search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டிட அனுமதி"

    • சென்னை உள்ளிட்ட நகரங்களில் கட்டிட அனுமதி பெறுவதற்காக சதுர அடிக்கு 126 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
    • வீடு கட்டுவதற்கான கட்டிட வரைபட அனுமதி கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து நிலை உள்ளாட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் 2500 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவிலான நிலத்தில், 3500 சதுர அடி வரையிலான பரப்பளவில் வீடு கட்டுவதற்கு ஆன்லைனில் அனுமதி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கடந்த மாதம் கொண்டு வந்தது. அதற்கான கட்டணங்கள் 100 சதவீத வரை உயர்த்தப்பட்டன. அதைத் தொடர்ந்து பிற அளவிலான கட்டிடங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் கட்டிட அனுமதி பெறுவதற்கான கட்டணத்தையும் தமிழக அரசு உயர்த்தியிருக்கிறது.

    சென்னை உள்ளிட்ட நகரங்களில் கட்டிட அனுமதி பெறுவதற்காக சதுர அடிக்கு 126 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இது கட்டிடம் கட்டுவதற்காக ஆகும் செலவில் கிட்டத்தட்ட 10 சதவீதம் ஆகும். கட்டிட வரைபட அனுமதி பெறுவதற்கான கட்டணத்தை தமிழக அரசு இந்த அளவுக்கு உயர்த்தியிருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. எனவே வீடு கட்டுவதற்கான கட்டிட வரைபட அனுமதி கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பொதுமக்களின் சொந்த வீடு கனவைத் தகர்த்த திமுக அரசு.
    • சுயசான்று அடிப்படையில் வரைபட அனுமதி வழங்குவதற்கான பகல் கொள்ளை கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்.

    சென்னை:

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில்,

    ஆட்சிக்கு வந்ததில் இருந்து, சொத்து வரி, பதிவுக் கட்டணம், கட்டுமான பொருள்கள் விலை என அனைத்தையும் உயர்த்தி, பொதுமக்களின் சொந்த வீடு கனவைத் தகர்த்த திமுக அரசு, தற்போது, வீட்டு வரைபட அனுமதிக் கட்டணத்தையும் இரண்டு மடங்குக்கும் மேல் உயர்த்தி அதிர்ச்சி அளித்திருக்கிறது. சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என அனைத்துப் பகுதிகளிலும், இந்த சுயசான்று அடிப்படையிலான வரைபட அனுமதிக் கட்டணம் இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    வீட்டு வரைபட அனுமதி வழங்குவதை எளிதாக்குவோம் என்று வாக்குறுதி வழங்கிய திமுக, சென்னையில், 1,000 சதுர அடி இடத்துக்கு, அனுமதி வழங்க சுமார் ரூ.40,000 ஆக இருந்த கட்டணத்தை, ரூ.1,00,000 ஆக ஆக்கியிருப்பதுதான் எளிமையாக்குவதா? ஏற்கனவே, குறித்த நேரத்தில், காலதாமதமின்றி வரைபட அனுமதி பெறப் பல தரப்பினருக்கும் கமிஷன் கொடுக்கும் நிலை இருப்பதாகத் தெரிகிறது. இந்த நிலையில், சுயசான்று அடிப்படை என்று கூறி லஞ்ச ஊழலை அதிகாரப்பூர்வமாக்கியிருக்கிறது திமுக என்பதுதான் உண்மை.

    பொதுமக்கள் சுயசான்று அளித்து, வரைபட அனுமதி பெற, அதிகக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது என்ன விதமான நடைமுறை? அதிகக் கட்டணம் செலுத்தினால், கட்டிட வரைபடம் சரிபார்த்தல், கட்டிடம் கட்டப்படும் இடத்தை நேரில் சென்று பார்வையிடல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளாமல் உடனேயே அனுமதி வழங்குவோம் என்றோ அல்லது, குறைந்த கட்டணம் செலுத்தினால், அனுமதி வழங்கத் தாமதமாக்குவோம் என்றோ கூறுகிறதா திமுக அரசு?

