search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மால்"

    • ஆரம்ப சலுகையாக இந்திய மதிப்பில் ரூ.15 க்கும் குறைவாக [PKR 50] பொருட்கள் வழங்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது
    • கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த மக்கள், துணிகள், பொருட்கள் என அனைத்தையும் திருடி அதை வீடியோவும் எடுத்து மகிழ்ந்துள்ளனர்.

    பாகிஸ்தானில் செகண்ட் ஹேண்ட் துணிகள் மற்றும் பொருட்களை விற்கும் மால் திறக்கப்பட 30 நிமிடங்களுக்குள் மொத்தமாக கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில்  கடந்த வெள்ளிக்கிழமை அன்று ட்ரீம் பஜார் என்று அழைக்கப்படும் மால் திறப்புக்குப் பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டது.

    ஆரம்ப சலுகையாக இந்திய மதிப்பில் ரூ.15 க்கும் குறைவாக [PKR 50] பொருட்கள் வழங்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்த நிலையில் மால் திறப்பு விழாவில் ஆயிரக்கணக்கோர் திரண்டனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மால் ஊழியர்கள் கதவை அடைத்தனர்.

    ஆனால் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த மக்கள், துணிகள், பொருட்கள் என அனைத்தையும் திருடி அதை வீடியோவும் எடுத்து மகிழ்ந்துள்ளனர். மதியம் 3 மணிக்கு மால் திறக்கப்பட்ட நிலையில் 3.30 மணிக்குள் மால் முற்றிலுமாக காலி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • தனது கணவன் மற்றும் கணவனின் சகோதரனுடன் கலேரியா மால் வெளியே அந்த பெண் நின்றுகொண்டிருந்தார்.
    • இதுதான் முதல்வர் யோகி ஆதித்தநாத் பேசும் நீதியா என்று அந்த பெண் கேள்வியெழுப்பியுள்ளார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் கார்டன் கலேரியா மால் வளாகத்தின் வெளியே கணவனுடன் நின்றுகொண்டிருந்த பெண்ணை பார்த்து ரேட் என்ன என்று தகாத முறையில் கேட்ட நபரால் அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

    தனது கணவன் மற்றும் கணவனின் சகோதரனுடன் கலேரியா மால் வெளியே அந்த பெண் நின்றுகொண்டிருந்தார். அப்போது மதுபோதையில் மற்றொரு பெண்ணுடன் வந்த நபர் ஒருவர், உனது ரேட் என்ன என்று கேட்டு , எங்க அப்பா, மாமா எல்லாமே டி.எஸ்.பி என்று கூறியுள்ளார். இதனால் பெண்ணின் கணவருக்கும் அந்த நபருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

    இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மேலும் மற்றொரு வீடியோவில் பாதிக்கப்பட்ட அழுதுகொண்டே தனக்கு நேர்ந்ததை விவரித்துள்ளார். அதில், இதுதான் முதல்வர் யோகி ஆதித்தநாத் பேசும் நீதியா என்று கேள்வியெழுப்பியுள்ளார். 

    • தினேஷ் குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மால்’.
    • இப்படத்திற்கு ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு செய்துள்ளார் சிவராஜ்.ஆர்.

    இயக்குனர் தினேஷ் குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மால்'. இந்த படத்தில் சாய் கார்த்திக், கஜராஜ், கவுரி நந்தா, அஸ்ரப், தினேஷ் கார்த்திக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பத்மயன் சிவானந்த் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு செய்துள்ளார் சிவராஜ்.ஆர்.

    சிலை கடத்தல் சம்பவத்தை மையமாக வைத்து பரபரப்பாக உருவாகியுள்ள இப்படம் நேரடியாக ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது

    ×