search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லிபியா"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாதுகாப்பு பிரச்சனையால் லிபியாவில் செயல்பட்டு வந்த தூதரகத்தை இந்திய அரசு மூடியது.
    • மூடப்பட்ட இந்திய தூதரகம் 5 ஆண்டுக்குப் பிறகு திரிபோலியில் மீண்டும் திறக்கப்பட்டது.

    திரிபோலி:

    லிபியா நாட்டில் கிளர்ச்சியாளர்களின் போராட்டம், ராணுவத்தின் அடக்குமுறை தாக்குதல் என போர்க்களமாக காட்சி அளித்தது. அங்கு சிக்கித் தவித்த 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    பாதுகாப்பு பிரச்சனை காரணமாக லிபியாவில் செயல்பட்டு வந்த இந்திய தூதரகத்தை கடந்த 2019-ம் ஆண்டில் இந்திய அரசு மூடியது.

    இந்நிலையில், லிபியா தலைநகர் திரிபோலியில் மூடப்பட்ட இந்திய தூதரகம் 5 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

    லிபியா குடிமக்களுக்கு விசா வழங்குதல் மற்றும் இந்திய வெளிநாட்டினருக்கான வேலை நிலைமைகளை சரிபார்த்தல் உள்ளிட்டவை இந்த தூதரகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • லிபியா வெள்ளத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்
    • தற்போது 3,958 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. தெரிவித்துள்ளது

    வடக்கு ஆப்பிரிக்க நாடான லிபியாவில் கடந்த வாரம் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், பழமையான இரண்டு அணைகள் உடைந்து நகருக்குள் வெள்ளம் புகுந்தது.

    இதனால் பலி எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது. முதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அதன்பின் 10 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர் எனத் தகவல் வெளியானது.

    இந்த நிலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையை திருத்தி ஐ.நா. வெளியிட்டுள்ளது. ஐ.நா.வுக்கான மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு அதிகாரி, "3,958 பேர் உயிரிழந்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக 11,300 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அது திருத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

    அதேவேளையில் 9 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச் செயலாளரின் செய்தி தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக், "உலக சுகாதார அமைப்புடன் இணைந்து சரியான எண்ணிக்கை வெளிப்படுத்த இருக்கிறோம்'' என்றார்.

    ஆனால், லிபியாவின் செஞ்சிலுவை சங்கம், வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் அதிகப்படியான உயிர்ப்பலி எண்ணிக்கையை ஐ.நா.வுக்கு வழங்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.

    மிகவும் பாதிப்புக்கு உள்ளான டெர்னாவில் 1,20,000 மக்கள் வசித்து வருகின்றனர். ஒட்டுமொத்த நகரமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம். அல்லது சேற்றில் சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியானது.

    ரஷியா நடமாடும் மருத்துவமனை உள்ளிட்ட உதவிகளை செய்துள்ளது. இத்தாலி கப்பற்படைக்கு சொந்தமான கப்பலை அனுப்பியுள்ளது. அதில் தற்காலிக கூடாரம் அமைப்பதற்கான பொருட்கள், தண்ணீர் குழாய், டிராக்டர் போன்றவற்றை அனுப்பி வைத்துள்ளது.

    ×