    பொதுமக்கள் எதிர்பார்த்தது, சிக்கலற்ற நடைமுறைகள் மூலம், காலதாமதமின்றி வரைபட அனுமதி வழங்குவதையே தவிர, இரண்டு மடங்கு அதிகக் கட்டணத்தை அல்ல. உடனடியாக, சுயசான்று அடிப்படையில் வரைபட அனுமதி வழங்குவதற்கான பகல் கொள்ளை கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், வழக்கமான கட்டணத்தையே சுயசான்று அடிப்படையிலான அனுமதிக்கும் வசூலிக்க வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • ஆன்லைன் மூலம் கட்டிட அனுமதி பெறும் திட்டத்தின்படி, www.onlineppa.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
    • கட்டுமானப் பணிகள் முடிந்த 30 நாட்களுக்குள் சொத்து வரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    ஆன்லைன் மூலம் கட்டிட அனுமதி பெறும் திட்டத்தின்படி, www.onlineppa.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், திட்ட அனுமதிக்கான கால அளவு 5 ஆண்டுகளாகவும், அதில் கட்டிட விதிமீறல்கள் இருக்கக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. கட்டிட வரைபட அனுமதி அளிக்கப்படும் நாளில் இருந்து 5 ஆண்டுகள் மட்டுமே செல்லும். இந்த அனுமதி உத்தரவு, விண்ணப்பதாரர்தான் நிலத்தின் உரிமையாளர் என்பதற்கான உரிமையை உறுதிப்படுத்தாது. அதை ஆவணமாக பயன்படுத்த இயலாது. சம்பந்தப்பட்ட நிலம், விவசாய நிலமாக, நிறுவனத்துக்கு சொந்தமானதாக, திறந்தவெளிப் பகுதியாக, கேளிக்கை பயன்பாட்டுப் பகுதியாக அல்லது சாலைக்கு ஒதுக்கப்பட்டதாக இருந்தால், அனுமதி உத்தரவு தானாக ரத்து செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஒருங்கிணைந்த கட்டிட விதிகளின்படிதான் கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும். கட்டிடம் கட்டும்போது விதிமீறல் கண்டறியப்பட்டால், உரிய சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். விண்ணப்பதாரரின் சுய சான்றிட்ட ஆவணங்கள் மற்றும் கட்டிட வரைபட அனுமதி ஆகியவை அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு, அதில் ஏதாவது தவறு கண்டறியப்பட்டால், விண்ணப்பதாரருக்கு உரிய தண்டனை விதிக்கப்படும்.

    விண்ணப்பத்தில் காட்டப்பட்ட கட்டிட வடிவமைப்பு, அடித்தளம், பயன்படுத்தப்படும் மரம், கான்கிரீட், கம்பி, கழிவுநீர்த்தொட்டி, மழைநீர் சேகரிப்பு அமைப்பு, தண்ணீர் தொட்டி ஆகியவை உரிய விதிகளின்படி அமைக்கப்பட வேண்டும். தெருக்களில் கட்டுமானப்பொருட்கள், கழிவுகளை கொட்டக்கூடாது. கட்டுமானப் பணிகள் முடிந்த 30 நாட்களுக்குள் சொத்து வரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    • கட்டமைப்பு வசதிக் கட்டணங்களில் இருந்து 100 சதவீதம் விலக்கு இதில் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கட்டிடப்பணி நிறைவடைந்ததும் முடிவுச் சான்று பெற வேண்டியதிலிருந்து விலக்கு போன்ற சலுகைகளும் இத்திட்டத்தில் உள்ளது.

    சென்னை:

    நடுத்தர மக்களின் வீடு கட்டும் திட்டத்தை எளிதாக்கும் வகையில், கட்டிட அனுமதியை ஆன்லைன் மூலம் பெறும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கிறார்.

