பஞ்சமி அன்று வாராகி அம்மனை எப்படி வழிபட வேண்டும் என்று பார்க்கலாம்.
ஆலயங்களில் வாராஹி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி அன்று சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் பொதுவாகவே மாலை 6 மணிக்கு மேல் அதாவது சூரிய அஸ்தமனமான பிறகு தான் நடக்கும்.

வாராஹி அம்மன் கோவிலுக்கு சென்று மாதுளை பழம், செவ்வரளி பூக்கள் ஆகியவற்றை அம்மனுக்கு அர்ச்சனை செய்துவிட்டு, நல்லெண்ணெய் அல்லது நெய் விளக்கு ஏற்றலாம்.
ஒற்றைப்படை எண்ணிக்கையில் விரலி மஞ்சளில் மாலை கட்டி, அதை கோவிலில் உள்ள வாராஹி அம்மனுக்கு சாற்றலாம்.
கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே வராகி அம்மன் படத்திற்கு முன்பு, புதிய அகல் விளக்குகளை வாங்கி நல்லெண்ணெய் அல்லது நெய் தீபம் ஏற்றலாம்.
வீட்டில் எந்த வழிபாடு செய்தாலும், தீபம் ஏற்றுவதோடு மட்டுமில்லாமல், ஏதேனும் ஒரு உணவை அல்லது இனிப்பை நைவேத்தியமாக வைக்க வேண்டும்.
வாராஹி அம்மனுக்கு அவல், வெல்லம், பானகம், சர்க்கரை பொங்கல், கரும்புச் சாறு, தயிர் சாதம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மாதுளை, போன்றவற்றை நைவேத்தியமாக வைக்கலாம்.
- நெய்தீபம் ஏற்றி அம்மனை வழி பட்டனர்
- குழந்தையின்மை, திருமண தடை, தொழில்தடை ஆகியவை விலகும் என்பது நம்பிக்கை
கலவை:
ஆற்காடு அடுத்து முப்பந்தொட்டியில் பகுதியில் உள்ள வாராஹி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் திரளான பக்தர்கள் வாராஹி அம்மனை வழிபட்டுசெல்வது வழக்கம். இக்கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி அடுத்த 5-வது நாளில் தேய்பிறை பஞ்சமி வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெற்று வந்தது.
இந்த மாதத்திற்கான தேய்பிறை பஞ்சமி வழிபாடு நேற்று காலை நடந்தது. அதில் பக்தர்கள் தேங்காய் மற்றும் பூசணிக்காயை 2 உடைத்து அதில் நெய்தீபம் ஏற்றி அம்மனை வழி பட்டனர்.
நெய் தீபம் ஏற்றி வழிபடுவதால் குடும்பத்தில் உள்ள பிரச்சினை குழந்தையின்மை, திருமண தடை, தொழில்தடை ஆகியவை விலகும் என்பது நீண்ட கால நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இந்த பஞ்சமி வழிபாட்டில் கலந்து கொள்ள மாதந்தோறும் ராணிப்பேட்டை, வேலூர், பெங்களூர் திருப்பத்தூர், சென்னை மற்றும் வெளி மாவட்டம், மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வாராஹி அம்மனை வழிபட்டு அருள் பெற்று செல்கின்றனர்.