search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்திரயான் 2"

    • 1969-ம் ஆண்டு ஜூலை மாதம் 20-ந் தேதி முதன் முறையாக நாசா விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் அப்பல்லோ விண்கலம் மூலம் நிலவில் தரை இறங்கினார்.
    • நாசா விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் கால் பதித்த இடத்தில் ஒரு கருவியை வைத்தார்.

    வாஷிங்டன்:

    நிலவில் என்ன இருக்கிறது என்பதை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ( இஸ்ரோ) கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 22 -ந்தேதி சந்திரயான்- 2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது.

    இதில் இருந்து பிரிந்த தகவல் தொடர்பு கருவியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் தொடர்ந்து நிலவை சுற்றி வருகிறது.

    சுமார் 3 ஆண்டு காலம் நிலவை சுற்றும் இந்த ஆர்பிட்டர் நிலவின் கரடு முரடான நிலப்பரப்பு உள்ளிட்ட பல்வேறு அரிய வகை புகைப்படங்களை இஸ்ரோவுக்கு அனுப்பி வருகிறது.

    54 ஆண்டுகளுக்கு முன்பு 1969-ம் ஆண்டு ஜூலை மாதம் 20-ந் தேதி முதன் முறையாக நாசா விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் அப்பல்லோ விண்கலம் மூலம் நிலவில் தரை இறங்கினார். இதன் மூலம் நிலவில் கால் பதித்த முதல் விண்வெளி வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். அப்போது அவர் தான் கால் பதித்த இடத்தில் ஒரு கருவியை வைத்தார்.

    அந்த கருவி தற்போதும் செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தை தற்போது சந்திரயான்-2 ஆர்பிட்டர் வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளது. இந்த புகைப்படத்தை இஸ்ரோவுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

    • இருள் சூழ்ந்துள்ள நிலவின் தென்துருவ பகுதியில், லேண்டரின் இருப்பிடத்தை சந்திரயான் 2 படம் பிடித்துள்ளது.
    • சந்திரயான்- 2ன் டிஎப்எஸ்ஏஆர் என்ற ரேடர் கருவி மூலம் கடந்த 6ம் தேதி எடுக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முயற்சியால் (இஸ்ரோ) சந்திரனின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதனைச் சாதித்த முதல் நாடு என்ற பெருமையை நமது நாடு கொண்டாடி வருகிறது.

    விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலனின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வு மேற்கொண்டது.

    இந்த ஆய்வின் மூலம் நிலவில் இரும்பு, அலுமினியம், சல்பர் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை கண்டறிந்து பிரக்யான் ரோவர் உறுதி செய்தது.

    இதையடுத்த, 14 நாட்கள் தனது ஆய்வு பணிகளை முடித்துக் கொண்ட ரோவர் உறக்க நிலையில் உள்ளது.

    இந்நிலையில், நிலவில் இருக்கும் சந்திரயான்- 3ன் லேண்டரை, சந்திரயான்- 2 ஆர்பிட்டர் படம் பிடித்துள்ளது. இதனை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

    லேண்டரின் புதிய படமானது, சந்திரயான்- 2ன் டிஎப்எஸ்ஏஆர் என்ற ரேடர் கருவி மூலம் கடந்த 6ம் தேதி எடுக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    இருள் சூழ்ந்துள்ள நிலவின் தென்துருவ பகுதியில், லேண்டரின் இருப்பிடத்தை சந்திரயான் 2 படம் பிடித்துள்ளது.

    சந்திரயான்-2ன் இந்த ரேடர் கருவிதான், சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் எங்கு தரையிறங்க வேண்டும் என்பதை தொடர்ந்து புகைப்படும் எடுத்து அனுப்பியது.

    ×