    2500 சதுரடி வரையுள்ள மனையில் 3500 சதுர அடியில் கட்டப்பட உள்ள வீடுகளுக்கு இத்திட்டம் பொருந்தும் என்றும் பரிசீலனை மற்றும் கட்டமைப்பு வசதிக் கட்டணங்களில் இருந்து 100 சதவீதம் விலக்கு இதில் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    www.onlineppa.tn.gov.in ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர் அளிக்கும் விவரத்தின் அடிப்படையில் இவற்றுக்கு உடனடி அனுமதி கிடைக்கும் என்றும் விண்ணப்பதாரர் எந்த அலுவலகத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. கட்டிடப்பணி நிறைவடைந்ததும் முடிவுச் சான்று பெற வேண்டியதிலிருந்து விலக்கு போன்ற சலுகைகளும் இத்திட்டத்தில் உள்ளது.

    • 1031 சதுர கி.மீ., பரப்பளவில் உள்ளூர் திட்டக் குழும பகுதியாக உத்தேசிக்கப்பட்டு, கடந்த 2019 ம் ஆண்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
    • முழுமையாக கம்ப்யூட்டரில், இதற்கான பிரத்யேக சாப்ட்வேர் மூலம் பதிவேற்றப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி 1031 சதுர கி.மீ., பரப்பளவில் உள்ளூர் திட்டக் குழும பகுதியாக உத்தேசிக்கப்பட்டு, கடந்த 2019 ம் ஆண்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதனடிப்படையில் தொடர்ந்து குடியிருப்புகள் அதிகரிக்கும் பகுதிகள், முழுமை திட்டப்பகுதிகளாக கண்டறிந்து அறிவிக்கும் விதமாக ஆய்வு மேற்கொள்ள ப்பட்டது.

    இதில் மாநகராட்சி பொறியியல் பிரிவினர் உள்ளூர் திட்டக்குழும அலுவலர்கள் இணைந்து பகுதி வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் 8 மீ., அளவுக்கும் குறைவான பொது வழிப்பாதை அமைந்த குடியிருப்பு பகுதிகள் கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டது. அவ்வகையில் மாநகராட்சி பகுதியில் மொத்தம் 700-க்கும் மேற்பட்ட பகுதிகள் கண்டறியப்பட்டது.

    இதில் முதல் மண்டலத்தில் 229 குடியிருப்பு பகுதிகள்,2 வது மண்டலத்தில் 109 பகுதிகள், 3 வது மண்டலத்தில் 274 பகுதிகளும், நான்காவது மண்டலத்தில் 100 குடியிருப்பு பகுதிகள் இந்த வரையறைக்குள் உள்ளது கண்டறியப்பட்டது.மண்டல வாரியாக இக்குடியிருப்பு பகுதி அமைந்துள்ள வார்டு எண், வீதி பெயர், வீதியின் அகலம் ஆகியன கணக்கெடுக்கப்பட்டது. இதற்கு பகுதி வாரியாக குறியீட்டு எண்ணும் வழங்கப்பட்டது. இப்பணி முழுமையாக கம்ப்யூட்டரில், இதற்கான பிரத்யேக சாப்ட்வேர் மூலம் பதிவேற்றப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வில் கண்டறியப்பட்ட விவரங்கள், நகராட்சி நிர்வாக ஆணையகத்தின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதனடிப்படையில் இப்பகுதிகள் முழுமைத் திட்ட பகுதியாக அறிவிக்கப்படும் என தெரிகிறது. இதனால் இத்திட்டத்தில் அறிவிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் கட்டட அனுமதி வழங்குவதில் சில நடைமுறைகள் எளிதாக்கப்படும்.முழுமைத்திட்ட பகுதி மற்றும் குறுகலான வீதிகள் அமைந்த பகுதி என்ற நிலையில் கட்டடங்களின் முன்புறம் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் திறந்த வெளியிடங்கள் விடுவதில் விதிமுறைகளில் தளர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×